Monday, December 3, 2012






மதுரையாள்கின்ற நாயகியே !




வாழ்கின்ற நாளெல்லாம் வணங்குதல் வேண்டும் – மதுரை
ஆள்கின்ற நாயகி நீ, வரந்தர வர வேண்டும்.
                                           (வாழ்கின்ற)
நீள் கின்ற வாழ்க்கையிலே நிம்மதி வர வேண்டும் ;
ஏழ் பிறப்பும் உள்ளத்தி லுன் நினைவொன்றே போதும்,
                                           (வாழ்கின்ற)
சேர்கின்ற இன்னலெலாம் சென்று மறைய வேண்டும் ,
நேர்கின்ற இன்பம் மட்டும் நிலைத்திருந்தாற் போதும்;
சோர்வு வரும் நேரமெலாம் சுந்தர முகங் காட்டு,
வேர்விட்டு, நெஞ்சிலெழும் இனிமைமிகு பாட்டு.
                                           (வாழ்கின்ற)
                                  

No comments:

Post a Comment