Thursday, October 4, 2012


காட்சி தந்தால் அழகு !




கருணை மழை பொழிந்து,
         கவலை யெலா மழித்து,
                  காட்சி தந்தா லழகு !
அருளை வேண்டி வரும்,
          அன்பர் னைவருக்கும்,
                      அருளை யள்ளி வழங்கு --- தாயே
                      அருளை யள்ளி வழங்கு.

பொருளை வேண்டவில்லை,
           பொன்னைத் தேடவில்லை,
                        புகழில் நாட்டமில்லையே.
இருளை நீக்கு மந்த,
            இனிய யெழில் விழியின்
                       ஒளியை மட்டுங் கூட்டு --- தாயே
                       ஒளியை மட்டுங் கூட்டு.

பொறுமை கொண்டு வுனைப்
            போற்றுகின்ற நெஞ்சிற்,
                       புகுதல் இனிய வொன்று,
சிறுமை நீங்கி யவர்
              சிறந்த வாழ்வு பெற,
                       செல்லும் வழியைக்காட்டு --- தாயே
                       செல்லும் வழியைக்காட்டு.

பெருமை யோடு நின்,
              பேர் சொல்லும் வேளையிற்
                            பிணி களேது யிங்கு,
கருமை கொண்ட விழி,
               காட்டும் நல்ல வழி,
                       காணக் கையை நீட்டு ---  தாயே
                       காணக் கையை நீட்டு.     

No comments:

Post a Comment