Showing posts with label செந்தில் நாயகனே. Show all posts
Showing posts with label செந்தில் நாயகனே. Show all posts

Wednesday, September 12, 2012

செந்தில் நாயகனே


செந்தில் நாயகனே 



அறுபடை வீட்டை,
யாளும் மரசே
அருள்தர வாராய் நீ,
ஒருமுறை வந்து
உன்னருள் தந்து
காத்தருள் கந்தா நீ.

நலமது நாடி
குலமது வாழகுமரா
யுனைத் தொழுதோம்,
பலமுறை யெங்கள்
குறைகளைச் சொல்லி
பதத்தினிலே யழுதோம்,
மறைதனை யிறைவனுக்
குரைத்த நற் சிறுவனே,
செந்தமிழ் நாயகனே,
நிறைமதி முகமதை
நீயுமே காட்டிடு
நீலமயிலோனே.!

நாவினிலே வந்த,
பாவினிலே பா
மாலையுந் தொடுத்தோமே
கூவியழைத்தோம்
குமரா வென்று
குகனே வாராய் நீ.
பாவி யிழைத்த
பாவங்குறைத்து
பதமலர் தாராய் நீ
தேவியருடனே,
திருமுகங் காட்டு
செந்தில் நாயகனே !