Friday, August 3, 2018

குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018-19 - கடகம்




குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018-19 - கடகம்




கடகம்




(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
                 தாய் காரகனான சந்திரனை அதிபதியாகக் கொண்ட சேவை செய்வதே ஆனந்தமாகக் கொண்ட, அறிவாற்றல், பொறுமை, தியாகம் போன்ற நற்குணங்களும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவருமான கடகராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

       புத்திர, பூர்வ புண்ணிய பாவமான விருச்சிகத்துக்கு புரட்டாசி மாதம் 18 ஆம் நாள், வியாழக் கிழமை, 04 – 10 – 2018 அன்று  மாறுகிறார். தேவகுரு இதுநாள் வரை சுக பாவம் அமர்ந்து நிம்மதி, சுகத்தைக் கெடுத்தாலும் புத்திர பாவமேறி, வனவாசமாய் இருந்த வாழ்க்கையை தனவாசம் மிக்கதாக மாற்றி விடுவார். தெய்வீக அருளும், திருமகள் கடைக்கண் பார்வையும் ஏற்பட்டு நல்ல காலம் பிறக்கும். இன்னல்களை நீக்கி இன்பம் தருவார். செல்வம் சேரும். அழகும் பொலிவும் கூடும், வாக்குவன்மை அதிகரிக்கும். புத்தி தெளிவும், அறிவுக் கூர்மையும் ஏற்படும். பெயரும் புகழும் ஓங்கும். ஜனன ஜாதகப்படி யோகமான திசைகள் நடக்குமானால் வெற்றி மேல் வெற்றிகள் குவியும். வேலை இல்லாது இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நிச்சியம் கிடைக்கும். சிலருக்கு ஆண் சந்ததி ஏற்படலாம். பதவி, அந்தஸ்து உயரும்.  மனைவி மக்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். வீட்டில் மங்கள காரியங்கள் சிறப்புற நடக்க்கும். கால்நடைச் செல்வங்கள் பெருகும். அரசபதவி கிடைக்கும். முதிப்பும் மரியாதையும் கூடும். தொழில், வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏற்றமான காலமாதலால், நல்ல முன்னேற்றங்களைக் காண்பீர்கள். மாணக்கர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். சேவை மனப்பான்மையுடன் இருப்பவர்களுக்கு வம்மு வழக்குகள் குறையும். இந்த சாதகமான காலகட்டத்தை நன்றாக பயன்படுத்தி எதிர்காலத்துக்கான திட்டங்களை தீட்டுபவர்களே புத்திசாலிகள். அதேபோல், உத்தியோகம், தொழில் துறையில் உள்ளவர்களும் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வது நல்லது. கல்விச் சாலைகள் வைத்திருப்பவர்கள் மற்றும் ஆன்மீக, பொதுச் சேவை ஸ்தாபனங்கள் வைத்து நடத்திவருபவர்கள் மிகப் பெரிய வளர்ச்சிகளைக் காண்பர். எதிர்ப்புகள் குறைந்து, வழக்கு விவகாரங்களில் நீங்கள் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் உயர்ந்து முதல் தரமான மதிப்பெண்களைப் பெறுவர். பெண்களுக்குப் பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள், பதவி உயர்வுகள் ஆகியவை கிடைக்கலாம்.

      குரு தனது 5 ஆம் பார்வையால் பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் அதிகாரம் மிக்க பதவிகள் கிடைத்து, அதற்கேற்ப மதிப்பு மரியாதைகள் கூடும். தந்தையின் ஆதரவு கிடைப்பதோடு, அவர் மூலமாகப் பொருளாதார நிலையும் உயரும். தொழிலில் இருப்பவர்களுக்கு தேவையற்ற வகையில் பொருளாதார விரயங்கள் ஏற்படலாம்.  தாயாருக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு குறைபாடுகள் ஏற்படலாம். உயர் படிப்புகள் படிப்பவர்களுக்கு வெற்றிகள் குவியும். வரவுக்கு ஏற்ப செலவுகள் அமையும். பிறர் மூலமான வருமானங்கள், காப்பீடு, சேமிப்பு நிறுவனங்கள் மூலமாக வருமானங்களை எதிர்பார்க்கலாம்.
      குரு தனது 7 ஆம் பார்வையால் இலாப பாவத்தைப் பார்வை செய்வதால்  தொழிலில் தங்கள் எதிர்பார்ப்பை விட அதிகமான இலாபங்கள் கிடைக்கும். குடும்பத்தில் மனைவி மக்களுடன் மகிழ்ச்சியான விதத்தில் காலம் கழியும். அரசு மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். அரசு மூலமான பணிகள் செய்பவர்களுக்கு ஆதாயங்கள் பெருகும். மூத்த சகோதரரின் பொருளாதாரம் மற்றும் பொது முன்னேற்றங்கள்  சிறப்படையும். குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரம் தொடர்பான வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
      குரு தனது 9 ஆம் பார்வையாக ஜன்ம இராசியை பார்வையிடுவதின் மூலம் சமூகத்தில் தங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தேவையட்ட அலைச்சல்கள் தீரும். கருத்து வேற்றுமைகள் மறைந்து பரஸ்பர ஒற்றுமை ஓங்கி, தம்பதியர் இடையே மகிழ்ச்சி நிலவும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தாமதம் இன்றி கிடைக்கும். சமுதாய நற்பணிகள், ஜனசேவை செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். தர்ம ஸ்தாபனங்கள், கோவில் டிரஸ்டிகள் ஆகியோருக்கு  தலைப் பதவிகள் தானே வந்து சேரும். பரம்பரைத் தொழில்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இலாபங்கள் அதிகரிக்கும்.

  கடக இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி சுவர்ண மூர்த்தியாக முதல் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு சொர்ண ஆபரணங்கள், அணிகலன்கள் சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும். பொது மற்றும் சிறப்பு பலன்களின்படி இவர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி சிறப்பான  பலனகளையே தரும். 95%
      ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.


No comments:

Post a Comment