Friday, September 14, 2012

பாதை மாறும் மனிதா ......





பாதை மாறும் மனிதா ......




போதையாலே பாதை மாறும் மனிதா !
போதனைகள் உந்தன் காதில் விழுமா ?
கடன் வாங்கி,சலிக்காமற் குடிப்பாய்,
காசையெல்லாம் நீராக்கிக் களிப்பாய்,
வீடிழந்து,வீதியிலே விரக்தியில் நிற்பாய்
காடு,வீடு எல்லாமே கடனாலே, விற்பாய்
சாதனைகள் நீ செய்ய மனதாலே நினைத்தால்,
வேதனைகள் வரிசைகட்டி வாசலிலே நிற்கும்,
மனைவிமக்கள் மகிழ்ச்சியெலாம் மண்ணாகிப் போகும்,
மாறிவிட்டால் வாழ்க்கையெலாம் பொன்னாக  மாறும்,
மதுவை நீ மறந்தால் மாறும் உன் தரித்திரமே,
மறந்தால்  படைப்பாய்  நீ  மாறா சரித்திரமே!
பாதை மாற வேண்டுமெனில் போதை மாறவேண்டும்,
போதனைகள் ஏற்று,இப் புவியில் வாழ்ந்து காட்டு.

No comments:

Post a Comment