Thursday, November 1, 2012


குன்றதிலே குடியிருக்கும் குமரா !


 

குன்றதிலே குடியிருக்கும் குமரா –என்
நெஞ்சத்திலே,கொஞ்சம் வந்து அமர்வாய் ;
என்றுமுனைத் தொழுமெந்தன் கரமே ,
என்னுள்ளே நீயிருந்தாற் சுகமே .

வண்ணமலர் நாடிவரும் வண்டு,
தேனருந்த,பூமியிலும் உண்டு ;
வண்ணமயில் வாகனனைக் கண்டு-அவன்
எழிலருந்த பக்தர் கோடி உண்டு .

எண்ணயெண்ண யினிக்குதடா நெஞ்சம் ,
இறைவாவுன் மலரடியே தஞ்சம் – உன்
அருளுக்கு யென்றுமிலை பஞ்சம் ,
அரவணைப்பாய் அடியவரைக் கொஞ்சம் .

                                  

No comments:

Post a Comment