Saturday, October 13, 2012



காலைப் பிடித்தோ மம்மா !



காலைப் பிடித்தோமம்மா,காத்தருள வாராய் தாயே ,
வேலைப்பிடித் தோனம்மா வேதனயைப் போக்கு நீயே ;

மாலையானாலும் மயங்கிக் கிடப்போமே, தோளில்
மழலை பேசுங் கிளியானால், மகிழ்வோமே கையிற்
சோலை மலரானாலோ, துயில்வோமே உன் பதத்திற்
பாழும் மனிதப் பிறப்பில் , ஏது கண்டோ மம்மா ?
                                       (காலைப்பிடி)
காலை விழித்தெழுந்து,கனிவுதரு மெழில் முகமும்
நீல வானிற் தவழும் , நிலவா யொளிர்ந்திருக்க ,
வேலை துவங்கு முன்னர்,அன்னையுன் அருள்பெற்றால் ;
நாளும் நலம்பிறக்கும் , நல்லதே காண்போ மம்மா  !

                                                                                     (காலைப்பிடி)

No comments:

Post a Comment