Saturday, September 15, 2012




முருகா,வருக !




வெற்றி வேலெடுத்து நீ வேகமாக வருக,
நெற்றி யொற்றை கண்ணன் பெற்ற செல்வமே,
முருகா வருக ! வருக முருகா !

அன்புமுகங் கண்டாலென் அல்லல்தீரும் முருகா,
அழகுவேலைக் கண்டாலென் அச்சந்தீரும் முருகா.
குன்றமர்ந்த குருபரனே ! குறத்தி மணவாளா,
நின்றுயெம்மைக் காக்கவே நித்தம் நீ வருக.
                                      (வெற்றி)
இதயமெனும் மலரெடுத்து யிணையடியிற் வைத்தேன்,
இன்பமிகு வாழ்வைப்பெற யென்றுமே துதித்தேன்,
சரவணனே ! ஷண்முகனே , சக்திவடிவேலா,
கரங்கொடுத்துக் காக்கவே கந்தா நீ வருக.
                                      (வெற்றி)
நீலமயில் மீதேறி நீ வருவாய் முருகா,
காலமெலா முனக்காகக் காத்திருப்பேன் முருகா,
ஆலகால விஷமுண்டோன்,அம்மையப்பன் பாலா,
வேலுடனே வினைதீர்க்க வருவாய் நீ வேலா !
                                     (வெற்றி).

No comments:

Post a Comment