Wednesday, September 12, 2012









அழகர்மலை அழகு, நெஞ்சையள்ளும் !

இயற்கையெழில் கொஞ்சுமந்த அழகர்மலை சென்றால்
இதயமதில் யின்பம்பொங்கும், அழகு நெஞ்சை யள்ளும்
மலையடியிற் நிற்குமெழில் மாலவனின் கோவில்
மலைமெலே மருகனுக்கும் கோவிலுண்டு காவில்.

வளைந்துசெல்லும் மலைமீது வனப்புமிக்க பாதை,
வனக்குயில்கள் பாடுமிசை வந்துசேரு ங்காதை
வானரங்கள் வழிநெடுகத் தாவித் தாவி யோடும்
வரும்பக்தர் கைப்பொருளைப் பறித்தே விளையாடும்

அழகுத்தாய் ராக்காயம்மா அரும்புகழைப் பாடி
அன்புருவான அவள்கரத்தின் நல்லருளை நாடி
நூபுரகங்கையெனும் நற்சுனைத்தீர்த்தம் ஆடி,
நோய்தீர்ந்து மனமகிழ்வார் பக்தர் பலகோடி .

மாலவனி னருள் வெள்ளம் மலையடியி லோடும்
வேலவனி னருளுள்ளம்  சோலையிலே கூடும்
இயற்கையன்னை யெழில்மட்டு மெங்குங் கூத்தாடும்
இனிய யெழில் காணுமுள்ள மின்பத்தாற் பாடும்.

                                           -இளசை விஜயன்

No comments:

Post a Comment