Saturday, October 20, 2012



கோலமயில் வாகனனே !

 ( மங்கையரில் மஹராணி -மெட்டு )


கோலமயில் வாகனனே கொஞ்சுமொழி மோகனனே !
இன்பத்தமிழ் நாயகனே யென்னுயிரே வேலவனே !
                                    (கோலமயில்)
ஓராறு  முகமும், ஈராறு கண்ணும்,
கையோடு வேலும் , யெனைக் காக்க வேண்டும் ;
வேலா உன் ஆடல்,நீ யாடப் பார்த்து ,
நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு ;
வெள்ளி ரதத்திற் துள்ளி யெழுந்து,வேலா நீ வாராய் ,
உன் னன்புக் கைதன்னால், நீயும் அருள்தாராய் !
                                   ( கோலமயில் )
மாணிக்கத் தேரில் , மன்னவ னுன்னை ,
மங்கையரோடு, நான் காண வேண்டும் ;
தீராத துன்பம் கோடானுகோடி ,
போராடுகின்றேன்,வேலாதிவேலா !
துன்பந் தீர்த்துத் துணையாய் நிற்கத் தலைவா நீ வாராய் !
இன்பத்தை யெந்நாளு மெந்தன் யிறைவா நீ தாராய் !
                                                                                  ( கோலமயில்)

No comments:

Post a Comment