Showing posts with label நாடியில் ஜாதக ஆய்வு -3. Show all posts
Showing posts with label நாடியில் ஜாதக ஆய்வு -3. Show all posts

Tuesday, May 15, 2018

நாடியில் ஜாதக ஆய்வு -3

நாடியில் ஜாதக ஆய்வு -3




ஜாதகம் – 8
         இந்த ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் இராகுவின் பிடியில் பரிவர்த்தனை பெற்றுள்ளன. இதன் காரணமாக ஜாதகரின் பெற்றோர் நீர் மற்றும் வாகன விபத்தை எதிர்கொண்டு மீண்டு வரவேண்டிய சூழ்நிலை ஏற்படும். மேலும், சுக்கிரன் வக்ரமாகி உள்ளதால், ஜாதகரின் சகோதரி, பெற்றோர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் மற்றும் ஆபத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் தன் கடைசி (நீச சுக்கிரன்) மூச்சை இழுத்தாள்.  இந்த நீச சுக்கிரனால் ஜாதகர் தனக்கு சேர வேண்டிய பரம்பரை சொத்துக்கள் கிடைக்காமல் வஞ்சிக்கப்பட்டார். மேலும், இவரது மனைவி முறையற்ற காதல் விவகாரங்களில் ஈடுபட்டார்.
         முதலில், சனிக்கு 2 ஆம் இடத்தில் இருக்கும் செவ்வாய் மலை போன்ற துன்பங்களை மனிதருக்கு தந்தது. செவ்வாய் கும்பத்திற்கு சென்று திரும்ப வந்த போது மீண்டும் எதிரிகளின் தொந்திரவு ஆரம்பமானது.
        





செவ்(வ)
உ. ஜா. 8
சூரி
சனி
இராகு
சந்திரன்



சுக் (வ)

         இது நமக்கு வக்ர கிரக நிலையில் உள்ள கிரகங்களின் மீதான துல்லிய ஆராய்ச்சியின் மூலமாகவே ஜாதக நிலைகள் ஆராயப்படவேண்டும் என்பதை அருதியிட்டுக் கூறுகிறது.
சோதனை அடிப்படையில், உச்ச கிரகங்களால் ஏற்படும் விசேஷமான தாக்கங்கள்.
         பிரபஞ்ச காப்பாளர் மகாவிஷ்ணுவின் அவதார ஜாதகம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜாதகத்தில், (9) ஜோதிடத்தில் நாடி விதிப்படி குரு இருக்கும் இடத்திற்கு 12 இல் குருவை வைத்தோமானால் இங்கு மிதுன இராசி ஜாதகரின் முந்தைய அவதாரத்தை குறிகாட்டும். புதனின் ஆட்சி வீடான மிதுனம், ஜீவன் காரகன் குரு விஷ்ணவின் அடையாளத்தைப் பெறுகிறார். ஏனெனில், புதன் விஷ்ணுவைக் குறிகாட்டுகிறது. இந்து பாரம்பரிய கதைகள் மூலமாக ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக இருக்கிறார். குருவை மிதுனத்தில் வைக்கும் போது மீனத்திலுள்ள புதனுடன் கிரக பரிவர்த்தனை பெறுகிறது. அங்கு சுக்கிரன் உச்சமாதலால் அங்கு மகாலட்சுமி வடிவில் ஶ்ரீ தேவியை அடைகிறார். புதன் பூமியைக் குறிகாட்டுவதால் பூதேவியை இணைகிறார்.

புத,சுக்

சூரி


கேது
உ. ஜா. 9
லக்// சந்
குரு
செவ்
இராகு



சனி


         ஶ்ரீதேவியைக் குறிப்பதாக சுக்கிரனை எங்ஙனம் கருதுவது ? கும்பத்திலுள்ள கேது கிரகங்களுக்கு உரிய வேராகக் கருதப்படுகிறது. மீனமும், கடகமும் வடக்கு திசையையும், கடக சந்திரன் நீரையும், மீன புதன் இலையையும், சுக்கிரன் தாமரையையும் குறிகாட்டுகின்றன. இந்த சின்னங்களை ஒருங்கிணைக்கும் போது கேது (வேர்கள்)+ சந்திரன்(நீர்)+ மீனம்(திருமகளின் இருப்பிடம் அல்லது தேவலோகம்)+ மீன புதன் (இலை) + சுக்கிரன் (மலரக் கூடிய தாமரை மொட்டு)  எனக் கொள்ளலாம்.
         மற்றுமொரு பூராண கதைப்படி மேஷம் காலபுருஷ தத்துவத்தின்- படைப்புக் கடவுளின் தலைப் பகுதி ஆகும். மீனம் பாதப் பகுதியாகும். மகாலட்சுமி விஷ்ணுவின் பாதத்தில் அமர்ந்து சேவை செய்வதை இது குறிகாட்டுகிறது. இலட்சுமியும் ஆசிர்வதிக்கப்பட்டவர் ஆகிறார். அதனாலேயே, மகாலட்சுமியை உச்ச சுக்கிரன் குறிகாட்டுகிறார். குரு ஜீவன் காரகர் ஆகிறார். கிழக்கே உதிக்கும் சூரியன்  தலைமையைக் குறிக்கிறார்.
          இராமா அவதாரத்தில் இராமன் மும்மூர்த்திகளின் ஸ்வருபமாக விளங்குகிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை செய்கின்றனர். பிரம்மாவை குரு, கேது மற்றும் சுக்கிரன் குறிகாட்டுகின்றனர். படைப்பவன் பிரம்மா வலது கரத்தில் வேதப் புத்தகத்துடன் தாமரை மலரில் வீற்று, தியான ஜெபமாலையுடனும், அழிவற்ற அமுத நீரூற்றுடனும் காட்சி அளிக்கிறார்.
         இதையே வேறுவிதமாக பார்க்கும் போது கடகம் மற்றும் மீனம் வடக்கு திசையயை ஆள்கின்றனர். மீனம் தேவலோகம் ஆகும். குரு மீன இராசியின் பார்வையை பெறுகிறார். அங்கே புதன் தியான அறிவுக்கான புத்தகத்தை குறிகாட்டுகிறார். அதற்கு 12 ஆம் பாவமான கும்பத்தில் கேது தியானத்தையும், வாழ்க்கையில் இருந்து விடுபடுதலையும் குறிகாட்டுகிறார். சுக்கிரன் தெய்வீக தாமரை மலரைக் குறிகாட்டி, பிரம்மாவை நினைவுறுத்துகிறார்.
          புதனுடன் இணைந்த ஜீவன் குரு வட திசை இராசிக்கு உரியவர் பூதேவியை குறிகாட்டுகிறார். இது பிரபஞ்ச காப்பாளர் மகாவிஷ்ணுவையும் குறிபாட்டுகிறது.
          கடகத்தில் உள்ள குரு சந்திரனுடன் இணைந்து பார்வதியை குறிகாட்டுகிறார். அதற்கு 7 ஆம் பாவமான மகரத்தில் உள்ள செவ்வாய் ருத்திரன் ஆகிய மகேஸ்வரனைக் குறிகாட்டுகிறார்.
         இராமாவதாரத்தில் இராகு ஆகிய அரக்கர்களின் தலைவன் மகா துவாராதிபதியை (தலைவாசல் காவலன்) குரு, செவ்வாயின் (ஈஸ்வரன்) உதவியுடன் அழித்தான்.  இங்கு, இராமரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள், அவர் தனது வாழ்க்கையின் குறிக்கோள்களை அடைய எவ்வளவு தூரம் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதிருந்தது என்பதைக் காட்டுகின்றன.
         தொழிலுக்கான குறிகாட்டி சனி துலாத்தில் உச்சம் பெற்று, தந்தைக்கு காரகம் பெற்ற சூரியன் அதற்கு 7 ஆம் இடமான மேஷத்தில் உச்சம் பெற்று உள்ளார். சனிக்கு திரிகோணத்தில் கும்பத்தில் கேது ( மேற்கு திசை இராசிகள் துலாம் மற்றும் கும்பம்) இது வாழ்க்கையின் குறிக்கோளான பிறப்பிலிருந்து இறப்புவரையான வட்டத்தில் மனித விடுதலையைக் குறிகாட்டுகிறது. சனிக்கு அடுத்து உள்ள உச்ச செவ்வாய் உச்ச குருவால் பார்க்கப்படுகிறது. இங்கு செவ்வாய் பகவான் இராவணன், கும்பகர்ணன் போன்ற அரக்கர்களிடம் இருந்தும் சுக்ரீவன் போன்ற நல்லவர்களைக் காக்கவும் இராமனால் உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதங்களான வில்லும் அம்பையும் குறிகாட்டுகிறது. அடுத்து உச்ச சுக்கிரன் இராவணனிடம் இருந்து சீதாதேவியை விடுதலை செய்து காத்ததையும் குறிக்கிறது. முடிவில் உச்ச சூரியன் இராமனுக்கு அயோத்தி சக்ரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்துவைத்ததை குறிகாட்டுகிறது.
         இராவணன் சீதாதேவியை இலங்கைக்குக் கடத்திச் சென்று, சிறை வைத்ததற்கு அவளையே குற்றம்சாட்ட வேண்டும் எனக் குறிப்பிடபட்டு உள்ளது. இராமாயணத்தில், இராவணன் சீதையை பலவந்தமாக கடத்தி சென்று இலங்கையில் சிறைவைத்தததாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால் சீதாதேவி, மகாலட்சுமியின் மனிதப்பிறப்பே ஆகும்.  இராவணன் பலவந்தமாகக் கடத்தியது மகாலட்சுமியின் மறு அவதாரமான மனிதப் பிறவி சீதாவையே கடவுள் மகாலட்சுமியை அல்ல  என்பது சில மிக புலமை வாய்ந்த நூல் ஆசிரியர்களின் கருத்து ஆகும்.
         இதற்கான விளக்கம் – சிம்ம இராசி அரசர்களின் மாளிகை ஆகும் இந்த மாளிகை வாசலின் வாயில் காப்போன் இராகு ஆவான். இந்த நிழல் கிரகம் அரக்கன் இராவணனையும் குறிகாட்டுகிறது. இடப் புறமாகச் சுற்றும் இராகுவுக்கு இரண்டாவது இராசி கடகம் ஆகும். இதன் அதிபதி சந்திரன் களங்கத்திற்கும், தோஷத்திற்கும், கெட்ட பெயர் எடுப்பதற்கும் காரகம் பெறுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி கடகமும், மீனமும் ஒரே வடதிசை இராசிகளாகும். எனவே, சந்திரன் ஒருதிசை கிரகங்களான மீனத்திலுள்ள சுக்கிரன், புதனுடன் தொடர்பு கொள்கிறது. இந்த சந்திரன், சுக்கிரன் தொடர்பே சீதா தேவிக்கு(சுக்கிரன்) ஏற்பட்ட களங்கத்திற்கு, கெட்ட பெயருக்கு (சந்திரன்) காரணமாகிறது.
         இராமனின் ஜாதகத்தில் உள்ள சுக்கிரன், புதன், சந்திரன் இணைவு இராகுவின் பாதிப்பு மற்றும் பார்வையால் இராமன் சந்தேகப்பட்டு சீதாவை குற்றம் சாட்டியதற்குக் காரணமானதோடு மட்டுமல்லாமல், அரக்கர்களால் சீதாவுக்கு ஏற்பட்ட தொல்லைகள், துயரங்களுக்கும் காரணமாயிற்று. குரு உச்சமாகி சந்திரனுடன் இணைந்து, பரிவர்த்தனை காரணமாக சுக்கிரன், புதன் தொடர்பால் மூன்று பெண் கிரகங்கள் குருவின் பலத்தைக் குறைத்துவிடுகின்றன. இராமனின் ஜாதகத்தை அலசினால் இன்னொரு இதிகாசம் எழுத வேண்டியதிருக்கும் ஆதலால் நாடியில் சில விதிகளுக்கு விளக்கத்தை மட்டுமே சொல்லியுள்ளோம்.