Showing posts with label டிசம்பர் – 2014 - மாத ராசிபலன் -- தமிழ் வாசலில்.. Show all posts
Showing posts with label டிசம்பர் – 2014 - மாத ராசிபலன் -- தமிழ் வாசலில்.. Show all posts

Monday, December 8, 2014

டிசம்பர் – 2014 - மாத ராசிபலன் -- தமிழ் வாசலில்.

ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமக.


டிசம்பர் 2014 - மாத ராசிபலன் -- தமிழ் வாசலில்.

சந்
கேது




1-12 – 2014
கார்த்திகை – 15,திங்கள்.

குரு
செவ்                                                                                  




லக்//,
சூரி,புத
சுக்
சனி

ராகு
                      







    
கிரக மாற்றங்கள்
03- 12 -2014 --  மாலை மணி 5-30 முதல் சிம்ம குரு(,சா)
07-12-2014 -  காலை மணி 10-28 முதல் தனுசு சுக்கிரன்.
08-12-2014 –  பகல் 12-37 முதல் தனுசு புதன்.
16-12-2014 – தனுசு சூரியன், பகல் 2-44 முதல் விருச்சிகச் சனி.
22-12-2014 – பகல் 12-48 முதல் கடக குரு.
28-12-2014 – மாலை மணி 2-17 முதல் மகர புதன்.
30-12-2014 – மறுநாள் அதிகாலை மணி 4-58 முதல் மகர சுக்கிரன்.


மேஷம்
 (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1 பாதம்)
     ( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய - சு, சே, சொ, , லெ, லு, லே, லோ, )
          மேஷ இராசி வாசகர்களே ! தங்கள் இராசிநாதன் செவ்வாய் அனுகூலமற்ற நிலையில் உள்ளார். எனவே, முயற்சிகளில் வெற்றி கிடைப்பது அரிது. குரு அதிசாரத்தில் 22 ஆம் தேதிவரை சிம்மத்தில் இருப்பதால் இலாபம், சந்தோஷம்அரசு அனுகூலம், சொத்துச் சேருதல்ஆகியவை ஏற்படும்தனவரவு, கூட்டாளிகள் ஒத்துழைப்புபுகழ், கௌரவம், திருமணம்  ஆகியவை ஏற்படும். பணியில் முன்னேற்றம் ஏற்படும். கீழே பணிபுரிவர்களின் ஒத்துழைப்புக் ஆகியவை  ஏற்படலாம். 16 ஆம் தேதி சனியின் மாற்றம்  அதிகப் பயணங்களையும் அதன் காரணமாக உறவுகளிடையே பிரிவையும் ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரும். அனுகூலமான நிலையிலுள்ள புதன் உற்சாக மிகுதியையும், பகை வெற்றியையும், தனலாபம், திறமை மற்றும் பலத்தையும் அளிக்கிறது.  புகழ் ஓங்கும். அனைவராலும் போற்றப்படுவர்.
    குடும்பம்  ; ஆதாயமும் பெருகும். பணவரவு மற்றும் உத்தியோக லாபம் ஏற்படும். பெண்களால் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். காரியங்கள் அனைத்தும் வெற்றி பெரும்.
    தொழில் ; வியாபாரிகள் புதிய முதலீடுகளை ஒத்திப் போடுவது நலம் பயக்கும். பயணம் செய்யும் போது எச்சரிக்கை தேவை. ஞானம் பெருகும். பணியில் உள்ளவர்களுக்கு நிலுவைத் தொகைகள் வந்து சேரும்
    பெண்கள் ;- கணவன்மார்களின் உதவியால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்பொன்நகை, புதிய ஆடை சேர்க்கை உண்டு. சிலருக்கு வீண்பழி, பகை ஏற்படலாம். பணிபுரியும் பெண்கள்  உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்
     மாணவர்கள்;- மாணவ, மாணவிகளுக்கு அறிவுத்திறனும், கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும்.   மிகுந்த அக்கறையுடன் பாடங்களைப்  படித்தால் மட்டுமே தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற இயலும்.   
     தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 19 – 12 – 2014 மாலை 03 – 47 மணி முதல், 21 – 12 – 2014 இரவு 09 – 37 மணி வரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
  ( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய, , , , , வி, வு, வே, வோ )
           இரிஷப இராசி வாசகர்களே ! தங்கள் இராசிநாதன் சுக்கிரனின் அனுகூல நிலையால் பதவியில் உள்ளவர்களின்  அனுகூலம் ஏற்படும். தனவிருத்தியும் உண்டாகும். வாகனங்களும், சொத்துக்களும் வந்து சேரும்.  சனியின் அனுகூல நிலையால் பொன்னும் பொருளும் சேரும்உற்றார் உறவினரின் உதவிகள் கிடைக்கும். சிலர் புதுவீடு கட்டுவர். அவர் விருச்சிகத்துக்கு மாறும் வரை நல்ல நேரம்தான். விவசாயத்தில் அமோக விளைச்சலை எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் சிபாரிசால் விரும்பிய பதவிக்கும், இடத்திற்கும் மாற்றங்களை எளிதில் பெறலாம்வாக்கு வன்மையும், வித்துவத்துவமும் ஏற்படும். நற்சிந்தனைகளில் நாட்டம் ஏற்படும். பிறர் வாங்கும் கடனுக்குப் பொறுப்பேற்காதிருப்பது நல்லது. நல்லவர்களுடன் பழகுவது நலம் பயக்கும்.
    குடும்பம் ; கணவன் மனைவியடையே அன்பும் பாசமும் பெருகும். ஆயினும் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் எழாமல் இருக்க நாவடக்கம் அவசியம்.  புத்தி சாதுர்யத்தால் வாழ்க்கையில் பொருளாதார நிலை சீராக இருக்கும். குழந்தைகள் வகையில் சுபச்செலவுகள்   ஏற்படும்.
    தொழில் ; வியாபார நிலவரங்களுக்கு ஏற்ப புதிய நுணுக்கங்களைப் புகுத்தி வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். உதிரிப் பாகங்கள் அல்லது மென்பொருள் சாதனங்களின் விற்பனை சூடுபிடிக்கும்மதிப்புமிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
    பெண்கள்; பணிபுரியும் பெண்களுக்கு  மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். அரசுப்  பணிபுரியம் பெண்களுக்குப் பெண் உயர் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம்.   
     மாணவர்கள்;   மாணவர்களுக்கு அறிவுத் திறன் பெருகும். சிலருக்கு, கல்வியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்முகநூல், வலைத்தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பின் மீது கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறலாம்.
     தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 21 – 12 – 2014 இரவு 09-38 மணி முதல், 23 – 12 – 2014 இரவு 01 – 29 மணி வரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
( இராசி  அறியாதவர்கள் பலன் அறியகா, கி, கு, , , , கே, கோ, )
           மிதுன இராசி வாசகர்களே ! தங்கள் இராசிநாதன்  புதனால்  ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். புத்தி தெளிவு பெறும். கல்வியில் வெற்றி கிட்டும். கௌரவம், சாமர்த்தியம் ஆகியவை உயரும்செல்வம் சேரும். புத்திர பாக்கியம் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். சுற்றுலா போன்ற இனிய பயணங்கள் ஏற்பட்டு சந்தோஷம் அதிகரிக்கும்சுக்கிரனால் உங்களுக்கென ஒரு உயர்வான வீடு அமையும். 22 ஆம் தேதிக்குப் பின் குருவின் அனுகூல நிலை அழகும் பொலிவும் கூட்டும். வேலை இல்லாதவர்களுக்கு  வேலை கிடைக்கும். வாக்கு வன்மையும், புகழும் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். சிலருக்குத் திட்டங்களை முடிப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம்பயிர் விளைச்சல் அதிகரிக்கும். எல்லா வழிகளிலும் இன்பம் பெருகும். வியாபாரம் பெருகும்.
    குடும்பம் ; செல்வம் சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு அழகிய மனைவி அமைவாள். மணவாழ்க்கை மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் செல்லும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனைவியின் பக்திமார்க்கம் உங்களின் மத உணர்வைத் தூண்டும்.
    தொழில் ; எதிர்கால தொழில் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வது ஏற்றம் தரும். அரசு ஊழியர்களுக்கு, மற்றவர்களுக்கு கட்டளையிடும் தலைமைப் பதவி கிடைக்கும்
    பெண்கள்; பணிபுரியும் பெண்கள் வாகனங்களில் செல்கையில் வேகத்தைக் குறைத்து கவனமுடன் செல்லுதல் அவசியம். சிலருக்கு அரசு உதவிகள் தாமதமாகும் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்யப்படலாம்.   
     மாணவர்கள்; மாணவர்களுக்கு நேர்காணலில் வெற்றி கிட்டும். நீண்ட பயணங்களை மேற்கொள்ள நேரும். காதல் விவகாரங்களில் பல திருப்பங்கள் ஏற்படலாம்கல்வியில் உயர்வும்,  போட்டிகளில் வெற்றிகளும் குவியும்.
     தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 22 – 12 – 2014 இரவு 01-30 மணி முதல், 26 – 12 – 2014 அதிகாலை 04 – 10 மணி வரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
( இராசி  அறியாதவர்கள் பலனறியஹி, ஹூ, ஹே, ஹோ, , டி, டு, டே, டோ )
            கடக இராசி வாசகர்களே ! இம் மாதம் சந்தோஷம், தனலாபம், அனைத்திலும் வெற்றி, உயர்பதவிகள், அதிகாரங்கள், மதிப்பு மரியாதை மற்றும் குழந்தைகள் மூலமாக மகிழ்ச்சி என நற்பலன்கள் ஏற்படும் முற்பகுதியில் கோபம் அதிகரிக்கும். பிற்பகுதியில்  சொத்துக்கள் சேரும், தான தர்மத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைத் துறையில் உள்ளவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.  உயர்ரக வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். முற்பகுதியில் சூரியன் குழந்தைகளுக்கு ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தினாலும் பிற்பகுதியில் வெற்றிகளைக் குவிப்பதோடு, அரசாங்க அதிகாரிகளின் ஆதரவை ஏற்படுத்துவார்.  22 ஆம் தேதிக்குள் உயர்பதவிகள் தேடிவரும். நல்ல மனைவி அமைவாள். பெயரும், புகழும் ஓங்கும்அதிகாரம் செய்யும் தலைமைப் பதவிகள் கிடைக்கும், ஆயினும் 22 ஆம் தேதிக்குப் பின், ஜென்ம குரு அனுகூல மற்ற பலன்கள்  சங்கடங்களைத் தரலாம்.  குறுகிய தூரப் பயணங்கள் ஏற்பட்டு அதனால் பயனும் இராது.
       குடும்பம் ; சகோதர நன்மை, வெற்றி மற்றும் சந்தோஷமும் உண்டாகும். சிலருக்குப் பிரிவும், வீண் செலவுகளும் ஏற்படலாம். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. சாமர்த்திய சாலியாக விளங்குவார்.
       தொழில் ; தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள்  சுலபமாகக் கிடைக்கும். அரசின் உதவிகள் கைகொடுக்கும்எதைச் செய்தாலும் சிரத்தையுடன் செய்தல் வெற்றி உண்டு. விவசாயப்பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும்
       பெண்கள் ; யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குத் தாங்கள் விரும்பாத இடத்திற்கு மாற்றம் ஏற்படலாம். குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.
       மாணவர்கள் ; மாணவர்கள் அதிக அக்கறையுடன் படிக்கவேண்டும். அவர்களின் கவனம் இன்ப நுகர்விலும், விளையாட்டுத்தனங்களிலும் ஈடுபட்டால் அறிவுத்திறனும், கல்வியில் தேர்ச்சியும் குறையும்
       தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 26 –12 - 2014 அதிகாலை 04 – 11 மணி முதல் 28 – 12 - 2014 அதிகாலை 06 – 29 வரை மணிவரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய, மி, மு, மெ, மோ, டி, டு, டே, டோ)
      சிம்ம இராசி வாசகர்களே ! தங்கள் இராசிநாதனால் சந்தோஷமும், மன அமைதியும், இலாபமும் ஏற்படும். பேச்சால் ஆதாயத்தையும், அனைவராலும் விரும்பப்படும் நிலையையும் தருவார்சிலருக்குக் குடும்பத்தில் குழப்பம், அவப்பெயர் ஏற்படலாம். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். சுக்கிரன். புதிய பதவி,   வாழ்க்கையில் முன்னேற்றம் ஆகியவற்றைத் தருவார்திருமணம். பயிர், மனை, சகோதரரால் நன்மை ஆகியவற்றைத் தருவார்கல்வியில் சிறுதடைகள் ஏற்படலாம். அரசு மரியதை கிடைக்கும். பகை வெல்லல். வித்தைகளில் தேர்ச்சியும். அறிவுத்திறனும் கூடும். தலைப்பதவி, வசதியான வீடு ஆகியவை அமையும். 16 ஆம் தேதிவரை நல்லது செய்யும் சனி அதற்குப் பிறகு பெற்றோர்களின் உடல் நிலையில் சிறு பாதிப்பைத் தரலாம்.  தலைமைப் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு உயர்குல வேற்றுப் பெண்ணால் அவப்பெயர் ஏற்படலாம்.
       குடும்பம் ; பலவழிகளிலும் பணவரவு பெருகும். பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தான தருமங்கள் செய்வார். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. உறவினர் இல்ல விழாக்களில் கலந்து கொண்டு களிப்படைவீர்கள்.
       தொழில் ; வாடிக்கையாளர்களிடம் உண்மையாக நடந்துகொண்டால் வியாபாரம் பெருகும். நினைத்தபடி வாடகை வருமானங்கள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணம் ஈடேறும்.
       பெண்கள்; தெய்வப் பிரார்த்தனையால் பெண்களின் வேண்டுதல்கள் நிறைவேறும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு  அதிக வேலைப்பழு காரணமாக ஓய்வு குறைவதால், ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும்.
       மாணவர்கள்; தங்கள் இடைவிடாத கடின உழைப்பால் மட்டுமே தேர்வுகளில் வெற்றிபெற முடியும். எனவே, மாணவர்கள் கருத்துடன், கவனமாகப் படித்து முன்னேற முயலவேண்டும். வாகனங்களில் மித வேகத்தில் செல்வது நல்லது
       தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம்  30 – 11 – 2014 இரவு 10 – 18 மணி முதல் 02-12-2014 இரவு 01-20 மணிவரை மற்றும் 28 – 12 - 2014 அதிகாலை 06 – 30 மணி முதல் 30 – 12 - 2014 காலை 9 – 29  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
( இராசி  அறியாதவர்கள் பலன் அறியடோ, , பி, பூ, , , , பே, போ )
     கன்னி இராசி வாசகர்களே ! தங்கள் இராசிநாதன் 8 ஆம் தேதிக்குப் பிறகு தனலாபத்தையும், சந்தோஷத்தையும், குடும்பத்தார்க்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் தருவார்.   குரு 22 ஆம் தேதிக்குப் பின் இலாபத்தில் சஞ்சாரிப்பதால் செல்வம் சேரும்.. திருமணம் நடக்கும். சந்ததி விருத்தியேற்படும். நிம்மதியும், சுகமும் அதிகரிக்கும். அரசாங்க உத்தயோகம், அரசாங்க ஆதரவு போன்றவை ஏற்படும். இது நாள்வரை சனியின் பிடியில் இருந்த நீங்கள் 16 ஆம் தேதிக்குப் பிறகு சுதந்திரக் காற்றை சுவாசப்பீர்கள். மனதிற்குப் பிடித்த விதத்தில் மனை, வண்டி வாகனம் ஆகியவற்றை அடைவீர்கள். கடின உழைப்பால் களைப்பு ஏற்படும். சிலருக்குப் பயிர் மனை இவற்றால் இலாபம் அதிகரிக்கும்.
      குடும்பம் ;- தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்குச் சுகம், தனலாபம், புதிய நண்பர்கள் மற்றும் சந்தோஷம் ஆகியவை ஏற்படும். துன்பத்தில் கைகொடுக்கும் துணையின் உதவியால் மனதில் அமைதி நிலவும்.
     தொழில்  ;- தங்கள் முதலீடுளை வேறு புதிய திட்டங்களில் முதலீடு செய்ய முனைவீர்கள்.   வியாபாரத்தில் இருந்த வந்த மந்த நிலைகள் மாறி வேகம் பிறக்கும். விவசாயிகள் விவசாயத்தில் நவீன முறைகளைக் கையாண்டு இலாபம் ஈட்டமுனைவர்.
     பெண்கள் ;- பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.  உயர் அதிகாரிகளின் கெடுபிடியால் மன உளைச்சல்கள் ஏற்படும். கடின உழைப்பின் காரணமாக ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். அதன் காரணமாக, வேறு பணிக்கு மாறும் எண்ணம் தலைதூக்கலாம்
    மாணவர்கள் ;- நேர்காணல்களில் ஏற்படும் தடை தாமதங்களையும் மீறி அவற்றில் வெற்றி பெறுவர். வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்புக்கள் அமையும். மிகுந்த அக்கறையுடன் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற இயலும்.
    தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 02 – 12 – 2014 இரவு 01 – 21 மணி முதல் 05-12-2014 அதிகாலை 05-53 மணிவரை மற்றும் 30-12-2014 காலை 09-30 மணி முதல் 01-01-2015 பகல் 01-54 மணிவரை  ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
துலாம்
( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய, ரி, ரு, ரே, ரோ, , தி, து, தே )
    துலா இராசி வாசகர்களே ! தங்கள் இராசிநாதன் சுக்கிரனால் செல்வம் சேரும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும், நினைத்ததை நினைத்தபடியே முடிக்கும் திறனைத் தரும். அரசு உயர்பதவிகள் கிடைக்கும். வாகன யோகம் ஏற்படும்பலவகை முன்னேற்றங்கள் ஏற்படும். கௌரவ பங்கமும் மன உளைச்சலும் உண்டாகும்சிலருக்குக் கையில் பணமும், மனதில் மகிழ்ச்சியும் நிலவும். சனியின் மாற்றத்தால் இதுநாள் வரை இருந்து வந்த இன்னல்கள் வெகுவாகக் குறையும்.  மதிப்பும் மரியாதையும் உயரும். சிலருக்கு மனைவி, மக்களின் உடல் நிலையில் சிறு உபாதைகள் ஏற்படலாம்சிலருக்கு வழக்கு விவகாரங்கள் கவலை அளிக்கலாம்.
     குடும்பம்  ; பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். தந்தையுடன் சுமுக உறவு இராது. நல்லுறவுகளின் அனுசரணையாலும் அன்பாலும், குடும்பத்தில் நிலவிய குழப்ப நிலைகள் சீராகும்.
    தொழில் ;. சீரான பொருளாதார நிலைக்கு அனுகூலமான மாதமாகும்கோதுமை, கொள்ளு, பீன்ஸ் ஆகியவை ஆதாயம் தரும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவிமாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம்.
     பெண்கள் ;- பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். பணிபுரியும் பெண்கள் வீட்டிலும், பணியிலும் குழப்பமின்றி ஈடுபட்டு வெற்றிகளைக் குவிப்பர்வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்பட்டு அதனால் ஆதாயம் ஏற்படும்.
     மாணவர்கள் ;- மாணவர்கள் முகநூல் மற்றும் வலைத் தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற இயலும். எனவே கவனமாகப் படிக்கவும். காலம் பொன் போன்றது.
    தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 05 – 12 – 2014 அதிகாலை 05 – 54    மணிமுதல் 07 – 12 - 2014 பகல் 12 - 46   மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

விருச்சிகம்
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
    ( இராசி  அறியாதவர்கள் பலன் அறியதோ, , நி, நு, நே, நோ, , , யு )
        விருச்சிக இராசி வாசகர்களே ! தங்கள் இராசிநாதனின் சகோதர பாவ அமர்வால் ஆரோக்கிய நிலை மேம்படும். சந்தோஷம் பெருகும். ஆதாயம் மற்றும் அனைத்து நிலைகளிலும் வெற்றி கிட்டும். ஆயினும் 16 ஆம் தேதிக்குப் பிறகு ஜென்மச் சனியின் பாதிப்பு, 22 ஆம் தேதிக்குப் பிறகு ஏற்படும் குருவின் பார்வையால் ஓரளவு குறையும். அதனால்,  மகிழ்ச்சியற்ற மன நிலைகள் குருவின் பார்வையால் மாறி குடும்பத்தில் சந்தோஷம் நிலவ வழிவகுக்கும். 7 ஆம் தேதிக்குப் பிறகு சுக்கிரன் மற்றும் புதனின் தனபாவ அமர்வு,  நற்பலன்களை அளிக்கும். பல வழிகளிலும் பணம் குவியும். ஆன்மிக வழிகளில் ஆர்வம் அதிகரிக்கும்தானிய விளைச்சல் அதிகரிக்கும்சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும்தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும்.
       குடும்பம் : பலவகை யோகமும் சந்ததி விருத்தியும் ஏற்படும். செயல்திறன் கூடும். அதிக தனலாபமும், மனை, வீடுகள் மூலம் இலாபமும் ஏற்படும். தெய்வபக்தி பெருகும். வாக்கு வன்மையால் புகழ் உண்டாகும்.
       தொழில்  ;- கூட்டுவியாபாரம் செய்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்.   பணவரத்து அதிகரித்து, தொழில் மற்றும் வியாபாரத்தில் புதுத் திருப்பங்கள் ஏற்படலாம். பணியிலுள்ளவர்கள் மிகுந்த அக்கறையுடன் பணியில் ஈடுபட்டாலே, எதிர்பார்க்கும் பணி உயர்வுகளைப் பெற முடியும்.
       பெண்கள் ;-  : பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் நிலவும். பூமி, வீடு, பயிர் இவற்றால் ஆதாயம் பெருகும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். பணிபுரியும் பெண்கள் தாங்கள்  எதிர்பார்த்தபடி நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.
       மாணவர்கள் : விளையாட்டு சம்பந்தமான பயணங்கள் பயனுள்ளதாக அமையும். பிற்பகுதியில் மாணவர்களுக்கு கவனச் சிதறல்கள் காரணமாக படிப்பில் ஆர்வம் குறையும்.
       தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 07 – 12 - 2014 பகல் 12 – 47 மணிமுதல் 09 – 12 - 2014 இரவு 10 – 04  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

தனுசு
( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் –1 பாதம்)
( இராசி  அறியாதவர்கள் பலன் அறியயே, யோ, , பீ, பூ, , , டா, பே )
    தனுர் இராசி வாசக்ர்களே ! தங்கள் இராசிநாதன் குருவால் 22 ஆம் தேதிவரை நல்ல நேரமாக அமையும். இனிய நண்பர்கள் அமைவர். புதிய சொத்துக்கள் சேரும். அறிவு விருத்தியாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.  புதனால் நிலையற்ற மன நிலை ஏற்படும். சுக்கிரனால் அதிக வருமானம் மற்றும் தனலாபம் ஏற்படும். மகிழ்ச்சிகரமான வாழ்க்கை, எடுத்த காரியங்கள் யாவினும் வெற்றி, ஆகியவை ஏற்படும். 16 ஆம் தேதிக்குப் பிறகு விய பாவம் செல்லும் சனியால் சிலருக்குச் சில விஷயங்களில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மக்கள் தலைவர் ஆகும் வாய்ப்பு சிலருக்கு அமையலாம். வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும். நீண்ட பிரயாசைக்குப் பிறகு தந்தையின் மூலமாக ஆதாயம் பெறலாம். வாக்கு வன்மையால் பணவரவு கூடும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
    குடும்பம் : புதிய சாதனைகள் புரிவர். உடற்பொலிவும் ஒளியும் கூடும். மனதுக்குப் பிடித்தபடி மனை, வீடு மற்றும் வாகன வசதிகள் கிடைக்கும். மனைவியுடன் சிறுசிறு ஊடல்கள் ஏற்படும்.
    தொழில்  ;- தொழிலிலும், சமூக வாழ்விலும் முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம் தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக அக்கறையும், ஈடுபாடும் அதிகரிக்கும். அதன் காரணமாகப் பண இலாபங்களும் அதிகரிக்கும்.  புதிய திட்டங்களில் முதலீடு செய்யாதிருப்பது நல்லது.
    பெண்கள் ;- குழந்தைகள் பராமரிப்பில் அதிக அக்கறைகொண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணமாகி மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும்பெண்கள் அவப்பெயர் ஏற்படாவண்ணம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
     மாணவர்கள் ;- மாணவர்களின் கல்வித்தரம் உயரும். சில மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் இருந்தாலும், வீணாகப் பொழுதைக் கழிப்பதால் பின்தங்கிய நிலையில் இருப்பர். தடகளப் போட்டிகளில்  பங்கு பெற்று தேசிய அளவில் பரிசுகளை வெல்வர்
     தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம்  09 – 12 – 2014 இரவு 10 – 05   மணி முதல் 12 – 12 - 2014 காலை 09 – 15  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
மகரம்
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
( இராசி  அறியாதவர்கள் பலன் அறியபோ, , ஜி, ஜூ, ஜே, ஜோ, கா, , கீ )
      மகர இராசி வாசகர்களே ! தங்கள் இராசிநாதன் 16 ஆம் தேதி வரை கர்ம பாவத்தில் அமர்ந்து உடல் உழைப்பை அதிகரிக்கிறான். அதற்குப் பிறகு இலாபத்தில் அமர்கிறான்.  காரிய வெற்றி மற்றும் முன்னேற்றங்கள் ஏற்படும். சொத்துச் சேர்க்கை, தனலாபம், திருமணம், மணவாழ்க்கையில் மகிழ்ச்சி ஆகியவை ஏற்படும்இராகு, மதம் மற்றும் பக்தி மார்க்கத்திலும், புனித பயணங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும். புதிய தத்துவ எண்ணங்கள் உருவாகும். சிலருக்கு உடன்பிறப்புக்கள் உடனான உறவில் விரிசல் ஏற்படலாம். உயர் கல்விக்காக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம். 22 ஆம் தேதிவரை குரு அட்டமத்தானத்தில் இருந்து தேவையற்ற அலைச்சல்களைத் தருவார். அதற்குப் பிறகு  களத்திரபாவத்தில் அமர்ந்து, மனைவியுடன் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையும், புத்திரபாக்கியத்தையும் தருவார். கடின உழைப்பின் காரணமாக தொழிலில் அதிக இலாபத்தை அள்ளித் தருவான்.
    குடும்பம் ;- மனைவி மக்கள் ஆரோக்கியம் பெருகி புதுப் பொலிவுடன் விளங்குவர். நகைநட்டுக்கள் சேரும். மனைவியின் நடவடிக்கைகள் மகிழ்ச்சி தருவனவாய் இருக்கும்.
    தொழில்  ;- வளர்பிறைபோல் நாளுக்குநாள் சந்தோஷமும், செல்வமும் பெருகும். பால் வளம் பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதுத் தெம்பும், உற்சாகமும் கூடும். அரசு அதிகாரிகளுக்கு பிறர்குக் கட்டளையிடும் பெரும் பதவி கிடைக்கும்.
    பெண்கள் ;- பதவியில் உள்ளவர்களின் தயவால் பயன் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்குப் பணியிடங்களில், தங்கள் விருப்பம் போல் இடமாற்றம் கிடைக்கும். வீட்டு மனைவிகள் தங்கள் கணவன்மார்களின் பரிபூர்ண அன்பைப் பெறுவர்.
    மாணவர்கள் ;- மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி அதிகரிக்கும். சுயமுன்னேற்றத்துக்கான திட்டங்கள் தீட்டவேண்டிய காலமாகும். மாணவர்கள் தங்கள் முழுத் திறமைகளையும் வெளிக்காட்டுவர்பல போட்டிகளில் பங்குபெற்று பல பரிசுகளைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர்.
    தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 12 – 12 - 2014 காலை 09 – 16 மணிமுதல் 14 –12 - 2014 இரவு 08 – 56  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
( இராசி  அறியாதவர்கள் பலன் அறியகு, கூ, கோ, , ஸீ, ஸூ, ஸே,ஸோ, தா )
     கும்ப இராசி வாசகர்களே ! தங்கள் இராசிநாதன் சனி 16 ஆம் தேதிவரை பாக்கிய பாவத்தில் அமர்ந்ததால் சிலருக்கு பகைவரால் தொல்லை, வருமானக் குறைவு, பயணங்கள் ஆகியவை ஏற்படலாம். பின்னர் புதிய வேலைவாய்ப்பு ஏற்படும். அலைச்சல்களும், வழக்குகளும் அல்லல் தரும். இலாப பாவ புதனால் வீட்டில் சந்தோஷத்தையும், வெளியில் வருமானத்தையும் அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும். கட்டளை இடும்படியான பெரிய பதவிகள் தேடிவரும்திருமணம், மக்கட்பேறு, கால்நடைச் செல்வம் மற்றும் பால்வளம் ஆகியவை ஏற்படும்பலவீடுகளும், பணக்கார மனைவியும் அமைவாள். குருவால் பங்காளிகள் கை ஓங்கும். அட்டம இராகு சிலருக்கு இனம்புரியாத பயத்தைத் தரலாம்.   பயணங்களையும் அதனால் செலவுகளையும் ஏற்படுத்துவார். சிலருக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படலாம். மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்
      குடும்பம்  ; குடும்பத்தில் வீண் விவாதங்களைத் தவிர்த்தால் அமைதி நிலவும். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகியவீடு அமையும். தெய்வப் பிரார்த்தனையால் வேண்டிய காரியங்கள் நிறைவேறும்பிறர் உதவிகள் கிடைக்கும்.
    தொழில்  ;- தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதனை படைப்பீர்கள், புதிய திட்டங்கள் தீட்டி வாடிக்கையாளர்களைக் கவர முயல்வீர்கள். தொழில் விரிவாக்கத் திட்டங்களுக்கு வங்கிக் கடன்கள் எளிதாகக்கிடைக்கும்.
    பெண்கள் ;- தங்கள் பணிகளை நல்ல முறைகளில் செய்து வெற்றியடைவர். பணிபுரியும் பெண்கள் தங்கள் பணிகள் சிறக்க ஆர்வமுடனும், சிரத்தையுடன் ஈடுபடுவர்.  புதிய வசதிகளால் வாழ்க்கைத் தரம் உயரும். விவசாயிகளுக்கு வெற்றி கிட்டும்.
    மாணவர்கள் ;- மாணவர்களுக்கு படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும். மாணவ, மாணவிகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலர் தேவையற்ற காதல் விவகாரங்களில் ஈடுபடுவதால் சிக்கல்கள் ஏற்படலாம்.
     தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 14 – 12 - 2014 இரவு 08 –  57  மணி முதல் 17 – 12 - 2014 காலை 07 – 30  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
( இராசி  அறியாதவர்கள் பலன் அறியதீ, து, , , ஶ்ரீ, தே,தோ, ச்ச, சீ )
     மீன இராசி வாசகர்களே !  தங்கள் இராசிநாதன் தொழில் பாவத்திற்கும், இராசிக்கும் அதிபதியாகி 22 ஆம் தேதிவரை சத்ரு பாவத்தில் இருப்பதால், எதிரிகளின் தொல்லை இருக்கத்தானே செய்யும். தாய் மாமன் தயவும் இருக்காது. அதன் பிறகு  புத்திர பாக்கியம் ஏற்படும். இலாபங்கள், வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்த நிகழ்ச்சிகள், நல்லவர்களுடன் நட்பு, அரசு அனுகூலம், அறிவு விருத்தி, சொத்து விருத்தி, உயர் அதிகாரிகளின் ஆதரவு மற்றும் அனைத்திலும் வெற்றி என அனைத்தும் சிறப்பாகவே நடக்கும். சனியின் பாக்கிய பாவ நகர்வால் சிலருக்கு அலைச்சல்கள் அதிகமாகும். சிறு காயங்கள் மற்றும் இழப்புக்கள் ஏற்படலாம்பெண்களால் தொல்லைகள் மற்றும் விரயங்கள் ஏற்படலாம். இலாப பாவச் செவ்வாயால் பொருளாதார நிலை உயரும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடக்கும்
    குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ;- வீட்டில் மங்கள சுப காரியங்கள் நடக்கும். உயர்ந்த மனிதர்களின் நட்பு ஏற்படும். கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடுவார். சிலருக்கு குடும்பச் சொத்து கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
     தொழில்  ;- சிலருக்கு எதிர்பாராத விதமாக வேலை கிடைக்கும். தங்கள் மீது நல்லெண்ணம் கொண்ட நண்பர்களின் உதவியால், கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமுகமாகத் தீரும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் சிலருக்கு ஏற்படும்.
    பெண்கள் ;- பணிபுரியும் பெண்கள் தற்போது பார்க்கின்ற வேலையை விட்டுவிட்டு வேறு நல்ல வேலை தேடுவார்கள், உயர் அதிகாரிகளின் சகாயத்தால் பணிகளில் இருந்து வந்த கெடுபிடிகள் குறையும். குடும்பத்தில் பெண்கள் அடங்கிப்போவது நல்லது.
    மாணவர்கள் ;- உயர்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். அக்கறையுடன் படித்து அதிக மதிப்பெண்கள் பெற அயராது பாடுபடவேண்டும். வேடிக்கை விளையாட்டுக்கள், வெட்டிப் பொழுதுபோக்குகளைத் தவிர்க்கவும்.
    தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 17 – 12 - 2014 காலை 07 – 31   மணி முதல் 19 – 12 - 2014 மாலை 03 – 40 மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

n  ஜோதிட கலாநிதி எஸ். விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி.(அஸ்ட்ரோ) -94888 62923.