Thursday, October 25, 2012




அருள் புரிவாய் அன்னையே !





பொற்றாமரைக் குளத்திற் நீராடினேன் – உன்
பொன்முகத்தைக் கண்டு தினம் துணை நாடினேன் ;
நற்றாள் பணிந்து தினம் நலம் வேண்டினேன் ,
நம்பிவந்த யெனைக்காத்து அருள்வாயம்மா !
                                       ( பொற்றாமரை )
வற்றாத வைகையென வளந்தருவாயா ? – பெற்ற
நற் தாயெனப் பேணி யெனை வளர்ப்பாயா ? – உற்ற
துயர்நீக்கித் துணையாக யெனைக் காத்திருப்பாயா ? – கற்ற
நற்றமிழிற், நான் பாட அருள்புரிவாயா ?
                                        ( பொற்றாமரை )
சொக்கி நின்ற நாதனுக்கு உன் கரந்தந்தாய் – அவன்
பக்கம் நின்று, பக்தருக்கு நல்லரு ளீந்தாய் – தினம்
மக்கள் வெள்ள முனைச் சூழ்ந்து,கோவிலில் ஆட – எட்டு
திக்கி னின்றும் வந்தவர்வாய் , உன் புகழ் பாட
                                        ( பொற்றாமரை )


உன் னெழிற் கோலம் !


கோலங்கண்டு மயங்கார் யாருளரோ ? – உன்னெழிற்
கோலங்கண்டு மயங்கார் யாருளரோ ?

குறுநகை யெழில் சிந்தி, கொஞ்சுங்கிளி கையேந்தி ,
கொண்டைதனில் மலர்சூடி,கெண்டைவிழிக் கவிபாடி ;
குங்குமக் கோலம் மின்ன, கூடலில் நின்ற யெழிற்
                                          ( கோலங்கண்டு )
காலமெலாம் பணிந்து, கனிந்து மனமுருகி ,
ஞாலமெலாம் புகழை , பாடி யுனைப் பரவி ;
வேலான விழியழகை வியந்து அதில் மயங்கி ,
பாலான வெண் மதியாய் பளிச்சிடும் இளம் யெழிற்
                                         ( கோலங்கண்டு )
                                    

No comments:

Post a Comment