Wednesday, September 12, 2012







   விடிந்தது காலை ! மகிழ்ந்தது உள்ளம் !

 
விடிந்தது காலை,விழித்தது உலகம்
வியத்தகு கதிரவன் விண்ணி லெழுந்தான்
இரவின் வேலையை இனிதேமுடித்து,
இந்துமதி யவள், ஆழியி லமிழ்ந்தாள்
காக்கைக் குருவி கருங்குயி லெல்லாம்
களித்தே யினிய கானமிசைக்க
பகலவன் கதிரொளி பட்டதனாலே
பச்சைப் பயிர்கள் பரவசமாகி
கானங் கேட்டுக் களித்திசைக் காட
ஆட்டமும்,இசையாற் அகமகிழ்ந் தாறு
சல சல வெனவே தாளஞ் சேர்க்க
அனைத்தையும் ரசித்த, அழகிய மலர்கள்
அகமும்,முகமும் மலர்ந்தே சிரிக்க
வண்ணமலரின் வனப்பில் மயங்கி
வண்டுகள் விருந்தாய், மதுவை ருசிக்க
விடிந்தது காலை ,விழித்தது உலகம்
இணைத்தது வுளத்தில் மகிழ்ச்சியின் வெள்ளம்.
 
 
                                                         -- இளசை விஜயன்
 

2 comments: