Saturday, September 15, 2012



முத்துக்குமரா வென கத்துங் கடலே !



முத்துக்குமரா வென்று கத்துங்கடலே அந்த
சத்தங்கேட்டு,சண்முகனைக் கூவும் மயிலே,
செந்திலதிபா வென்று சேவற் கூவுமே உனை
சிந்திக்கின்ற பக்தருள்ளம் மெய்மறக்குமே.

தித்திக்கின்றதே,நாவும் தித்திக்கின்றதே உனை
பக்தியோடு போற்றிப் போற்றி பாடும் போதிலே,
சக்திவந்ததே புது சக்திவந்ததெ நாளும்
சண்முகனே, பொன்னடியைத் தேடும் போதிலே

என்றுமின்பமே நெஞ்சிலென்று மின்பமே வொரு
கன்றினைப் போற் தாயினருட் பாலருந்தவே,
குன்றவில்லையே யின்பங் குன்றவில்லையே அந்த
குன்றிலாடுங் குமரன் குரல் கேட்குஞ் செவிக்கே.

No comments:

Post a Comment