Wednesday, September 12, 2012


வாழிய ! வாழியவே !



பொதிகைமலை யுச்சியிலே புறப்பட்டாய யம்மா,
புண்ணியமா நதிகளிலே நீ வளர்ந்தா யம்மா,
இய லிசை நாடகமே உன் வடிவமம்மா- அதை
இன் றெமக்கு மனமுவந்து நீ அருள்வாயம்மா.

வாழிய ! வாழியவே !-நீ
வாழிய ! வாழியவே !

கல்தோன்றி மண்.தோன்றா காலத்தே- நீ
முன்தோன்றி மூத்த தழிழ்த் தாயம்மா :
சோல்லோடு பொருள் சேர்த்து - எழிலையெலாம்
சொல்லவே முடியாத அழகியம்மா !

                                                        (வாழிய )

கம்பரும்,வள்ளுவரும் உனைப் படைத்தார் -எங்கள்
கவிஞர் பாரதியும் உனை வளர்த்தார் ,
ஐம்பெருங் காப்பியத்தை அணிகலனாய் -நீ
அணிந்திருக்கும் அழகேயோர் அழகம்மா !

                                                      ( வாழிய )

No comments:

Post a Comment