Wednesday, October 31, 2012


உயர்வைத்தா,முருகா !



 வண்ண மயிலேறி நிற்கும் வள்ளி நாயகா !

 உன்னை யெண்ணி வந்தோமே, உயர்வைத்தா,முருகா !


 எண்ண,எண்ண நெஞ்சினிக்கும் உன்னை யெண்ணும் போது ,

கண்ணில் வந்து நிற்கு மந்த காட்சிக் கிணையேது ;

 பண்ணோடு பாடுமிசைப் பாட்டை நீயும் கேட்டு ,

 எண்ணிலாத யின்பந்தந்தே,மகிழ்வை நீயும் கூட்டு.


 பாவநதி கடக்க வொரு பாலமென ஆவாய் ,

 ஜீவநதி கடக்க உந்தன் நேசக்கரம் நீட்டு ;

 காலமெலாம் மண்ணில் வாழ வேண்டேனே சுமையாய் ,

 காத்திடவா,கந்தா நீ,கண்ணைக் காக்கு மிமையாய்.

No comments:

Post a Comment