Sunday, May 3, 2015

துலாம் முதல் மீனம் வரை



தமிழ் வாசல் மாத இதழில் வெளியான
மே -- 2015 மாத ராசிபலன்;;;;- 
துலாம்
( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய, ரி, ரு, ரே, ரோ, , தி, து, தே )
துலாராசி வாசகர்களே !
       தங்கள் இராசிநாதன் பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரன், சுகத்தையும், தனலாபத்தையும், புதிய நண்பர்கள் மற்றும் சந்தோஷத்தையும் தருவார். இனிய பயணங்களால் இன்பம் சேரும். நல்ல செய்திகள் வந்து சேரும். தந்தைக்கு நன்மை ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு வசதியான குடும்பத்தில் வரன் அமையும். அதனால் செல்வமும், சுகமும் பெருகும். சிலருக்கு வெளிநாட்டுக் காதல், வெளிநாட்டில் திருமணம் ஏற்படும். புதனின் அனுகூல நிலையால் அரசாங்க வேலை அமையும். மன்னர் மன்னனாகும் இராஜயோகம் ஏற்படும். பூமி, மனை, வீடுகள் மூலம் இலாபம் ஏற்படும். பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். குருவின் தயவால் விரும்பிய காரியங்கள் எதுவும் நடக்காது. பிறர் கையை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சனியால் இன்னல்கள் கூடினாலும், குருவின் பார்வை பாதிப்பைக் குறைக்கும். சூரியன், செவ்வாய், இராகு அனுகூலமற்ற நிலையால் அல்லலே மிஞ்சும். கேது ஞானகாரகன் ஆகையால் புத்தி தெளிவையும், செயல் திறனையும் அதிகமாக்குவான்.
       குடும்பம் ;- அன்பாலும், பாசத்தாலும் குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள் சீராகும். பொறுமையும் சகிப்புத் தன்மையுமே இக்காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது. பெரியோர்களின் அறிவுரைப்படி நடப்பது நல்லது.             
       தொழில்  ;- தொழில் மற்றும் வியாபாரத்தில் புதுத் திருப்பங்கள் ஏற்படலாம். புதுக் கூட்டாளிகளுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு தொழில் விருத்தி அடையும்.   வங்கிக் கடன்கள் தாமதமின்றிக் கிடைத்து முன்னேற்றம் ஏற்படும்.
       பெண்கள் ;- பணிபுரியும் பெண்கள் தங்கள் மேலதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நன்மை பயக்கும். சிலரின் காதல் விவகாரங்கள் கட்டாயத் திருமணத்தில் முடியும்.
       மாணவர்கள் ;-  மாணவர்கள் முகநூல் மற்றும் வலைத் தளங்களில் பொழுதைக் கழிக்காமல் மேல்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்குத் தயாராவது நல்லது.  கல்லூரியில் புதிய மாற்றங்கள் உற்சாகம் தரும்.
       தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம்  18 – 05 - 2015 அதிகாலை 05 – 06  மணிமுதல் 20 – 05 - 2015 காலை 10 – 33  மணி வரை ஆகும். இக் காலங்களில்
கவனமுடன் செயலாற்றுங்கள்.
விருச்சிகம்
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
( இராசி  அறியாதவர்கள் பலன் அறியதோ, , நி, நு, நே, நோ, , , யு )
 விருச்சிக ராசி வாசகர்களே !
       தங்கள் இராசிநாதன் செவ்வாய் களத்திர பாவமேறி கணவன் மனைவி இடையே கருத்து வேற்றுமைகளுக்குக் காரணமாகிறார். மாத முற்பகுதியில் சூரியன் பொருளாதார முன்னேற்றம் போன்ற நற்பலன்களை அளிப்பதோடு, வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். அரசுத் துறையால் இலாபம் அல்லது உத்தியோக வாய்ப்பு ஏற்படும். நெடுந்தூரப் பயணங்களால் இலாபம் ஏற்படும். பின்னர், குறிக்கோளற்ற பயணங்கள் ஏற்படும். குருவால் அரசு மரியாதை கிட்டும். அரசியலில் உயர்பதவிகள் கிடைக்கும். அரசாங்கத்தின் மூலமாக இலாபம் உண்டாகும். தெய்வீக வாழ்க்கையிலும் பற்று ஏற்படும். அட்டமத்தில் இருக்கும் சுக்கிரன் தங்களை எட்டாத உயரத்துக்குக் கொண்டு செல்வார். நல்ல வசதியுள்ள வீடும், சுகமும் கிடைக்கும். பூமிலாபம், ஆண்வாரிசு உருவாகுதல், இன்பம், சந்தோஷம், மணவாழ்வில் மகிழ்ச்சி, நவீன மற்றும் சுகபோகத்திற்கான சாதனங்கள் கிடைத்தல் ஆகிய நன்மைகளையும் தருகிறார். பணியாட்களால் உதவி கிடைக்கும். சிலர் ரகசிய வேலைகளில் ஈடுபடுவர்.
       குடும்பம்  ; குடும்ப சுகத்தையும், தனலாபத்தையும், புதிய நண்பர்கள் மற்றும் சந்தோஷத்தையும் அடைவர். இனிய பயணங்களால் இன்பம் சேரும்வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்.
       தொழில் ;. சந்தையில் கோதுமை, கொள்ளு, பீன்ஸ் ஆகியவை   ஆதாயம் தரும்வியாபாரத்தை அதிகரிக்க புதிய யுக்திகளைக் கையாண்டால், கைமேல் பலன் கிடைக்கும்.
       பெண்கள் ;-  பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் பணிகளில் முழுத் திருப்தி இருக்கும்உயர் அதிகாரிகளின் உதவியால் பதவி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்யப்படும். ஆடம்பரச் செலவுகளால் பிறரிடம் கடன் வாங்க நேரிடும்.
       மாணவர்கள் ;- கல்லூரிக் கல்விக்கான முயற்சிகளில் ஏற்படும் தடை தாமதங்களையும் மீறி அவற்றில் வெற்றி பெறுவர். எவ்வித சிபாரிசும் இன்றி தங்கள் திறமையால் விரும்புய பாடப்பிரிவுக்கு அனுமதி கிடைக்கும்.
       தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 20 – 05 - 2015 காலை 10 – 34  மணிமுதல் 22 – 05 - 2015 மாலை 06 – 23  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
தனுசு
 ( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் –1 பாதம்)
( இராசி  அறியாதவர்கள் பலன் அறியயே, யோ, , பீ, பூ, , , டா, பே )
தனுர் ராசி வாசகர்களே!
       தங்கள் இராசிநாதன் குரு அனுகூலமற்ற நிலையில் பாதகமான பலன்களையே தருவார். காரியங்களில் தோல்வி ஏற்படும். அவமானங்களும் வீண்பழிகளும் கவலை தரும். அரச கோபத்துக்கு ஆளாக நேரும். களத்திர பாவத்தில் உள்ள சுக்கிரன், பெண்ணின் கலகத்தால் வாழ்க்கையில் நிம்மதி இழக்கச் செய்வான். ருண பாவச் செவ்வாய் தனதான்ய விருத்தி, பொன்நகை, புதிய ஆடை சேருதல் போன்ற நற்பலன்களை நல்குவார். எல்லாத் துறைகளிலும் இலாபமும், வெற்றியும் கிடைக்கும். திருமணம் கைகூடி, பிள்ளைப் பேறும் உண்டாகும். இணைந்துள்ள புதன் அரசுத் துறையில் வேலையும், எழுத்துத் தொழிலில் முன்னேற்றத்தையும் தருவார். கல்வியில் முன்னேற்றம் இராது. சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும்பரிசுப் பொருட்கள், உயரிய அன்பளிப்புக்கள் கிடைப்பதன் காரணமாகக் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கட்டுக் கடங்காத செலவுகளைத் தருவான் சனி.   கர்மத்தில் உள்ள இராகுவால் காசியாத்திரை செல்லலாம்சிலருக்கு அரசுப் பணியில் இடமாற்றம் ஏற்படலாம்.
       குடும்பம்  ;-  குடும்ப ஒற்றுமை மேலோங்கி, வீடு மற்றும் வாகனம் வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். அனைத்து  வசதிகளும் கிடைத்து சந்தோஷம் நிலவும்.. சில சமயங்களில் மனைவியுடன் சிறுசிறு ஊடல்கள் ஏற்படலாம்.      
       தொழில்  ;- தொழிலில் நாளுக்கு நாள் ஏற்படும் முன்னேற்றங்களால் சந்தோஷமும், செல்வமும் பெருகும். பால் வளம் பெருகும். இலாபம் அதிகரித்து வியாபாரத்தில் புதுத் தெம்பும், உற்சாகமும் கூடும்.   
       பெண்கள் ;- பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் அனுசரணையால் உற்சாகம் பொங்கி, மனநிறைவோடு தங்கள் பணிகளைத் திறம்படச் செய்வர்வீட்டிலும் தன் பேச்சைக் கேட்டு நடக்கும் கணவனைக் கண்டு மகிழ்வர்
       மாணவர்கள் ;- மாணவர்களின் கல்வித்தரம் உயரும்மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களால் கல்லூரியில் தங்களுக்கு உரிய பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருக்காது.  
     . தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 22 – 05 - 2015 மாலை 06 – 24    மணிமுதல் 25 – 05 - 2015 அதிகாலை 4 – 33  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

மகரம்
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
( இராசி  அறியாதவர்கள் பலன் அறியபோ, , ஜி, ஜூ, ஜே, ஜோ, கா, , கீ )
மகரராசி வாசகர்களே !
       தங்கள் இராசிநாதன் இலாப பாவத்தில் இருப்பதால் பலவழிகளிலும் பணம் சேரும். சிலருக்கு உயர்ந்த அதிகாரி, அமைச்சர் போன்ற பதவிகள் கிடைக்கும். பெண் குழந்தை பிறக்கும். மாற்றான் பணமும் வந்து சேரும். பல நண்பர்கள் கிடைப்பர். வீண் செலவுக்கும் குறைவிருக்காது.  குரு, களத்திர பாவத்தில் அமர்ந்து, மனைவி மூலம் பூர்ண சுகத்தைத் தருவான். செல்வம் கொழிக்கும். உயர்ரக வாகனாதிகள் கிடைக்கும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைந்து, அவள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் ஏற்படும். கணவனுக்கு அடங்கிய குணவதியாய் அமைவாள்சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் இனிய பயணங்களைத் தருவார். புத்திர பாக்கியம், திருமணம் மற்றும் செல்வ வளத்தைப் பெருக்குவார். தைரியபாவ கேதுவால் வெற்றி உண்டாகும். ருணபாவ சுக்கிரன் வயிற்று வலி போன்ற உபாதைகளைத் தருவான். புத்திர பாவத்தில் உள்ள செவ்வாய், புதன் அனுகூல நிலையில் இல்லை. எல்லோரும் எதிரிகளாவர். விபரீத ஆசைகள் தோன்றி, தொல்லைகளும் அதிகரிக்கும்.   
       குடும்பம்  ;- பலவகை யோகமும் சந்ததி விருத்தியும் ஏற்படும். செயல்திறன் கூடும். தெய்வபக்தி பெருகும்மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும். உறவுகளும் தக்க சமயத்தில் கை கொடுப்பர்.
       தொழில்  ;-  தொழில் மற்றும் வியாபார இலாபம் சம்பந்தமாக அதிக எதிர்பார்ப்புக் கூடாது. எதிர்பார்ப்பு ஏமாற்றந்தரும். சிலருக்குப் பண விரயங்களும் ஏற்படும்கடின உழைப்புக்குப் பிறகே குறிப்பிட்ட இலம்மை எட்ட முடியும்.     
       பெண்கள் ;- பணிபுரியும் பெண்கள் தாங்கள் முழுமனதோடு பணியில் ஈடுபட்டால் மட்டுமே எதிர்பார்த்த பதவி உயர்வுகள் மற்றும் முன்னேற்றங்கள் ஏற்படும்.   சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான காலம்.
       மாணவர்கள் ;- கல்வி, ஆராய்ச்சி அல்லது விளையாட்டு சம்பந்தமான பயணங்கள் பயனுள்ளதாக அமையும். வாகனங்களில் செல்லும்போது வேகத்தைக் குறைத்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.
       தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 25 – 05 - 2015 அதிகாலை 4 – 34 மணிமுதல் 27 – 05 - 2015 மாலை 04 – 10  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
( இராசி  அறியாதவர்கள் பலன் அறியகு, கூ, கோ, , ஸீ, ஸூ, ஸே,ஸோ, தா )
கும்பராசி வாசகர்களே !
       தங்கள் இராசிநாதன் கர்மகாரகன் சனி கர்மபாவத்தில் உள்ளார். புத்தி தெளிவு இராது. நிர்ணயத்திறன் குறைவதால் லாபமில்லாத, ஆதாயம் இல்லாத வேலைகளைச் செய்யவேண்டிய சூழ்நிலை உருவாகும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இருக்காது. ஓயாத உழைப்பும் அதைச் செய்ய முடியாத களைப்பும் ஏற்படும். முற்பகுதியில் சகோதர பாவத்தில் இருக்கும் சூரியனால் பணம் காசு சேரும். தனக்கு விருப்பமான பெண்ணின் உறவு ஏற்படும். பலவிதத்திலும் புகழ் உண்டாகும். பிறருக்காக வாதாடி வெற்றி பெறுவார். பின்பகுதியில் வீட்டில் நிம்மதி இராது. சுகபாவத்தில் உள்ள புதனால் கல்வியில் வெற்றி ஏற்படும். இணைந்திருக்கும் செவ்வாயால் உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படலாம். சிலருக்கு விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவைருணபாவ குருவால் பங்காளிகளின் கைமேலோங்கும். புத்திர பாவ சுக்கிரனால் நல்ல குழந்தை பிறக்கும். சொற்பொழிவுத் திறன் அதிகமாகி, அதனால் ஆதாயம் மேலிடும். தனவிருத்தி உண்டாகும்மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு உறவுகள் மற்றும் மனைவியுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.
       குடும்பம்  ;-  மன அமைதி குறையும் போது தெய்வப் பிரார்த்தனையால் வேண்டிய காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் உடன் பிறப்புக்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
       தொழில்  ;- தொழில் மற்றும் வியாபாரத்தில் கஷ்டப்பட்டு சாதனை படைப்பீர்கள், பணிக்குச் செல்லும் பெண்கள் சேமித்த பணத்தில் புன்னகையோடு பொன் நகைகள் வாங்குவார்கள்.
       பெண்கள் ;- உயர் அதிகாரிகள் போற்றும் வண்ணம் தங்கள் பணிகளை நல்ல முறைகளில் செய்து வெற்றியடைவர். சுய தொழில் செய்யும் பெண்கள் தங்கள் பணிகள் சிறக்க ஆர்வமுடனும், சிரத்தையுடன் ஈடுபடுவர்.
       மாணவர்கள் ;-, புதிய கல்லூரி சூழ்நிலைகள் மாணவர்களுக்கு மனதில் உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் தரும். வாகனங்களில் செல்லும்போது கவனமாகச் செல்லுவதால் விபத்தைத் தவிர்க்கலாம்.
       தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 01 – 05 – 2015 காலை 06 – 00 மணிமுதல் 02 – 05 – 2015 இரவு 8 – 10 மணிவரை மற்றும் 27 – 05 - 2015 மாலை 04 – 11  மணிமுதல் 30 – 05 - 2015 அதிகாலை 03 – 34  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
( இராசி  அறியாதவர்கள் பலன் அறியதீ, து, , , ஶ்ரீ, தே,தோ, ச்ச, சீ )
மீன இராசி வாசகர்களே !
       தங்கள் இராசிநாதன் குரு மனதில் சந்தோஷத்தையும், நல்ல நண்பர்களின் அருகாமையையும், புத்திர பாக்கியத்தையும், பகை வெல்லுதலையும், அரசு அனுகூலங்களையும், அதிக சொத்து சேர்க்கையையும், அறிவு விருத்தியையும், அதிக இலாபங்களையும், எதிலும் வெற்றியையும், உயர் அதிகாரிகளின் உதவிகளையும் அள்ளித் தருவார். தைரிய பாவச் செவ்வாயால் சகோதரரால் நன்மை உண்டு. பால்மாடுகள் நிறையப் பால் தரும். எதிலும் வெற்றியும், சந்தோஷமும் உண்டாகும். இணைந்துள்ள புதனால் அவமானங்கள் ஏற்படும். தனக்கென ஒரு அழகிய வீட்டைத் தருவான் சுக்கிரன். நண்பர்கள் மூலம் வாழ்க்கையில் புதிய வசதிகள் கிடைக்கும். உத்தம குணங்கள் அதிகமாகும். தரும சிந்தனையும் மேலிடும். உயர் அதிகாரமுள்ள பதவிகள் கிடைக்கும். எதிர் பாலரின் நட்பையும், மனதளவிலும் மற்றும் இல்லறத்திலும் மகிழ்ச்சியையும், தனலாபத்தையும், அதிக வருமானத்தையும் அள்ளி வழங்குவார். சிலருக்குப் பெண்ணால் அவமானம் ஏற்படலாம்.
       குடும்பம்  ; கேட்காமலே நண்பர்களின்  உதவிகள் கிடைக்கும். புதிய வாகன வசதிகள் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மனைவியின் நடவடிக்கைகள் மகிழ்ச்சி தருவனவாய் இருக்கும்.   
       தொழில்  ;-  வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் சிலருக்கு ஏற்படும். அதன் காரணமாக ஆதாயம் ஏற்படும்.  அரசுவகையில் கிடைக்கும் உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
       பெண்கள் ;- பெண்கள் தாங்கள் பணிபுரியும் பணியிடங்களில், தங்கள் விருப்பம் போல் இடமாற்றம் கிடைக்க முயற்சி செய்யலாம். வீட்டு மனைவிகள் தங்கள் கணவன்மார்களின் பரிபூர்ண அன்பைப் பெறுவர்.  
       மாணவர்கள் ;-  சிலருக்கு ஆரோக்கியக் குறைவு காரணமாகப் படிப்பில் தடங்கல்கள் ஏற்படலாம். உயர் கல்வியில் கல்வித் தரத்தை சீராக வைக்க அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
       தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 02 – 05 – 2015 இரவு 08.11 மணி முதல் 05 – 05 – 2015 அதிகாலை 05 – 44 மணிவரை மற்றும் 30 – 05 - 2015 அதிகாலை 03 – 35 மணிமுதல் 01 – 06 - 2015 பகல் 01 – 17  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.