Tuesday, October 2, 2012





           கோவில் மணியோசையிலே !




கோவில் மணியோசையிலே மீனாட்சி ;
        கொஞ்சு மொழி கேட்குதம்மா மீனாட்சி !
கொஞ்சுங் கிளிப் பேச்சொலியும் மீனாட்சி ;
        குழல்போலே யொலிக்குதம்மா மீனாட்சி !
                                          ( கோவில்மணி )
காலமெலாம் காலடியிற் மீனாட்சி ;
        கருணைக்கே காத்திருந்தோம் மீனாட்சி !
பாவமெலாம் போக்கிடுவாய் மீனாட்சி ;
        பதம் பணிந்தோ மருள்வாயே மீனாட்சி !
ஞாலமெலாம் உன்புகழை மீனாட்சி ;
        யாம் பரப்ப,தயைபுரிவாய் மீனாட்சி !
நாலும் வரும் வாழ்க்கையிலே மீனாட்சி ;
        நல்லதையே நடத்திடுவாய் மீனாட்சி !
                                          ( கோவில்மணி )
அருளன்பு அத்தனையும் மீனாட்சி ;
        அளிப்பவளே,அம்மையே மீனாட்சி !
இருள் நீக்கும் மதிமுகமே மீனாட்சி ;
        இணையிலா,உன்முகமே மீனாட்சி !
பொருள்மிக்க,சுவைமிக்க மீனாட்சி ;
        புதுக்கவிதை யெழுதிடவே மீனாட்சி !
அருள்தந்து,கரங்கொண்டு மீனாட்சி ;
        ஆட்கொண்டு,அன்பு செய்க மீனாட்சி !
                                         ( கோவில்மணி )

    

2 comments:

  1. ..நாலும் வரும் வாழ்க்கையிலே மீனாக்ஷி...
    தினம் நல்லதையே நடத்திடுவாய் மீனாக்ஷி..
    - மிக அழகான பாடல் வரிகள்..:)

    ReplyDelete
  2. கருத்துக்களுக்கு நன்றி...

    ReplyDelete