Showing posts with label 19/4/2015 முதல் 25/4/2015 வரை - நட்சத்திரபலன்- மூலம் முதல் ரேவதி வரை. Show all posts
Showing posts with label 19/4/2015 முதல் 25/4/2015 வரை - நட்சத்திரபலன்- மூலம் முதல் ரேவதி வரை. Show all posts

Sunday, April 19, 2015

19/4/2015 முதல் 25/4/2015 வரை - நட்சத்திரபலன்- தினபூமியில்.(மூலம்-ரேவதி)

19/4/2015 முதல் 25/4/2015 வரை - இந்த வார  நட்சத்திரபலன்- தினபூமியில்.


தனுசு
( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
       இந்த வாரம்  அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர்அதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு எனும் காற்று உங்கள் பக்கம் வீசும். பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். துஷ்டனைக் கண்டால் தூரவிலகு என்றபடி,  உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். வீண்செலவுகளைக் குறைத்துப் பணத்தைச் சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும்.  வீட்டில் வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
பூராடம்
       இந்த வாரம் தொழிலில் ஏற்படும் இலாபம் மூலமாக பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகளின் எதிர்பார்ப்புப்படி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்உறவுகள், நண்பர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும்எடுத்த முயற்சிகள்யாவும் வெற்றி அடைய அதிக உழைப்புத் தேவைப்படும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வர்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
       இந்த வாரம் அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம்மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். புண்ணிய ஸ்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் , விருப்பங்கள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர்.
மகரம்
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள் ---
       இந்த வாரம் நெருங்கிய உறவுகள், அன்பு நண்பர்களை அனுசரித்துச் சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கோடை விடுமுறைக்குக் கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசத்திற்குச் சென்று  மனம் மகிழ்வர்.  வேலையில் சிரத்தையும், கடின உழைப்புமே தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும். அப்போதுதான் உங்கள்  செல்வ நிலையும் உயரும். உங்கள் பணியாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால், வேலையில் கை கொடுப்பர். அதன் காரணமாக உற்பத்தி பெருகி, இலாபமும் அதிகரிக்கும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையுடன் பேசவும்.
திருவோணம்-
       இந்த வாரம் அன்னையின் அன்பும் அரவணைப்பும் உற்சாகத்தைத் தரும். சிலர் கோடைக் கொண்டாட்டமாக குடும்பத்துடன் இன்பச் சுற்றுலாக்கள் சென்று மகிழ்வர். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சிலருக்கு அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் ஏற்படும். அரசு ஊழியர்களுக்குக் கீழே பணிபுரிபவர்களைக் கட்டளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். அவர்களின் மேற்படிக்கான புதிய கல்லூரிகளைத் தேடி அலையும்படியான நிலை ஏற்படும். கல்விச் செலவுகளும் கூடும்.  வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை.

அவிட்டம் 1,2 பாதங்கள்
       இந்த வாரம் பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாக வரும். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லதுசுக சௌகரியங்கள் அதிகரிக்கும். சுபச் செய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க, அனுசரித்துச் செல்வது நல்லது. ஒளிமயமான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். அன்பு உறவுகள் வருகையால் ஆனந்தம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும். கோடைகாலப் பயணங்கள் குழுமை தரும்.
கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
       இந்த வாரம் உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த  ஆதாயம் மற்றும் உதவிகளால்  தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்.   வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும்.  இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். அரசுப்பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம்.
சதயம்-
       இந்த வாரம்  நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். போதுமான தனவரவு இருக்கும். குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். அன்புமிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். வியாபாரிகள் நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள்.  உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால் அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். அதில் வெற்றியும் அடைவர். நல்லவர்களுடனான தொடர்பால் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
      இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், தேவையற்ற செலவுகள் ஏற்படும் வழக்குகளில்  நிச்சியமாக வெற்றி கிடைக்கும். விஐபி களுடன் ஏற்படும் நட்பின் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலை உருவாகும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்கள் இல்லத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு  மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்களால் மகிழ்ச்சி பொங்கும். ஆழ்ந்த மனக்கவலைகள் கூட அன்பு மனைவியின் அரவணைப்பால் குறையும்விடுமுறைக் காலமாதலால் வீட்டில் குழந்தைகளின் சேட்டை, செயல்பாடு கண்டு உங்கள்  முகத்தில் புன்னகையும், மகிழ்ச்சியும் ஏற்படும்.  
மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
       இந்த வாரம் மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள்கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டினையும் பெறுவீர்கள். வியாபார விரிவாக்கத்தால் கிடைக்கும் இலாபம் சிறப்பானதாக இருக்கும். மாணவர்கள் தங்களுக்கான புதிய கல்லூரிக் கனவுகளில் திழைப்பர். விடுமுறைக் காலத்தை முகநூல் மற்றும் இணையதளங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவர்.  அரசியல்வாதிகள் தங்களைச் சார்ந்தவர்களுக்கு நல்லது செய்வதின் காரணமாகப் புகழ் பெறுவர். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும்சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது.
உத்திரட்டாதி-
              இந்த வாரம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு மகிழ்வைத் தரும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்பல வகையான உயர்ரக வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். வீட்டில் திருமணம் போன்ற சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான  பணச்செலவுகள் ஏற்படும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும்எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்
ரேவதி-
      இந்த வாரம் அரசுப்பதவியில் உள்ளவர்கள் தங்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது, தங்கள் பணி உயர்வு மற்றும் முன்னேற்றத்துக்கு நல்லது. தொழிலில் உற்பத்தி பாதிப்புக்கள் ஏற்படலாம். ஆயினும்எதிர்பார்த்த இனங்களில் நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். வீடு, கடை வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். திடீர்ப் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.