Showing posts with label பிறப்பின் இரகசியம். Show all posts
Showing posts with label பிறப்பின் இரகசியம். Show all posts

Monday, May 4, 2020

பிறப்பின் இரகசியம்






அதான அத்தியாயம்.
62 – ஸ்லோகங்கள்.
 1.        இப் பிரபஞ்சத்தில், மனித இனமும், மிருக சாம்ராஜ்யமும், உடலுறவு எனும் புனித உறவால், உருவாக்கப்பட்டது. எனவே, கருத்தரிக்கும் நேரத்தையும், கிரக நிலைகளையும், (கிரகணங்கள், கிரகயுத்தங்கள், உச்ச\நீச்ச நிலைகள், கிரக அஸ்தமனங்கள் ஆகியவையும்) கணித்து ஜாதக கணிதம் செய்வது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதாவது, கருத்தரித்த காலம் முதல், உலகில் நாம் அவதரிக்கும், ஜனன கால இலக்னத்தைக் கணிக்கும் வரை, மேற்சொன்னவற்றை ஒரு ஜோதிடர் கருத்தில் கொள்ளவேண்டும். மனித, மிருகங்கள் ஆகியவற்றின் பிறப்பின் போது, துல்லியமாகக் கணக்கிடும் இராசியின் பலம், கிரக பலம், பாவ பலம் (இராசியின் பயன்கள், கிரக மற்றும் வீட்டின் பலன்கள்) ஆகியவற்றைப் பற்றிய கேள்வி எழுகிறது. கருத்தரிக்கும் நேரம் நாம் அறிய முடிவதில்லை. இதற்காக, நாம் பிரசன்ன ஜாதகம், அல்லது பிறப்பு ஜாதக இலக்னம் மூலமாக அறிய முயற்சிக்க வேண்டும் என பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறந்த நாளில் இருந்து 10 மாதங்கள் பின்னோக்கிச் சென்று, கணக்கிட கீழ்கண்ட ஸ்லோகங்கள் நமக்கு உதவிகரமாக இருக்கும்.
2-3 – பெண்களுக்கு, அவர்கள் பூப்பெய்தும் காலத்திற்குப் பின்னரே அவர்கள் கருத் தரித்தலுக்கு உரியவராகிறார்கள்.  இந்த நிகழ்வு அவர்களின் ஜனன ஜாதகத்தில், இலக்னத்தில் இருந்து 1, 2, 3, 5 ,7, 8, 9 மற்றும் 12 ஆம் இடங்களில் கோசார செவ்வாய் இருந்து, சந்திரன் அவனைப் பார்க்கும் போதே நிகழ்கிறது. சந்திரன், நீரையும், செவ்வாய், நெருப்பையும் குறிப்பதோடு, அதன் காரணமாக, இரத்தம் மற்றும் பித்த நீர்   உடலில், உருவாக்கப்படுகிறது. சந்திரன் மற்றும் செவ்வாயின் தொடர்பே பெண்ணின் பூப்பெய்தலுக்குக் காரணமாகிறது. செவ்வாய், மேஷத்திற்கு அதிபதியாகி, பிட்யூட்ரி கிளாண்ட்ஸையும், விருச்சிகம், கருமுட்டையையும் , குறிகாட்டுகின்றன. 
4-7 -   கருவுறுதலுக்கு கரு முட்டை காரணம் ஆகிறது. சந்திரன் உபஜெய ஸ்தானங்களில் (3, 6, 10, 11) இருக்கும் போது, கருமுட்டைக்கு, கருத்தரித்தலை உருவாக்கும் சக்தி இருப்பதில்லை. எனினும், உபஜெய ஸ்தானங்களில் சந்திரன் இருந்து, குருவால் பார்க்கப்பட்டாலோ அல்லது நட்பு வீட்டில், குறிப்பாக சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், ஒரு பெண், ஆணுடன் பாலியல் புணர்ச்சியில் ஈடுபடுவாள். இத்தகைய சந்திரனை, செவ்வாய் பார்த்தால், அவள் ஓர் ஒழுக்கம் கெட்டவனை, விபசாரம் செய்பவனை, பிறன் மனை நயப்பவனைப் புணர்வாள். சூரியனால் பார்க்கப்பட்டால் அரசனையும், சனியால் பார்க்கப்பட்டால் வேலைக்காரனையும் புணர்வாள். சுப கிரக பார்வையின்றி, அசுபர் மட்டும் பார்க்க என்னாகும் ? - என நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். சந்திரனின் மீது அநேக அசுபக் கிரகங்ளின் பார்வை ஏற்பட ஜாதகி விபசாரி ஆவாள்.
         இதில், இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஒரு சில அறிஞர்கள், சுலோகம் – 7 ,சிறப்பாக, பெண் முதல் முதலாக பூப்பெய்தும் காலத்திற்கே பொருந்தும் எனக் கருத்துக் கொண்டுள்ளனர். மேற் சொன்ன பார்வைகள், அவள் பிற்காலத்தில் எத்தகைய கணவனை அடைவாள் என்பதைக் குறிப்பதாகவும், குறிப்பிடுகின்றனர். ஒரு பெண் பூப்பெய்தும் நேரத்தில் கணக்கிடப்படும் ஜாதகம், இந்திய ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அது ஜாதகியின் பிற்கால வாழ்க்கை, முக்கியமாக பாலுணர்வு வாழ்க்கையை வெளிப்படுத்துவதாக அமையும் எனத் தெளிவு படுத்துகிறது. பூப்பெய்திய நேரத்திற்கு உரிய, நட்சத்திரம், திதி, மாதம், கிழமை ஆகியவையும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
8 – களத்திர பாவ நிலை, எவ்விதமான புணர்வு இன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பதைக் குறிகாட்டும்.
9 – அந்த நேரத்தில் களத்திர பாவத்தில், அசுபர் தொடர்பு ஏற்பட தம்பதிகளிடையே, மகிழ்ச்சியற்ற மனநிலை உருவாகி, திருப்தியற்ற நிலை உருவாகும். இதுவே, 7 ஆம் இடத்துடன், சுபர்கள் தொடர்பு ஏற்பட, ஒத்த மன நிலையில், நகைச்சுவை, சிரிப்பு என, சந்தோஷமான நிலையில் புணர்சியில் ஈடுபட்டு மகிழ்வர்.
10. – கர்மா என்ற முன்வினையின், இன்ப துன்பங்களை ஒருவரின் ஆத்மா இப் பிறவியில், அனுபவிக்க, இந்த உடலுறவு மூலமாக, ஆணின் விந்தணு, பெண்ணின் கருப்பையை அடைந்து கருத்தரிக்கிறது.
11 – 12 – எப்போது கருத்தரித்தல் ஏற்படுகிறது ? புணரும் காலத்தில் –
அ). ஆணின் ஜாதகத்தில், சூரியன் மற்றும் சுக்கிரன், தங்களது சொந்த நவாம்ச வீட்டில் இருக்கவோ, மற்றும் லக்னத்தில் இருந்தோ அல்லது சந்திரா இலக்னத்தில் இருந்தோ, உப ஜெய ஸ்தானங்களில் இருக்க வேண்டும் ( சில அறிஞர்கள், சுக்கிரன், ஆண் நவாம்சமான துலா நவாம்சத்தில் இருக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.) அல்லது
ஆ). பெண்ணின் ஜாதகத்தில், சந்திரன் மற்றும் செவ்வாய், தங்களது சொந்த நவாம்ச வீட்டில் இருக்கவோ, மற்றும் லக்னத்தில் இருந்தோ அல்லது சந்திரா இலக்னத்தில் இருந்தோ, உப ஜெய ஸ்தானங்களில் இருக்க வேண்டும்.
இ). சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகியவை தங்களது சொந்த நவாம்சத்தில் இருக்கவும் மற்றும் கருத்தரித்த போதைய இலக்னத்துக்கு உபஜெய ஸ்தானங்களில் இருக்கவும் அல்லது பலம் மிக்க குரு, கருத்தரிப்பு இலக்னத்திலோ, 5 அல்லது 9 ஆம் வீடுகளில் இருக்கவும் கருத்தரித்தல் நிகழ்கிறது.
13 – உடலுறவின் போது உள்ள, தம்பதிகளின், மகிழ்ச்சியான மன நிலை, நல்ல ஆரோக்கியம், ஆகியவை, பிறக்கப் போகும் குழந்தையின் தன்மையை நிர்ணயிக்கும் என்றால் மிகையாகாது. மேலும், புணரும் சமயத்தில் தம்பதிகளின் திரிதோஷங்களான – வாதம், பித்தம், கபம் ஆகிய நிலைகள், பிறக்கப் போகும், குழந்தையின் மீது பிரதிபலிக்கும்.