Showing posts with label தமிழ் வருட பலன் -- தனுசு. Show all posts
Showing posts with label தமிழ் வருட பலன் -- தனுசு. Show all posts

Thursday, March 30, 2017

தமிழ் வருட பலன் -- தனுசு, மகரம், மீனம்.




தமிழ் வருட பலன் -- தனுசு, மகரம், மீனம்.


தனுசு

 ( மூலம்-1,2,3,4 பாதங்கள்பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் –1,2 பாதங்கள்)

    தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட தனுர்ராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப்  பார்ப்போம்.

    சூரியன் – வைகாசி மாதத்தில் வராத கடன்கள் அனைத்தும் வசூலாகும்எதிரிகளின் தொல்லை ஓரளவு குறையும்.  புரட்டாசி மாதத்தில் அரசின் உதவியால் செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்அதிகாரிகளின் அனுசரணையால் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்ஐப்பசி மாதத்தில்  புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்வாகனம் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்மாசி மாதத்தில் ஆரோக்கியம் சீராகும்சகோதரரால் நன்மை உண்டு.

      செவ்வாய் – வருட ஆரம்பத்தில் சந்தோஷமும்சௌகரியங்களும் பல்கிப் பெருகும்தடைக் கற்கள் எல்லாம் படிக் கற்களாக மாறும்எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் வெற்றிப் படியாக இருக்கும்அதைத் தொடர்ந்து வரும் காலங்களில் வெளிநாட்டுப் பயணங்களால் இலாபம் கிடைக்கும். பெண்களுக்கு அடுப்படி வேலைகளின் போது கத்தியால் அல்லது தீயால் சிறுகாயம் ஏற்படலாம்பொருளாதார நிலை உயரும்புகழும் ஓங்கும்.

      புதன் – வருட ஆரம்பத்தில் நிம்மதியும் சுகமும் ஏற்படும்புத்தி தெளிவுற்றுஅறிவுத் திறன் கூடி, உயர்கல்வியில் முன்னேற்றமிருக்கும்ஓரு அரசனைப்போல் இவர்களுக்கு பணியாட்கள் அதிகம் இருப்பர்அடுத்து வரும் மாதங்களில் செய்யாத குற்றத்திற்காக பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம்பேச்சாளர்களுக்கு வாக்குவன்மையால் வருமானமும்புகழும் உயரும்பின்வரும் மாதங்களில் பலவகை யோகமும்சந்ததி விருத்தியும் ஏற்படும்.

      சுக்கிரன் – குழந்தைகள் வகையில் சுபச் செலவுகள் ஏற்படும்பதிய ஆடைகள்பொன் ஆபரணங்கள் விதவிதமாகக் கிடைக்கும்சொற்பொழிவுத் திறன் அதிகமாகி அதன் மூலமாகவும் வருமானம் வரும்.  மனைவி வயதானவளாக இருந்தாலும் அழகு குறையாத ஆரணங்காக இருப்பாள்பின் வரும் காலங்களில் அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு தலைமைப் பதவி தேடிவரும்நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பொழுதைக் கழித்து மகிழ்வீர்கள்.

       குரு – தனுசுக்கு அதிபதியான  தேவகுருஆவணி 27 இல் கர்ம ஸ்தானம் விட்டுஇலாப பாவ மேறி கிராம அதிகாரம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றைத் தருவார். கார் போன்ற நவீன வாகனங்கள் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் குவியும். தொழில் வளர்ச்சி சிறப்பாகநல்ல முன்னேற்றத்துடன் இருக்கும்தொழில்வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிட்டும்அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும்ஆடை ஆபரணாதிகள் சேரும்.

    சனி –   ஜன்மச் சனியின் நுழைவு வாயிலாக அமையும் இராசியில் அமர்ந்து சக்திக்கு மீறிய செலவுகளையும்வெகு தூரப்பயணங்களையும் ஏற்படுத்துகிறார்வேலை இல்லாமை அதன் காரணமாக வருமானமில்லாமை என அனைத்துத் துயரங்களையும் ஒரு சேரத் தரும். காளஹஸ்தி சென்று சனீஸ்வரனை மனமுருகி வேண்டிவர வேதனைகள் குறையும்காசியாத்திரை செல்லலாம்மொத்தத்தில் இவ்வருடம் 50 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

மகரம்

உத்திராடம்- 2,3,4- பாதங்கள்திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

    கர்மகாரகனான சனியை அதிபதியாகக் கொண்ட மகரராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.

       சூரியன் – ஆனி மாதத்தில் நல்ஆரோக்கியம்சந்தோஷம்மனஅமைதிஇலாபம் ஆகியவை ஏற்படும்ஐப்பசி மாதத்தில் எதிர்பாராத வெற்றிகள் கிடைத்து உள்ளம் மகிழும்.  கார்த்திகை மாதத்தில் மேற்கொள்ளும் புதிய தொழில் முயற்சிகள் எதிர்பார்ப்புக்கு மேலான வெற்றிகளைத் தரும்.பொதுச்சேவை செய்பவர்களுக்குச் சுற்று வட்டாரத்தில் புகழ் பரவும்பங்குனி மாதத்தில் அரசுப் பணிகளில் புதிய பதவி உயர்வு மற்றும் அந்தஸ்து கிடைக்கும்உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

       செவ்வாய் – வருட ஆரம்பத்தில் பொருளாதார இலாபம் ஏற்படும்அரசுப் பணியாளர்களுக்குத் தங்கள் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும்பூமிலாபம்மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை மற்றும் நவநாகரீகநவீன சுக சாதனங்களோடு வீடு நிறைந்திருக்கும்பின்னர் உணர்ச்சி மிகுதல்பெண்களால் தொல்லைஅதிக வெப்பத்தால் வரும் வியாதிகள் ஆகியவை ஏற்பட்டு சிறிது இன்னல் தரும்.

       புதன் – வருட ஆரம்பத்தில் நிதானமாகப் பொழியும் மழை போலப் பொருளாதார நிலை சீராக இருக்கும்மேலாளர் போன்ற உயர் அதிகாரிகளிடம்உங்கள் சிறந்த உழைப்புக்கான பாராட்டு மழையில் நனைவீர்கள். சிலருக்கு அவப்பெயர் உண்டாகலாம்பின் வரும் காலத்தில் கௌரவம் ஓங்கும்அழகிய மனைவி அமைவாள்பலவகை யோகமும்சந்ததி விருத்தியும் ஏற்படும்.

       சுக்கிரன் – வருட ஆரம்பத்தில் பொதுச் சேவையால் மதிப்பும்மரியாதையும் கூடி ஏழைப் பங்காளன் என்று பெயர் எடுப்பீர்கள்செல்வம் கொழிக்கும்தானியவகைகள் குவியும்அரசு ஆதரவு கிடைக்கும்அரசாங்க விருதுகள் கிடைக்கும்பின்னர் வரும் காலத்தில் மனம் நிலை கொள்ளாமல் தவிக்க நேரும்.  வேண்டாத  அலைச்சல்கள் ஏற்படும்வெளிநாட்டுப் பயண வாய்ப்புகளால் ஆதாயம் ஏற்படும்இந்திரன்ருத்திரன் போன்று உயர்ந்த வாழ்க்கைத் தரம் அமையும்.

       குரு – ஆவணி 27 க்கு  பத்தில் அமரும்  குரு அதற்கு முன் உள்ள நாட்களில் இராசியைப் பார்ப்பதால் தெய்வ காரிய ஈடுபாடுகளால் எதிலும் திருப்திகரமான வாழ்க்கை அமைந்திருக்கும்அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும்வெளிநாட்டு பயண வாய்ப்புகள் ஏற்பட்டு மகிழ்ச்சி அளிக்கும். பின்னர் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வெறுப்பாய் இருக்கும்வீண் விவாதங்களால் பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும். உழைப்பு அதிகமாகி ஊதியம் குறையும்.

      சனி – விரயத்தில் அமரும் சனியால் பயன்ற்ற அலைச்சல். வெகுதூரப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படும். சனியின்  பார்வை 269 ஆம் இடங்களில் விழுவதால் இதுநாள் வரை குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள்குறைபாடுகள்வேண்டாத வெறுப்புகள்தடைகள் அனைத்தும் விலகி முன்னேற்றம் வரும் காலம் ஆகும்இனி கலகலப்புக்குக் குறைவிருக்காதுசாமர்த்தியமும்சாதுர்யமும் கூடிய செயல்பாடுகளால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை எதிர்கொள்வீர்கள்.   பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டு  உள்ளம் மகிழ்வீர்கள்.  அரசாங்கத்திதமிருந்து பரிசுகள் கிடைக்கும் வாய்ப்பும் ஏற்படும்மொத்தத்தில் இவ்வருடம் 70 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

கும்பம்

அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

       ஆயுள் காரகனான சனியை அதிபதியாகக் கொண்ட கும்பராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.

       சூரியன் – சித்திரை மாதத்தில் காரியங்கள் யாவும் வெற்றியின் திக்கை நோக்கியே செல்லுவதால்அச்சமின்றி அனைத்துக் காரியங்களிலும் ஈடுபடலாம்வங்கிக் கடன் வாங்கி வீடுநிலம் வாங்கும் பாக்கியம் ஏற்படும்படிப்பில் அதிக அக்கறை தேவைஆடி மாதத்தில் வெகுதூரப்பயணங்களை தவிர்ப்பது நல்லதுதொழில் விருத்தி உண்டுகார்த்திகை மாதத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.  மார்கழி மாதத்தில் தெய்வ வழிபாடுகள் மனநிம்மதி தரும்.

       செவ்வாய் – வருட ஆரம்பத்தில் தொழில் முன்னேற்றங்களால் பொருளாதார நிலை மிகவும் திருப்திகரமாக இருக்கும்வசதிகள் அனைத்தும் நிரம்பிய அழகிய வீடு அமையும்பின்னர் வரும் காலத்தில் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்அரசு சம்பந்தமான வேலைகள் அனைத்தும் தாமதமின்றி நிறைவேறும்வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்பட்டுஆனந்தம் பொங்கும்.

       புதன் – மேற்படிப்புப் படிக்கும் மாணவர்கள் மெத்தனமாக இராமல்கவனமாக படித்தால் நன்றாக மிளிரலாம்குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகளுக்கான நல்ல தருணங்கள் அமையும்கலைஞர்களின் கௌரவமும்புகழும் கூடும்உயர் அதிகாரிகளோடு ஒத்துப் போகமுடியாத நிலையால் இடைஞ்சல்கள் ஏற்படும். பின் வரும் காலத்தில் பேச்சாளர்களுக்கு தங்கள் வாக்குவன்மையால் வருமானம் பெருகும்அரசியல் வெற்றிகளால் ஏற்படும் மகிழ்ச்சி நிரந்தரமாய் இருக்காதுபுத்தி கூர்மைபலம் மற்றும் திறமை ஆகியவை அதிகரிக்கும்.

       சுக்கிரன்.— கடினமான காரியங்கள் என நினைத்த காரியங்களைக் கூட எளிதில் முடித்து உங்கள் முழுத் திறமைகளையும் வெளிக்காட்டிப் பாராட்டுப் பெறுவீர்கள். சேமித்து வைத்த மற்றும் வங்கிக் கடன்கள் மூலமாகக் கிடைத்த பணத்தால் அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள்.  மிடுக்காக நல்ல உடைகள் அணிந்து அனைவரையும் கவர்வீர்கள். உயர் கல்வியில் தேர்ச்சி மற்றும் வெற்றி ஆகியவை ஏற்படும்.

      குரு – ஆவணி 27 க்குப் பிறகு ஒன்பதாமிடம் அமர்ந்து உங்கள் இராசியை நேரடியாகப் பார்க்கிறார்திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும்புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும்  புத்திர பாக்கியம் ஏற்படும்நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள்அதிகரிக்கும் சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும்ஏமாற்றங்கள்மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கைகணவன் மனைவிக்கு இடையேயான ஊடல்கள் ஆகியவை தவிர்க்கமுடியாத நிகழ்வுகளாகும்.

      சனி – இலாப பாவத்தில் இந்த வருடம் நிலைத்திருக்கும் சனி தன் பார்வைகளை 1510 ஆம் இடங்களின் மீது வீசுகிறார்இதன் காரணமாக செல்வ நிலை சிக்கலின்றி சீராக உயரும்தொழிலில் புதிய விரிவாக்கத் திட்டங்கள் அதிக வருமானம் பெற கைகொடுக்கும். 3, 6 மற்றும் 11 ஆம் இடங்களில் மட்டுமே சாதகமான பலன்களைத் தரும் ரவி புத்திரன் தங்களுக்கு அனுகூலமற்ற பலன்களையே தருவான்ஆயினும் குருவின் பார்வையின் மகிமையால் குறையும் இன்னல்கள்புனித யாத்திரையாகத் திருநள்ளாறு சென்று சனிபகவானை சேவித்து வந்தால்பகலவனைக் கண்ட பனி போல் பறந்து மறைந்துவிடும் துன்பங்கள்மொத்தத்தில் இவ்வருடம் 7சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.


மீனம்

பூரட்டாதி – 4 ஆம் பாதம்உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

       தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.

       சூரியன் – வைகாசி மாதத்தில்  உடல் ஆரோக்கியம் உன்னதமாக இருக்கும். தொழில் நிலைகள் மேம்படும்அரசு மூலமாக சிறந்த சேவைக்காக சிறப்பான கௌரவங்கள் வந்து சேரும்ஆவணி மாதத்தில் நோய்கள் குறைந்து ஆரோக்கியம் பெருகும். மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்மார்கழி மாதத்தில் வெற்றி மேல் வெற்றிகள் குவியும்எடுக்கும் காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே முடியும்தை மாதத்தில் சூரியன். புதிய பதவிகௌரவம் மற்றும் அதனால் ஏற்படும் சந்தோஷம் ஆகியவற்றைத் தருவான்.

       செவ்வாய் – புதிய முயற்சிகள் மற்றும் விஐ.பி களின் ஆதரவால்எதிர்காலத் திட்டம் எனும் காய் கனிந்துசுவைதரும் காலம் கண்ணுக்குத் தெரியும்சிலர் தேவையற்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவர்பொருளாதார உயர்வு ஏற்படும்பூமி போன்ற அசையாச் சொத்துக்கள் சேரும்எல்லாத் துறைகளிலும் இலாபம் ஏற்படும்பகைவரால் ஏற்பட்டு வந்த அச்சங்கள் நீங்கும்தகராறுகள்வழக்குகள் எல்லாம் தங்களுக்குச் சாதகமாகவே முடியும்.

       புதன் – நீண்ட தூரப் பயணங்களால்  நன்மை ஏற்படும்புத்தாடைபுது ஆபரணங்கள் சேர்க்கைஏற்படும். நல்ல இடத்தில் திருமண ஏற்பாடுகள் நடக்கும்அழகிய மக்கட்பேறு உருவாகும்அதன் பிறகு பிறருக்கு தான தருமம் செய்கிற புண்ணியம் கிடைக்கும்விவசாய உற்பத்திகள் பெருகி ஆதாயமும் பெருகும்சிலருக்குப் தகாத ஆசைகளும்கெட்ட சவகாசங்களும் ஏற்படும்எனவேஎச்சரிக்கை தேவை.

    சுக்கிரன் – புத்தி கூர்மையினால் கல்வியில் சிறப்பான பலன்கள் ஏற்படும்பள்ளி நிகழ்ச்சிகளில் குழந்தைகளின் கலைத்திறன் வெளிப்பட்டுஅவர்களால் உங்களுக்குப் பெருமை சேரும்.  தொழிலில் உபரி வருமானத்திற்கான வழிகள் ஏற்படும்உங்கள் கடமை தவறாத உணர்வால்உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சுப காரியச் செலவுகள் கூடும்வீட்டில் மகிழ்ச்சியும் கூடும்அதன் பின்னர்   வெளிநாட்டுப் பயணங்கள் அனுகூலமாக அமையும்புண்ணிய யாத்திரைகள் மன அமைதி தரும்புதிய இடமாற்றங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

       குரு – ஆவணி 27 ஆம் நாள் குரு 8 ஆம் பாவத்திற்கு இடம் பெயர்கிறார். அதுவரை மணமாகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடக்கும்பிள்ளைகளால் பெற்றவர்களுக்கு பெருமை சேரும்தொழில் துறையில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.  வீட்டில் மங்கள சுபகாரியங்கள் இனிதே நடந்து மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அதன் பிறகு வியாபாரத்தில்  எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாதுகடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

       சனி – கர்ம பாவத்தில் உள்ள சனிபகவான் ஓய்வற்ற நிலையைத் தருகிறார்எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும்சிலருக்குக் கட்டளை இடும்படியான பெரிய பதவிகள் தேடிவரலாம்தகவல் தொடர்புத்துறையில் உள்ளவர்களுக்கு ஒப்பற்ற உயர்வு உண்டு திருநள்ளாறு திருத்தலம் சென்று மந்தனை மனதார வேண்டி வந்தால் ஓரளவு துன்பங்கள் குறையும்ஆயினும் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க எடுத்ததுதானே இந்த மனிதப் பிறவிசிலர் பொது வாழ்வில் பிரபலமாகிமுக்கிய நபர் என்று பெயர் எடுப்பார்மிகுந்த செல்வங்கள் சேரும்மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.