Sunday, November 30, 2014

உங்களுடைய இராசிபலன் இன்று எப்படி ? 01/12/2014


உங்களுடைய இராசிபலன் இன்று  எப்படி ?
01/12/2014
மேஷம் -- உறவுகள் செயலால் வெறுப்பு ஏற்படும். கோபத்தால் வம்புகளை விலைக்கு வாங்காதிருப்பது நல்லது. குறிக்கோளின்றி அலைய நேரும்.   வெற்றிக்குக்  கடின உழைப்பு தேவை.
ரிஷபம் -- தனலாபம் அதிகரிக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  பிரிந்த குடும்பத்தோடு இணைந்து மகிழ்வீர்கள். எல்லா வகையிலும் மகிழ்ச்சி மிக்க நாள்.
மிதுனம் --- புனிதப் பயணங்கள், கோவில், குளம் என பக்தி மிக்க நாளாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். புகழ் ஓங்கும். அரசு ஆதரவு உண்டு.
கடகம் --- இன்பம் மிகுந்த நாள். மனைவி கருத்தரித்தல் போன்ற மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். சுகம், சந்தோஷம் ஆகியவை அதிகரிக்கும். தனலாபம், ஏற்படும்.
சிம்மம் இஷ்டத்துக்கு மாறாக எண்ணிய காரியங்கள் நடக்கும். வீண்வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. வாகன சுகம் குறையும். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடப்பது நல்லது.
கன்னி பல வழிகளிலும் பணம் வரும். அரசாங்கத்தால் இலாபம் உண்டாகும். அந்தஸ்து உயரும். பேச்சால் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். கல்வியில் சாதனை புரிவீர்கள்.
துலாம்வியாபாரத்தில் தனலாபம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவுவர்.  எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும் நாள். கல்வியில் வெற்றி உண்டு. பிரிந்தவர் கூடி பேரின்பங்காண்பர்.
விருச்சிகம்திறம்படச் செயல்பட்டாலும் அதிகாரிகளிடம் நற்பெயர் எடுக்க முடியாது. பயணத்தில் தடைகளும், தாமதமும் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
தனுசு –  தொழில், வியாபாரம் ஆகியவற்றில் எதிர்பார்த்த இலாபம் இருக்காது. அதன் காரணமாகக் குடும்பத்திலும் நிம்மதி குறையும். தாயின் உடல் நிலையில் அக்கறை தேவை.
மகரம் மனத்தெம்பும் மகிழ்ச்சியும் பெருகும் நாள். குழந்தைகள் மீது அளவற்ற பாசம் காட்டுவீர்கள். மனைவி காரியம் யாவினும் கைகொடுப்பாள். தன்னம்பிக்கை கூடும்.
கும்பம் இன்று தனலாபம், குடும்பத்தில் நிம்மதி ஆகியவை……………… குறையும். மனைவி, மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழிலில் முதலீடுகளை குறைப்பது நல்லது.
மீனம் தங்கள் சம்பாத்திய நிலை உயரும். மிகவும்  கடினமான            செயல்களைக் கூட எளிதாக, வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுதலைப் பெறுவீர்கள் 

No comments:

Post a Comment