Wednesday, May 7, 2014

செவ்வாய் தோஷமும் விதி விலக்குகளும்.

தோஷசாம்யம்

     ஓரு ஜாதகத்தில் இலக்கினம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்களிலிருந்து 12, 2, 4, 7 இலக்கினம் மற்றும் 8 ஆகிய பாவங்களில் இராகு, சூரியன், சனி மற்றும் செவ்வாய் இவர்களில் ஒருவரோ, ஒன்றுக்கும் மேலானவர்களோ இருக்க மணவாழ்வில் தோஷத்தை உண்டாக்கும். இதற்குச் சமமான தோஷம் ஆணின் ஜாதகத்தில் இருப்பது அவசியம். அப்போதுதான் அந்த தோஷம் நிவர்த்தியாகும். இதுவே தோஷசாம்யம் எனப்படுகிறது.

    மேற்சொன்ன நான்கு கிரகங்களில் மிகவும் குறைந்த தோஷமுள்ளது இராகு ஆகும். அதைவிட இரு மடங்கு தோஷமுள்ளது சூரியன், மூன்று மடங்கு தோஷமுள்ளது சனி, இராகுவைப் போல் 4 மடங்கு தோஷமுள்ளது செவ்வாய். அதே போல் அவையிருக்கும் ஸ்தானங்களுக்கும் தோஷமதிப்பீடு உண்டு. ஒரு பாபக்கிரகம் 12 ஆம் இடத்திலிருக்க ஒரு பங்கு தோஷமென்றால், 2 ல் மூன்று பங்கு, இலக்னத்தில் 5 பங்கு மற்றும் அட்டமத்தில் 6 பங்கு தோஷமெனக் கணக்கிட வேண்டும்.

    அடுத்து, இப்படி ஒவ்வொரு கிரகத்திற்கும், அவை நிற்கும் வீட்டிற்கும் ஏற்படும் தோஷத்தைக் கணக்கிடவேண்டும். தோஷம் செய்யும் கிரகங்கள் இருக்கும் இடத்திற்குத் தக்கவாறு தோஷங்களை ஈடு செய்து சமன் படுத்த வேண்டும். நிகர தோஷம் கணக்கிட்டு ஆண், பெண் ஜாதகங்களில் ஏற்படும் தோஷ அளவை நிர்ணயித்து தோஷங்கள் சமமானதாக உள்ளதா ? – எனப் பார்க்கவேண்டும். ஆண் ஜாதகத்தில் தோஷ அளவு அதிகம் இருந்தால் பரவாயில்லை.

    எந்தவொரு தோஷம் தரும் பாபக்கிரகமும், இந்த 12, 2, 4, 7, 1 மற்றும் 8 ஆம் இடங்களில் நிற்க, அந்த வீடு அக் கிரகத்தின் உச்சவீடானால், முழுதோஷமும் நீங்கும். மூலத்திரிகோணமெனில் முக்கால் தோஷம், சுயவீடானால் - ½, அதிக நட்பு – 3/8, நட்பு - ¼, சமம் எனில் அரைக்கால் பங்கு தோஷம், பகை -  1/16 பாகம் இவற்றிலிருந்து குறைக்கப்படவேண்டும். வக்ர கிரகத்திற்கு முழுதோஷமும் குறையும். நீச கிரகங்கட்கு முழுதோஷமும் உண்டு. இராகுவுக்கு, இடங்கொடுத்தவன் தோஷநிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே தோஷசாம்யம் செய்ய வேண்டிய முறையாகும்.

    தோஷசாம்யம் சரியில்லையென்றால், தம்பதிகளுக்கு உடல் நலக் குறைவு, சந்தோஷமின்மை, ஒற்றுமையின்மை மற்றும்  கஷ்டங்களை அனுபவிக்கும் நிலை ஏற்படும்.

    இவ்வாறாக இலக்கினம், சந்திரன்  மற்றும் சுக்கிரனுக்கு, எங்ஙனம்  இராகு, சூரியன், சனி, செவ்வாய் ஆகியவை தோஷம் தருகின்றன என்பதையும் கணக்கிட்டு, பெண் ஜாதகத்தில் இதற்கு நிகரான அல்லது சற்று குறைவுள்ள தோஷமாகவோ இருந்தால் தோஷசாம்யம் சமமாகிவிவிடும். மேலும் பெண் ஜாதகத்தில் 12, 2, 4 ஆகிய இடங்களிலுள்ள கிரகங்களின் தோஷங்களை, ஆண் ஜாதகத்தில் 12, 2, அல்லது 4 ல் உள்ள கிரகங்களின் நிலை சமப்படுத்திவிடும். இலக்னத்தில் உள்ள கிரக தோஷத்தை, ஆணின் எட்டாமிட கிரக தோஷம் சமன் செய்யாது. ஆனால் ஆணின் எட்டாமிட தோஷத்தை, பெண்ணின் எட்டாமிட தோஷம் சமன் செய்துவிடும்.

    இவ்வாறு சமமாகாத வீட்டின் காரகங்கள் பாதிக்கப்படும்.  உதாரணமாக 2 ஆம் வீடு சமமாகவில்லையெனில்மணவாழ்வில் சுகம் இருக்காது. சொத்துக்களும் நிலைத்திருக்காது. இலக்ன தோஷம் சமமாகவில்லையெனில் தாம்பத்யத்தில் உடல் மற்றும் மனோநிலை பாதிப்படையும். ஏழாமிட தோஷம் சமமாகாவிடில் தாம்பத்திய உறவில் திருப்தியற்ற நிலை ஏற்படும். எட்டாமிட சமமற்ற தோஷம் அகால மரணம் தரும். 12 ஆம் இடம் கஷ்ட, நஷ்டங்கள், ஏக்கம் மற்றும் விருப்பம் நிறைவேறாமை ஆகியவை ஏற்படும்.

    எனவே, பொருத்தம் பார்க்கும் போது தோஷசாம்யத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று சாத்திரங்கள் வலியுறுத்துகின்றன.
     


செவ்வாய் தோஷமும் விதி விலக்குகளும்.

தனே வ்யயே ச பாதானே
 ஜாமித்ரே ச அஷ்டமே குஜக
 ஸ்திரீ ணாம் பர்த்ரு விநாசாய
 பும்ஸாம் பார்யா விநஸ்யதி

    மேற்கண்ட ஸ்லோகத்தில் குறிப்பிட்டுள்ளபடி 2, 12, 4, 7, 1 மற்றும் 8 ஆகிய பாவங்களில் ஒன்றில் ஒரு ஆண் ஜாதகத்தில் செவ்வாய் இருக்க மனைவி இறப்பாள் என்றும், பெண் ஜாதகத்தில் இருந்தால் அவள் விதவையாவாள் என்றும் மொட்டையாகச் சொல்வது அர்த்தமற்ற தாகும். ஏனெனில் இதில் விதிவிலக்குகளும் உண்டு. மேலும் விதிவிலக்குகளை மறந்து, இவ்விடங்களில் செவ்வாய் இருப்பதாகக் கணக்கிட்டால் உலகில் சரிபாதிப் பேருக்கு செவ்வாய் தோஷம் உடையவர்களாகி விடுவரல்லவா ? முன்னமே சொன்னபடி, இராகு, சூரியன், சனி இவர்களைக் காட்டிலும் செவ்வாய்க்கே அதிக தோஷம் உண்டுமற்ற கிரக தோஷங்களை விட்டுவிட்டு செவ்வாய் தோஷத்தை மட்டும் தோஷமெனப் பார்ப்பது ஆபத்தானதாகும்.

ரவீஇந்து க்ஷேத்ர ஜாதானாம் குஜதோஷம் ந வித்யதே
      ஸ்வோச்ச, மித்ரல , ஜாதானாம் தத்தோஷம் ந பாவேத் கில

    சிம்மம்,(சூரி-நட்பு) மகரம், (செவ்-உச்சம்) கடகம்(நீசம்) மேஷம்(ஆட்சி) விருச்சிகம்(ஆட்சி) தனுசு,(நட்பு) மீனம் ஆகிய 7 இலக்னங்களில் பிறந்தவர்களுக்குச் செவ்வாய் இவற்றில் எங்கிருந்தாலும் தோஷமில்லை. மற்றும் இந்த ஏழு இடங்களில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர்களுக்கு இத் தோஷம் கொஞ்சமுமில்லை.

இரண்டாம் இடத்தில் செவ்வாய்

 ˝ துவிதீயே குஜதோஷஸ்யாத் மேஷ வ்ருச்சிகயோர் வினா
              துவிதீயாயி பௌம தோஷஸ்து யுக்ம கன்யகோயோர் வினா.

    செவ்வாய் மற்றும் புதனின் சுய வீடுகளான மேஷ, விருச்சிக, மிதுன மற்றும் கன்னி இராசிகள் லக்/-சந்/-சுக்னிலிருந்து 2 ஆம் இடமாக அதில் செவ்வாய் இடம்பெற தோஷமில்லை.

4 ஆம் இடத்தில் செவ்வாய்

சதுர்த்தே குஜதோஷஸ்யாத் துலா, விருஷபயோர் வினா
              சதுர்தேயி பௌம தோஷஸ்து மேஷ விருச்சிகயோர் வினா

    அதேபோல், செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சுய வீடுகளான மேஷ,விருச்சிக ரிஷப மற்றும் துலா லக்/-சந்/-சுக்னிலிருந்து 4 ஆம் இடமாக அதில் செவ்வாய் இடம்பெற தோஷமில்லை.

              சாதுஷ் சப்தம கோ பௌம     
              மேஷ கர்கடி நக்ரஹ
              யதா ரஸ்ம் சுபா; ப்ரோக்தா
              குஜத் தோஷ ந வித்யதே.


செவ்





//, சந்/
சுக்



//, சந்/
சுக்


    மேஷத்தில் செவ்வாய் இருந்து, அதுவே, இலக்னத்திலிருந்தோ அல்லது சந்திரனிலிருந்தோ அல்லது சுக்கிரனிலிருந்தோ,  4 ஆம் வீடாகவும் அல்லது 7 ஆம் வீடாகவும் ஆக, இலக்னம் அல்லது சந்திரன் அல்லது சுக்கிரன் இருக்கும் இராசி, மகரமாகவோ அல்லது துலாமாகவோ கொண்டு பிறந்த ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் தனது சுயவீடான மேஷ, விருச்சிகத்திலும், உச்ச, நீச வீடுகளான மகர, கடகத்திலும் இருந்து அதுவே, இலக்/ சந்/ சுக்இவற்றிலிருந்து 4 அல்லது 8 ஆம் வீடாக தோஷம் விதிவிலக்கு ஆகிறது. சிம்ம, ரிஷப இராசிகளில் பிறந்த ஜாதகருக்கு, விருச்சிகத்திலுள்ள செவ்வாயும் பாதிப்புத் தருவதில்லை.

    செவ்வாய் தோஷத்தைக் இலக்னத்திலிருந்துசந்திரனிலிருந்துசுக்கிரனிலிருந்து கணக்கிடும் போது, தோஷமானது இலக்னத்தைவிட, சந்திரனிலிருந்தும், அதைவிடச் சுக்கிரனிலிருந்தும் ஏற்படும் தோஷமே மிக அதிகமாகக் கருதப்படுகிறது.

     மற்ற இடங்களிலுள்ள செவ்வாயைவிட, அட்டமத்திலுள்ள செவ்வாய் அவ்வளவு மோசமானதல்ல எனக் கருதப்படுகிறது. அது திருமணத்தை நிச்சியிப்பதில் பிரச்சனைகளையும், கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்தி அதன் காரணமாக தாமதத்தையும் ஏற்படுத்துகிறது. வரும் துணை வாய்த்துடுக்கு அதிகம் உள்ளவராகவும், வீண் செலவு அதிகம் செய்பவராகவும் இருப்பார்.

     சில அறிஞர்கள் பெண் ஜாதகத்தில் 2 மற்றும் 7 இல் உள்ள செவ்வாய்  தோஷத்திற்குக் காரணமாவதில்லை எனத் தீர்மானமாகச் சொல்கிறார்கள். அதேபோல் ஆண் ஜாதகத்தில் 1, 4 அல்லது 8 லுள்ள செவ்வாயும் பாதிப்புத் தருவதில்லை.

     லக்/சந்/சுக் னிலிருந்து 1, 2, 4, 8 மற்றம் 12 ஆம் இடங்கள் சரராசியாகி அதில் செவ்வாய் இருக்க ( மேஷம், கடகம், துலாம் மற்றும் மகரம் ) செவ்வாய் தோஷக் கெடுதிகள் ஏற்படுவதில்லை.

                            சர ராசி கதவௌ பௌம
                            சதுர் அஷ்ட வியயே துவிய
                            லக்ன பாப வினாசஸ்யாத்
                            சஷே பாபோ விஷேஷதா.

    இந்த ஆசிரியர் 7 ஆம் இடத்தை ஒதுக்கிவிட்டாரே எனத் தோன்றலாம். ஏற்கனவே முன்னர் குறிப்பிட்டபடி செவ்வாய் இந்த 4 இராசிகளில் , அவை 7 ஆம் இடமாகி அமரும்போது செவ்வாய்க்கு தோஷம் தரமுடியாத நிலை ஏற்படுகிறது.
    
    அடுத்து குரு மற்றும் புதனுடன் இணைந்த அல்லது பார்க்கப்பட்ட, 1, 2, 4, 8, 12 ஆம் (லக்/சந்/சுக்) இடங்களிலுள்ள செவ்வாய்க்கும் தோஷம் ஏற்படுத்த முடியாத நிலைபெறுகிறது.

7 இல் செவ்வாய்

                          வி சப்தம பௌம தோஷஸ்து
                          நகிரக கர்கடக யோரே வினா.

    7 ஆம் (லக்/சந்/சுக்) இடத்தில் செவ்வாய் கெடுதல் தரும் என்று சொல்லப்பட்டாலும், 7 ஆம் இடம் மேஷம், கடகம், விருச்சிகம் மற்றும் மகரமானால் தோஷம் தருவதில்லை.

8 இல் செவ்வாய்

                          அஷ்டமே பௌம தோஷஸ்து
                          தனுர் மீனாத்வயோரே வினா
                          அஷ்டமே குஜ தோஷஸ்யாத்
                          கடக மகராயோரே வினா.

    குருவின் இராசிகள் அல்லது செவ்வாயின் நீச ஸ்தானமான மகரம், உச்ச இராசியான கடகம் ஆகியவை (லக்/சந்/சுக்) 8 ஆம் இடமாகி, அதில் செவ்வாய் இருக்க செவ்வாயால் பாதகமில்லை.

12 இல் செவ்வாய்

                          வியாயேஹ, குஜ தோஷாஸ்யாத்
                          கன்யா மிதுலாயோரே வினா
                          துவாதஸே பௌம தோஷஸ்து
                          விரிஷ தௌலிகாயோரே வினா.

    புதன் மற்றும் சுக்கிரனின் வீடுகள் 12 ஆம் இடமாகி அதில் செவ்வாய் இருக்க (லக்/சந்/சுக்) தோஷமில்லை. இருவர் ஜாதகத்திலுமே 12 இல் செவ்வாய் இருந்தால் தோஷ நிவர்த்தியாகிறது. சமமாகிறது. சில முனிவர்கள் செவ்வாயுடன் இணைந்த- பார்த்த சனி, இராகு மற்றும் கேது ஆகியவற்றாலும் செவ்வாய் தோஷம் விலகும்.
           
                          குரு மங்கள சம்யோகே
                          பௌம தோஷ ந வித்யாதே.

     குருவும் செவ்வாயும் 8° க்குள் இருந்தால் தோஷமில்லை. குருவுக்கு 2 இல் செவ்வாய் இருக்க, திருமணம் தாமதமாகும்.

                          சந்திர மங்கள சம்யோகே
                          பௌம தோஷ ந வித்யாதே

     குருவும், சந்திரனும் ஒரே இராசியில் இருக்க செவ்வாய் தோஷமில்லை.

     இவ்வாறாக செவ்வாய் தோஷ விதிகள் மற்றும் விலக்குகள் தேவகேரளம், ஹோராசாஸ்த்ரா, ஜாதக சந்திரிகா, நாரதீயம் ஆகிய நூல்களிலும் அத்திரி மகரிஷி, கர்க மகரிஷி ஆகியோராலும் விளக்கப்பட்டுள்ளன.

   இவற்றையெல்லாம் பார்க்கும் போது செவ்வாய்  தோஷம் என்பது மொத்தத்தில் 6 சதவிகித ஜாதகங்களில் மட்டுமே இருக்கும் என்பதுதான் உண்மை.

    ஸ்திரீ ஜாதகம் எனும் நூலில், 7 அல்லது 8 ஆம் இடத்தில், இராகு, சூரியன், சனி, செவ்வாய் இவர்களில் ஒருவரோ, அல்லது பலரோ நின்றால் கூட ஒன்பதாம் இடத்தில் ஒரு சுபகிரகம் இருக்க அந்த ஜாதகிக்கு, கணவனின் ஆதரவு, குழந்தை பாக்கியம், சுக வாழ்வு கண்டிப்பாக உண்டு என்றும் 2 ஆம் இடத்தில் சுபகிரகம் இருக்குமானால் விதவாயோகம் இருக்காது என்றும் திட்டவட்டமாகக் கூறப்பட்டிருக்கிறது.

     
--- ஜோதிடகலாநிதி.எஸ்.விஜயநரசிம்மன்.எம்.எஸ்ஸி





Tuesday, April 29, 2014



தேர்தலோ ,தேர்தல்….?

    மக்களாட்சியின் மகத்துவத்தை உணர்ந்த, உலகின் மகத்தான மிகப்பெரிய சுதந்திர நாடு நமது இந்தியா. மாறுபட்ட மத, இன, மொழி, மற்றும் பண்பாட்டு வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும்  ஒன்றே என ஒருங்கிணைந்து வாழும் பாரதம் போன்ற சிறந்த ஒரு பெரிய திருநாட்டை உலகில் வேறெங்கும் காண இயலாது. ஆயினும் நமது நாட்டின் மனித்தன்மை என்னவெனில், ஏழை - பணக்காரன், வேலையுள்ளவன்வேலையற்றவன், பசியுள்ளவன்தின்று கொழுத்து உணவை வீணடிப்பவன் என மக்களிடையே நிலைத்திருக்கும்  ஏற்றதாழ்வுகளை அனைவரும் உணர்ந்து வாழ்வதுதான். ஆனால், சில அரசியல்வாதிகள் மட்டும் தங்களைத் தாங்களே நாணயஸ்தர்களாக் கருதிக்கொள்கின்றனர். ஆனால், நடைமுறையில் அவர்கள் ‘?’ .

    வராஹிமிகிரர் மற்றும் கர்க மகரிஷிகளின் கூற்றுப்படி ஒவ்வொரு கிரகமும் உலகின் ஒவ்வொரு பகுதியையும் ஆள்கின்றன. அதன்படி  நமது இந்தியப் பெருநாட்டை ஆட்சி செய்பவர் குரு ஆவார். அவரே நமது நாட்டின் அரசியல் நிலவரங்களை ஆட்சி செய்பவராவார்.

    முண்டேன் அஸ்ட்ராலஜி எனும் இலோகஜோதிடத்தில், பாராளுமன்றம், சட்டமன்றம் மற்றும் அதையொத்த தேர்தல்கள் என்பது மக்களின், வேட்பாளர்கள் மீதான நம்பிக்கையையும், பேராதரவையும் பெருவாரியாகக் காட்டும் ஒரு நிகழ்வாகும்இவர்தான் நமது நம்பிக்கைக்கு உரியவர் என மக்கள் மனங்களில் நிலைத்து நிற்பவரே மிகச்சிறந்த வேட்பாளர் ஆவார். இதை நிலைநாட்ட முக்கிய மூன்று காரணிகள் உண்டு, முதலாவது வாக்காளர் அடுத்து வேட்பாளர் மற்றும்  அவர்கள் நிற்கும் மாநிலமாகும். வாக்காளர்களையும் மூன்று விதமாகப் பிரிக்கலாம். 1. புத்திசாலிகள்எதையும் ஆராய்ந்து ஓட்டளிப்பவர்கள். 2. உடன் பிறப்புக்கள், ரத்தத்தின் ரத்தங்கள் என்றெல்லாம் அழைக்கப்படும் தீவிரமான தொண்டர்கள் மற்றும் மூன்றாவதாக நடுநிலையாளர்கள் ஆவர். அதேபோல் வேட்பாளரையும் மூன்று விதமாகப் பிரிக்கலாம். 1. சமூகசேவையில் ஆர்வமுள்ளவர்கள் 2. கட்சி சார்ந்த அரசியல் பிரமுகர்கள் 3. சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர்.

     இத்தகைய தேர்தல் நடவடிக்கைகளுக்கான காரகக் கிரகம் இராஜக்கிரகமான சூரியனைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும் ? சாத்திரங்களும் இதையே வழிமொழிகின்றன. வாக்காளர்களாகிய பொதுமக்களைக் குறிப்பது மற்றொரு இராஜக்கிரகமான சந்திரனே ஆவார். அடுத்து தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் ஆணயத்தைக் குறிப்பது அந்தந்த நாட்டுக்குரிய 10 ஆம் அதிபதியாகும்.  

    இந்தியாவுக்கான இராசி கடகமாகும். எனவே, தேர்தல் நடக்கும் பிரதேசத்தின் ஜாதகத்தில் அரசு மற்றும் நிர்வாகத்துக்குரிய இராஜக்கிரகமான சூரியனின் நிலையை ஆராய்ந்து, அத் தேர்தல் பிரச்சனைகள் ஏதுமின்றி, ஒழுங்காக, அராஜகம், கலகம் போன்றவைகள் ஏற்படாமல், நியாயமான, நேர்மையான முறையில் நடைபெறுமா ? - என்பதைத் தீர்மானிக்க முடியும்.

    உதாரணமாக, உத்திரப் பிரதேசத்திலுள்ள அலகாபாத்தில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடப்பதாக வைத்துக் கொள்வோம். அலகாபாத்துக்கான இராசி மிதுனமாகும். அப்போது சூரியன் மேஷத்தில் உச்சநிலையில் இருப்பதாகக் கொண்டால், அது மிதுன இராசிக்கு லாப பாவமாகும். அந்தப் 11 ஆம் இடம், வழிமுறையற்ற லாபங்களுக்காகவும், ஆதாயங்களுக்காகவும், முறையற்ற செயல்களில் ஈடுபடுதல் மற்றும் பொய்யான வாக்குறுதிகளை  அள்ளி வீசுதல் போன்றவற்றிற்கும் காரகம் பெறுவதால், கட்சிகள் இத்தகைய செயல்களில் ஈடுபட அதிக வாய்ப்புக்கள் ஏற்படலாம்.

    அடுத்து, மிதுனத்துக்கு மூன்றாம் வீட்டு அதிபதியான சூரியன், தன் வீட்டுக்கு 9 ஆம் வீட்டில் அமர்ந்துள்ளது, தேர்தலை நடத்தும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை முழுவதுமாக அறிந்தவர்களாக, அதைச் சரிவர நிறைவேற்றுபவர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருதலைப்பட்சமாக நடப்பதையும் குறிக்கும்.

    மனோகாரகன் சந்திரன், தேர்தல் நேரத்தில், வாக்குகளை  அளிப்பதில் மக்களின் நிலையான மனதையும், உறுதியான எண்ணத்தையும் பிரதிபலிப்பதாக அமைகிறது.

    நாம் வாக்காளர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அதன்படி புத்தி கூர்மையுள்ளவர்களை, நவாம்சத்தில் குரு இடம்பெற்ற இராசி மூலமாகவும், பொதுமக்களை சனியைக் கொண்டும் மற்றும் கட்சித் தொண்டர்களைச் செவ்வாயைக் கொண்டும் அறிந்து கொள்ளலாம்.

    அதேபோல், வேட்பாளர்களில் ஒரு தலைவரை மற்றும் கட்சிகளைக் கண்மூடித்தனமாகத் தொடரும் அரசியல்வாதிகளைக் கேதுவாலும், தன்னலமற்ற மற்றும் பொதுச் சேவைகளில் முழு ஈடுபாடுள்ள வேட்பாளரை 7 ஆம் இடத்து அதிபதியாலும், 7 இல் உள்ள அல்லது ஏழைப் பார்க்கும் கிரகம் குறிக்கும் (இவற்றில் எது பலம் மிக்கதோ, அதைப்பொருத்தது).

   இனி, இதேபோல் 24 – ஏப்ரல், 2014 அன்று, தமிழ் நாட்டில் நடக்கப் போகும் தேர்தலைப் பற்றி அலசவோம். அன்றைய கோசார நிலை:


கேது,புத
சூரி
லக்///

குரு

குரு

கேது
சுக்
சனி()
புத,செவ்
(),சூரி
சுக்
சந்
24-4-2014
07-30
சென்னை



நவாம்சம்



லக்///



இராகு
சனி()
செவ்()

இராகு
சந்



    ஜாதகத்தில் 4 ஆம் அதிபதி உச்ச சூரியன் 12 இல் மற்றும் தமிழ்நாடு இராசி சிம்மத்திற்கு  9 இல் கேது மற்றும் புதனுடன் இணைந்துள்ளார். 12 ஆம் இடத்தை செவ்வாய், இராகு மற்றும் சனி பார்க்கிறது. சூரியன் பகை நவாம்சம் பெற்றுள்ளார்  இந்நிலைகள் தேர்தல் அதிகாரிகளை ஒருதலைப்பட்சமாக நடக்கவும் மற்றும் கட்டாயம் காரணமாக, வேறுவொரு கட்சிக்கு மறைமுகமாக உதவும் நிலையையும் ஏற்படுத்தலாம். ஆனால், அவர்களுடைய செயல்பாடுகள் மற்றும் நியாய உணர்வுகள் அவர்களுக்கே மனவருத்தத்தை அளிக்கக் கூடியதாக இருக்கும்.

    ஏழாம் அதிபதியான செவ்வாய் பகை வீட்டில் அமர்ந்துள்ளார். அதன் காரணமாக, மக்களின் மனநிலையைப் புரிந்திகொள்ள முடியாத நிலை ஏற்படும். செவ்வாய், சனி இருவரும் 8, 12 ஆம் இடங்களையும், சூரியன் மற்றும் புதனையும், சனி 3 ஆம் இடத்தையும் பார்ப்பதால் வேட்பாளர்கள், சட்டம் பாயும் என்ற பயந்த நிலையில் காணப்படுவர். ஆனால், இத்தேர்தலில் சட்டத்துக்குப் புறம்பான நிகழ்வுகளும், குழப்பங்களும் ஏற்படலாம். இரகசியக் குற்றங்கள் அதிகரிக்கலாம்.

    இலக்னாதிபதி சந்திரனோடு இணைந்து, சந்திரன், சுக்கிரன் மற்றும் சனிக்கு இடையில் இருப்பதால், ஆட்சிக்கு வரப்போகும் கட்சி தங்கள் கூட்டணிக் கட்சிகளின் தயவின்றி, தனித்துச் செயல்படாத நிலையையே குறிகாட்டுகிறது.

   இவ்வாறாக அரசியலில் எந்தவிதமான தேர்தல்களையும் கட்டுக்குள் வைக்கப் பல 
காரணிகள் உள்ளன. எனவே, வரப்போகும் நிலைகளை முன்னரே அறிந்து சொல்லும் அல்லது அனுமானிக்கக் கூடிய திறமைகள் ஜோதிடப் பெருமக்களுக்கு இருந்தாலும், ஜோதிடர்கள் தேவையின்றி அல்லது சம்மன் இன்றி ஆஜராகாதிருப்பது அவர்களுக்கு நல்லதுதானே ?  

--- ஜோதிட கலாநிதி. எஸ். விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி. (அப்ளைடு அஸ்ட்ராலஜி)







Monday, April 28, 2014

தசா வரிசை கேது முதல் ஆரம்மிப்பது ஏன் ?



ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ

தசாவரிசை கேது தசாமுதல் ஆரம்பிப்பது ஏன் ?

    விம்சோத்ரி தசாமுறையில் விரியும் கிரக வரிசை ;கேது – 7 வருடம், சுக்கிரன் – 20, சூரியன் – 6, சந்திரன் -- 10, செவ்வாய் – 7, இராகு – 18, குரு – 16, சனி – 19, புதன் – 17 வருடங்கள் வன்பதை நாம் அறிவோம்.

    இவை ஏன், இந்த முறையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன ? – என்ற சிந்தனை மற்றும் கேள்வி பல ஆண்டுகளாய்ப் பலர் மனதில் உள்ளன. இந்த தசாவரிசையில் செயல்படுவதில், பல புதிதான பொருத்தங்கள் உள்ளன. இந்த தசாமுறையானது மனித வாழ்க்கைக்கு மிகுந்த சீரான முறையாக மற்றும் நுண்ணிய முறையாகப் பார்க்கப்படவேண்டும்.
    கேதுகடவுளுக்கு அருகே நம்மை அழைத்துச்செல்லும் கிரகமாகும். எனவே கேது தசாவில் ஆரம்பமாவது சரிதானே ? அதாவது எங்கே ? – ஆன்மா உடலில் வேர்விட்டிராத காலத்தில் அதை நாம் கண்காணித்துக் கொண்டிருக்கிற மிகச் சிறிய குழந்தைப் பருவம் அது. கேது தசாக் காலத்தில்தான் நாம் நமக்குத் தேவையானது எது ? தேவையற்றது எது ? – என்பதை உணர்கிறோம். சிறு குழந்தையாக, நமக்குத் தேவை, சிறிது சுவாசமும், சிறுதளவு உணவும் ஆகும். அதுவும் திடவுணவாக அன்றி, திரவ உணவே போதுமானதாகும். இக்குழந்தைப் பருவம் 0 – 1 வருடமாகும்.

    சுக்கிரதசா ;- இச் சிறு குழந்தை போஷிக்கப்பட வேண்டிய காலமாகும். எனவே, போஷிப்பாளரான சுக்கிரன் குழந்தையைக் கவனித்துக் கொள்கிறாள். குழந்தைக்குத் தேவையான கொழுப்புச் சத்தைக் குழந்தைக்குத் தருபவள் அவளே. நாம் இந்த பூமியில் ஒருவருக்கொருவர் மனதளவில் புரிந்து கொண்டும், அனுசரணையாக வாழ்வதற்காக ஏற்பட்ட நீண்டதொரு தசாக்காலம் சுக்கிரனின் தசாக்காலமாகும். இந்த உடலுக்குத்தேவையானது நல்ல கவனிப்பும், உபசரிப்புமாகும். நமது, மனம் மற்றும் உடலைப்பற்றி நாம் அறியும் சக்தியை உருவாக்கித்தருவது இந்த தசாக்காலமேயாகும். சுக்கிர தசாக்காலமே நமது வாழ்க்கையின் முக்கியக் காலங்களில் ஒன்றாகும். இக் காலமானது 1 முதல் 3 வயதினைக் குறிப்பதாகும்.

    சூரிய தசா ;- பிறரின்  உதவியின்றி நாம் நமது சுய அடையாளத்தை வெளிப்படுத்தி, அவனுடைய பிரகாசமான ஒளியைப் பெற்று, ஒளிரத் தயாராகும் உன்னதக் காலமாகும். ஆரோக்கியமான சுயஅறிவை, இந்த சுயநலம் அனுமதிப்பதோடு, ஒரு ஆரோக்கியமான சுய கர்வத்தால், நமது எல்லையைப் பிறர் தாண்டிச் செல்லாவண்ணம் பார்த்துக் கொள்ளும் அளவற்ற சக்தியை அவன் நமக்கு அளித்திருப்பதாக உணர்கிறோம். அதேபோல் நாமும் மற்றவர்களின் எல்லையைத் தாண்டி ஓட முற்படுவதில்லை. இந்த வயதானது 4 முதல் 12 வரையாலானதாகும்.

    சந்திர தசா ;- இக்காலத்தில் நாம் பெரும் சுய அனுபவங்கள் அனைத்தையும் அர்த்தமுள்ள வழியில், பிறரோடு பகிர்ந்துகொண்டு வாழும் இனிய வாழ்க்கைக்குத் தேவையான தசாக் காலமாகும். நாம் நம்மை மற்றவர் கண்களின் பிரதிபலிப்பாகக் கொண்டு, அவர்களின் அனுபவங்கள், இச்சமூகத்தில் நமக்கே மீண்டும் பிரதிபலிப்பதாகக் கருதி, அதன் மூலமாகப் புதியனவற்றைக் கற்றுக் கொள்ள முற்படவேண்டும். ஏனெனில் நாம் மட்டுமே ஓளிர வேண்டும், முன்னேற வேண்டும் என்ற எண்ணம்  நமக்கு ஏற்பட்டுவிடக்கூடாது. இந்த சந்திர தசையில் நாம் கவர்ச்சி மிக்க இளைஞனாக, உணர்வுபூர்வமாக வலம்வருகிறோம். இக்காலம் 13 முதல் 19 வயதுவரையாகும்.

     செவ்வாய் தசா;- இந்த தசையில், இவ்வுலகில் எப்போது நாம் மற்றவர்களோடு போட்டிபோடக் கற்றுக் கொள்வதோடு, அவர்களை எதிரிகளாக்கிக் கொள்வதைவிட, நண்பர்களாக்கிக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். பல முடிவுகள் நிறைந்த இவ்வுலகில், செவ்வாயின் கூடிவாழும் குணம் மற்றும் கடினமான சக்தியின் மூலமாகவும், தைரியத்தின் மூலமாகவும், ஒழுக்கமான செயல்களாலும் நமது கொள்கைகளைச் சோதிக்கவேண்டும். இந்த வயதானது 20 முதல் 27 ஆண்டு வரையாகும்.

     இராகு தசா ;- இராகு தசாக்காலத்தில் நமது உலக வாழ்க்கையும், அதில் நாம் நிலைந்திருத்தலையும் காட்டுகிறது. நமக்குள் இருந்து, குதூகலிக்கும் இளமையோடு, இந்த உலக மாயையில் சிக்கித் தவிக்கிறோம். திருமணம், குழந்தைகள், தொழில் மற்றும் அதன் மூலமாக ஞானத்தை, ஆன்மாவில் மறைத்துவைக்கும் கலையையும் இராகு தசாவில் கற்றுத் தெளிகிறோம்.

     குரு தசா ;- பேராசை குணங்களால் நம்மை ஓடவைத்த இராகு தசாவைத் தாண்டி, குரு தசை வரும் போது, நாம் நம் முன்னோர்களின் பாண்டித்யங்கள் அனைத்தையும்  திரும்பப் பெறமுடியும். இக்காலத்தில்தான் நமது மனபாரங்கள் அனைத்தும் குறைந்ததாக உணர்கிறோம் அல்லது மீண்டும் நம் மனம் நமது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக உணர்கிறோம். குரு, நமக்கு உள்ளொளி, மனமுதிர்ச்சி மற்றும் வாழ்வியல் பாடங்களை அளிக்க வருகிறார். அவர் குருவாதலால், நம் பாண்டித்தியங்களைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளமுடியும். இதற்குச் சம்மான மனித வாழ்வு 40 முதல் 55 வயது வரையானதாகும்.

     சனி தசா ;- நமக்குள்ள எல்லைகளை நாம் சனி திசையில்தான் உணர்ந்து கொள்கிறோம். குரு தசாவில் குதூகலமாக, உற்சாகமாக உலவிய நாம், சனியால் மீண்டும் பூமிக்குக் கொண்டுவரப்பட்டு, உண்மையின் முன் நிறுத்தப்படுகிறோம். உண்மை நிலை என்பது, குருவின்எல்லாம் நன்மைக்கே என்ற நிலையல்லஇது சனியின் குளிர்ச்சியுடன் கூடிய கடுமையான உண்மை நிலையாகும். அவன், நமது உடலின் தற்காலிக குணங்கொண்ட, இயற்கையான வாழ்க்கை மற்றும் இறப்பு ஆகியவற்றைக் கூறுகிறான். தனிமையில். நமது கர்மவினைகளை மேற்கொள்ள, நமக்கு நேரத்தை அளிக்கிறான் சனி. இக்காலம் 55 வயது முதல் 65 வயதுவரையானதாகும்.

    புதன் தசா ;- இந்த தசையில் நாம் மீண்டும் குழந்தைகளாக மாறிவிடுக்கிறோம். விளையாட்டுத் தனம், நியாயமற்ற தன்மை என்பது அறிவு வளர்ச்சி, ஆணித்தரமான சிந்தனை, ஆகியவற்றினாலன்றி அறியாமையால் வருவதல்ல. சனி கொடுத்த உண்மையான பழுவை இறக்கி, நம் மனம் சுத்தமாகவும், திறந்த நிலையிலும், எதையும் பகுத்துணர ஞானயோகம் பெறுகிறது. இதன் வயது 65 வயதுக்கு மேல் உள்ள காலமாகும்.

      இவ்வாறு தசா மாற்றங்கள் ஏற்படும் போது, தசாசந்தியில் ஓவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே, இதன் காரணமாக தசா மாற்றத்தின் போது ஒரே இரவில் ஒருவரின் நிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இந்தப் பூர்ண மாற்றங்களுக்கு முன் நாம் நம்மைத் தயார்ப்படுத்தி கொள்ளும் நேரமாக, தசாவின் கடைசிப் புத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புத்தியின் சக்தியானது அடுத்த தசாவில் ஏற்படும் நிகழ்வுகளைத் தாங்கும் சக்தியாக அமைந்துவிடுகிறது.

    கேது தசாவின் கடைசிப்புத்தி, புதன் புத்தியாகும். புதன் ஒரு கட்டுமான நிபுணனாவார். அவர் உணர்ச்சி பூர்வமான உலகவாழ்க்கையில் மாற்றங்களை விரும்புபவர். அவர் வேறு உலகக் கேதுவுடன், இவ்வுலக சுக்கிரனுக்குப் பாலமாக இணைக்க உதவுகிறார். இவ்வாறாக புதன் புத்தி, சுக்கிரன் புத்திக்குள் நுழைய ஒருவரின் மனதைத் தயார்ப்படுத்துகிறது.

    சுக்கிர தசாவின் கடைசி புத்தி கேது புத்தியாகும். கேது புத்தி ஒருவர் மனதைக் குழப்பிக் கஷ்டப்படவைத்து, சூரியதசாவை வரவேற்கத் தயார்ப்படுத்துகிறது. 20 வருட சுக்கிர தசாவிற்குப் பிறகு, அதன் கடைசிப் பதினான்கு மாதக் கேது புத்தி நமக்குத் தேவையில்லாதவற்றை நம்மிடமிருந்து ஒதுக்கிவிடுகிறது.

    சூரியதசாவின் கடைசிப் புத்தி சுக்கிர புத்தியாகும். சுக்கிர புத்தி, சந்திர தசா மாற்றத்துக்கு நம் மனதைத் தயார்படுத்துகிறது. சந்திரன் எங்கிருக்கிறானோ அங்கே நாம் உலகத் தொடர்பையும், சந்தோஷத்தையும் நம் குடும்பம் மற்றும் மக்கள் மூலமாக அடைய முற்படுகிறோம். சூரியதசாவில் ஆன்மாவைத் தொடரும் ஆவலுடையவர்களாக நாம் இருப்போம்.

    சந்திர தசாவின் கடைசிப் புத்தி சூரிய புத்தியாகும். சூரியபுத்தியானது அடுத்து வரப்போகிற, செவ்வாய் தசாவிற்கு நம் மனதைத் தயார்ப்படுத்தி அழைத்துச் செல்லுகிறது. ஏனெனில் சூரியனைப் போன்றே சந்திரனும் சுதந்திரமானவர். செவ்வாய் தசாக்காலத்தில் நாம் நமது உலக சக்தி மற்றும் தைரியத்தை நாடுவோம். அதற்கு சூரியன் நமது மனதில் நெருப்பின் மாற்றத்தைக் கொண்டு வருகிறார்.

    செவ்வாய் தசாவின் கடைசிப் புத்தி சந்திர புத்தி. சந்திர புத்தி இராகுதசாவை நெருங்கும் மனநிலையை உருவாக்க உதவுகிறது. இராகுவால் மனதைக் (சந்திரனை) கிரகணிக்க முடியும். இராகு என்பது உள்மனம். இவ்வாறாக சந்திரன் இங்கு உதவுகிறார்.

    இராகு தசாவின் கடைசிப் புத்தி செவ்வாய் புத்தியாகும். செவ்வாய் புத்தி தனது ஒழுக்கம் மற்றும் தைரியத்தால், மிகவும் நல்ல உள்ளமும், கருணையுள்ளமும் கொண்ட குருவின் தசையை அடைய நம்மைத் தாயர்ப்படுத்துகிறது. இராகு தசாவின் கடைசிப் புத்தியிலிருந்து, கடவுளின் தளபதியான செவ்வாய் தைரியத்தாலும், மனவுறுதியாலும்,தெளிவான வழியில், நல்வழியமைத்து, குரு தசாவை அடையச் செய்கிறார். இங்கு குரு நமக்கு உயர்ந்த பாடங்களுக்கான வகுப்பறை அமைத்துப் பாடம் நடத்துகிறார்.

    குரு தசாவின் கடைசி புத்தி இராகு புத்தியாகும், இராகு புத்தி தனது அழுத்தத்திலிருந்தும், உலக நடவடிக்கைகளிலிருந்தும் நம்மை விடுவித்து, சனியின் அனுபவபூர்வமான மற்றும் உண்மையான மனநிலைக்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள உதவுகிறது. சனியின் கற்பனையில்லாத உண்மை நிலைக்குக் குருவின் எல்லாம் நன்மைக்கே என்ற நம்பிக்கை எண்ணம் வழிவிட வேண்டும். உலகத்தோடு நமது தொடர்பை, பந்தத்தைக் குறிக்கும் இராகு உள்மனவழியாக சனியின் அழுத்தத்தை நமக்குக் கொண்டு வருகிறது.

    சனியின் கடைசி புத்தி குரு புத்தியாகும். குரு தனது எப்போதுமே நல்லதே நடக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் மூலமாக, நமது மனதை, புதன் திசைக்குத் தயார்ப்படுத்த உதவுகிறது. இந்தப் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை, புதன் தசாவிற்குப் புதிய பாதை அமைத்துத் தருகிறது. இந்தப் புதியபாதை மூலமாக புதன், நமது திறமைகளையும், பரிசோதனை மற்றும் விளையாட்டுக்களிலும், முன்னேற்றத்தை அளிக்கிறது. உலகை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதைக் கற்பதே புதனின் நாடகம் ஆகும்.

    புதன் தசையின் கடைசி புத்தி சனி புத்தியாகும். புதனின் ஒளிவீச்சு மற்றும் சக்திகொண்டு, சனி, கேது தசாவை நெருங்க தயார்படுத்துகிறது. புதன் தசாவின் 17 வருடங்களில், புதிதாக உருவாக்கப்பட்டும், கண்டுபிடிக்கப்பட்டும் உள்ள அனைத்தையும் கேதுவின் மீது பிரதிபலிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு சனி, நம் மனதை ஒருநிலைப்படுத்தக் கற்றுத்தருகிறது.

    எனவே, நண்பர்களே! கேது தசாமுதல் ஏன் வரிசைப் படுத்தப்பட்டது ? என்பதற்கும்
ஒரு தசாவின் கடைசிப் புத்தியானது எங்ஙனம், அடுத்துவரும் தசாவிற்குத் தோரணவாயிலாகிறது என்பதையும் விரிவாக அறிந்தகொண்டது பயனுள்ளதாக அமைந்ததல்லவா ? வாழ்க வளமுடன்.