Tuesday, October 9, 2012

குற்றமென்ன செய்தேன் குமரா ?







குற்றமென்ன செய்தேன் குமரா ?


குற்றமென்ன செய்தேன் குமர குருபரா ?
உற்றகுறை தீர்க்க உனக்கு மனமில்லையா ?

                             ( குற்றமென்ன )

வெற்றிவேலைப் பற்றி நிற்கும் வீரத்திருக் கரமெங்கே ?
சுற்றிவரும் பகை தீர்க்கத் துள்ளிவரும் வேலெங்கே ?
மற்றிரெண்டு,மங்கையர்கள் மலரன்ன முகமெங்கே ?
பற்றிட நின் திரு பதமலர் தா னெங்கே  ?

                              ( குற்றமென்ன )

கந்தனெனும் பேர் சொல்லக் கவலை தீருமே – முருகா
உந்தன் புகழ் பாட நெஞ்சிற் வுவகை சேருமே ;
எந்தன் குறை தீர்க்க யெந்தன் யெம்பெருமான் – நீ
வந்தெனக்கு அருள்புரிய வா வா வடிவேலா.

                              ( குற்றமென்ன )   

Thursday, October 4, 2012


காட்சி தந்தால் அழகு !




கருணை மழை பொழிந்து,
         கவலை யெலா மழித்து,
                  காட்சி தந்தா லழகு !
அருளை வேண்டி வரும்,
          அன்பர் னைவருக்கும்,
                      அருளை யள்ளி வழங்கு --- தாயே
                      அருளை யள்ளி வழங்கு.

பொருளை வேண்டவில்லை,
           பொன்னைத் தேடவில்லை,
                        புகழில் நாட்டமில்லையே.
இருளை நீக்கு மந்த,
            இனிய யெழில் விழியின்
                       ஒளியை மட்டுங் கூட்டு --- தாயே
                       ஒளியை மட்டுங் கூட்டு.

பொறுமை கொண்டு வுனைப்
            போற்றுகின்ற நெஞ்சிற்,
                       புகுதல் இனிய வொன்று,
சிறுமை நீங்கி யவர்
              சிறந்த வாழ்வு பெற,
                       செல்லும் வழியைக்காட்டு --- தாயே
                       செல்லும் வழியைக்காட்டு.

பெருமை யோடு நின்,
              பேர் சொல்லும் வேளையிற்
                            பிணி களேது யிங்கு,
கருமை கொண்ட விழி,
               காட்டும் நல்ல வழி,
                       காணக் கையை நீட்டு ---  தாயே
                       காணக் கையை நீட்டு.     

Tuesday, October 2, 2012





           கோவில் மணியோசையிலே !




கோவில் மணியோசையிலே மீனாட்சி ;
        கொஞ்சு மொழி கேட்குதம்மா மீனாட்சி !
கொஞ்சுங் கிளிப் பேச்சொலியும் மீனாட்சி ;
        குழல்போலே யொலிக்குதம்மா மீனாட்சி !
                                          ( கோவில்மணி )
காலமெலாம் காலடியிற் மீனாட்சி ;
        கருணைக்கே காத்திருந்தோம் மீனாட்சி !
பாவமெலாம் போக்கிடுவாய் மீனாட்சி ;
        பதம் பணிந்தோ மருள்வாயே மீனாட்சி !
ஞாலமெலாம் உன்புகழை மீனாட்சி ;
        யாம் பரப்ப,தயைபுரிவாய் மீனாட்சி !
நாலும் வரும் வாழ்க்கையிலே மீனாட்சி ;
        நல்லதையே நடத்திடுவாய் மீனாட்சி !
                                          ( கோவில்மணி )
அருளன்பு அத்தனையும் மீனாட்சி ;
        அளிப்பவளே,அம்மையே மீனாட்சி !
இருள் நீக்கும் மதிமுகமே மீனாட்சி ;
        இணையிலா,உன்முகமே மீனாட்சி !
பொருள்மிக்க,சுவைமிக்க மீனாட்சி ;
        புதுக்கவிதை யெழுதிடவே மீனாட்சி !
அருள்தந்து,கரங்கொண்டு மீனாட்சி ;
        ஆட்கொண்டு,அன்பு செய்க மீனாட்சி !
                                         ( கோவில்மணி )

    

Sunday, September 30, 2012

ராகவேந்திர னருள்வானோ ?







ராகவேந்திர னருள்வானோ ?


ராகவேந்திர னருள்வானோ ? – இன்ப
ராக மொன்று யிசைப்பானோ ? – சுக
போக வாழ்க்கை தருவானோ ? – துயர்
போகத் துணையிருப்பானோ ?
                          { ராகவேந்திர}
காலமெலாங் குருவை யெண்ணும் – மனக்
கோலமே,யெழில் வண்ணம் – மனம்
போலவே வாழும் வண்ணம் – மேன்
மேலு முயர்வது திண்ணம் .
                          {ராகவேந்திர}
நேருகின்ற துயர் நீங்க – யின்பஞ்
சேருகின்ற வழி காட்ட – குறை
கூறிநிற்ப வரைத் தேற்ற – மனம்
ஆறுகின்ற வரை யவர்க்கே
                          {ராகவேந்திர}

Saturday, September 29, 2012

“ முத்துக்குமரா ”






முத்துக்குமரா யெனக் கத்துங்கடல் !


முத்துக்குமரா யென்று கத்துங்கடலே – அந்த
சத்தங்கேட்டு,ஷண்முகனைக் கூவும் மயிலே !
செந்திலதிபா யென்று,சேவற்கூவுமே – உனைச்
சிந்திக்கின்ற பக்தருள்ளம் மெய்மறக்குமே !
                                    (முத்துக்குமரா)
தித்திக்கின்றதே  நாவும் தித்திக்கின்றதே – உனை
பக்தியோடு,சிரத்தையோடு பாடும்போதிலே ;
சக்தி வந்ததே புது சக்தி வந்ததே – நாளும்
ஷண்முகனின் பொன்னடியைத் தேடும்போதிலே .
                                    ( முத்துக்குமரா )
என்றுமின்பமே  நெஞ்சி லென்று மின்பமே – வொரு
கன்றினைப்போற்,தாயினருட் பாலருந்தவே ;
குன்றவில்லையே யின்பங் குன்றவில்லையே – அந்தக்
குன்றிலாடுங் குமரன் குரல் கேட்குஞ் செவிக்கே !
                                     ( முத்துக்குமரா )

Thursday, September 27, 2012





பனிநீக்கும் பகலவனே ராகவேந்திரா !


உனைக்காண ஓடிவந்தேன் ராகவேந்திரா  !
உன் னருளைத் தருவாயா ராகவேந்திரா !
                                  (உனைக்காண)
எனக்காக யின்ப விளக்கேற்றி வைப்பாய் – அதில்
அருளான நல்லெண்ணை யூற்றிவைப்பாய் ;
அணையாத விளக்காக ஆக்கி வைப்பாய் – வாழ்விற்
துணையாகி எனை உயரத் தூக்கி வைப்பாய் ;
                                  (உனைக்காண)
பணக்காரனாக வேண்டேன் ராகவேந்திரா – நாளும்
பணிகின்ற பாக்கியம் போதும் ராகவேந்திரா ;
நீளுலகை யாள வேண்டேன் ராகவேந்திரா – என்றும்
நெஞ்சில் நீ மட்டும் இருந்தாற் போதும் ராகவேந்திரா ;
                                  (உனைக்காண)
இனிக்கின்ற வாழ்க்கை வேண்டேன் ராகவேந்திரா – என்றும்
இன்னலிலா வாழ்வு போதும் ராகவேந்திரா ;
பனிநீக்கும் பகலவனே ராகவேந்திரா – நான்
இனியென்று முன்னடிமை ராகவேந்திரா ;
                                   (உனைக்காண)

Wednesday, September 26, 2012







அருள்வாளோ அன்னை மீனாட்சி !
அவனி யெலா மிங்கு அவளாட்சி ;
ஆவலாய்க் காணவந்தோம் அருட்காட்சி !
நல்லெழிற் காட்சி !    அவளே நமக்                                   
கென்றும் வழிகாட்டி – துணை
                                  (அருள்வாளோ)

பவனிவரும் தங்கத் தேரினிலே,
குவளைவிழி கொண்டு நேரினிலே;
உவகையுடன் கண்டு பாரினிலே,
அவலநிலை மாறிச் சீருறவே !    
                                  (அருளவாளோ)

நீதியில்லை,நாட்டில் நேர்மையில்லை,
வேதத்திலே யெவர்க்கு மார்வமில்லை;
சாதியின் பேர்சொல்லிப் பார்வையிலே,
வேதியரை வெறுக்கும் நிலைமாற !
                                   (அருள்வாளோ)
போதிய உணவின்றி,உடையுமின்றி,
நாதியின்றி கேட்க யாருமின்றி,
வீதியிலே மக்கள் சாகின்றார் ;
மேதினியி லிந்த நிலைமாற !
                                 (அருள்வாளோ)