Monday, October 15, 2012



ஓ ராகவேந்திரா !





ஒருநாளு முனை மறவேன்,ஓ ராகவேந்திரா !
கருணையிலையோ ? காலமெலாந் தொல்லையோ ?
                                        (ஒரு நாளும்)
திருவடியைத் தொழுதேனே ! தினமும் உன்முன் அழுதேனே !
வருந்துயர்  நீக்காது  வாளா  திருப்ப  தென்ன ?
                                        (ஒரு நாளும்)
கருணைக் கடலென்றே, காலடியில் வீழ்ந்தேனே ,
வருந்துயர் போமென்றே , வண்ண முகங்கண்டேனே  ;
இருந்து மென்ன பயன் , யிருகரங் கூப்பியே ,
இறைவா வுன் இணையடியிற் , மலர்தூவி யுனை வணங்கி ,
                                        (ஒரு நாளும்)




No comments:

Post a Comment