Friday, December 7, 2012

அருளன்றி நாடுவது வேறேதம்மா ?







அருளன்றி நாடுவது வேறேதம்மா ?




அழகை ரசிக்க ஓராயிரங் கண் போதாதம்மா ! – உன்
அருளையன்றி நாடுவது வேறேதம்மா ? -- அம்மா
                                       (அழகை ரசிக்க)
காதலனாம் சொக்கனோடு ஆட்சி செய்தாயே ,
மதுரையை ஆட்சி செய்தாயே :
கருணையுளங் கொண்டு காட்சி தந்தாயே .
                                       (அழகை ரசிக்க)
தினந்தொழும் பக்தருள்ளம்  நீ நின்றாயே   - அவர்
மனமுருகும் நிலை கண்டு உளம் நெகிழ்தாயே – அம்மா
                                       (அழகை ரசிக்க)
கிளி கொஞ்சும் கரங் கொஞ்சம் வழி காட்டுமா ? – நல்ல
வழிகாட்டி, வாழ்வுக்கு ஒளி கூட்டுமா ?
களிப்பினில்  மனமெழிற் கவி பாடும் போது – அக்
கவி கேட்டுக் களி நடம் புரிவாயம்மா – தாயே
                                       (அழகை ரசிக்க) 
                               

Monday, December 3, 2012






மதுரையாள்கின்ற நாயகியே !




வாழ்கின்ற நாளெல்லாம் வணங்குதல் வேண்டும் – மதுரை
ஆள்கின்ற நாயகி நீ, வரந்தர வர வேண்டும்.
                                           (வாழ்கின்ற)
நீள் கின்ற வாழ்க்கையிலே நிம்மதி வர வேண்டும் ;
ஏழ் பிறப்பும் உள்ளத்தி லுன் நினைவொன்றே போதும்,
                                           (வாழ்கின்ற)
சேர்கின்ற இன்னலெலாம் சென்று மறைய வேண்டும் ,
நேர்கின்ற இன்பம் மட்டும் நிலைத்திருந்தாற் போதும்;
சோர்வு வரும் நேரமெலாம் சுந்தர முகங் காட்டு,
வேர்விட்டு, நெஞ்சிலெழும் இனிமைமிகு பாட்டு.
                                           (வாழ்கின்ற)
                                  

Sunday, November 18, 2012

காதில் விழாதோ ?







 காதில் விழாதோ ?


காதில் விழாதோ ? கத்துங்குரலே,
கந்தா ! கந்தாயென்றே உந்தன்
காதில் விழாதோ ?

காதல் கொண்டுன் மேற்,
கனிந்து மனமுருகும் ;
மாதென் மனமறியா , யெழில்
மன்னவனே உந்தன்
                (காதில் விழாதோ ?)
நாதியா ருனைவிட்டால்
சோதித்தல் முறையோ ? ஐயா !
சுந்தர முகங்காட்டு,
சுகங்கள் பலவும் கூட்டு,
மந்திர வேத மோத,
மணவினைக் கோலங்காண
வந்திடு ஐயா,பேதை
வழி சென்றாள்,காதற்பாதை-இன்னுங்
                (காதில் விழாதோ ?)

Sunday, November 11, 2012




மனமும் இறங்காதோ !


காலடியில் விழுந்து,காலமெலாம் தொழுதாற் கருணை பிறக்காதோ ? – குமரா
மலரடியை வணங்கி,மனமுருகிப்பாட மனமும் இரங்காதோ ?

கோலமயிலேறுங் குமரனைக் கும்பிடக் குறைகள்,குறையுமென்றே,
வேலுடை வேந்தனாம்,வேலனை வேண்டிட வேதனை திருமென்றே;
காலமெலஞ் சொன்ன கதைகளைக் கேட்டு,கந்தா யுனை வணங்கும்,
வேலை தனையன்றி,வேறு தொழிலறியா,யேழை யென்று முந்தன்.

                                             (காலடியிற்)

பூவைச்சுமக்குந் தோளையுடையவா,துன்பம் போதுமையா – யென்
பாவச் சுமைகளை, உன் பதம் வைக்கப் பழுவுங் குறையுமையா ;
தெய்வானை வள்ளி,யுனையுஞ் சேர்த்து,மயிலும் சுமக்குதய்யா ,
கையேந்தி நின்றோம்,கவலையனைத்தையும்,கரத்தினில் நீ சுமக்க

                                             (காலடியிற்)
                                  
குரு வாழ்க!            குருவே துணை !

மதுரையில் மாபெரும் ஜோதிட மகாநாடு

அமரர்.பி.எஸ்.ஐயர்.18 ம்ஆண்டு நினைவு விழா


நாள்:  நந்தன வருடம்  மார்கழி மாதம்   7   மற்றும்      8 ம் தேதி.

22 -12 - 2012,  23 - 12 - 2012  சனி மற்றும் ஞாயிறு. காலை 8 மணிமுதல் .

சிறப்பாக நடைபெற உள்ளது.

இடம்:ஸ்ரீ சொக்கநாதர் கல்யாணமண்டபம்,வடக்கு மாசி வீதி.மதுரை - 1


சிறப்புப் பேச்சாளர்கள்.
      “கலைமாமணி.வெண்ணிற ஆடை. மூர்த்தி.
மற்றும்

ஸ்ரீலஸ்ரீம் ஜாம்பவான் சுவாமிகள் ,
ஏ.வி.எஸ். சுந்தரம் ,லயன்.வி.நாராயணன்,
நவமணி சண்முகவேலு, கோட்டையூர்.சிவசுப்ரமணியன்,

கடகம்.இராமசாமி.இரா.அருள்வேல்,
செந்திலடிமை தினகரன், (ஆசிரியர், ஜோதிட அரசு) ஜெயந்திநாதன், (ஆசிரியர்,ஜோதிட பூமி) அதிர்ஷ்டம்  பாலசுப்ரமணியன்,(ஆசிரியர்,பால ஜோதிடம்.)                  வாசியோகி.பி.ஏ.பொன்னையா,     ஏ.அமிர்தலிங்கம், சின்னாளபட்டி தங்கவேல். மீனம்.பச்சமுத்து, கலைப்பிரியன் மற்றும் பலர் .

 அனைவரும் வருக !
அன்னதான நன்கொடைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.


(   Amarar P.S.Iyer Ninaivu Jothida Araichi Maiyam - A/C-No – 1011101049504 –  Canara Bank.                North veli St. Branch. Madurai – 1.)

இவண்,
நிர்வாகக்குழு.
                                                                                                                  அமரர் பி.எஸ். ஐயர் நினைவு ஜோதிட ஆராய்ச்சி மையம். மதுரை. .                                                                                   தொடர்பு எண் : 99948 11158, 97891 01742, 75981 59981.                                                                                                                    




Sunday, November 4, 2012






அன்னையின் புகழ்பாடு !


அன்னை யென்னை யரவணைத்து,
அன்புதர மனம் நினைத்து ;
துன்பந்தீரத் துணைக்கு வந்து ,
இன்பங்காண அருளும், தாயை
என்றென்றும் இவ்வுலகில் ;
பண்பாடு,போற்றி கொண்டாடு,
எந்நாளும் தாயின் புகழ்பாடு.

வண்ணப் பச்சை நிறங்கொண்ட,
சின்னச் சின்ன கிளியொன்று ;
அன்னை அவள் கரம் நின்று ,
உனைப்பற்றி,அவள் காதிற் ;
சொன்ன வொரு மொழி கேட்டுச்
சுகந் தந்த அன்னையவள் ;                                               பண்பாடு,போற்றிக் கொண்டாடு.

சின்னச் சின்ன மீன் போன்ற,
வண்ணயெழில் விழி கொண்டு ,
மின்னலென வொளி கூட்ட ;
இன்ன லிருள் தனை யோட்ட ,
ஏற்ற தொரு வழி காட்டும்,
அன்னையவள் புகழ்பாடு,
ஆனந்தக் கூத்தாடு.