Saturday, June 18, 2016

குருவின் கருணையால் காதல் கனிந்து மணம் முடித்தல்.




குருவின் கருணையால் காதல் கனிந்து மணம் முடித்தல்.

        நவீன உலகில் தற்கால இளைஞர்களும்யுவதிகளும் இளமையிலேயே காதலெனும் மாயையில் சிக்கித் தவிக்கின்றனர்ஆனால் சிலர் மட்டுமே தங்களின் பெற்றோரின் அனுமதி பெற்று திருமணம் செய்து கொள்ளுகின்றனர்.அப்படிப்பட்டவர்களின் ஜாதகங்களில் குறிப்பிட்ட பாவங்களின் மூலமாக குருவின் அருள் அமையும் போது அத்தகைய உயரிய குணம் அமைகிறது.அத்தகைய கிரக நிலை இக் காதல் குயில்கள் தங்கள் பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணத்தை செய்து கொள்ள உதவுகிறது.
    காதல் ஜோடிகளின் ஜாதகம் – 1



குரு





இராகு
ஜாதகி -இராசி
01 செப் 1989
9 – 25
பெங்களூரு



நவாம்சம்


கேது,சூரி சந்,செவ்


சனி()

லக்///
புத,சுக்




தசா இருப்பு – சுக்கிரன் – 2  – 0 மா – 10 நாள்
       இந்த ஜாதகிக்கு 11 செப்டம்பர் 2007 முதல் 11 செப்டம்பர் 2014 வரை செவ்வாய் திசை நடந்ததுஅதில்சந்திர புக்தி 1 பிப்ரவரி 2014 முதல் 11செப்டம்பர் 2014 வரையாகும்செவ்வாய்திருமணத்திற்குத் தொடர்புடைய பாவகங்களானதனகளத்திர பாவங்களுக்கு அதிபதியாகிஇலாபத்தில் அமர்ந்திருப்பதுஇந்த ஜாதகிக்கு செவ்வாய் (11 செப்டம்பர் 2014) திசைக்குள்,திருமணம் உறுதியாகிவிடும் என்பதைக் குறிகாட்டுகிறதுவக்கிர நிலையிலுள்ளஆம் அதிபதி சனிமுந்தைய பாவத்திலிருந்து களத்திர ஸ்தானாதிபதி செவ்வாயை பார்ப்பதுதிருமணத்திற்கு முன்னரே இப்பெண் காதலில் விழுவாள் என்பதைக் காட்டுகிறதுதிருமணம் முடிவாகும் போது இந்த ஜாதகிக்கு செவ்வாய்தசாசந்திர புக்தி நடப்பில் இருந்ததுசந்திரன்சுக்கிரனின் ( காதல்,காமத்திற்கு உரிய இயற்கை காரகன் ) சாரத்தில் இருந்து அவனும் இலாப பாவத்தில் இருக்கிறான்சுக்கிரன்உச்ச புதனுடன் இணைந்து வியபாவத்தில் இருப்பது நீசபங்கமாகிறது.
       தேவகுரு பாக்கிய பாவம் அமர்ந்து நல்ல நிலையில்தனுசவில் உள்ளஆம் அதிபதி சனியைப் பாரக்கிறார்சந்திரா இலக்னத்தில் இருந்து பார்க்கும் போதுகுரு 5 ஆம் அதிபதியாகிகோசாரத்தில் 11 ஆம் இடத்தில் இருந்து, 7ஆம் அதிபதி சனியைப் பார்க்கிறார்இந்த குருவின் உந்துதல் காரணமாக காதல் விவகாரம் இந்தப் பெண்ணுக்கு உண்டு என்பதும்அவள் நிச்சியமாக பெற்றோர்களின் சம்மத்த்தைக் கோருவாள் என்பதும்  உறுதியாகிறது.
       குறிப்பிட்ட பாவங்களோடு எங்ஙனம் இவள் காதலனின் ஜாதகத்தில் குருவின் தாக்கம் இருக்கிறது என்பதை மேலோட்டமாக ஆராய்வோம்.
சூரிகுரு
இராகு
செவ்


புத
ஆணின் ஜாதகம்இராசி
19 மார்ச் 1987
19 – 40
மங்களூர்

சுக்


சனி
சந்
லக்///
கேது

       களத்திராதிபதி சுயவீட்டில் அமர்ந்துவிருச்சிகத்திலுள்ள 5 ஆம் அதிபதி சனியைப் பார்ப்பதும்சந்திரா இலக்னத்தில் இருந்து 7 ஆம் அதிபதி செவ்வாய், 5 ஆம் அதிபதி சனியைப் பார்ப்பதும் காதல் வாழ்க்கையை நிச்சியப்படுத்துகிறது.
காதல் ஜோடிகளின் ஜாதகம் – 2
       கீழ் கண்ட ஜாதகத்துக்கு உரிய பெண் 1997 வாக்கில் இராகு தசாசுக்கிர புக்தியில் ஓர் இளைஞனோடு காதல் கடலில் மூழ்கினாள்.  சுக்கிர புக்தி ஆகஸ்டு 2000 வரை நடந்தது.  இராகுதனுசிலுள்ள சுக்கிரனுக்கு சிறப்பான திரிகோணத்தில் 5 ஆம் அதிபதியான சனியோடு இணைந்து உள்ளதுபாக்கிய,சுப பாவத்துக்கு அதிபதியான சுக்கிரன் தனது சுய சாரத்தில் அமர்ந்திருப்பது,காதல் கடலில் நீந்தியதற்கு சரியான காரணம் என்றால் மிகையாகாது.







லக்///
கேது

சூரி,புத
கேது
பெண் ஜாதகம்
16 பிப்ரவரி1979
   08-36 இரவு
கல்கத்தா
குரு


நவாம்சம்
சந்
செவ்
சனி
இராகு


சுக்


லக்///
சந்

புத
சூரி,
இராகு

செவ்,சுக்
குரு,சனி

       இதை மேலும் உறுதி செய்யும்படியாகநவாம்ச நிலைகளைப் பார்க்கும் போதுஇலக்னத்துக்கு (இராசியில்) 7 ஆம் அதிபதியான குரு மற்றும் 5 ஆம்(இராசியில்)  அதிபதியான சனி ஆகியோர் நவாம்ச இலக்னமான ரிஷபத்துக்கு 5இல் இணைந்து இருக்கிறார்கள்பிப்ரவரி 2001 இல் இப்பெண்ணின் பெற்றோர்களின் முழு சம்மதத்தோடு திருமணம் நடந்ததுஇராசியில் உச்ச குரு கடகத்தில் இருந்து 5 மற்றும் 7 ஆம் இடங்களைப் பார்வை இடுவதன் மூலமாகக் கருணை பொழிகிறார்குருவின் தாக்கத்தால்பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல்பெற்றோர்களின் சம்மதத்தோடு காதல் தம்பதிகளின் திருமணம் நடந்தேறியதற்கான மற்றுமொரு உதாரண ஜாதகம் இது எனலாம்
ஆணின் ஜாதகம் –
சந்
லக்///
சனி()

செவ்
ஆண் ஜாதகம்
இராசி
கேது
இராகு


குரு,சுக்
சூரி,புத


சந்திர இராசியில் இருந்து பாக்கியஸ்தானத்தில் உள்ள குரு,  5 ஆம் வீடு மற்றும் 5 ஆம் அதிபதியான சந்திரனைப் பார்க்கிறார்இலக்னத்துக்கு 11 ஆம் அதிபதி சனி 2 இல் இருந்துகுருசுக்கிரனைப் பார்வையிடுகிறார்இவர் ஜாதகத்திலும் தேவகுருவின் கருணை தென்படுவதைக் காணலாம்.
காதலனின் ஜாதகம் – 3.
       இந்த ஜாதகர் தன் அத்தையின் மகளைக் காதலித்தார்இவரது ஜாதகத்தில் 1/7 அச்சில் சந்திர மங்கள யோகம் அமையப்பெற்றுள்ளது.செவ்வாய் உச்சம் பெற்று இலக்னத்திலும், 7 ஆம் வீட்டில் சந்திரன் தன் ஆட்சி வீட்டில் உள்ளார். 5 மற்றும் 10 க்கு அதிபதியான உச்ச சுக்கிரன்குருவால் பார்க்கப்படுகிறார்.
       நவாம்ச இலக்னத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று, 5 ஆம் அதிபதி,சந்திரனால் பார்க்கப்படுகிறார்இது காதல் விவகாரத்தை உறுதிப்படுத்துகிறது.சந்திரமங்கள யோகம் ஏற்படும் இடத்துடைய காரகத்துவத்தை அதிகரிக்கிறது.அதன் காரணமாக ஜாதகர் பாரம்பரிய கோட்பாடுகளை உடைத்து திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு அதிக காதல் வயப்பட்டிருந்தார்.       செவ்வாய் பாதகாதிபதியாகி 7 ஆம் அதிபதி சந்திரனைப் பார்க்கிறார்இதுவும் உணர்ச்சிகளைத் தூண்டி காதலை அதிகரித்தது.
          
சுக்


சனி,ராகு


லக்//சுக்

செவ்,ராகு

சூரி,புத

இராசி
ஜாதகம்-3-ஆண்
24 –பிப்-1945.     05-45 - அதிகாலை
பெங்களூரு
சந்

நவாம்சம்

லக்//செவ்

சனி()
குரு()
சூரி

கேது


குரு
புத
கேது

சந்
      சனி தசா இருப்பு – 12  11 மா – 11 நாள்.
       இராசியில்பாக்கிய ஸ்தானத்தில் இருந்து குரு, 5 ஆம் அதிபதி சுக்கிரனையும்உச்சமடைந்து இலக்னத்தில் அமர்ந்துள்ள 11 ஆம் அதிபதி செவ்வாயையும் பார்க்கிறார்நவாம்சத்தில் 5 ஆம் இடத்தையும், 7 ஆம் இடத்தில் இருக்கும் 5 ஆம் அதிபதியையும் பார்க்கிறார்இவரின் காதலுக்கு சிறிது எதிர்ப்பு இருந்ததுகேது மகா தசா / சுக்கிர புக்தியில் இருவரின் தந்தையைத் தவிர மற்ற குடும்பப் பெரியோர்களின் அனுமதியோடு திருமணம் நடந்தேறியது.

       முடிவாககுருவின் முழு ஒத்துழைப்பால் மட்டுமே காதலர்கள் தங்கள் பெற்றோர்களின் முழு சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடியும் என்பதை மேற்கண்ட ஜாதகங்கள் மூலமாக அறிந்தோம் அல்லவா ? அதன் தாக்கத்தின் மூலமாகவே காதல் பாரம்ரியத் திருமணமாக உருவெடுக்கிறது எனலாம்.

யோகிகளின் ஜாதகங்களில் கிரகங்களின் தாக்கங்கள்.




யோகிகளின் ஜாதகங்களில் கிரகங்களின் தாக்கங்கள்.

       இந்தியாவின் பாரம்பரிய பக்தி மார்க்க வழிமுறைகளையும்அதன் மதிப்பையும் மேலைநாட்டு மக்கள் மத்தியில் கொண்டு சென்றவங்கம் தந்த சிங்கம் நரேந்திரராக இருந்த சுவாமி விவேகானந்தா மற்றும் முகுந்த லால் கோஷாக இருந்த சுவாமி யோகானந்தா ஆகியோர் ஆகும். 1893 ஆண்டு செப்டம்பர் திங்கள்சிகாகோவில் பேசிய விவேகானந்தர் பார்வையாளர்களின் ஆன்மாவை உலுக்கும் படியாகவும்பேச்சைக் கேட்டவர்கள் வாய்களில் வார்த்தைகள் வராவண்ணமும் அற்புதமாக இந்துமத தத்துவங்களை எடுத்து உரைத்தார்.
       இது நடந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு 1920 அக்டோபர் திங்கள் போஸ்டன் காங்கிரஸின் மதச் சொற்பொழிவுப் பேரவையில் தனது கன்னிப் பேச்சைத் துவக்கிய யோகானந்தா, 1925 வரை அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களில் தனது மதப் பிரச்சார சொற்பொழிவுகளை நிகழ்த்திலாஸ் ஏஞ்சல்ஸில்கடவுளை உணரும் விஞ்ஞான முறையிலான கிரியா யோகாவுக்கான தலைமையகத்தை நிறுவினார்.
       உலக துன்பங்களில் இருந்து விடுபட்டு எப்போதும் மக்கள் சந்தோஷத்தை அனுபவிக்கும் வண்ணம்இந்து மதத்தின் நற்போதனைகளை,பக்தி மார்க்கத்தை உலகெங்கும் பரப்புவதற்காக கடவுளால் படைக்கப்பட்ட இவ்விரு புண்ணிய ஆத்மாக்கள்எங்ஙனம் தங்களுக்கு கடவுளால் அளிக்கப்பட்ட கடமைகளை முடிக்க கிரகங்களால் ஊக்குவிக்கப்பட்டனர் என்பதை அவர்களின் ஜாதகங்களின் மூலமாக அலசுவோமா?
       சுவாமி விவேகானந்தர் 12 – 01 – 1863 அன்று காலை 6 – 33 க்கு கொல்கட்டாவில்  பிறந்தார்.  
     

செவ்
கேது


சுக்
புத
சனி
செவ்
சந்


இராசி

இராகு

நவாம்சம்

புத
சுக்


கேது
சூரி
லக்//
இராகு
குரு
சனி
சந்
சூரி
குரு
லக்//


தசா இருப்பு – சந்திர தசா -04  04 மா 29 நாட்கள்.
       தர்ம வீடும்நெருப்புத் தத்துவ இராசியும்காலபுருஷனுக்கு தெய்வீக வீடும்இராசி மண்டலத்தில் இருந்துமதிப்பும்கௌரவும் கொடுக்கக் கூடிய பாக்கிய பாவத்துக்கு அதிபதியானவர்கோத்தமம் ஆன சூரியன் இணைந்துள்ள,தனுசு இராசியை இலக்னமாகக் கொண்டு சுவாமி விவேகானந்தர் பிறந்தார்.  தர்ம திரிகோணத்தின் அதிபதிகளான குருஅவரின் பார்வை பெறும் செவ்வாய், 9 ஆம் அதிபதி சூரியன் ஆகியோரின் தாக்கத்தால் அனைவரையும் கவரக்கூடிய அவரது உடல் அமைப்பு மற்றும் பக்திஞானம் மிக்க தன்மை ஆகியவை அமையப்பெற்றார்.
      அதேபோல் சந்திரா இலக்னத்தைப் பொருத்தவரைதிரிகொணாதிபதிகள் - 5 ஆம் அதிபதி சனியும்புதனும் பரிவர்த்தனை ஆகி, 9 ஆம் அதிபதி சுக்கிரனும்இல் இணைந்துள்ளார்இதன் காரணமாகவும் அவரால் பக்திமார்க்கத்தில் மிளிர முடிந்ததுபாவத்தைப் பொருத்தவரை குரு கர்ம பாவத்தில் அமர்ந்துசக்தி தரும் செவ்வாயால் பாரக்கப்படுவதால் சிதறாத தெய்வீக மனதோடு பக்தி மார்க்கத்தை இடைவிடாத தனது பிரசங்கங்கள் மூலமாக உலகெங்கும் பரப்பும் வல்லமை பெற்றார் எனலாம். 1893 மே மாதத்தில் நடந்த குரு தசா குரு புக்தியில் அவர் தனது ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டது நமக்கு ஆச்சர்யத்தை அளிக்கவில்லைசந்திரா இலக்னத்துக்கு வாக்கு ஸ்தானத்தில் குரு இருக்கவும்இலக்னத்துக்கு வாக்கு ஸ்தானத்தில் புதன் அமர்ந்துஅதன் அதிபதி சனியுடன் பரிவர்த்தனை பெறுவது அவரை ஓர் ஈடுஇணையற்ற கம்பீரமான குரல் வளமுடைய ஆன்மிக சொற்பொழிவாளர் ஆக்கியதுகுரு புக்தியில் சிகாகோ மற்றும் அமெரிக்காவின் பல்வேறு இடங்கள்இலண்டன் என  இந்திய வேதாந்த தத்துவங்களையும்பக்தி மார்க்கத்தைப் பற்றிய சித்தாந்தங்களையும் சொற்பொழிவாற்றி 1987 இல் தாய்நாட்டுக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கதாகும்மீண்டும் ஜூன்1899 முதல் டிசம்பர் 1900 வரை அதே குரு தசா கேதுசுக்கிர புக்திகளில் ஐரோப்பாஅமெரிக்கா ஆகிய நாடுகளில் தனது தெய்வீக பரப்புரைகளை அம் மக்கள் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொண்டார் என்றால் அது மிகையாகாது. 12 ஆம் அதிபதி செவ்வாயின் நட்சத்திரத்தில் கேது இருப்பதும்பாக்கியாதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் சுக்கிரன் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
       சுவாமி விவேகானந்தர் தனது ஆன்மிக குருவும் வழிகாட்டியுமான ஶ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் ஜாதகத்தோடு எங்ஙனம் குரு – சிஷ்ய பரம்பரையாக ஒத்துவருகிறது என்பதை ஆராய்வோம்குருவின் இலக்னம் கும்பமாகி, 5 ஆம் இடமான மிதுனத்தில் குரு அமர்ந்துசிஷ்யரின் ஜாதகத்தில் அதற்குத் திரிகோண ஸ்தானமான துலாத்தில் குரு அமர்ந்துள்ளதுகுருசிஷ்ய இணைவுக்கான காரணமாயிற்றுமேலும்மறைபொருள் தத்துவங்களுக்கு உரிய காரகரான இராகுவானவர் இருவர் ஜாதகத்திலும் விருச்சிகத்தில் இருந்தது அவர்களின் தெய்வீக தொடர்புடைய இணைவுக்குக் காரணமானது.
       தனது மதிப்பு மிக்க குருவை சந்திக்க விவேகானந்தருக்கு 1881 ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த இராகு தசாசனி புக்தி உந்துதல் அளித்ததுஆனால்,தொடர்ந்து குருவுக்கு சேவை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதுஏனெனில்,  1886 ஆம் ஆண்டு சிஷ்யரின் இராகு தசாசுக்கிர புக்தியில் அவரது குரு தனது தெய்வீகப் பணிகளை ஆற்றிட சென்று விட்டார் என்பதேயாம்இவரும் இந்தியாவின் பக்திமிக்க பாரம்பரியத்தை மேலும் அறிந்து கொள்ள சந்திர புக்தியில் இந்தியா முழுக்க தனது ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டார்.ஞானகாரகன் குரு இலக்னத்துக்கு 3 ஆம் இடத்தைப் பார்க்கவும்அதன் அதிபதியான கர்மகாரகன்தத்துவங்களுக்கும் காரகனான சனி தசம கேந்திரத்தில் அமர்ந்ததால் அவரால் தனது ஆன்மிக தத்துவங்களை ஞான யோகாபக்தி யோகாகர்ம யோகா மற்றும் இராஜ யோகா என நான்கு பகுதிகளாக வெளிக் கொணர முடிந்ததுநல்லவர்களை இறைவன் நீண்ட காலம் வாழ விடுவதில்லைகுரு மகாதிசைசுக்கிர புக்தியில், 7 ஆம் அதிபதி புதனுடன் இணைந்து சுக்கிரன் 2 ஆம் இடத்தில் அமர்ந்ததாலும்சந்திர இலக்னத்துக்கு 7ஆம் அதிபதி குரு 2 இல் மாரகராக மாறியதன் காரணமாகவும்,  இத்தகைய பெருமைகள் பல பெற்ற சுவாமி விவேகானந்தரின் ஆயுள் 39 வது வயதிலேயே முடிவடைந்தது.
       இனி சுவாமி பரமஹம்ச யோகானந்தரின் ஜாதகத்தைப் பார்ப்போம்.இவர்    05 – 01 – 1893 அன்று காலை 08 – 38 க்கு உத்திரப் பிரதேசத்திலுள்ள கோரக்பூரில் பிறந்தார்.




குரு,
செவ்
இராகு




புத
சந்
லக்//


இராசி

குரு
சுக்

நவாம்சம்
சனி
இராகு


சந்
லக்//
கேது

சூரி
புத
சுக்
கேது
சனி


செவ்
சூரி

தசா இருப்பு – கேது – 5  – 2 மா – 28 நாட்கள்
       சுவாமி பரமஹம்ச யோகானந்தர் நெருப்பு இராசியான சிம்மத்தை இலக்னமாகக் கொண்டுஅதன் அதிபதியான சூரியன் மற்றொரு நெருப்பு இராசியும்திரிகோணமுமான தனுசுவில் இருப்பதுஇவர் உலக மக்களிடையே யோகா மற்றும் தெய்வீகச் செய்திகளைக் கொண்டு செல்லப் பிறந்தவர் என்பதை உறுதி செய்கிறதுதர்ம திரிகோணங்களின் அதிபதிகளான சூரியன்,குருசெவ்வாய் ஒன்றுக்கொன்று கேந்திரத்தில் இருப்பது இவரை மிகவும் சிரத்தையுடனும்அர்ப்பணிப்பு உணர்வுடனும் பக்தி மார்க்கத்தில் செல்லத் தூண்டுதலாக இருந்தது . 10 ஆம் அதிபதியான சுக்கிரன் 4 ஆம் இடத்தில் அமர்ந்துகுருவால் பார்க்கப்படுவதால் தெய்வீகத் தன்மையுடன் கூடிய பக்தி மார்க்கத்தை மக்கள் கற்பதற்கான பெரிய மையங்களை அமைக்கும் சீரிய பணிகளில் ஈடுபடவைத்ததுமக்களைக் கவர்ந்திழுக்கும் சொற்பொழிவுத்திறன் 2ஆம் இடத்தைப் பார்க்கும் குரு மற்றும் செவ்வாயின் அருளாலும், 2 ஆம் அதிபதி புதன் 5 இல் இருப்பதாலும் சிறப்பாக அமைந்தது.
       சுவாமி விவேகானந்தர் 1893 இல் சிகாகோவில் சொற்பொழிவாற்றச் சென்றபோதுஅதே வருடமே யோகானந்தா பிறந்தார் என்பதும்அவரைப் போலவே இவரும் 1920 இல் அமெரிக்காவிலுள்ள போஸ்டனில் சொற்பொழிவாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கதுஎன்னே ஒற்றுமை ? சூரிய தசைகுரு புக்தியில் அவருக்கு இந்த ஆன்மிகப் பயணங்கள் ஏற்பட்டதுசந்திர திசையில் பாக்கிய பாவத்திலுள்ள இராகு புக்தியில்தான் 1925 இல் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில்யோகா மற்றும் ஆன்மிகத் தலைமையகத்தை நிறுவினார். 1925 முதல் 1935 வரை உலகின் பல பாகங்களுக்குச் சென்றுதியானம் மற்றும் க்ரியா யோகம் தொடர்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1935 இல் செவ்வாய் திசையில் ஐரோப்பா மற்றும் இந்தியாவுக்கு வந்தார்.
       யோகானந்தா தனது ஆன்மிக குருவான சுவாமி யுக்தேஷ்வர் கிரி அவர்களை 1910 ஆம் ஆண்டு தனது சுக்கிர திசை , குரு புக்தியில் ஆசீர்வதிக்கப்பட்டு ஶ்ரீராம்பூர் என்ற இடத்தில் சந்திக்கும் பேறு பெற்றார்குரு –சிஷ்யர் இருவருக்கும் உண்டான பந்தத்தை இருவர் ஜாதகத்திலும் இடம் பெற்ற மேஷம் – துலாத்திலுள்ள நிழல் கிரகங்களின் அச்சும்சூரியன் திரிகோணமாக நெருப்பு இராசிகளில் அமர்ந்ததும் உணர்த்துகிறது. ‘முகுந்த் லால் கோஷாகஇருந்த இவரை இவரது குருவே யோகானந்தாவாக பெயர் சூட்டினார்.  1936 இல் சுவாமி யுக்தேஷ்வர் முக்தியடையும் முன் இந்தியாவின் மிக உயரிய ஆன்மிகப் பட்டமான ‘பரமஹம்ச’ எனும் பட்டத்தை வழங்கி மகிழ்ந்தார்.
       பாக்கிய பாவத்திலுள்ள இராகு மேல்நாட்டில் பல இடங்களில் விஞ்ஞான முறையினாலான தியானம் மற்றும் பக்தி மார்க்கத்துக்கான மையங்களை அமைக்கத் தூண்டுதலானதுபாக்கியாதிபதி செவ்வாய் தனது திசையில்,அட்டமாதிபதி குருவுடன் இணைந்துசனியின் பார்வை பெற்றதால் யோகி மீண்டும் இங்கிலாந்துஅமெரிக்கா என தனது பிரசாரத்தைத் துவக்கினார். 1946இல் தனது சுயசரிதையை எழுதியதின் மூலமாக தனது தெய்வீக அனுபவங்களை உலகறியச் செய்தார்.  1952 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் நாள்,மறைபொருளை உணர்த்துகிற இராகு – கேது தசா புக்திகளில்லாஸ் ஏஞ்சல்ஸில்மகாசமாதி அடைந்தார்.
        இவ்விரு புண்ணிய ஆத்மாக்களின் ஜாதகங்களில் கிரகங்கள் ஏற்படுத்திய தெய்வீகத் தன்மைகளை உணர்ந்தோம்நமது பாரதத்தின் தெய்வீகத் தன்மைகளை உலகறியச் செய்த தேவதூதர்களாகிய யோகிகளை எப்போதும் நம் நினைவிற்கொள்வோம்.