Thursday, September 20, 2012





துணை நீயம்மா !



துணைநீயம்மா ! அருள்வாயம்மா !
உனையன்றி உயர் தெய்வம்,யார்தானம்மா ? 
                                           ( துணை நீயம்மா)

இணையின்றி யெழில் மதுரை யாள்பவளே >
நினைப்போரின் நெஞ்சதனில் வாழ்பவளே ;
அணைக்கின்ற அருட்கரத்தை யுடையவளே >
அன்பாலே உருவான அன்னை நீயே தாயே ;
                                       (துணை நீயம்மா)

மொழிபேசும், கிளிகொஞ்சு முந்தன் கையில்>
முழுமதியா யொளி வீசும்,முக முண்மையில் ;
ஒளிவீசு மிருவிழியி னருளொயில் >
வழிபிறக்க, வாழ்வானாய் யன்னை நீயே ;
                                         (துணை நீயம்மா)

2 comments:

  1. அருமை; எளிமையான வார்த்தைகள் ; தெய்வீகம் நிறைந்த பாடல் வரிகள்..!

    ReplyDelete
  2. பாராட்டுத்தான் பூஸட் போன்றது,நன்றி.

    ReplyDelete