Showing posts with label உ இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் கடகம் முதல் கன்னி வரை. Show all posts
Showing posts with label உ இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் கடகம் முதல் கன்னி வரை. Show all posts

Tuesday, July 11, 2017

உ இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் கடகம் முதல் கன்னி வரை



இராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
கடகம் முதல் கன்னி வரை


கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
       தாய்காரகனான சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடகராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017  ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.
   
       கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் இராசிக்கு தன ஸ்தானத்திலும்  கேது – அட்டம ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான ஜென்மத்துக்கு இராகுவும், மகர இராசியான 7 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சியானது அத்தனை அனுகூலமான  பலன் தருவன அல்ல.

       இதன் காரணமாக  ஜென்மத்தில் அமர்ந்த இராகுவால் கஷ்டங்களும், நஷ்டங்களும் சகஜமாகிவிடும். சோம்பலும், சலிப்பும் ஏற்படும். தாய் தந்தையருக்கு ஏற்படும் நோய்களை அலட்சியப்படுத்தாமால், மிகவும் கண்ணும் கருத்துமாய் பார்க்க வேண்டும். சிலருக்கு வரும் நோய்க்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு புதுவிதமான நோய்கள் ஏற்படலாம். டாக்டர்களுக்கும் சவாலாக அமையலாம். ஏவல், பில்லி சூனியத்தால் குடும்பத்தில் நிம்மதி குறையலாம். ஆயினும், பேச்சில் தெளிவு ஏற்படும். வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசாமல், இடம், பொருள் ஏவல் அறிந்து தன்மையாகப் பேசி உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உறவுகளிடம் இதுவரை இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து, மனம் மகிழும். சுற்றமும், நட்பும் தேடிவந்து அன்பு பாராட்டுவார்கள். சிலருக்குக் கூடா நட்பு கேடாய் முடியும். தொழிலில் பெரிய அளவில் இலாபம் இராது என்பதால், இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க நினைக்காமல், கையில் உள்ளதை வைத்துக்கொண்டு முன்னேற முயல்வது அறவுடமையாகும். மற்றவர்களுக்காக மறந்தும் கூட ஜாமீன் கையெழுத்து இடவேண்டாம். வேலையாட்கள் மூலம் சிறுசிறு பிரச்சனைகள் எழலாம். அரசு வகையில் அனுகூலம் கிடைப்பது கடினமே. எனவே, விடாமுயற்சியைக் கடைப்பிடிப்பது நல்லது.

        களத்திர பாவத்தில் அமர்ந்த கேதுவால் பல ஊர்களுக்கும் போய்வரும் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும்.  மனையாளுக்கு கரு தங்காமல் போவதின் காரணமாக சிறிதளவு துன்பமும் சோகமும் ஏற்படலாம். அதன் காரணமாக இல்லாளோடு காலத்தை இனிமையாக்க் களிக்கமுடியாத நிலை உருவாகலாம். குணம் கெட்ட பெண்களின் தொடர்பு குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படத்தலாம். சிலருக்கு முறைமீறிய காதல் ஏற்பட்டு கட்டாயத் திருமணத்தில் கொண்டு விடலாம். நீர்நிலைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டமாகும். சோம்பேறித்தனம் அதிகமாகி, எந்த செயலிலும் மனம் ஈடுபடாத நிலை ஏற்படலாம். கணவன் – மனைவி உறவில் விரிசல் வராமல் தடுக்க, கருத்து வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் இருத்தல் அவசியம் ஆகும். மனைவியுடன் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். பணி காரணமாகவும் சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரலாம். தொழில் மந்தம், தொழிலாளர்களின் ஒத்துழைப்புக் குறைவு, உத்யோகத்தில் சருக்கல்கள், சக ஊழியர்களின் ஆதரவு இன்மை ஆகியவை பிரச்சனைகளைத் தரலாம். நண்பர்களே பகைவர்கள் ஆவர். உங்களால் பயன் அடைந்தவர்களே தக்க சமயத்தில் உங்கள் காலைவாரிவிடுவர். முகம் தெரியாத நபர்களிடம், உங்கள் இரகசியங்களைக் கூறாமல் இருப்பது நல்லது, பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.
   
       குடும்பம் மற்றும் பொருளாதாரம் ; கணவன் மனைவியடையே அன்பும் பாசமும் பெருகும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மறைந்து களிப்பு உண்டாகும். புத்தி சாதுர்யத்தால் வாழ்க்கையில் பொருளாதார நிலை சீராக இருக்கும். குழந்தைகள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். புதிய வீடு, வாகனம் வந்து சேரும். குடும்பத்தில் நிலவிவந்த சிறு பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். மணவாழ்க்கையும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும்.
       தொழில் மற்றும் வியாபாரம் ; வியாபார நிலவரங்களுக்கு ஏற்ப புதிய நுணுக்கங்களைப் புகுத்தி வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். உதிரிப் பாகங்கள் அல்லது மென்பொருள் சாதனங்களின் விற்பனை சூடுபிடிக்கும்மதிப்புமிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை. வங்கிக் கடன் முயற்சிகள் வெற்றி பெறும். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். தொழிலாளர்களை தட்டிக் கொடுத்து வேலைவாங்கினால் முன்னேற்றம் இருக்கும்.
       உத்தியோகஸ்தர்களுக்கு – அரசுப் பணி பரிபவர்களுக்கு அவ்வப்போது அவர்களின் பணிகளில் தடைகள், தாமதங்கள் ஏற்படும். பணி நிமித்தமான வெளியூர் அலைச்சல்கள் ஏற்படும். வேலையின்றி பல நாட்களாய் தவித்தவர்களுக்கு நல்ல அரசுப் பணிக்கான உத்தரவு வரும். உடன் பணிபுரிபவர்களின் போட்டி, பொறாமைகளில் சிக்கித் தவிக்க நேரலாம். உத்தியோக நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம். புதிய இடத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உடன் பணிபுரிபவர்கள் ஒதுங்கி நிற்காமல், மனம் உவந்து உதவிக்கு வருவர்.
       பெண்களுக்கு; உங்கள் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். மணமாலையும் மஞ்சளும் கூடி, மங்கையர் மண மேடையில் உலாவருவர். கணவன் உங்கள் மீது அன்பைப் பொழிவார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்களைப் பற்றி புறம் பேசுவார்கள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு  மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். அரசுப்  பணிபுரியம் பெண்களுக்குப் பெண் உயர் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம்.   
      மாணவர்களுக்கு - அறிவுத் திறன் பெருகும். சிலருக்கு, கல்வியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். கிரிக்கெட், முகநூல், வலைத்தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பின் மீது கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறலாம். உயர்கல்வி யோகம் உண்டாகும். பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல பெயர் வாங்கிக் கொடுப்பீர்கள். தீய நண்பர்களின் சவகாசத்தை ஒதுக்கி கல்வியில் அக்கறை கொள்ளவேண்டும்.

       அரசியல்வாதிகளுக்கு – உங்கள் காண்டில் இனி மழைதான். நீங்கள் நினைதத்தெல்லாம் நடக்கப்போகின்றது. பேரும் புகழும் கிடைக்கும். உயர்பதவிகள் தங்களைத் தேடிவரும். அடிக்கடி பயணங்களும், வெளியூரில் தங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கள் தவறாது கிடைக்கும். தொண்டர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை செய்து கொடுத்து ஆதரிப்பது சிறப்பு ஆகும்.
       கலைஞர்களுக்கு – கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இதிகமான வாய்ப்புகள் கைக்கு வந்து சேரும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்து  ஆகும். அதில் வரும் நல்ல வாய்ப்புகளைத் தவறவிடாதீர்கள். பணமும் புகழும் உங்கள் கண்ணை மறைக்கும். அதனால் தவறான உறவுகள், லாகிரி வஸ்துக்களை உபயோகித்தல் போன்றவற்றால் உங்கள் மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
       பரிகாரங்கள் – திங்கட்கிழமை தோறும் சண்டிகேஸ்வர்ரையும், தினமும் விக்கேஸ்வர்ரையும் வழிபடுவது நல்லது.  திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.


சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
       தந்தை காரகனான சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்மராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017  ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.

       கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் ஜென்ம இராசியிலும்  கேது – களத்திர ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான விரய பாவத்துக்கு  இராகுவும், மகர இராசியான 6 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சியானது இராகுவால் விரயங்களையும் கேதுவால் நற்பலன்களையும் தர வல்லது.

       இதன் காரணமாக விரய பாவத்தில் அமர்ந்த இராகுவால் தேடிய செல்வங்கள் மறையும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளும், அவை தகுதிக்கும், சக்திக்கு மீறிய செலவுகளாகவும் அமையும். வீட்டிலும், வெளியிலும் பலவித சமாளிக்க முடியாத இன்னல்கள் ஏற்படும். பணம் கொடுக்கல் – வாங்கலில் மிகுந்த எச்சரிக்கை தேவை. மனையாளுக்கு அரிஷ்டம் ஏற்படும். அதனால் சயன சுகம் கெடும். பூமி, மனை, சொத்து ஆகியவற்றுக்கு பங்கம் விளையும். மருத்துவ உலகிற்கே புதிராகும் வகையில் சிக்கலான புதிய நோய்கள் ஏதாவது உண்டாகும். உடன்பிறப்புக்கள் ஒத்துழைப்புத் தராமல் பகை உணர்ச்சியுடன் செயல்படுவர். சிலருக்குக் கால் இடறுதல், விழுதல் ஆகியவற்றால் காயம் அல்லது முறிவு ஏற்படலாம். தைரியமும் தெம்பும் குறையும். ஆரம்பித்த வேலைகள் விரும்பியபடி, குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியாதபடி தடங்கல்கள் வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகளால் சருக்கல்கள் ஏற்படலாம். பிறர் பணிகளில் தேவையற்ற தலையீடுகளை விலக்கி, ஒதுங்கியிருப்பதே நல்லது. உங்கள் வேலைகளில் மட்டும் கவனத்தைச் செலுத்துங்கள். அடிக்கடி பிரயாணங்களும், அலைச்சலும் அதிகம் ஏற்படும். குடும்பத்தில் நீண்ட நாட்களாகத் தடைப்பட்டிருந்த சுபகாரியம் நடைபெறும். போட்டி, பிரச்சனைகள் உதுவாகினும் வெற்றி உங்களுடையதாகவே இருக்கும்.

       கேது 6 ஆம் இடத்தில் நன்மைகளே செய்கிறார். அதன் காரணமாக எல்லாவகையிலும் இலாபமும், சத்ரு ஜெயமும் உண்டாகும். தாய் மாமன் வகையில் அரிஷ்டம் உண்டாகும்.  வித்வத்துவமும், வாக்கு வன்மையும் ஏற்பட்டு அதன் மூலமாக நன்மைகள் ஏற்படும். அதிக சுகமும், புகழும் ஏற்படும். கீர்த்தி பெருகும். பிறர் பேச்சுகளை கவனமாகக் கேட்கவும், கேட்கவில்லை என்றால் தவறாகப் புரிந்து கொண்டு சங்கடப்பட நேரலாம். வயிற்றில் வலிகள் வந்து நீங்கும். இவர்களிடம் பெண்கள் மயங்கி, வசமானாலும் இவர்களுக்கு அவர்கள் மேல் தீவிர இச்சை ஏற்படாது. நெடுநாளையக் கடன்கள் தீரும். குடும்பத்தில் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெருகி மருத்துவச் செலவுகள் குறையும். பகைவர்கள் விலகி ஓடுவர். ஞானமுயற்சியும், நற்சிந்தனைகளில் நாட்டமும், பெரியோர்கள், சித்தர்கள் ஆசியும் கிடைக்கும். புதிய திட்டங்கள் செயல் வடிவம் பெறும். தொழிலில் வரும் இலாபத்தை நல்ல முறையில் தானதர்மம் என செலவளிப்பீர்கள். உபரியாக அடுத்து ஒரு புதிய தொழில் ஆரம்பிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். விரும்பிய இடத்திற்கு இடமாற்ற உத்திரவு கிடைக்கும். புதிய கட்டிடம், மனை வாகனம் ஆகியவையும் வாங்குவீர்கள். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

       குடும்பம் மற்றும் பொருளாதாரம் ;- தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். வீட்டில் சுபச் செலவுகள் ஏற்படும். சிலருக்குச் சுகம், தனலாபம், புதிய நண்பர்கள் மற்றும் சந்தோஷம் ஆகியவை ஏற்படும். துன்பத்தில் கைகொடுக்கும் துணைவி இருந்தாலும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறைவதால் வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். தான தர்மமென கைப் பணம் கரையும்.  

       தொழில் மற்றும் வியாபாரம் ;- தங்கள் முதலீடுகளை வேறு புதிய திட்டங்களில் முதலீடு செய்ய முனைவீர்கள். வியாபாரத்தில் இருந்த வந்த மந்த நிலைகள் தொடரும். விவசாயிகள் விவசாயத்தில் நவீன முறைகளைக் கையாண்டு இலாபம் ஈட்டமுனைவர். தொழில் வளர்ச்சிக்காகச் செய்த முதலீடுகள் ஆதாயம் தரும். தொழில் துறையில் சிக்கல்களைத் தரலாம். அதிக உழைப்பும், பிரறால் ஏமாற்றமும் ஏற்படும். புதிய கூட்டாளிகள் சேருவர். போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்று குறையும்.

       உத்தியோகஸ்தர்களுக்கு – பணியில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு தடை, தாமதங்களின்றி உடனடியாக் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் சதிச் செயல்கள் தொல்லை தந்தாலும், உடன் பணிபுரிபவர்களின், உதவியாலும், ஒத்துழைப்பாலும் தப்பித்துக் கொள்வீர்கள். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தாமத்த்திற்குப் பிறகே நிறைவேறும், வேலப்பளு அதிகரித்து ஓய்வின்றி உழைக்க வேண்டிய நிலை உருவாகும்.

       பெண்களுக்கு ;- பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளைத் தடைகளுக்குப் பிறகு எதிர்பார்க்கலாம்.  உயர் அதிகாரிகளின் கெடுபிடியால் மன உளைச்சல்கள் ஏற்படும். கடின உழைப்பின் காரணமாக ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஆயினும் மகிழ்ச்சிக்காகப் பணச் செலவுகளைப்பற்றி கவலை கொள்ளமாட்டீர்கள். கணவர் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார். அதுபோல் உங்களுக்கு வேண்டியதை மறுக்காமல் வாங்கித் தருவார்.
       மாணவர்களுக்கு ;- நேர்காணல்களில் ஏற்படும் தடை தாமதங்களையும் மீறி அவற்றில் வெற்றி பெறுவர். வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்புக்கள் அமையும். மிகுந்த அக்கறையுடன் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற இயலும். கல்வியில் விருத்தி ஏற்பட்டு ஆசிரியரிடமும் நல்ல பெயர் எடுப்பீர்கள்.
       அரசியல்வாதிகளுக்குஓரளவுக்கு உங்களுக்கு நல்ல காலம்தான். பட்டங்களும், பதவிகளும் தேடிவரும். அதற்கு நீங்கள் காலம் தவறிய சாப்பாடு, தூக்கமில்லாத இரவுகள் எனக் கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டியதிருக்கும். புகழையும், தொண்டர்களையும் நிலை நிறுத்திக் கொள்ள கை பணத்தைக் கரைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மேலும், மக்களின் ஆதரவுகளைப் பெற கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது.
       கலைஞர்களுக்குபுகழையும், மார்கொட்டையும் தக்கவைத்துக் கொள்ள கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை தவறாது பயன்படுத்திக் கொள்வது நல்லது. அதுவே புத்திசாலித்தனமும் கூட. பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும், ஆடம்பர வாழ்க்கையில் சற்றே குறைபாடுகள் ஏற்படும். வெளியூரில் அவுட் டோர் ஷூட்டிங்கில் ரசிகர்களின் தொல்லை எழலாம். சிலருக்கு வெளிநாட்டுப் படப்பிடிப்பு வாய்ப்புகள் கதவைத் தட்டும்.
       பரிகாரங்கள் – சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.



கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
       புத்தி காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட கன்னிராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017  ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயரச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.

       கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் விரய பாவத்திலும் கேது – ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான இலாப பாவத்துக்கு  இராகுவும், மகர இராசியான 5 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சி மூலமாக இராகுவால் ஆதாயங்களைப் பெறுவீர்கள். கேதுவால் சுமாரான பலன்களையே எதிர்பார்க்கலாம்.

       இலாபத்தில் இருக்கும் இராகுவின் காலத்தில் செல்வம் சேரும். அழகிய மனைவி அமைவாள். குழந்தை பாக்கியம் ஏற்படும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். வாக்குவன்மை ஓங்கும். தனதான்ய விருத்தி உண்டாகும். உங்கள் வார்த்தைகள் பிறரால் வேதவாக்காக ஏற்றுக் கொள்ளப்படும். ஐஸ்வரியம் பெருகும்.  தொழில் முன்னேற்றங்கள் திருப்தி தரும்.   அரசியல் அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும். பெரும்புள்ளிகள் சிலர் அறிமுகமாகி அதனாலும் முன்னேற்றமடைவர். அந்தஸ்தும், கௌரவமும் கூடும். வேளா வேளைக்கு இனிப்புடன் கூடிய உயர்ரக இராஜ உணவைச் சுவைக்கும் யோகம் ஏற்படும்எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். பொதுச்சேவைகளில் அவமானத்தைத் தரலாம். எனவே, புகழ் கௌரவத்துக்குப் பங்கம் வராமல் பார்த்து நடப்பது நலம் தரும். அதிகாரிகளிடம் பணிவுடன் நடப்பது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். உபரி வருமானங்கள் அதிகம் கிடைக்கும்.
       புத்திர பாவமேறிய கேது நல்லது செய்வான் என நம்ப முடியுமா ? ஆயினும் ஞானகாரகனான கேது 5 இல் புத்தி தெளிவையும், செயல் திறனையும் அதிகமாக்குவதால் வரும் கஷ்டங்களையும், நஷ்டங்களையும் சமாளித்துக் கொள்வதுதானே அறிவுடமை. சிலருக்கு கர்ப்பை கோளாறுகள் அல்லது கருச்சிதைவு ஏற்படலாம். கீழ்வயிற்றுப் பகுதியில் அல்சர் போன்ற பிரச்சனைகள் எழலாம். புத்திரரால் தொல்லைகள், சோகம் ஆகியவை ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் மன சஞ்சலங்கள் ஏற்படலாம். அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களால் விரயங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பெரியோர்களின் முழு ஆதரவு இருக்கும். மகான்களின் தரிசனத்தால் ஞானவழியில் உங்கள் மனம் சென்று அமைதி எற்படும். சொத்துக்கள் மீதான வழக்கு விவகாரங்களால்  செலவுகள் அதிகரிக்கும். லாட்டரி, ஸ்பெகுலேஷன் போன்ற துறைகளில் எதிர்பாராத அளவுக்கு திடீர் வெற்றிகள் கிடைக்கும். சிலருக்குப் பணப்பற்றாக்குறையால் காரியங்களில் தாமதங்களும், தடைகளும் ஏற்படும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.


       குடும்பம் மற்றும் பொருளாதாரம்கணவன் மனைவி இடையே இருந்துவந்த மனஸ்தாபங்கள் மறையும். வித்தைகளில் தேர்ச்சியும். அறிவுத்திறனும் கூடும். தலைப்பதவி, வசதியான வீடு ஆகியவை அமையும். அஷ்டலட்சுமியின் அருளுக்குப் பாத்திர மாவீர்கள். உடன்பிறப்புக்களுக்கு ஏற்படும் அதிர்ஷ்டத்தால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பர். உயர் ரக கார் போன்ற வாகனங்கள் அமையும். பலவழிகளிலும் பணவரவு பெருகும். பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தான தருமங்கள் செய்வார். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. உறவினர் இல்ல விழாக்களில் கலந்து கொண்டு களிப்படைவீர்கள்.
       தொழில் மற்றும் வியாபாரம் - வாடிக்கையாளர்களிடம் உண்மையாக நடந்துகொண்டால் வியாபாரம் பெருகும். நினைத்தபடி வாடகை வருமானங்கள் வசூலாவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும்புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணம் ஈடேறும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். தொழிலில் பெரிய தொகைகளை முதலீடு செய்வதற்கு முன், அதனால் ஏற்படப்போகும் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து இறங்குவதால் இழப்புகளைத் தவிர்க்கலாம். கூட்டாளிகளின் ஒதுதுழைப்பு உங்களுக்கு சாதகமான பலன்களையே தரும். வெளிழூர், வெளிநாட்டுத் தொடர்புகள் உண்டாகி, இலாபம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள், உதவிகள் தாமதப்படும்
       உத்தியோகஸ்தர்களுக்குஅரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகள் தடை, தாமதம் இன்றிக் கிடைக்கும். பணிகளில் ஏற்பட்ட நிலுவைத் தொகைகள் கைக்கு வந்து சேரும். பணி சம்பந்தமான வெளியூர்ப் பயணங்கள், வெளிநாட்டுப் பயணங்களால் குடும்பத்தைவிட்டுப் பிரிய நேர்ந்தாலும், அதில் கிடைக்கும் ஆதாயங்களால் மனம் மகிழும்.

       பெண்களுக்கு; தெய்வப் பிரார்த்தனையால் பெண்களின் வேண்டுதல்கள் நிறைவேறும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். பணிபுரியும் பெண்கள் அதிகாரிகளின் ஆதரவால் சுலபமாகக் காரியங்களைச் சாதித்துக் கொள்வர். சிலருக்கு வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிகளைக் குவிப்பீர்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தின் தேவைகள், குடும்பத்திலுள்ளோரின் விருப்பங்கள்யாவும் நிறைவேறும். அதிகாரிகளின் ஒத்துழைப்பால் அகம் மகிழும்.
       மாணவர்களுக்கு;- மாணவ, மாணவிகள் தங்கள்  தேர்வுகளில் ஆசிரியரின் ஒத்துழைப்பால், சுலபமாக வெற்றிபெற முடியும். வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். சிலருக்குக் கல்வியில் தடைகள் ஏற்படலாம். அதையும் தாண்டி முழு முயற்சியால் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். எனவே, உடல் ஆரோக்கியத்தில் மெத்தனமாக இராமல் அதிக அக்கறை கொள்ளவேண்டியது அவசியமாகிறது.
       அரசியல்வாதிகளுக்கு வீண் வார்த்தைகளை ஒதுக்கி, மேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மக்களிடையேயும், கட்சி நிர்வாகிகளிடமும் நல்ல பெயர் எடுத்து, மதிப்பும், மரியாதையும் கூடும். விவசாயிகளின் கஷ்டங்களில் பங்கு எடுத்துக் கொள்வது நல்லது. அது அவர்களிடையே செல்வாக்குகையும், மதிப்பு மரியாதையையும் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக  அதிகம் செலவுகள் செய்ய நேர்ந்தாலும், பொருளாதார நிலை மேம்படும்.
       கலைஞர்களுக்குஎதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல வாய்ப்புகள் தேடிவரும். கலைத்துறையில் நல்ல பெயரும் புகழும் கிட்டும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரித்து உடல் நிலையில் சோர்வு உண்டாகும். கிசுகிசுக்களை தவிர்க்க உடன் பழகுபவர்களிடம் சற்று நிதானத்துடன் பேசிப் பழகுவது  நல்லது. ஆடம்பர வாழ்க்கைக்கான மதிப்பு மிக்கப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய பட ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும்.

       பரிகாரங்கள் – சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.