Sunday, November 4, 2012






அன்னையின் புகழ்பாடு !


அன்னை யென்னை யரவணைத்து,
அன்புதர மனம் நினைத்து ;
துன்பந்தீரத் துணைக்கு வந்து ,
இன்பங்காண அருளும், தாயை
என்றென்றும் இவ்வுலகில் ;
பண்பாடு,போற்றி கொண்டாடு,
எந்நாளும் தாயின் புகழ்பாடு.

வண்ணப் பச்சை நிறங்கொண்ட,
சின்னச் சின்ன கிளியொன்று ;
அன்னை அவள் கரம் நின்று ,
உனைப்பற்றி,அவள் காதிற் ;
சொன்ன வொரு மொழி கேட்டுச்
சுகந் தந்த அன்னையவள் ;                                               பண்பாடு,போற்றிக் கொண்டாடு.

சின்னச் சின்ன மீன் போன்ற,
வண்ணயெழில் விழி கொண்டு ,
மின்னலென வொளி கூட்ட ;
இன்ன லிருள் தனை யோட்ட ,
ஏற்ற தொரு வழி காட்டும்,
அன்னையவள் புகழ்பாடு,
ஆனந்தக் கூத்தாடு.
                                  

No comments:

Post a Comment