Showing posts with label -விருச்சிகம். Show all posts
Showing posts with label -விருச்சிகம். Show all posts

Thursday, March 30, 2017

தமிழ் வருட பலன் -- கடகம்-விருச்சிகம்.,


தமிழ் வருட பலன் -- கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்.
                                                                               


கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம்பூசம்-1,2,3,4 பாதங்கள்ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

    தாய்காரகனான சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடகராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு ஹேவிளம்பி  வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.

    சூரியன் – புரட்டாசி மாதத்தில் விருப்பமான மனைவி அல்லது பெண்ணின் உறவு ஏற்படும்தமக்குப் பிடித்தமான இடத்துக்கு வேலைமாற்றம் ஏற்படும்.  விரும்பிய இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கும்மார்கழி மாதத்தில் அரசாங்க முக்கியஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும்கல்வியில் வெற்றிஅரசுத் துறையில் இலாபம் ஏற்படும்சித்திரை மாதத்தில் மிக்க சுகம் உண்டாகும்வாழ்க்கையில் அதிர்ஷ்டமயமான நல்ல திருப்பங்கள் ஏற்படும். வைகாசியில் பிறர் மேல் இரக்கம் கொள்வார்சுபகாரியங்கள் எண்ணியது எண்ணியபடி நடக்கும்.

       செவ்வாய் --  புரட்டாசிவைகாசி ஆகிய மாதங்களில் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம் பயிர்மனை இவற்றால் இலாபம் ஏற்படும்சிலருக்கு சில மாதங்களில் உறவினர் பகையும்வீட்டில் குழப்பமும் உண்டாகலாம்புதிய ஆடை சேர்க்கைதானியவிருத்தி, பின்னர் வரும் காலத்தில் கீழான மனிதர்களால் நன்மைகள் ஏற்படும்உடலில் ஒளியும்அழகும்பொலிவும் கூடும்சொல் வன்மையால் அதிக சம்பாத்தியம் ஏற்படும்மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்.
     
       புதன் – சித்திரைவைகாசிமார்கழிமாசி ஆகிய மாதங்களில் சுப பலனைத் தருவார்இம்மாதங்களில் வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும. வழக்குகள் அனைத்தும் சாதகமாகவே முடியும்எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் பல வழிகளிலும் பணம் வந்து சேரும்சிலர் பிறருக்குப் பிணையாக நிற்கப் போய் அவர்கள் கடனுக்குப் பொறுப்பேற்க நேரலாம்எச்சரிக்கை தேவைமாணவர்களுக்குக் கல்வியில் தடைகள் ஏற்படலாம்

      சுக்கிரன் – தைமாசி ஆகிய மாதங்களில் மட்டும் சுக்கிரனின் அசுப பலன்களை உணர்வீர்கள்வயிற்று உபாதைகள் ஏற்படலாம்வழக்குகளில் வெற்றி உண்டாகும்பின்னர், எல்லா வசதிகளும் இன்பமும் உண்டாகும்உயர்ந்த செல்வநிலையும் அடைவர். பின் வரும் மாதங்களில் மனைவியிடம் அன்பு உடையவராக இருப்பர்மந்திரி போன்ற உயர் பதவிகள் கிடைக்கும்கூட்டு வியாபாரத்தில் உள்ள வியாபாரிகளுக்கு மோசடி காரணமாக நஷ்டங்கள் ஏற்படலாம்.

      குரு – ஆவணி 27 ஆம் தேதியன்ற சுக பாவமான  துலாத்திற்கு  மாறும் குரு மணமாலையும் மஞ்சளும் கூடிமங்கையர் மண மேடையில் உலாவரச் செய்வார்புதிய வீடுவாகனம் வந்து சேர்ந்து, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்மணவாழ்க்கையும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும்தொழில் வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு நல்ல முன்னேற்றத்துடன் இருக்கும்.அரசு மூலம் வெகுமதிகள் கிடைக்கும்.  சிலர் இராஜ தந்திரத்தால் அரசியலில் உயர் பதவிகளை அடைவர்.

    சனி – ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு மாறும் சனியால்எல்லா வகையிலும் பொன்னும் பொருளும் சேரும். புது வீடு வாங்கும் யோகம் ஏற்படும். பணியில் உத்தியோக உயர்வுகளை எதிர்பார்க்கலாம். ஆடி முதல் கார்த்திகை மாதங்கள் தவிர மற்ற மாதங்கள் உங்களுக்கு இராஜயோகம்தான், இம் மாதங்களில் மட்டும் முன்னோர் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் மத்தியஸ்தம் மூலமாக சுமுகமாக முடியும்அரசு அதிகாரிகள் தாங்கமுடியாத கெடுபிடிகள் செய்வர்சனி பகவானின் சன்னதிக்குச் சென்று எள் தீபம் ஏற்றி வழிபடுதலும்ஒருமுறை திருநள்ளாறு சென்று வருதலும் நலம் பயக்கும்மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

சிம்மம்

மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

       தந்தை காரகனான சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்மராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.

       சூரியன் – ஐப்பசி மாதம் வரையிலான காலத்தில் முதலில் மனைவியுடன் ஏற்படும் பிணக்குகளினால் தற்காலிகப் பிரிவு ஏற்படலாம். பின்னர் இருவரும் ஒன்றுகூடி மகிழ்வீர்கள் தை மாதம் முடிய உள்ள காலத்தில் உதவி கேட்டுப் போகும் போது யார்  உண்மையான நண்பர்கள்என்பது தெரியவரும்வியாபாரத் தொடர்பான, நெடுந் தூரப் பயணங்களால்  இலாபம் ஏற்படும்வைகாசி மாதம் வரையுள்ள காலத்தில் புதிய விரிவாக்கத் திட்டங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்தரும சிந்தனையால்கோவில் மற்றும் குளங்களுக்குத் திருப்பணி செய்வர்.

       செவ்வாய் – வைகாசிஆனிமாசி ஆகிய மாதங்களில் சுப பலனைத் தருவார்  செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள்தங்கள் திறமைக்கு ஏற்ப கிடைக்கும்புதிய வியாபார நுணுக்கங்களைக் கடைப்பிடித்து அதிக இலாபங்காண முற்படுவீர்கள்வெற்றியும்சந்தோஷமும் உண்டாகும்பின் வரும் காலத்தில் கடன்களும்நீங்கும்பணவரவு அதிகரித்து வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்படும்.

       புதன் –  அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுத்துப் பரிசாகப் புதிய உயர் பதவிகள் கிடைக்கும்உங்களால் உதவி அடைந்தவர்கள் சமயம் பார்த்து உங்களுக்கே குழிபறிப்பர்பகைவர்களை வென்று வெற்றிக் கொடி நாட்டுவர்.  வாக்கு சாதுர்யத்தால் நல்ல தனவரவு உண்டாகும்புகழ் மரியாதைகள் கூடும்வாகனாதிகள் வந்து சேரும்.

       சுக்கிரன் – குடும்பத்தில் சுபகாரியச் செலவுகள் ஏற்படும்மாணவர்கள் புத்தி கூர்மையினால் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு அதிக மதிப்பெண் பெறுவார்கள். நவீன பொழுதுபோக்கு உபகரணங்கள் யாவும் கிடைக்கும்தெய்வ பக்தி அதிகரிக்கும்வீரம்பிரதாபம் மற்றும் பூர்ண சயன சுகம் ஏற்படும்பின்னர் மனைவியின் பணிவிடைகள் மகிழ்ச்சியைத் தரும்சொற்பொழிவுத் திறன் கூடும்அதனாலும் பணவரவு கூடும்தனக்கென அழகிய தனி வீடு கட்டுவார்.

      குரு – ஆவணி 27 க்கு முன்புவரை தனபாவத்தில் இருந்து வந்த குரு நற்பலன்களை அள்ளி வழங்குவார். வீட்டில் சுபச் செலவுகள் ஏற்படும்தொழில் வளர்ச்சிக்காகச் செய்த முதலீடுகள் ஒன்று பத்தாகி ஆதாயம் தரும். பணியில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு தடைதாமதங்களின்றி உடனடியாக் கிடைக்கும். பின்னர் தைரிய பாவத்துக்கு வரும் குரு  தொழில் துறையில் சிக்கல்களைத் தரலாம்  அதிக உழைப்பும், பிரறால் ஏமாற்றமும் ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறைவதால் வாக்கு வாதங்கள்  அதிகரிக்கும்தான தர்மமென கைப் பணம் கரையும்.
    சனி – புத்திர பாவத்தில் அமர்ந்து அன்றாடச் செலவுக்கும் அல்லல் பட நேரும். மனைவி மக்களால் மகிழ்ச்சி குறையும். தொழில் முனைவருக்கு இது ஏற்றமான முன்னேற்றமான காலம் என்று சொல்வதற்கில்லைஆடி முதல் கார்த்திகை வரை சுற்றியுள்ள சுற்றமும்நட்பும் பகை பாராட்டலாம்மானம்மரியாதை மற்றும் கௌரவம் அனைத்தும் பறிபோகும்பின்னர் ஆண்டு முடிவுவரை சனி தரும் சிரமங்கள் குறைய விநாயகரையும்ஆஞ்சநேயரையும் மனதார வேண்டினால் இன்னல்கள் மறையும்மொத்தத்தில் சிம்ம்ம இராசி அன்பர்களுக்கு 55 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

கன்னி

உத்திரம் – 2, 3, 4-பாதங்கள்ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள்சித்திரை – 1,2 பாதங்கள்)

      புத்தி காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட கன்னிராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.

      சூரியன் – ஆனி மாதத்தில் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்தனித் திறமையால் வாழ்வில் பணம் சம்பாதிக்கும் நிலை ஏற்படும் எவருமே இதுவரை செய்யாத சாதனைகளைப் புரிவார்ஆடியில் உயர் பதவிகள் கிடைத்து அந்தஸ்துமரியாதையும் கூடும்கார்த்திகையில் தனக்கு மிகவும் விருப்பமானவர்களின் அன்பு அதிகமாகும்புத்திரபாக்கியம் ஏற்படும்மாசி மாதத்தில் உங்களுக்கு இதுவரை வராது இருந்த நிலுவைகள்கடன்கள்விரைவில் சுலபமாக வசூலாகும்.

       செவ்வாய் –  தொழில்களில் நல்ல வருமானம் ஏற்படும்.  புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடையும்சிலருக்குக் கண்நோய் ஏற்படலாம்விவாகம் நடக்கும்சந்ததி விருத்தியாகும்பின் வரும் மாதங்களில் பற்றாக்குறைகள் அதிகமாகும்ஆரோக்கியக்குறைவு ஏற்படலாம்காரியங்களில் தடைதாமதங்கள் ஏற்படலாம்.

       புதன் –   எதிரிகளை எளிதில் வென்று ஏற்றம் பெறுவீர்கள்வீடுநிலம் போன்ற அசையாச் சொத்துக்களை எவ்விதத் தடைகளும் இன்றி பத்திரப் பதிவு செய்வீர்கள்ஆழம் தெரியாமல் காலைவிடாது எதையும் ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லதுபுண்ணியத் தல யாத்திரைகளும்வெளிநாட்டுப் பயணங்களும் ஆதாயம் தரும்.  தவிர்க்க முடியாத சுப, அசுப விரயங்கள் ஏற்படும்.  வருடக் கடைசியில் சிலருக்கு அரசு வேலை கிடைக்கலாம்எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

       சுக்கிரன் – திருமணம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும் வீடு புதிய சொத்துக்கள் வாங்குவர்நல்ல உறவுகள்உதவும் நண்பர்கள் அமைவர்வார்த்தை தவறாதுகொடுத்த வாக்கினைக் காப்பாற்றுவர்.. கல்வியும் புகழும் ஓங்கும்சிலருக்கு இசையால் சம்பாத்தியம் பெருகும்கார் போன்ற உயர்ரக வாகனங்கள் வாங்குவர்ஐம்புலனுக்குரிய அனைத்து இன்பங்களும் கிடைக்கும்.

    குரு – துலா இராசிக்கு குரு ஆவணி 27 இல் மாறுகிறார். ஆனிமாதம் வரை சுமாரான பலன்களைத் தருகிறார்அதற்குப்  பிறகு தன பாவத்தில் அமர்வதால் அக் காலத்தில் செல்வம் சேரும். அழகிய மனைவி அமைவாள். குழந்தை பாக்கியம் ஏற்படும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும்வாக்குவன்மை ஓங்கும். தனதான்ய விருத்தி உண்டாகும். உங்கள் வார்த்தைகள் பிறரால் வேதவாக்காக ஏற்றுக் கொள்ளப்படும். அரசியல் அதிகாரம்அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும்அந்தஸ்து, கௌரவமும் கூடும்.

    சனி – இனி இன்னல்கள் மறைந்து இன்பம் பொங்கப்போகும் காலம்இனி எல்லாமே வெற்றிதான்அஷ்டலக்ஷ்மி கடாக்ஷமும்இராஜயோகமும் ஏற்படும்குழந்தைகள் மூலமாகப் பல நன்மைகள் ஏற்படும்வரவுக்கும்வரம்புக்கும் உட்பட்டு செலவுகள் அமையும்திருமணம்புத்திரப் பெறு ஆகியவை நல்லபடி நடக்கும்உழைப்புக்கு ஏற்ப வருமானம் கிடைக்கும்.  கொடூரமான வெய்யிலில் இருந்து குளிர் நிலவுக்கு வந்த்துபோல் ஓர் உணர்வு ஏற்படும்மொத்தத்தில் இவ்வருடம் 75 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

துலாம்
(சித்திரை-3,4 பாதங்கள்சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

       அசுர குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.
       சூரியன் – ஆடி மாத்த்தில்  தங்களுக்கு வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி கிட்டும்தங்கள் கல்வித் தகுதிதிறமைக்கு ஏற்ப நல்ல சம்பளத்துடன் நல்ல  வேலை கிடைக்கும்வாழ்க்கையில் சந்தோஷம்செல்வம் ஆகியவை ஏற்படுகின்றனஆவணியில்  புதிய பதவிகளின் சொகுசைமகிழ்ச்சியை அனுபவிக்கும் காலம்தனலாபம்மரியாதை மற்றும் முனேற்றங்களைத் தருகின்ற மாதம் ஆகும்.  வாழ்க்கையில் சிறப்பு மிக்க மரியாதைகளும்நல்ல மனிதர்களின் நட்பும் கிடைக்கும்பங்குனியில் மனஅமைதிஇலாபம் மற்றும் உயர்பதவிகள் குறிகாட்டப்படுகின்றன.

        செவ்வாய் – புதிய வியாபார முதலீடுகள் மூலமாக அதிக இலாபங்களை ஈட்டுவீர்கள்தங்கள் பணியிடங்களில்தீ அணைக்கும் கருவிகளின் பணித்திறனை சோதித்து அறிவதுவிபத்தைத் தடுக்க உதவும்மனவியுடன் மனஸ்தாபம் தவிர்க்கத் தாஜா செய்வது பலன் அளிக்கும்வழக்குகளில் வெற்றியும்உயர்அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்அதன் பிறகு பூமிலாபம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும்ஆடம்பரப் பொருட்களின் வரவு வீட்டிலுள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

       புதன் – வருட துவக்கத்தில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும்வாக்கால் வருமானம் பெருகும்.  கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளும் ஏற்படும்தொடர்ந்து வரும் மாதங்களில், அலைச்சல் தரும் பயணங்களும்மரியாதையையும்புகழையும் தரும். திருமணம் நடக்கும். பின் வரும் மாதங்களில் நம்பிக்கையான நட்புறவுநல்லுணவு ஆகியவை கிடைக்கும்உறவுகளுக்கு முன்னேற்றம் ஏற்படும்.

       சுக்கிரன் – வருடத் துவக்கத்தில் வீட்டில்  பெண்கள் மகிழ்ச்சி அடையும்படியான நிகழ்ச்சிகள் நடைபெறும்குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மூலமான மகிழ்ச்சியும்நல்ல காரியங்கள் செய்வதின் காரணமாகப் புகழும் பெருகும்.  தொழிலில் வெற்றிபணஆதாயம்முன்னேற்றம் ஆகியவை ஏற்பட்டுமனமகிழ்ச்சியும் அதிகரிக்கும். .

       குரு – வருடத் துவக்கத்தில் விரய பாவத்திலும்பின்னர் ஜன்மத்திலும் சஞ்சரிக்கிறார். அதனால் துவக்கத்தில் பதவி உத்தியோகத்தில் பிரச்சனைகள் எழலாம். சுபகாரியச்செலவுகள் ஏற்படும். உயர்குலப் பெண்ணால் அவப் பெயர் ஏற்படலாம். ஆவணி 27 க்குப் பிறகு இடமாற்றம், பதவி மாற்றம் ஆகியவை நிகழலாம். அனைத்திலும் இலாபமும்,  மகிழ்ச்சியும் குறையும். பிறர் வழங்கும் மதிப்புமரியாதை எனத் துவங்கிய வாழ்வு இந்த வருடம் முன்னேற்றகரமாகவே இருக்கும்.

       சனி – தைரிய பாவத்தில் சஞ்சரிக்கும் சனிஇதுநாள்வரை தனபாவத்தில் இருந்து தந்த துன்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நற்பலன்களைத் தருவார். சீரான உடல் ஆரோக்கியத்தையும்வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றங்களையும்தைரியம்தன்னம்பிக்கை ஆகியவற்றையும் தருகிறார்.  செய்தொழில்வியாபாரம் எதுவாகினும் ஜீவன அபிவிருத்திக்கு திருப்திகரமான சூழலை உருவாக்கும்மொத்தத்தில் இவ்வருடம் 7சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

விருச்சிகம்

விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

       தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக இராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.

       சூரியன் – சித்திரை மாதத்தில்  எதிரிகளை வென்று, வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள்உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்ஆவணி மாதத்தில் நல்ல நண்பர்களின் நட்பால் மகிழ்ச்சி உருவாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பரிபூர்ண ஆதரவு கிடைக்கும்புரட்டாசி மாதத்தில் எதிர்பார்த்தைவிட தனவரவு ஏற்பட்டுகுடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.  தை மாதத்தில் மலையென அந்தஸ்து உயரும்இரக்க குணம் அதிகரித்து தான தர்மம் செய்வார்.

       செவ்வாய் – கடன்கள் கட்டுக்குள் இருக்கும்சுற்றுவட்டாரத்தில் மதிப்புமரியாதைகள் கூடும்கூடுதலான தன வருமானத்தால் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.  திருமணம்மக்கட்பேறு என வாழ்வின் மகிழ்ச்சிகரமான தருணங்களாக அமையும்.  அடுத்து வரும் மாதங்களில் சிறு விபத்துக்கள்காயங்கள் ஏற்படலாம்.  பின் வரும் மாதங்களில் கோபத்தால் காரியங்கள் கெடலாம்சிலருக்கு எல்லாத் துறைகளிலும் இலாபம் ஏற்படும்.

       புதன் – புதிய தொழில்வணிக முயற்சிகள் வெற்றி பெற புத்துணர்வோடு செயல்படுவது நல்லதுசிலருக்கு உயர் கல்வியில் தேர்ச்சியும்அரசு உத்தியோகமும் கிடைக்கலாம்எழுத்துத் தொழில் ஏற்றம் தரும்பல பரிசுகளும்கௌரவமும் கிடைக்கும்மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பர்பின் வரும் காலங்களில் சாதுர்யமும்சாமர்த்தியமும் பெருகும்பங்கு மார்க்கெட் வகையில் அதிக லாபம் அடைவர்.

       சுக்கிரன் – குழந்தைகளின் வகையில் சுபச்செலவுகள் இருக்கும்.   மகிழ்ச்சிகரமான வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும். கடின உழைப்பால்விவசாயம் மற்றும் தொழில் மூலமான ஆதாயங்கள் பெருகும்பின்னர் வரும் காலத்தில் நல்ல குணமுள்ள நண்பர்களுடன் மட்டுமான சவகாசம் மட்டுமே உயர்வைத் தரும்.  சிலருக்குக் கடன்கள்அதிகமாகும். பெண்களால் நஷ்டம் ஏற்படும்சொத்துக்கள் சேரும்.  விருப்பமானவர்கள் தங்கள் காதலைத் தெரிவிக்க அன்பளிப்புகள் மற்றும் பரிசுகள் தருவர்.

       குரு – தற்போது இலாப பாவத்தில் சஞ்சரிக்கும் குரு ஆவணி 27 க்குப் பிறகு விரய பாவத்தில் இடம் பெறுகிறார். அதன் காரணமாக பிற்பகுதியில் அரசு விரோதம், சுப அசுப விரயங்கள் ஆகியவை ஏற்படும். முற்பகுதியில் இலாப குரு செல்வ நிலையை உயர்த்துவார். பாக்கியம் பெருகும். பணி உயர்வு கிடைக்கும். மனை, வயல் ஆகியவை சொந்தமாகக் கிடைக்கும். வீடுநிலம் ஆகியவற்றை உடனடியாக்க் கிரையம் செய்வது நல்லதுநல்ல வேலையைத் தேடிக்கொண்டுஇருக்கும் வேலையை விட முயற்சிப்பதே அறிவுடமையாகும்.

       சனி –  தன பாவத்தில் அமர்ந்து குடும்பத்தில்  மனக் கவலைகளை  அளித்து வந்த சனி தன் 3, 7, 10 ஆகிய இடங்களின் மீதான பார்வையால் முயற்சிகளை வெற்றி பெற செய்வார். பதறிய காரியம் சிதறும் ஆதலால்நிதானமாகப் பொறுமையுடன் காரியங்களில் ஈடுபட்டால் சிறப்பாக அமையும்புதிய திட்டங்களை தொடங்குவதற்கு முன் ஒருமுறைக்குப் பல முறை சிந்தித்துச் செயல் படுவது சிக்கல்களையும்சிரமத்தையும் குறைக்கும்சிக்கல்கள் குறைய திருநள்ளாறு சென்று சனி ஓரையில் நீராடிஎள் தீபம் ஏற்றிகருப்பு வஸ்திரம் சாத்திமனதார வேண்டி வணங்ககதிரவனைக் கண்ட பனிபோல் கஷ்டங்களும் மறையும்மொத்தத்தில் இவ்வருடம் 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.