Saturday, August 18, 2018

குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018-19


குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018-19



மகரம்



( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
                 கர்மகாரகனான சனியை அதிபதியாகக் கொண்ட அலைந்து கொண்டே இருப்பவரும், சாதிக்கும் வலிமையும், பலன் கருதி உதவுபவருமான மகரராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

       தங்கள் இராசிக்கு தைரிய, விரய பாவாதிபதியான குரு  புரட்டாசி மாதம் 18 ஆம் நாள், வியாழக் கிழமை, 04 – 10 – 2018 அன்று இலாப பாவ மேறி கிராம அதிகாரம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றைத் தருவார். கார் போன்ற நவீன வாகனங்கள் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் குவிந்து பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். இதுவரை நீங்கள் செய்துவந்த பிரார்த்தனைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். மேலும் யோகபலன்களை அனுபவிக்க்க் காத்திருக்கிறீர்கள். 3, 5, 7 ஆகிய பாவங்களைப் பார்வை செய்வதால் இரு பாலருக்கும் தடைப்பட்டிருந்த திருமண காரியங்கள் கைகூடும். சீக்கிரமே குழந்தை பாக்கியமும் ஏற்படும். அன்பும், பாசமும் மேலோங்க தம்பதிகளின் வாழ்க்கை பூலோக சொர்க்கமாகத் திகழும். சுற்றமும், நட்பும் ஒற்றுமையுடன் உங்கள் கரத்துக்கு வலுச் சேர்ப்பர். பொது வாழ்வில் பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்பட்டு, நட்பும் பலப்படும். தொழில் வளர்ச்சி சிறப்பாக, நல்ல முன்னேற்றத்துடன் இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிட்டும். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும். ஆடை ஆபரணாதிகள் சேரும். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் ஏற்பட்டு மகிழ்ச்சி அளிக்கும்.  இலாப குரு செல்வ நிலையை உயர்த்துவார். பாக்கியம் பெருகும். புகழ் ஓங்கும். பணி உயர்வு கிடைக்கும். மனை, வயல் ஆகியவை சொந்தமாக்க் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். வீடு, நிலம் ஆகியவற்றை உடனடியாகக் கிரையம் செய்வது நல்லது. நல்ல வேலையைத் தேடிக்கொண்டு, பின்னர் இருக்கும் வேலையை விட முயற்சிப்பதே அறிவுடமையாகும். மகான்களின் தரிசனம் கிடைத்து லௌகீக வாழ்க்கை சிறக்கும். பூர்வீகச் சொத்துக்கள் மீதான வில்லங்கங்கள் ஒழிந்து உங்கள் கைக்கு வந்து சேரும். மாணவ மணிகளின் கல்வித் தரம் உயரும். குடும்பத்துடன் இனிய புனித பயணங்கள் மேற் கொள்வீர்கள். நினைத்த காரியங்கள் அனைத்தும் எளிதாக வெற்றி பெறும்.

       குரு தனது 5 ஆம் பர்வையால் தைரிய பாவத்தைப் பார்வை செய்வதால் வங்கிக் கடன்களில் இருத்த பொன் நகைகள் மீட்கப்படும். சிலரின் சொந்த வீட்டுக் கனவுகள் சீக்கிரமே நனவாகும். ஆய்வு தொடர்பான உயர் கல்வியில் உள்ள ஆராய்ச்சி மாணவர்களின் அறிவு விருத்தியாகி சிறப்பாக செய்து முடிப்பர். சகோதர வகையில் புதிய முயற்ச்சிகள் வெற்றி தரும். முன்னேற்றங்களும் ஏற்படும். மனைவியைப் புதிய உயர் பதவிகள் தேடிவரும். தந்தைக்குப் புதிய ஒப்பந்தங்களும், தாய்க்குப் புதிய பயணங்களும் ஏற்படும்.

       குரு தனது 7 ஆம் பார்வையால் 5 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். அதன் காரணமாக குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்றுவரும் வாய்ப்பு ஏற்படும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். சந்ததி விருத்தி ஏற்படும். பொன் ஆபரண, அணிகலன்கள் சேரும். குடும்பத்தில் சுப மங்கள காரியங்கள் சிறப்பாக நடந்தேறும். தாய்வழியில் தன வருமானம் வீடு தேடிவரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.  அரசியலில் உள்ளவர்கள் புதிய உயரிய பதவிகளை எதிர்பார்க்கலாம். குழந்தைகளின் திறமைகள் வெளிப்பட்டு, பரிசுகள் பலபெற்று பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பர் அதன் காரணமாக வீட்டில் சந்தோஷம் நிலவும்.

       குரு தனது 9 ஆம் பார்வையாக 7 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். அதன் காரணமாக  தம்பதிகளின் உறவுகளில் பரஸ்பர சந்தோஷம் நிலவும். குடும்ப ஒற்றுமை ஓங்கி இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தந்தை வழியில் பொருளாதார உதவிகள் கிடைக்கும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டு ஒப்பந்தங்கள், பிராயாணங்கள் ஏற்படும். 

                    மகர இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு செம்பாலான  பாத்திரங்கள்  சேர்க்கை உண்டாகி ஓரளவு நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது. பொது மற்றும் சிறப்பு பலன்களின் வகையில் இவர்களுக்கு மிக்க நன்மையான பலன்களே ஏற்படும். 85%


     ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.


No comments:

Post a Comment