Showing posts with label உங்களுடைய இராசிபலன் இன்று எப்படி ? 02/12/2014. Show all posts
Showing posts with label உங்களுடைய இராசிபலன் இன்று எப்படி ? 02/12/2014. Show all posts

Monday, December 1, 2014

உங்களுடைய இராசிபலன் இன்று எப்படி ? 02/12/2014 (தினபூமியில் வெளியானது)

உங்களுடைய இராசிபலன் இன்று  எப்படி ?

02/12/2014

(தினபூமியில் வெளியானது)




மேஷம் – 

ஆரோக்கிய நிலை மேம்படும். ஆயினும்வாகனங்களில் செல்லும் முன் முக்கிய பாகங்களைச் சோதித்து  எடுத்துச் செல்லவும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

ரிஷபம் – 

திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம். மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பு அடைவர். வீடு, நிலம் ஆகியவற்றில் ஆதாயம் கிடைக்கும். பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கும்.

மிதுனம் --

செயல்பாடுகள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும். எதிர்பார்த்த அரசு உதவிகள் மற்றும் வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்கும்.  தன்னம்பிக்கை, தைரியம்  அதிகரிக்கும்.

கடகம் – 

தெய்வீக சிந்தனைகள் அதிகரிப்பதின் காரணமாக குடும்பத்தோடு வேண்டுதல்களை நிறைவேற்ற முயல்வீர்கள். வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.

சிம்மம் – 

தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சுகக்குறைவு ஏற்படலாம். தொழிலில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும்.

கன்னி --
  
இனிமை மிக்க பேச்சு சாதுர்யத்தால் எல்லோரையும் கவர்வீர்கள். தொழில், வியாபாரத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும். மனவி மூலம் நன்மை பல உண்டாகும்.

துலாம் – 

எதிர்பாராத இடங்களிலிருந்து பல வழிகளிலும் பணவரவு ஏற்படலாம்.  எல்லா வகையிலும் ஏற்றந்தரும் நாள். நண்பர்கள் சந்திப்புநல்முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.

விருச்சிகம் – 

சந்தோஷ அனுபவங்கள் கூடும். குழந்தைகளின்  திறமை கண்டு  மகிழ்வீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தீர்த்த யாத்திரைகள் திருப்தி தரும்.

தனுசு -- 

பெற்றோர்களால் நன்மை ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். உல்லாசப் பயணங்களால் சந்தோஷம் நிலவும்.

மகரம் – 

தைரியம் கூடும். மனதில் தெம்பும், தெளிவும் நிலைத்திருக்கும். பொதுநல வாழ்க்கையில், சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படலாம். பயணங்களில் ஆர்வம் ஏற்படும். புகழ் ஓங்கும்.

கும்பம் – 

புத்திசாலித்தனம் அதிகரிக்கும். இனிய பேச்சுக்களால் கூடுதல் வருமானங்கள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான வரவால் சந்தோஷம் நிலவும்.

மீனம்

மனதில் ஒரு நிம்மதியற்ற நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில்  இலாபம் அதிகரிக்கும்கற்பனை வளமும் பெருகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும்.


வல்லமை தாராயோ பராசக்தி- இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே !