Saturday, September 22, 2012







வரந்தரும் வடிவேலா !








பரங்குன்றம் வாழும் பரமசிவன் மைந்தா ;
நிரந்தர சுகந்தந்து நிம்மதியும் நீ தா ;
                                     
                                                                                   (பரங்குன்றம்)

வரந்தரும் வடிவேலா  வாழ்வில் வசந்தந்தா – உனை
சிரந்தாழ்த்திப் பணிந்தோமே சிங்கார வேலவா – யென்றும்
மறக்காத மனந்தா  மயிலம ரெழில் மன்னா – துன்பம்
பிறக்காத நிலைதா துணிவுந்தா அணிசேர் திருப்
                                      
                                                                                  (பரங்குன்றம்)

                                       
இருத்தின்றோம் வாழ்வினிலே களிக்கின்றோ மென்றால் – உன்
திருக்கரத்தி னருளன்றி வேறேது அய்யா – அன்பு
பெருக்கெடுத்து ஓட, உன் பக்தர் மனம் பாட – அவ்
உருக்கமான பாடலிலே உந்தன் மயிலாட,மகிழ் திருப்
                                    
                                                                                 (பரங்குன்றம்)


No comments:

Post a Comment