Showing posts with label கூடலின் நாயகனே. Show all posts
Showing posts with label கூடலின் நாயகனே. Show all posts

Monday, September 24, 2012

கூடலின் நாயகனே



கூடலின் நாயகனே !






கூடலின் நாயகனே – எங்கள்
           குடும்பத்தின் காவலனே !
மதுரவல்லி மணாளனே – மங்கை
           ஆண்டாள் காதலனே !
பாடலின் நாயகனே – யென்றும்
            பக்தர் குறைதீர்ப்பவனே.


அருள்வாயப்பா, பெருமாளப்பா,யிருள் நீக்கி
            யொளி சேர்க்க வருவாயப்பா ;
ஒருநாளில்லை,யிருநாளில்லை,பலநாளாய்ப்
            பதம் பணிந்தோம்,குறைதீரப்பா ;
வருநாளெல்லாம் திருநாளென்றே,நிறைதரு
            முனைப் பணிந்தோம்,நிகர்யாரய்யா ;
திருக்கோலத்தை,யிருகண்களாற் பருகியே
             மனமகிழ்ந்தோ மெழில் நீயப்பா.
                                  (அருளவாயப்பா)


வலம் வந்ததும்,நிலம் வீழ்ந்ததும்,வரங்கேட்டு
             வழிகாட்ட முறையிட்டதும் ;
குலம் வாழவும்,குறைதீரவும் கோபாலா
             யென்றுறக்கக் கூப்பிட்டதும் ;
கலங்காதவோர்,மனம் வேண்டியே கண்ணாயெனக்
              கூவி யுனை யழைத்ததும் ;
உலகளந்தவா,உடன் வந்தெனை,உயர்வான
              ஓரிடத்தை நீ காட்டியே.
                                (அருள்வாயப்பா