Thursday, May 7, 2020

தனயோக இணைவுகள்




 

தனயோகம்.

       பல்வேறு பெயர்களில் உலா வரும் இராஜயோகங்களுக்கான இணைவுகள் பாக்கியாதிபதி மற்றும் கர்மாதிபதி ஆகியோரால் அளிக்கப்பட்டு, செல்வமும், சக்தியும் அதிகரிக்கிறது. பொதுவாக்க் கீழ்கண்ட பாவாதிபதிகளின் தொடர்புகளால் தனயோகங்களால் ஏற்படுகிறது.  அவை இலக்னம்,1, 2, தனபாவம், 5, பூர்வ புண்ணிய ஸ்தானம், 9 – பாக்கிய பாவம் மற்றும் 11. இலாப்பாவம் ஆகியவை ஆகும். திருக் பாவாதிபதிகள் ஒருவருக்கொருவர் தொடர்புறும் போது யோகங்கள் ஏற்படுகின்றன. விபரீத ராஜயோகங்கள் இந்த திருக் பாவ தொடர்புகளால் ஏற்படுகிறது

       ஜெய்மினி சூத்திரத்தில் ஆரூட இராசி மற்றும் ஆத்மகாரக இராசிகளால் யோகங்கள் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

       சந்திரனால் அதியோகம், வசுமதி யோகம் ஆகியவை ஏற்படுகின்றன. சுக்கிரன் மற்றும் குருவின், சந்திரனுடனான இணைவுகளும் யோகம் அளிக்கின்றன. அதிசக்தி மிக்க செல்வ நிலைக்கான யோகங்கள். பலமான வீட்டில், பலமான கிரகங்களின் பார்வைபடும் போது இராகு, கேதுக்களும் இராஜயோகத்தை  ஏற்படுத்துகின்றன. இது தவிர ஹேமதுரும யோகம் போன்ற தரித்திர யோகமும் சந்திரனால் ஏற்படுகிறது.

       ஒரு ஜாதகத்தில் இலக்னம், இலக்னாதிபதி, சூரிய, சந்திரர்கள், முக்கியமாக பாக்கியதிபதி ஆகியோர் நல்ல நிலையில் அமர்ந்து இருந்தால், நல் அதிர்ஷ்டம் தரக்கூடிய பல யோகங்கள் சிறந்த பலன்களை அளிக்கின்றன. இந்த யோகங்களின் அளவு இந்தக் காரணிகளை ஒத்தே கூடுதலாகவோ, குறைவாகவோ ஏற்படுகின்றன.  இவைகளின் பலத்தைப்பற்றி பார்க்கும் போது கிரகத்தின் பலம், ராசியில் அதன் நிலை, அங்கே அதன் மதிப்பு ஆகியவையும், இராசி மற்றும் நவாம்சத்தில் அவற்றிற்கு இடம் கொடுத்தவனின் பலமும் பார்க்கப்பட வேண்டும். மேலும் செல்வ நிலையைப்பற்றி ஆராயும் போது, தசாம்ச சக்கரமும், சதுர்தாம்ச சக்கிர பலன்களும் ஆராயப்பட வேண்டும்.

       ஜாதகரின் செல்வ நிலையைப்பற்றி ஆராயும் போதும், ஏதாவது அல்லது பலயோகங்களின் பலன்களை ஆராயும் போதும், அதற்குக் காரணியான கிரகங்களின் நேரடித் தொடர்புகளையும் பார்க்கவேண்டும். ஜாதகரின் முழுமையான செல்வநிலை 2 ஆம் பாவத்தால் குறிகாட்டப்படுகின்றன. அதற்குத் திரிகோண பாவங்களும், பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு 2 ஆம் பாவமான  6 ஆம் பாவமும், பாக்கிய பாவத்துக்கு 2 ஆம் வீடான 10 ஆம் பாவம் மற்றும் கர்ம பாவத்துக்கு 2 ஆம் பாவமான இலாப பாவமான 11 ஆம் பாவம் ஆகியவை மிக முக்கியமான பாவங்களாகும். சுக்கிரன், குரு ஆகியோர் செல்வத்துக்குக் காரகர்கள் ஆகிறார்கள். எனவே, இவர்களின் நிலையும் இலக்னத்தில் இருந்தும், சந்திரா இலக்னத்தில் இருந்தும் தீவிரமாக ஆராயப்பட வேண்டும்.  

       மேற்சொன்ன பாவங்களின் பலம் மிக்க அதிபதிகள், அவர்களின் நன்நிலை, அவைகளின் சுபர்களுடனான சிறப்பான தொடர்புகள் மற்றும் நன்நிலை ஆகியவை சீரான மற்றும் அதிகரிகக் கூடிய செல்வநிலைக்குக் காரணமாகின்றன. இவற்றில் இயற்கை மற்றும் தற்காலிக சுபர்களின்  இருப்பு  கூடுதல் சிறப்பாகும். இவற்றில் அசுபர்களின் இருப்பு நிலையும் ஆராயப்பட வேண்டும். ஏனெனில் ஒரு ஜாதகரின் பூர்வ புண்ணியம், பாக்கிய ஸ்தானங்களை 5, 9 ஆம் வீடுகள் குறிகாட்டுவதால், இவ்வீடுகள், அதிபதிகளுக்குப் பாப கிரகங்களால்  ஏற்படும் பாதிப்பு செல்வ நிலையைப் பொறுத்தவரை ஜாதகருக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

       இந்த பாவாதிபதிகள் தங்கள் ஆட்சி, உச்ச வீட்டிலோ, கேந்திர, திரிகோணங்களிலோ இடம்பெறும் போது ஜாதகரின் அதிர்ஷ்ட நிலைகளை மிகவும் உயர்த்திவிடுகிறது.  அதேபோல், இந்த பாவாதிபதிகள் பாதிப்பு அடைந்திருந்தால், ஜாதகரின் செல்வ நிலையும் பாதிப்படையும். நீசமடைந்த பூர்வபுண்யாதிபதி, பாக்கியாதிபதி, நீசபங்கம் ஆகாவிடில் பாதிப்பைத் தருவார்.

       4 ஆம் பாவம் மிகவும் முக்கிய பாவமாகும். இந்த பாவம் ஜாதகரிடம் உள்ள அல்லது அடையப்போகிற பூமி, அசையும் மற்றும் அசையா  சொத்துக்களைக் குறிப்பதாகும்.சுகாதிபதி, சுகபாத்தில் அல்லது எந்தவொரு நல்ல பாவத்தில் இருந்தாலோ அல்லது சுபர் அந்த பாவத்தில் இருந்தாலோ, பார்த்தாலோ ஜாதகர் வாகனம், பூமி ஆகியவற்றைப் பெற ஆசிர்வதிக்கப் பட்டவராவார். எவ்வளவு சொத்துக்களை உடையவராய் இருப்பார் என்பது கிரகங்களின் வலிமையைப் பொருத்தே அமையும்.

       10 ஆம் பாவம் என்பது கர்ம பாவம் ஆகும். இதை ஆராயும் போது அதன் அதிபதி, 10 ஆம் இடத்தைப் பார்க்கும், இணையும் கிரகங்கள் மேலும் 10 ஆம் இடத்துக்குக் காரகர்கள் ஆன குரு, சூரியன், புதன் மற்றும் சனி ஆகியோரும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவைகளின் மூலமாகவே  ஜாதகரின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான சம்பாத்தியத்தை அவர் எவ்வழியில் பெறுகிறார், சொத்துசுகம் என்ன ? - என்பவற்றை ஆராயலாம். ஆயினும் எதற்குமே கிரகங்களின், பாவங்களின் பலமே இவற்றை நிர்ணயிக்கும்.

       யாருக்கு பரம்பரைச் சொத்துக்கள் கிடைக்கும் ? எதிர்பாராத வரவுகள் எவர்க்குக் கிடைக்கும் ? லாட்டரி, பங்குச்சந்தை மூலமான வருமானங்கள் எவருக்குக் கிடைக்கும் ?

       அன்றன்றைக்கான வருமானத்துக்கு, பொருள் வரவு அல்லது தனவரவுக்கு 2 மற்றும் 11 ஆம் இடங்கள் பொறுப்பாகின்றன. அதற்கு எதிர் பாவங்களான 8 ( மரபுவழி சொத்து ) மற்றும் 5 ஆம் ( பூர்வபுண்ணியம் ) பாவம் ஆகியவை உழைப்பால் கஷ்டப்பட்டு சம்பாதிக்கப்படாத வருமானத்தைக் குறிக்கின்றன.  இந்த பாவங்களை ஆராயும் பொது அவற்றின் காரகர்களான குரு மற்றும் சனி, அவர்களின் தகுதி ஆகியவையும் கருத்தில் கொள்ளவேண்டும். இவர்கள் தங்கள் நல்ல பார்வைகள் மூலமாகத் தொடர்பு கொள்ளும்போது, அளவுக்கு அதிகமான உழைத்து சம்பாதிக்கப்படாத செல்வத்தை குறிகாட்டுகின்றன. அறுங்கோணப் பகுதி பார்வை (செமிசெக்ஸ்டைல்ஸ்) 30° , அறுங்கோணப்பார்வை (செக்ஸ்டைல்ஸ்) 60°, முக்கோணப்பார்வை ( ட்ரைன் ) 120°

        பொதுவாக 10 மற்றும் 11 ஆம் பாவங்களின் நட்சத்திராதிபதி நிற்கும் கிரகங்கள், லக்னப் புள்ளியின் நட்சத்திராதிபதி நிற்கும் கிரகங்களே செல்வ நிலை உயரக் காரணமாகிறார்கள். 10, 11 மற்றும் இலக்னத்தில் நிற்கும் கிரகங்களின் நட்சத்திரத்தில் இடம்பெறும் கிரகங்களும், யோக காரகனின் நட்சத்திரத்தில் இடம் பெறும் கிரகங்களும்  செல்வத்தை அள்ளித் தருகின்றன. மாறாக 8 ஆம் அதிபதியின் நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்கள் செல்வநிலையை அழிக்கவல்லனவாகும்.

      

லக்//

சனி

 

சுக்,செவ்()

ராகு

குரு

சூரி

 

 

 

 

 

 

இராசி

22/6/1966

01-18 (நள்ளிரவு)காலை

பிக்கானேர்

புத

சந்

குரு

 

நவாம்சம்

புத

கேது

 

 

லக்//

சுக்,ராகு

செவ்

சனி

 

கேது

 

 

 

சந்

சூரி

 

 

சனி தசா இருப்பு 0 – 3 மா – 12 நாள்.

       இந்த ஜாதகர் 1990 இல் வட இந்தியாவில் இருந்து, பிழைப்புத் தேடி சென்னைக்குத் தன் பையில் 500 / ரூபாயுடன் வந்தார். அப்போது இவருக்கு சுக்கிர திசை நடந்தது. மூன்று ஆண்டுகளுக்குள்ளாக ரியல் எஸ்டேட் தொழில் மூலமாக 40 லட்சத்திற்கும் மேலாகச் சம்பாதித்தார். சுக்கிரன், சந்திரா இலக்னத்தில் இருந்து இலாப பாவத்தில் அமர்ந்துள்ளார். இவருக்கு 5 ஆம் அதிபதி சந்திரன், 8 ஆம் அதிபதி சுக்கிரன் ஆவர். இங்கு சனியானவர் அறுங்கோணப் பார்வையால் சுக்கிரனைப் பார்க்கிறார். சுக்கிரன் சந்திரனை அறுங்கோணப் பார்வையால் தொடர்பு கொள்ளுகிறார். குரு , சந்திரனையும், சுக்கிரனையும் அறுங்கோணப் பகுதி பார்வையால் பார்க்கிறார். இந்த நிலைகளே இவரின் அளவற்ற வருமானத்திற்குக் காரணமானது.

முகேஷ் அம்பானியின் ஜாதகம் --

 

 

சுக்,சூரி

கேது,புத

செவ்

 

 

 

 

 

சூரி

ராகு

சுக்,லக்///

 

இராசி

19/4/1957

12 N 48

45 E 00

 

 

 

நவாம்சம்

சந்

 

குரு

()

 

சனி –()

 

சந்

லக்///

சனி()

ராகு

 

குரு-()

புத,கேது

 

செவ்

 

       இவரின் 5 ஆம் அதிபதி குரு, 8 ஆம் அதிபதி புதன் ஆவர். புதன் தனது முக்கோண பார்வையால் குருவை தொடர்பு கொள்கிறார். நடப்பு இராகு தசை. இராகு 12 இல், ஆனால் சந்திரனில் இருந்து 11 ஆம் இடத்திலும் உள்ளார். இராகு விசாக நட்சத்திரத்தில் உள்ளார். நட்சத்திராதிபதி குரு 10 ஆம் வீட்டிலுள்ளார். எனவே, இந்த திசை அவருக்கு அசாத்தியமான வளர்ச்சியைத் தந்தது.

       எனவே, நண்பர்களே! தனயோகத்துக்கான காரணிகளை உதாரண ஜாதகங்களோடு ஆராய்ந்தது, பயனுள்ளதாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன். வாழ்க வளமுடன்.


Wednesday, May 6, 2020

பிறப்பின் இரகசியம் 3


பிறப்பின் இரகசியம் 3

கரு-ஜாதகத்தில், துவாதசாம்சத்தில் சந்திரன் உள்ள இராசிவரை எண்ணவும், அங்கிருந்து, அந்த எண்ணை, எண்ணி வரும் இராசியோ அல்லது மேஷ இராசியிலிருந்து எண்ண வரும், இராசியோ, பிறப்பு ஜாதக இராசியாக அமையும்.

49 – கரு. லக்னத்தின், நவாம்சம், மகரம் அல்லது கும்பமாகி, கரு லக்னத்தில் சனி இடம் பெற அந்த ஜாதகிக்கு, மூன்று வருடங்களுக்கு, எவ்வித குழந்தைப் பிறப்பும் நிகழாது.

     அதேபோன்று, கரு.இலக்னத்தின் நவாம்சம் கடகம் ஆகி, சந்திரன், கருஇலக்னத்துக்கு 7 ஆம் இடத்தில் இருக்க, 12 வருடங்களுக்கு குழந்தைப்பிறப்பு அவர்களுக்கு இருக்காது.

50 – 51 – கரு இலக்னம் பகல் இராசியில் இருந்தால், பிரசவம் பகலில் ஏற்படும். இரவு இராசியில் இருந்தால், பிரசவம் இரவு நேரத்தில் ஏற்படும். கரு இலக்னம் கடந்த பாகை அளவு, விநாழிகையைக் குறிகாட்டுகிறது.(விநாழிகை = 24 நி. ) இந்த பாகை கடந்த பின் பிறப்பு ஏற்படும்.(சூரிய உதயத்துக்கோ\அஸ்தமனத்துக்கோ) கரு இலக்னத்துக்கு எந்த இராசியில், சம்தாம்ச லக்னம் விழுகிறதோ, அந்த எண்ணிக்கையை. மேஷத்தில் இருந்து எண்ண வரும் இராசியே, பிறப்பு இலக்னமாக அமையும். எனவே, இவ்வாறாக கரு இலக்ன பாகையை வைத்தே, பிறப்பு நேரத்தைக் கணக்கிடலாம்.

52 – திறமை மிக்க ஒரு ஜோதிடன், முதலில் சரியான நேரத்தை அறிந்து ஜாதக கணிதம் செய்ய வேண்டும். அதாவது, கருத்தரித்த, மற்றும் குழந்தை பிறந்த சரியான நேரத்தை அறிந்திருக்க வேண்டும். அதன், பிறகே ஜாதக கணிதமும், பலன் உரைத்தலையும் மேற்கொள்ள வேண்டும்.

53 – 55 – கரு இலக்னம் சிம்மமாகி, அங்கு சூரியன், சந்திரன் இணைந்து இருந்து, செவ்வாய், சனியால் பார்க்கப்பட்டால், பிறக்கும் குழந்தை குருடாகப் பிறக்கும். சூரியனும், சந்திரனும் இலக்னத்தில் இருந்து, சம அளவு, சுப மற்றும் அசுப கிரகங்களால் பார்க்கப்பட்டால், குழந்தையின் கண்களில், பூ விழுந்திருக்கும். அதன் காரணமாக குழந்தை கண் தெரியாததாகப் பிறக்கும். பலமிழந்த சந்திரன் 12 ஆம் இடத்தில் இருந்து, அசுப கிரகத்தால் பார்க்கப்பட, ஜாதகர், இடதுகண்ணை இழந்தவர் என குறிகாட்டப்படுகிறது. இதே, நிலையில் சூரியன் இருக்க, வலது கண்ணை இழந்தவராவார். இதே, நிலையில் இக் கிரகங்கள் சுபரால் பார்க்கப்பட்டால், குறிப்பிடப்பட்ட கண்களில் பிரச்சனைகள் இருக்குமேயன்றி, குருட்டுத் தன்மை இருக்காது. .

56 – கண்டாந்த சந்தியில் ( கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய இராசிகளின் கடைசி 3 பாகையில்) அசுப கிரகங்கள் இருந்து, ரிஷபத்தில் சந்திரன் இருந்து, செவ்வாய், சனி, சூரியன் ஆகிய கிரகங்களால் பார்க்கப்பட்டால், ஜாதகர் ஊமையாகப் பிறப்பார். எனினும், சந்திரன் பலம் மிக்க சுபரால், பார்க்கப்பட்டால், ஜாதகருக்கு பேச்சுத் திறன் தாமதமாக ஏற்படலாம்.

57 – கடகம், விருச்சிகம் மற்றும் மீனத்தின் கடைசி நவாம்சத்தில் அசுபக்கிரகங்கள் இடம்பெற, சந்திரனுக்கு சுப பார்வை ஏற்படவில்லை எனில், ஜாதகர் வடிகட்டிய முட்டாளாக இருப்பார்.

         புதனின் நவாம்சத்தில், சனி அல்லது செவ்வாய் இருக்க, பிறக்கும் பொழுதே அக் குழந்தைக்கு பற்கள் இருக்கும்.

58 – 59 - வித்தியாசமான இரட்டையர் – கருத்தரிக்கும் நேரத்தில், புதன், 5 அல்லது 9 ஆம் இடத்தில் இருந்து, மற்ற கிரகங்கள் எல்லாம் பலம் இழந்து இருக்க, இருதலை, நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளைக் கொண்ட விநோத பிறவி அவதாரம் எடுக்கும்.

குள்ளமான பிறவி – மகரம் – கரு லக்னமாகவும், கன்னி நவாம்ச இலக்னமாகவும் இருந்து, இலக்னம், சூரியன். சந்திரன் மற்றும் சனியால் பார்க்கப்பட, ஜாதகர் குள்ளமானவராக பிறப்பார்.

கூன் விழுத்த பிறப்பு – கடகம், இலக்னமாகி, சந்திரன் அதில் இடம் பெற்று, செவ்வாய், சனியால் பார்க்கப்பட்டால், அந்த ஜாதகர் கூன் விழுந்தவராகப் பிறப்பார்.

60 - முடமான கால்களை உடைய பிறப்பு – மீனம் கரு லக்னமாகி, சூரியன். சந்திரன் மற்றும் செவ்வாயால் பார்க்கப்பட, முடவன் பிறப்பான்.

61 – இலக்னத்தின் முதல் திரேகாணத்தில் செவ்வாய் எழுந்து, சூரியன்,சந்திரன் மற்றும் சனி பார்வை பெற்று, மற்ற கிரகங்கள் பலமற்று விளங்க, பிறக்கும் ஜாதகருக்கு, தலையில் பிரச்சனை இருக்கும் அல்லது முட்டாளாக இருப்பார். அதுவே 2 வது திரேகாணமாய் இருந்தால் கைகளில் பிரச்சனை இருக்கும், இதே யோகம் 3 வது திரேகாணம் ஆனால் கால் முடமாய் பிறக்கும்.

62 – மேற் சொல்லப்பட்ட யோகங்கள் அத்தனையுமே, கருத்தரிப்பு ஜாதகம், பிறப்பு ஜாதகம், பிரசன்ன ஜாதகம் ஆகியவற்றுக்கும் பலன் கூற பயன்படுத்தப்படலாம். 

 


Monday, May 4, 2020

பிறப்பின் இரகசியம் - 2




பிறப்பின் இரகசியம் - 2



14 – குழந்தையின் பாலினம் – 15 -  கருத்தரித்த இலக்னம் ( இனி, இதைக் கரு இலக்னம் எனவே அழைப்போம்.) சூரியன், சந்திரன் மற்றும் குரு ஆகியவை பலம் மிக்கதாக இருக்கவும், இவை, ஒற்றைப்படை இராசிகளில் அமர்ந்து, அவை தங்கள் சுய நவாம்சத்தில், ஒற்றைப்படை இராசிகளில் இருக்கவும், ஆண் மகவை எதிர்பார்க்கலாம். மேற்சொன்ன விஷயங்களில் பெரும்பாலனவை இரட்டைப்படையில் இருக்க பெண் குழந்தையை எதிர்பார்க்கலாம். சூரியன் மற்றும் குரு ஆகியோர் பலம் மிக்கவர்களாக இருந்து, ஒற்றைப்படை இராசியில் இருந்தால் ஆண் மகவும், சந்திரன் மற்றும் செவ்வாய் பலம் மிக்கவர்களாகவும் பெண் இராசிகளில் இருக்கவும் பெண் குழந்தைப் பிறப்பை எதிர்பார்க்கலாம்.
16 – இரட்டைக் குழந்தைகள் – சூரியன் மற்றும் குரு ஆகியோர், தனுசு அல்லது மிதுன இராசிகளில்  புதனின் பார்வையோடு இருக்க இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கும். அதுவே, சந்திரன், செவ்வாய் மீனம் மற்றும் கன்னியில் இருந்து, புதனின் பார்வை பெற இரட்டைப் பெண் குழந்தைகள் பிறக்கும்.
17 – 20 இலக்னத்தைத் தவிர மற்ற ஒற்றைப்படை இராசிகளில் சனி இருக்க, ஆண் குழந்தை குறிகாட்டப்படுகிறது.
        கருத்தரிப்பு நேரத்தில், உள்ள கிரகங்களின் பலம், யோகங்கள் ஆகியவற்றைப் பொருத்தே, குழந்தைப் பிறப்பு, ஆணா ? பெண்ணா ? என்பதை நிர்ணயிக்க முடியும். ( கருத்தரிக்கும் இலக்னம் என்பது கருத்தரிக்கும் நேரத்தில் கணிக்கப்படுவதாகும். இதற்கு, உண்மையான பொருள் என்னவெனில், ஆணின் விந்து, பெண்ணின் கருமுட்டையுடன் இணையும் நேரமே, கருத்தரிக்கும் நேரம் எனக் கருதப்படுகிறது. எனவே, ஆண், பெண் புணரும் நேரத்தை, கருத்தரித்தல் நேரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
        திருநங்கை (அலிப் பிறப்பு) பிறப்பு – சூரிய சந்திரர்களுக்கு இடையேயான நேர் பார்வை, அல்லது புதன், சனி ஆகியோர்க்கு இடையேயான நேரடிப் பார்வை ஏற்படின், அலிப் பிறப்பு குறிகாட்டப்படுகிறது.  
        சூரியன் இரட்டைப்படை இராசிகளில் அல்லது இலக்னம், சந்திரன் ஒற்றைப்படை இராசிகளில் இருந்து, செவ்வாயால் பார்க்கப்பட்டால் திருநங்கை பிறப்பு ஏற்படும். புதன் ஒற்றைப்படை இராசியில் இருந்து, சந்திரன் இரட்டைப்படை இராசியில் இருப்பதுவும், திருநங்கைப் பிறப்புக்குக் காரணமாகிறது.
        இலக்னம், சந்திரன், புதன் ஒற்றைப்படை இராசியில் நிற்க, அவர்களின் நவாம்சம் இரட்டைப்படையில் விழவும், சனி, சுக்கிரனின் பார்வை ஏற்படவும், அது திருநங்கைப் பிறப்பாகிறது. (இப்பேர்பட்ட, அலிப்பிறப்புக்குக் குறிப்பிடப்பட்ட, இணைவு யோகங்கள், மலட்டுத் தன்மைக்கும் காரணமாகிறது.
 21 – 22 – இரட்டையில், ஆண் ஒன்று, பெண் ஒன்றாகப் பிறப்பது. இலக்னமும், சந்திரனும், இரட்டைப்படை இராசிகளில் இருந்து, பலம்மிக்க ஆண் கிரகத்தால் பார்க்கப்படுவது, ஆண் ஒன்று, பெண் ஒன்றாக்க் கருத்தரித்தலைக் குறிகாட்டுகிறது. சந்திரன், சுக்கிரன் இரட்டைப்படை இராசிகளில் இருந்து, பலம் மிக்க, இலக்னம், புதன், மற்றும் குரு ஆகியோர் ஒற்றைப்படை இராசியில் இருக்க அல்லது உபய இராசிகளில் இருக்க, ஆண் ஒன்று, பெண் ஒன்று கருத்தரிப்பதைக் குறிகாட்டுகிறது.
23 – 24 – ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் – கருத்தரிக்கும் நேரத்தில், இலக்னம், மற்றும் அனைத்து கிரகங்களும் உபய இராசியில் இடம் பெற்று, புதனால் பார்க்கப்பட்டு, நவாம்சத்தில் மிதுனத்தில் இடம்பெற, ஆண் குழந்தை 2, பெண் ஒன்றாக மூன்று குழந்தைகளுக்கான பிறப்பை எதிர்பார்க்கலாம். இந்த இணைவுகளோடு, புதனின் நவாம்சம், கன்னியில் விழ, ஆண் ஒன்று, பெண் இரண்டு என, மூன்று குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு எனலாம்.
         புதன், மிதுன நவாம்சம் பெற்று, மிதுனத்தில் உள்ள, இலக்னம் மற்றும் அனத்து கிரகங்களையும் பார்க்க அல்லது அவற்றின் நவாம்சம் மிதுனம் அல்லது, தனுசு ஆக, மூன்று ஆண் குழந்தைகள், ஒரே பிரசவத்தில் பிறக்க வாய்ப்புண்டு.
        புதன், கன்னி நவாம்சம் பெற்று, கன்னியில் உள்ள, இலக்னம் மற்றும் அனத்து கிரகங்களையும் பார்க்க அல்லது அவற்றின் நவாம்சம் கன்னி அல்லது, மீனம் ஆக, மூன்றுபெண் குழந்தைகள், ஒரே பிரசவத்தில் பிறக்க வாய்ப்புண்டு.
       குறிப்பு – சுலோகங்கள் 14 முதல் 26 வரையான கிரக நிலைகள் மற்றும் இலக்னம், கருத்தரிக்கும் நேரத்திற்கு உரிய கணிதம் ஆகும்.
27 – கருத்தரித்தல் பகலில் உண்டானது எனின், சுக்கிரன், சூரியன் முறையே தாய், தந்தையரைக் குறிக்கும். இரவில் எனில், சந்திரன், சனி ஆகியோர் முறையே தாய் தந்தையைக் குறிக்கும். அதே போல் பகலில் கருத்தரித்தால், சந்திரன், தாயின் சகோதரியை அதாவது சித்தியைக் குறிக்கும். சனியோ, தந்தைவழி மாமனையும், இரவில் எனில் சுக்கிரன், சித்தியையும், சூரியன், தந்தை வழி மாமனையும் குறிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
28 . தந்தைக்கும், தந்தை வழி மாமனுக்கும் குறிகாட்டக் கூடிய கிரகங்கள், இலக்னத்துக்கு, ஒற்றைப்படை இராசியில் இருந்தால், அவர்கள் சிறப்பாக இருக்கிறார்கள் என்பதைக் குறிகாட்டும். அதுவே, இரட்டைப்படை எனில், தாய் மற்றும் தாயின் சகோதரியின் நன்நிலையைக் குறிகாட்டும்.
       இந்த நிலைகள் மாறி இருந்தால், குறிப்பிடப்பட்ட நபர்களுக்கு கஷ்ட நிலைகளைக் காட்டும். உதாரணமாக, பகலில் கருத்தரித்தல் ஏற்பட்டு, சூரியன் இரட்டைப்படையில் இருக்க நேர்ந்தால், அது தந்தைக்குக் கஷ்டங்களையே கொடுக்கும். இதைப் போலவே மற்ற நிலைகளுக்கும் பார்த்துக் கொள்க.  
கரு வளரும் நிலை –
29 – 30 – கருத்தரித்த நாளில் இருந்து முதல் மாதக் கடைசியில் கரு – ஓரளவு, சதைப் பிண்டமாகக் காட்சி அளிக்கும். இரண்டாவது மாதக் கடைசியில் ஓரளவு கடினமான மாமிச உருண்டை வடிவில் இருக்கும். மூன்றாவது மாத இறுதியில், பலவேறு உறுப்புகள் உரு எடுக்கும் நிலையில் இருக்கும். நான்காவது மாதக் கடைசியில், எலும்புகள் உருவாகும். ஐந்தாவது மாதக் கடைசியில், தோல் உருவாகும். ஆறாவது மாதக் கடைசியில் மயிர் வளரும். 7 வது மாதக் கடைசியில் உணர்வுக்கான உறுப்புகள் உருவாகும். 8 வது மாதக் கடைசியில், திரிதோஷம் எனப்படும், கபம், பித்தம், வாதம் மற்றும் பசி உருவாகும். 9 ஆம் மாதக் கடைசியில், முழுஉருவமாக உருவாகி, 10 வது மாதத் தொடக்கத்தில் பூமியில் பிறப்பெடுக்க, வெளியில் வரத் தயாராகும்.
        கருத்தரிப்புக்குப்பின் ஒவ்வொரு மாத்த்தையும் ஆட்சி செய்யும் கிரகங்கள் – 1. சுக்கிரன். 2. செவ்வாய், 3. குரு, 4.சூரியன், 5. சந்திரன், 6. சனி, 7.புதன். 8 கருத்தரித்த இலக்னாதிபதி. 9. சந்திரன், 10. சூரியன் ஆகும். இந்த 10 மாத அதிபதிகள் மூலமாக, கருவறையில், குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் மாற்றங்கள் ஆகியவற்றை நிச்சயிக்கலாம்.
30 – 33 – கருச்சிதைவு –
மேலே குறிப்பிடப்பட்டுள்ள, 10 மாதத்திற்கான கிரகங்கள், தங்களுக்கிடையே ஏற்பட்ட கிரக யுத்தத்தில் தோற்றாலோ, கிரக அஸ்தமனம் ஆனாலோ, நீச மற்றும் பகை வீட்டில் இருந்தாலோ அல்லது மிகையான அசுபத் தாக்கம் பெற்றாலோ, குறுப்பிட்ட கிரகத்தின் மாதத்தில், கருச்சிதைவு ஏற்படும். செவ்வாய் மற்றும் சனி கரு. இலக்னத்தில் நகரும் போதும் அல்லது கோசார சந்திரன் , கரு. இலக்னத்தில், நகர்ந்து, அதை சனி அல்லது செவ்வாய் பார்த்தாலும், கருச்சிதைவு ஏற்படும்.
34 - சுகப் பிரசவம் –
இராசியில் அல்லது கரு. இலக்னத்தில் சுபர் இருக்கவும் அல்லது பார்க்கவும் சுகப் பிரசவம் ஏற்படும். 2, 4, 5, 7, 9 மற்றும் 10 ஆகிய பாவங்களில் சுபர் அமர்ந்தாலும்,    அல்லது 3, 6, 11 ஆகிய பாவங்களில் அசுபர் அமர்ந்தாலும், அல்லது கரு. இலக்னம்\சந்திரன், சூரியனால் பார்க்கப்பட்டாலும் சுகப் பிரசவம் ஏற்படும்.
35 – 37 – கருவுற்ற பெண்ணின் மரணம் –
கருவுற்ற நேரத்தில் சூரிய சந்திரர்கள் வெவ்வேறு, இராசிகளில், பாவ கர்த்தாரியில் இருந்தாலும், அவர்களுக்கு சுபர் திருஷ்டி இல்லாமல் இருந்தாலும், சூரிய, சந்திரர்கள் இணைந்து ஒரே இராசியில் இருந்து, சுபர் பார்வையின்றி, அவர்கள் பாவகர்த்தாரியில் இருந்தாலும், கர்பணிப் பெண் பிரசவத்துக்கு முன்பே இறந்து விடுவாள்.
         இலக்னத்திலும், 7 ஆம் பாவத்திலும் சுபர்கள் பார்வை இன்றி அசுபர் அமர்ந்து இருந்தாலும், பலம் இழந்த சந்திரன் இல்லது சனி இலக்னத்தில் அமர்ந்து, செவ்வாயால் பார்க்கப்பட்டாலும், 12 இல் சூரியனும், 4 இல் செவ்வாயும், பலமிழந்த நிலையில் சந்திரனும், அல்லது சுக்கிரன், சுபர் பார்வை இன்றி பாவகர்த்தாரியில் இருந்தாலும், மேற்படி நிலையே ஏற்படும்.
38 – 40 – தாயும், சேயும் இறப்பு – கரு. இலக்னம் அல்லது சந்திரனுக்கு 4 ஆம் வீட்டில், அசுபர் இருக்கவும், 7 ஆம் வீட்டில் அல்லது இலக்னத்தில் செவ்வாய் அமர்ந்தாலும், தாய், சேய் இறப்பைக் குறிகாட்டும். செவ்வாய் 4 இல், சூரியன் 12 இல், பலமற்ற சந்திரன் இருந்து அசுபர் பார்வை பெறவும், இலக்னத்தில் சூரியன், பலமிழந்த சந்திரன் அல்லது செவ்வாய் இருந்து, 2 மற்றும் 12 ஆம் இடங்களில், சுபர் பார்வை பெறாத, அசுபர் இருந்தாலும், தாய், சேய் மரணம் நிகழும்.
41 – சூரியனும், செவ்வாயும்கிலக்னத்திலும், 7 ஆம் வீட்டிலும், எதிர் எதிரே இருக்க அல்லது இருவரும் இணைந்து இலக்னத்திலோ அல்லது 7 ஆம் வீட்டிலோ அமர, அந்த கர்பிணிப் பெண் ஆயுதத்தால், மரணிப்பாள். 
42- கரு. இலக்னமானது, பலம் மிக்க புதன், குரு, சுக்கிரன் அல்லது சூரியனால் பார்க்கப்பபட, சுக பிரசவம் உறுதியாகும். அந்தந்த மாதத்திற்கான அதிபதிகளின் பலத்தைப் பொறுத்து, குழந்தையின் ஆரோக்கியம், பொது வளர்ச்சி ஆகியவை இருக்கும்.
43 – கருவுற்று, 3 ஆம் மாத அதிபதியின் வர்க்க மேன்மைகளைப் பொறுத்தும், நற்கிரக பார்வைகளைப் பொறுத்தும், கரு. இலக்னத்திலுள்ள கிரகத்தின் பலத்தைப் பொருத்தும், கர்பிணிப் பெண் உண்ணும் உணவு, நொறுக்குத் தீனி, நீராகாரம் ஆகியவற்றின் ருசியானது மாறுபடும் அல்லது மேம்படும்.
44 – கரு. இலக்னம் அல்லது சூரியன் சர இராசியில் இடம்பெற, பிரசவம் 10 மாதத்திலும். ஸ்திர இராசியில் இடம்பெற, 11 ஆம் மாதத்திலும், உபய இராசி எனில் 12 ஆம் மாதத்திலும் பிரசவம் நிகழும் எனலாம். இதே, நிலையையே, இராசியை வைத்துப் பார்க்கும் போதும் நிகழும். 
45 – 47 கரு உருவானபோது கணக்கிடப்படும் இராசிக் கட்டத்தின், ஷட்வர்க்க கணிதத்தின் மூலமாக பிரசவ நேரத்தை அனுமானிக்கலாம். கருவுருவான நட்சத்திரத்தில் இருந்து 10 வது நட்சத்திரத்தில் குழந்தைப் பிறப்பை எதிர்பார்க்கலாம் என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் சில அறிஞர்கள், இராசிக்கோ, கரு. இலக்னத்திக்கோ, 7 ஆம் இடம், பிறக்கும் குழந்தையின் பிறப்பு இலக்னமாக அமையும் எனக் குறிப்பிடுகின்றனர். ஆயினும் கீழ்க்கண்ட விதிகளை அனைத்து அறிஞர்களுமே ஒத்துக் கொள்கின்றனர் எனலாம்.

பிறப்பின் இரகசியம்






அதான அத்தியாயம்.
62 – ஸ்லோகங்கள்.
 1.        இப் பிரபஞ்சத்தில், மனித இனமும், மிருக சாம்ராஜ்யமும், உடலுறவு எனும் புனித உறவால், உருவாக்கப்பட்டது. எனவே, கருத்தரிக்கும் நேரத்தையும், கிரக நிலைகளையும், (கிரகணங்கள், கிரகயுத்தங்கள், உச்ச\நீச்ச நிலைகள், கிரக அஸ்தமனங்கள் ஆகியவையும்) கணித்து ஜாதக கணிதம் செய்வது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதாவது, கருத்தரித்த காலம் முதல், உலகில் நாம் அவதரிக்கும், ஜனன கால இலக்னத்தைக் கணிக்கும் வரை, மேற்சொன்னவற்றை ஒரு ஜோதிடர் கருத்தில் கொள்ளவேண்டும். மனித, மிருகங்கள் ஆகியவற்றின் பிறப்பின் போது, துல்லியமாகக் கணக்கிடும் இராசியின் பலம், கிரக பலம், பாவ பலம் (இராசியின் பயன்கள், கிரக மற்றும் வீட்டின் பலன்கள்) ஆகியவற்றைப் பற்றிய கேள்வி எழுகிறது. கருத்தரிக்கும் நேரம் நாம் அறிய முடிவதில்லை. இதற்காக, நாம் பிரசன்ன ஜாதகம், அல்லது பிறப்பு ஜாதக இலக்னம் மூலமாக அறிய முயற்சிக்க வேண்டும் என பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறந்த நாளில் இருந்து 10 மாதங்கள் பின்னோக்கிச் சென்று, கணக்கிட கீழ்கண்ட ஸ்லோகங்கள் நமக்கு உதவிகரமாக இருக்கும்.
2-3 – பெண்களுக்கு, அவர்கள் பூப்பெய்தும் காலத்திற்குப் பின்னரே அவர்கள் கருத் தரித்தலுக்கு உரியவராகிறார்கள்.  இந்த நிகழ்வு அவர்களின் ஜனன ஜாதகத்தில், இலக்னத்தில் இருந்து 1, 2, 3, 5 ,7, 8, 9 மற்றும் 12 ஆம் இடங்களில் கோசார செவ்வாய் இருந்து, சந்திரன் அவனைப் பார்க்கும் போதே நிகழ்கிறது. சந்திரன், நீரையும், செவ்வாய், நெருப்பையும் குறிப்பதோடு, அதன் காரணமாக, இரத்தம் மற்றும் பித்த நீர்   உடலில், உருவாக்கப்படுகிறது. சந்திரன் மற்றும் செவ்வாயின் தொடர்பே பெண்ணின் பூப்பெய்தலுக்குக் காரணமாகிறது. செவ்வாய், மேஷத்திற்கு அதிபதியாகி, பிட்யூட்ரி கிளாண்ட்ஸையும், விருச்சிகம், கருமுட்டையையும் , குறிகாட்டுகின்றன. 
4-7 -   கருவுறுதலுக்கு கரு முட்டை காரணம் ஆகிறது. சந்திரன் உபஜெய ஸ்தானங்களில் (3, 6, 10, 11) இருக்கும் போது, கருமுட்டைக்கு, கருத்தரித்தலை உருவாக்கும் சக்தி இருப்பதில்லை. எனினும், உபஜெய ஸ்தானங்களில் சந்திரன் இருந்து, குருவால் பார்க்கப்பட்டாலோ அல்லது நட்பு வீட்டில், குறிப்பாக சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், ஒரு பெண், ஆணுடன் பாலியல் புணர்ச்சியில் ஈடுபடுவாள். இத்தகைய சந்திரனை, செவ்வாய் பார்த்தால், அவள் ஓர் ஒழுக்கம் கெட்டவனை, விபசாரம் செய்பவனை, பிறன் மனை நயப்பவனைப் புணர்வாள். சூரியனால் பார்க்கப்பட்டால் அரசனையும், சனியால் பார்க்கப்பட்டால் வேலைக்காரனையும் புணர்வாள். சுப கிரக பார்வையின்றி, அசுபர் மட்டும் பார்க்க என்னாகும் ? - என நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். சந்திரனின் மீது அநேக அசுபக் கிரகங்ளின் பார்வை ஏற்பட ஜாதகி விபசாரி ஆவாள்.
         இதில், இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஒரு சில அறிஞர்கள், சுலோகம் – 7 ,சிறப்பாக, பெண் முதல் முதலாக பூப்பெய்தும் காலத்திற்கே பொருந்தும் எனக் கருத்துக் கொண்டுள்ளனர். மேற் சொன்ன பார்வைகள், அவள் பிற்காலத்தில் எத்தகைய கணவனை அடைவாள் என்பதைக் குறிப்பதாகவும், குறிப்பிடுகின்றனர். ஒரு பெண் பூப்பெய்தும் நேரத்தில் கணக்கிடப்படும் ஜாதகம், இந்திய ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அது ஜாதகியின் பிற்கால வாழ்க்கை, முக்கியமாக பாலுணர்வு வாழ்க்கையை வெளிப்படுத்துவதாக அமையும் எனத் தெளிவு படுத்துகிறது. பூப்பெய்திய நேரத்திற்கு உரிய, நட்சத்திரம், திதி, மாதம், கிழமை ஆகியவையும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
8 – களத்திர பாவ நிலை, எவ்விதமான புணர்வு இன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பதைக் குறிகாட்டும்.
9 – அந்த நேரத்தில் களத்திர பாவத்தில், அசுபர் தொடர்பு ஏற்பட தம்பதிகளிடையே, மகிழ்ச்சியற்ற மனநிலை உருவாகி, திருப்தியற்ற நிலை உருவாகும். இதுவே, 7 ஆம் இடத்துடன், சுபர்கள் தொடர்பு ஏற்பட, ஒத்த மன நிலையில், நகைச்சுவை, சிரிப்பு என, சந்தோஷமான நிலையில் புணர்சியில் ஈடுபட்டு மகிழ்வர்.
10. – கர்மா என்ற முன்வினையின், இன்ப துன்பங்களை ஒருவரின் ஆத்மா இப் பிறவியில், அனுபவிக்க, இந்த உடலுறவு மூலமாக, ஆணின் விந்தணு, பெண்ணின் கருப்பையை அடைந்து கருத்தரிக்கிறது.
11 – 12 – எப்போது கருத்தரித்தல் ஏற்படுகிறது ? புணரும் காலத்தில் –
அ). ஆணின் ஜாதகத்தில், சூரியன் மற்றும் சுக்கிரன், தங்களது சொந்த நவாம்ச வீட்டில் இருக்கவோ, மற்றும் லக்னத்தில் இருந்தோ அல்லது சந்திரா இலக்னத்தில் இருந்தோ, உப ஜெய ஸ்தானங்களில் இருக்க வேண்டும் ( சில அறிஞர்கள், சுக்கிரன், ஆண் நவாம்சமான துலா நவாம்சத்தில் இருக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.) அல்லது
ஆ). பெண்ணின் ஜாதகத்தில், சந்திரன் மற்றும் செவ்வாய், தங்களது சொந்த நவாம்ச வீட்டில் இருக்கவோ, மற்றும் லக்னத்தில் இருந்தோ அல்லது சந்திரா இலக்னத்தில் இருந்தோ, உப ஜெய ஸ்தானங்களில் இருக்க வேண்டும்.
இ). சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகியவை தங்களது சொந்த நவாம்சத்தில் இருக்கவும் மற்றும் கருத்தரித்த போதைய இலக்னத்துக்கு உபஜெய ஸ்தானங்களில் இருக்கவும் அல்லது பலம் மிக்க குரு, கருத்தரிப்பு இலக்னத்திலோ, 5 அல்லது 9 ஆம் வீடுகளில் இருக்கவும் கருத்தரித்தல் நிகழ்கிறது.
13 – உடலுறவின் போது உள்ள, தம்பதிகளின், மகிழ்ச்சியான மன நிலை, நல்ல ஆரோக்கியம், ஆகியவை, பிறக்கப் போகும் குழந்தையின் தன்மையை நிர்ணயிக்கும் என்றால் மிகையாகாது. மேலும், புணரும் சமயத்தில் தம்பதிகளின் திரிதோஷங்களான – வாதம், பித்தம், கபம் ஆகிய நிலைகள், பிறக்கப் போகும், குழந்தையின் மீது பிரதிபலிக்கும்.