Sunday, November 11, 2012




மனமும் இறங்காதோ !


காலடியில் விழுந்து,காலமெலாம் தொழுதாற் கருணை பிறக்காதோ ? – குமரா
மலரடியை வணங்கி,மனமுருகிப்பாட மனமும் இரங்காதோ ?

கோலமயிலேறுங் குமரனைக் கும்பிடக் குறைகள்,குறையுமென்றே,
வேலுடை வேந்தனாம்,வேலனை வேண்டிட வேதனை திருமென்றே;
காலமெலஞ் சொன்ன கதைகளைக் கேட்டு,கந்தா யுனை வணங்கும்,
வேலை தனையன்றி,வேறு தொழிலறியா,யேழை யென்று முந்தன்.

                                             (காலடியிற்)

பூவைச்சுமக்குந் தோளையுடையவா,துன்பம் போதுமையா – யென்
பாவச் சுமைகளை, உன் பதம் வைக்கப் பழுவுங் குறையுமையா ;
தெய்வானை வள்ளி,யுனையுஞ் சேர்த்து,மயிலும் சுமக்குதய்யா ,
கையேந்தி நின்றோம்,கவலையனைத்தையும்,கரத்தினில் நீ சுமக்க

                                             (காலடியிற்)
                                  
குரு வாழ்க!            குருவே துணை !

மதுரையில் மாபெரும் ஜோதிட மகாநாடு

அமரர்.பி.எஸ்.ஐயர்.18 ம்ஆண்டு நினைவு விழா


நாள்:  நந்தன வருடம்  மார்கழி மாதம்   7   மற்றும்      8 ம் தேதி.

22 -12 - 2012,  23 - 12 - 2012  சனி மற்றும் ஞாயிறு. காலை 8 மணிமுதல் .

சிறப்பாக நடைபெற உள்ளது.

இடம்:ஸ்ரீ சொக்கநாதர் கல்யாணமண்டபம்,வடக்கு மாசி வீதி.மதுரை - 1


சிறப்புப் பேச்சாளர்கள்.
      “கலைமாமணி.வெண்ணிற ஆடை. மூர்த்தி.
மற்றும்

ஸ்ரீலஸ்ரீம் ஜாம்பவான் சுவாமிகள் ,
ஏ.வி.எஸ். சுந்தரம் ,லயன்.வி.நாராயணன்,
நவமணி சண்முகவேலு, கோட்டையூர்.சிவசுப்ரமணியன்,

கடகம்.இராமசாமி.இரா.அருள்வேல்,
செந்திலடிமை தினகரன், (ஆசிரியர், ஜோதிட அரசு) ஜெயந்திநாதன், (ஆசிரியர்,ஜோதிட பூமி) அதிர்ஷ்டம்  பாலசுப்ரமணியன்,(ஆசிரியர்,பால ஜோதிடம்.)                  வாசியோகி.பி.ஏ.பொன்னையா,     ஏ.அமிர்தலிங்கம், சின்னாளபட்டி தங்கவேல். மீனம்.பச்சமுத்து, கலைப்பிரியன் மற்றும் பலர் .

 அனைவரும் வருக !
அன்னதான நன்கொடைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.


(   Amarar P.S.Iyer Ninaivu Jothida Araichi Maiyam - A/C-No – 1011101049504 –  Canara Bank.                North veli St. Branch. Madurai – 1.)

இவண்,
நிர்வாகக்குழு.
                                                                                                                  அமரர் பி.எஸ். ஐயர் நினைவு ஜோதிட ஆராய்ச்சி மையம். மதுரை. .                                                                                   தொடர்பு எண் : 99948 11158, 97891 01742, 75981 59981.                                                                                                                    




Sunday, November 4, 2012






அன்னையின் புகழ்பாடு !


அன்னை யென்னை யரவணைத்து,
அன்புதர மனம் நினைத்து ;
துன்பந்தீரத் துணைக்கு வந்து ,
இன்பங்காண அருளும், தாயை
என்றென்றும் இவ்வுலகில் ;
பண்பாடு,போற்றி கொண்டாடு,
எந்நாளும் தாயின் புகழ்பாடு.

வண்ணப் பச்சை நிறங்கொண்ட,
சின்னச் சின்ன கிளியொன்று ;
அன்னை அவள் கரம் நின்று ,
உனைப்பற்றி,அவள் காதிற் ;
சொன்ன வொரு மொழி கேட்டுச்
சுகந் தந்த அன்னையவள் ;                                               பண்பாடு,போற்றிக் கொண்டாடு.

சின்னச் சின்ன மீன் போன்ற,
வண்ணயெழில் விழி கொண்டு ,
மின்னலென வொளி கூட்ட ;
இன்ன லிருள் தனை யோட்ட ,
ஏற்ற தொரு வழி காட்டும்,
அன்னையவள் புகழ்பாடு,
ஆனந்தக் கூத்தாடு.
                                  

Thursday, November 1, 2012


குன்றதிலே குடியிருக்கும் குமரா !


 

குன்றதிலே குடியிருக்கும் குமரா –என்
நெஞ்சத்திலே,கொஞ்சம் வந்து அமர்வாய் ;
என்றுமுனைத் தொழுமெந்தன் கரமே ,
என்னுள்ளே நீயிருந்தாற் சுகமே .

வண்ணமலர் நாடிவரும் வண்டு,
தேனருந்த,பூமியிலும் உண்டு ;
வண்ணமயில் வாகனனைக் கண்டு-அவன்
எழிலருந்த பக்தர் கோடி உண்டு .

எண்ணயெண்ண யினிக்குதடா நெஞ்சம் ,
இறைவாவுன் மலரடியே தஞ்சம் – உன்
அருளுக்கு யென்றுமிலை பஞ்சம் ,
அரவணைப்பாய் அடியவரைக் கொஞ்சம் .

                                  

Wednesday, October 31, 2012


உயர்வைத்தா,முருகா !



 வண்ண மயிலேறி நிற்கும் வள்ளி நாயகா !

 உன்னை யெண்ணி வந்தோமே, உயர்வைத்தா,முருகா !


 எண்ண,எண்ண நெஞ்சினிக்கும் உன்னை யெண்ணும் போது ,

கண்ணில் வந்து நிற்கு மந்த காட்சிக் கிணையேது ;

 பண்ணோடு பாடுமிசைப் பாட்டை நீயும் கேட்டு ,

 எண்ணிலாத யின்பந்தந்தே,மகிழ்வை நீயும் கூட்டு.


 பாவநதி கடக்க வொரு பாலமென ஆவாய் ,

 ஜீவநதி கடக்க உந்தன் நேசக்கரம் நீட்டு ;

 காலமெலாம் மண்ணில் வாழ வேண்டேனே சுமையாய் ,

 காத்திடவா,கந்தா நீ,கண்ணைக் காக்கு மிமையாய்.

Thursday, October 25, 2012




அருள் புரிவாய் அன்னையே !





பொற்றாமரைக் குளத்திற் நீராடினேன் – உன்
பொன்முகத்தைக் கண்டு தினம் துணை நாடினேன் ;
நற்றாள் பணிந்து தினம் நலம் வேண்டினேன் ,
நம்பிவந்த யெனைக்காத்து அருள்வாயம்மா !
                                       ( பொற்றாமரை )
வற்றாத வைகையென வளந்தருவாயா ? – பெற்ற
நற் தாயெனப் பேணி யெனை வளர்ப்பாயா ? – உற்ற
துயர்நீக்கித் துணையாக யெனைக் காத்திருப்பாயா ? – கற்ற
நற்றமிழிற், நான் பாட அருள்புரிவாயா ?
                                        ( பொற்றாமரை )
சொக்கி நின்ற நாதனுக்கு உன் கரந்தந்தாய் – அவன்
பக்கம் நின்று, பக்தருக்கு நல்லரு ளீந்தாய் – தினம்
மக்கள் வெள்ள முனைச் சூழ்ந்து,கோவிலில் ஆட – எட்டு
திக்கி னின்றும் வந்தவர்வாய் , உன் புகழ் பாட
                                        ( பொற்றாமரை )


உன் னெழிற் கோலம் !


கோலங்கண்டு மயங்கார் யாருளரோ ? – உன்னெழிற்
கோலங்கண்டு மயங்கார் யாருளரோ ?

குறுநகை யெழில் சிந்தி, கொஞ்சுங்கிளி கையேந்தி ,
கொண்டைதனில் மலர்சூடி,கெண்டைவிழிக் கவிபாடி ;
குங்குமக் கோலம் மின்ன, கூடலில் நின்ற யெழிற்
                                          ( கோலங்கண்டு )
காலமெலாம் பணிந்து, கனிந்து மனமுருகி ,
ஞாலமெலாம் புகழை , பாடி யுனைப் பரவி ;
வேலான விழியழகை வியந்து அதில் மயங்கி ,
பாலான வெண் மதியாய் பளிச்சிடும் இளம் யெழிற்
                                         ( கோலங்கண்டு )