Sunday, November 11, 2012




மனமும் இறங்காதோ !


காலடியில் விழுந்து,காலமெலாம் தொழுதாற் கருணை பிறக்காதோ ? – குமரா
மலரடியை வணங்கி,மனமுருகிப்பாட மனமும் இரங்காதோ ?

கோலமயிலேறுங் குமரனைக் கும்பிடக் குறைகள்,குறையுமென்றே,
வேலுடை வேந்தனாம்,வேலனை வேண்டிட வேதனை திருமென்றே;
காலமெலஞ் சொன்ன கதைகளைக் கேட்டு,கந்தா யுனை வணங்கும்,
வேலை தனையன்றி,வேறு தொழிலறியா,யேழை யென்று முந்தன்.

                                             (காலடியிற்)

பூவைச்சுமக்குந் தோளையுடையவா,துன்பம் போதுமையா – யென்
பாவச் சுமைகளை, உன் பதம் வைக்கப் பழுவுங் குறையுமையா ;
தெய்வானை வள்ளி,யுனையுஞ் சேர்த்து,மயிலும் சுமக்குதய்யா ,
கையேந்தி நின்றோம்,கவலையனைத்தையும்,கரத்தினில் நீ சுமக்க

                                             (காலடியிற்)
                                  

No comments:

Post a Comment