Showing posts with label அருளன்றி நாடுவது வேறேதம்மா ?. Show all posts
Showing posts with label அருளன்றி நாடுவது வேறேதம்மா ?. Show all posts

Friday, December 7, 2012

அருளன்றி நாடுவது வேறேதம்மா ?







அருளன்றி நாடுவது வேறேதம்மா ?




அழகை ரசிக்க ஓராயிரங் கண் போதாதம்மா ! – உன்
அருளையன்றி நாடுவது வேறேதம்மா ? -- அம்மா
                                       (அழகை ரசிக்க)
காதலனாம் சொக்கனோடு ஆட்சி செய்தாயே ,
மதுரையை ஆட்சி செய்தாயே :
கருணையுளங் கொண்டு காட்சி தந்தாயே .
                                       (அழகை ரசிக்க)
தினந்தொழும் பக்தருள்ளம்  நீ நின்றாயே   - அவர்
மனமுருகும் நிலை கண்டு உளம் நெகிழ்தாயே – அம்மா
                                       (அழகை ரசிக்க)
கிளி கொஞ்சும் கரங் கொஞ்சம் வழி காட்டுமா ? – நல்ல
வழிகாட்டி, வாழ்வுக்கு ஒளி கூட்டுமா ?
களிப்பினில்  மனமெழிற் கவி பாடும் போது – அக்
கவி கேட்டுக் களி நடம் புரிவாயம்மா – தாயே
                                       (அழகை ரசிக்க)