Tuesday, December 2, 2014

உங்களுடைய இராசிபலன் இன்று எப்படி ? 03/12/2014 (தினபூமியில்)

உங்களுடைய இராசிபலன் இன்று  எப்படி ?

(தினபூமியில் வெளியானது)

03/12/2014 


.
மேஷம் – 

தொழில் மற்றும் வியாபாரத்தால் ஆதாயம் பெருகும். கற்பனை வளம் பெருகும். இனிய பயண சுகம் கூடும். பலவகையிலும் பணவரவு அதிகரிக்கும். புதிய  நண்பர்கள் அமைவர்.

ரிஷபம் – 

பணியின் காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

மிதுனம்

நம்பத் தகுந்த அநேக நண்பர்களின் நடப்புக் கிடைக்கும். அரசியல் மற்றும் பொதுச் சேவை மூலமாக இலாபம் அடைவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

கடகம் – 

தொழில் அல்லது வியாபார மாற்றங்கள் ஏற்படலாம். பொதுச் சேவை ஈடுபாடு ஏற்படும். பெரியோர்களை மதித்து நடப்பீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கலாம்.

சிம்மம்  

அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். செல்வ நிலை உயரும்தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். நீண்ட அல்லது வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம்.

கன்னி - 
சுகக் குறைவும், பெண்களால் பேரிழப்பும் ஏற்படலாம். தாயின் உடல் நிலையில் அக்கறை தேவை. பெரியோரையும், அதிகாரிகளையும் மதித்து நடப்பது நல்லது.

துலாம் – 

பொதுச் சேவைகளில் நாட்டம் செல்லும். மாற்றங்களையும், பயணங்களையும் விரும்புவார் மனைவி. குறுகிய மனமும் பொறாமை குணமும் தலைதூக்கும்.

விருச்சிகம்  
பணிமாற்றங்கள் ஏற்படலாம். தாயுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்குக் கெடுபிடி இருக்கலாம். சிலருக்குப் பண இழப்புக்களும் ஏற்படலாம்.

தனுசு – 

குழந்தைகளின் மகிழ்ச்சியால் மனம் மகிழும். அழகிய மனைவி அமைவாள். கல்வியில் தடைகள் ஏற்படலாம். நல்ல ஆலோசகராக விளங்குவீர்கள்.

.மகரம்

சுமாரான நாள். குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தைத் தவிருங்கள். தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் வெற்றிக்கான படிகளில் ஏறுங்கள். உடற்சோர்வு ஏற்படலாம்.

கும்பம்  

இன்று உங்கள் மனம் அலைபாயும். பயணத்தில் ஆர்வம் ஏற்படும்ஆரோக்கியம் மற்றும் பணிகள் மேம்பாடும், பதவி உயர்வும் ஏற்படலாம். பல வழிகளில் பணம் வரும்.

மீனம் – 

கல்வியில் உங்கள் திறமைகளைக்  காட்டினாலும் தடைகளும் ஏற்படும். அனைவராலும் மதிக்கப் படுவீர்கள். இனிய பேச்சுக்களால் பெண்கள் மூலமாக இலாபம் அடைவீர்கள்.

No comments:

Post a Comment