Showing posts with label காதில் விழாதோ ?. Show all posts
Showing posts with label காதில் விழாதோ ?. Show all posts

Sunday, November 18, 2012

காதில் விழாதோ ?







 காதில் விழாதோ ?


காதில் விழாதோ ? கத்துங்குரலே,
கந்தா ! கந்தாயென்றே உந்தன்
காதில் விழாதோ ?

காதல் கொண்டுன் மேற்,
கனிந்து மனமுருகும் ;
மாதென் மனமறியா , யெழில்
மன்னவனே உந்தன்
                (காதில் விழாதோ ?)
நாதியா ருனைவிட்டால்
சோதித்தல் முறையோ ? ஐயா !
சுந்தர முகங்காட்டு,
சுகங்கள் பலவும் கூட்டு,
மந்திர வேத மோத,
மணவினைக் கோலங்காண
வந்திடு ஐயா,பேதை
வழி சென்றாள்,காதற்பாதை-இன்னுங்
                (காதில் விழாதோ ?)