Monday, October 22, 2012







அருள் தருவாய் குருவே !


கருணை கொஞ்சம் நெஞ்சிலிருந்தாற் காத்தருள்வாய்,குருவே !
அருளை வேண்டு மன்பர்க்கு நீ, யருள்தருவாய்,குருவே !
                                                    (கருணை)
நம்பிவரும் அடியார்க் கென்றும் நலஞ்செயவே வேண்டும் - உனை
நாடிவரும் அவர்குறையோ , ஓடி மறைய வேண்டும் – தினம்
பாடிவரும் பக்தருக்கு நின்,பதமலரொளி வேண்டும் - துணை
தேடிவரும் அவர்க்கு யென்றும்,உன் திருவருளே வேண்டும்.
                                                    (கருணை )
இதயமதி லுன்னை வைத்து , யென்று மேற்று மன்பர் – உன்
பதமலரைப் பணிய அருள் பெருகிவிடு மென்பர் - நல்
இதயமலர்,மலர அதிற் யின்ப மென்றும் பொங்க - அதில்
உதயமாகும் வொளிமிகுந்த,உயர்ந்த வாழ்வு தங்க.
                                                     (கருணை)


No comments:

Post a Comment