Showing posts with label குற்றமென்ன செய்தேன் குமரா ?. Show all posts
Showing posts with label குற்றமென்ன செய்தேன் குமரா ?. Show all posts

Tuesday, October 9, 2012

குற்றமென்ன செய்தேன் குமரா ?







குற்றமென்ன செய்தேன் குமரா ?


குற்றமென்ன செய்தேன் குமர குருபரா ?
உற்றகுறை தீர்க்க உனக்கு மனமில்லையா ?

                             ( குற்றமென்ன )

வெற்றிவேலைப் பற்றி நிற்கும் வீரத்திருக் கரமெங்கே ?
சுற்றிவரும் பகை தீர்க்கத் துள்ளிவரும் வேலெங்கே ?
மற்றிரெண்டு,மங்கையர்கள் மலரன்ன முகமெங்கே ?
பற்றிட நின் திரு பதமலர் தா னெங்கே  ?

                              ( குற்றமென்ன )

கந்தனெனும் பேர் சொல்லக் கவலை தீருமே – முருகா
உந்தன் புகழ் பாட நெஞ்சிற் வுவகை சேருமே ;
எந்தன் குறை தீர்க்க யெந்தன் யெம்பெருமான் – நீ
வந்தெனக்கு அருள்புரிய வா வா வடிவேலா.

                              ( குற்றமென்ன )