Saturday, October 20, 2012







குருவென்று கூறாத நாளெல்லாம் பாழே !


திருநாமம் சொல்லாத வொருநாளும் வீணே ,
குருவென்று கூறாத நாளெல்லாம் பாழே !
                                  (திருநாமம் )
நெருங்காது துயர் நம்மை , நினைத்தென்றும் வாழ்ந்தால் ,
ஒரு நாளும் மறவாது , தியானத்தில் ஆழ்ந்தால் ,
                                  ( திருநாமம் )
கரும்பாக யினிக்கின்ற அவன் பேரைச் சொன்னால் ,
அரும்பான நம் வாழ்வு , அழகாக மலரும் ;
கருகாது யென்றென்று மெழிலாகத் திகழும் ,
சருகாக மாறாது , மணமென்றுங் கமழும் .
                                  ( திருநாமம் )



No comments:

Post a Comment