Thursday, August 2, 2018

குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018-2019 - ரிஷபம்


குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018-2019 - ரிஷபம்



ரிஷபம்


( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
    களத்திரகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட மென்மையான, பிறரைக் கவர்ந்து நினைத்த காரியங்களை நினைத்தபடி முடித்துக் கொள்ளும் ரிஷபராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப்  பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

       தங்கள் இராசிக்கு ஆயுள் மற்றும் இலாப பாவாதிபதியான குரு இதுநாள்வரை ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்து ஆரோக்கியக் குறைவு, பகைவர்களால் தொல்லை, தேவையற்ற கடன்களால் பிரச்சனைகள் என அல்லல் தந்தவர், புரட்டாசி மாதம் 18 ஆம் நாள், வியாழக் கிழமை, 04 – 10 – 2018 அன்று  களத்திர பாவமாகிய 7 ஆம் இடத்திற்கு மாறுகிறார். குருவால் சிறப்பு பலன்கள் ஏற்படும். பார்வை பலத்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும். வீட்டில் சுபகாரியங்கள் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். மனைவியின் உடல் நலம் சிறப்படையும். உங்கள் மனைவி சந்தோஷப்படும்படியான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். உயர்ரக வாகன வசதிகள் கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு வரலாம். வீடு, மனை ஆகியவற்றை உடனடியாகக் கிரையம் செய்யலாம். ஆடை ஆபரணங்கள் சேரும். மாணவ மாணவிகளின் கனவுகள் நனவாகும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணம் ஏற்படும்.  அதன் காரணமாக தன வரவு அதிகரிக்கும். கூட்டுத் தொழில் சிறக்கும். உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு ஏற்ப புதிய முதலீடுகள் செய்யலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கதவைத்தட்டும். உறவினர்களிடையே ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தில் கணவன் மனைவி உறவுகள் மேன்மையடையும். புண்ணியத்தல யாத்திரைகள் ஏற்படும். பொதுவாழ்வில் புகழ், கௌரவம், அந்தஸ்து ஆகியவை உயரும். தெய்வீக வழிபாடுகள், பூஜை புனஸ்காரங்களில் ஆர்வம் ஏற்பட்டு நன்மை அடைவீர்கள். ஆன்மீகம் டிரஸ்ட், சேவா டிரஸட், கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் நல்வுயர்வை அடைவார்கள். குழந்தைகளினால் வீட்டில் எப்போதும் குதூகலம் திகழும். பெண்களாலும் நண்பர்களாலும் அதிக நன்மைகள் ஏற்படும்.

       கல்வி, கலைத் துறையினர், விவசாயிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், வங்கிப் பணியாளர்கள், சட்டத் துறை வ்ல்லுனர்கள், நீதியரசர்கள் ஆகியோர் பணிகள் சிறக்கும். கட்டுமானத் தொழில்கள் முன்னேற்றம் காணும்.
  
       குரு 11 ஆம் இடத்தைப் பார்ப்பதால் மனைவி மக்களுடன் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். மூத்த சகோதரர் மேன்மையடைவார். உங்களின் தொழில் முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். வெளிநாட்டு பயணங்கள் ஆதாயம் தரும். பணியாளர்களுக்குப் பதவி உயர்வும், பணப் பயன்களும் கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு இடம் மாற்றம் கிடைக்கும். இராசியைப் பார்ப்பதால் உங்களின் மதிப்பு மரியாதை கூடும். தன்னம்பிக்கையும் தைரியமும் உயரும். சமூகத்தில் உயர்வான இடத்தை அடைந்து, மதிப்பு, மரியாதையும் கூடும்உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உயர்பதவிகள் தேடி வரும். நண்பர்கள் மூலம் இலாபம் உண்டு. அடுத்து மூன்றாம் இடத்தை பார்ப்பதால் தைரியம் அதிகரிக்கும். நல்ல தகவல்கள் வந்து சேரும். இளைய உடன்பிறப்புக்கு வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகள் மூலமாக புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். எந்தக் காரியமும் தடைபடாது சிறப்புற நடக்கும். முயற்சிகள் யாவும் வெற்றி அடையும்.

ரிஷப இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு செம்பாலான  பாத்திரங்கள்  சேர்க்கை உண்டாகி ஓரளவு நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக  செலுத்துவது  நல்லது. பொது மற்றும் சிறப்பு விதிகளின்படி இவர்களுக்கு மிக்க நற்பலன்கள் ஏற்படும். 80%


      ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.

குருப் பெயர்ச்சி பலன்கள் -2018 -19







குருப் பெயர்ச்சி பலன்கள் -2018-19

மேஷம்

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1,2,3,4 பாதங்கள்)
       தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்டு தைரியமும், துணிவும், சுறுசறுப்பு மிக்க மேஷராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

      தங்கள் இராசிக்கு பாக்ய, விரய பாவாதிபதியான குரு இதுவரை களத்திர  பாவமான  7 ஆம் இடத்தில் சஞ்சரித்து தற்போது புரட்டாசி மாதம் 18 ஆம் நாள், வியாழக் கிழமை, 04 – 10 – 2018 அன்று 8 ஆம் பாவத்திற்கு இடம் பெயர்கிறார். 7 ஆம் பாவத்தில் இருந்தவரை மணமாகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடந்திருக்கும். பிள்ளைகளால் பெற்றவர்கள் பெருமை அடைந்திருப்பார்கள்.  தொழில் துறையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். மனைவி மக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழிந்திருக்கும். இந்த, குருவின் தற்போதைய ஆயுள் பாவ மாற்றத்தால் இம்மை எட்டில் வாலி பட்டம் இழந்து போம்படியானதும்’ – என்ற பழம் பாடலின்படி, இக் காலத்தில் பதவி, உத்தியோகம், கௌரவம் ஆகியவற்றில் இறக்கம், மாற்றம் அல்லது இழப்பு இவற்றில் ஏதேனும் ஒன்று நிகழலாம். .வியாபாரத்தில்  எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாது, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கீழ்நிலையில் உள்ளவர்களின் சிநேகத்தால் அவப்பெயர் ஏற்படும். பயணங்களின் போது விபத்துக்களைச் சந்திக்க நேரும். எனவே, பயணங்களின் போது அதிக கவனத்துடன் இருங்கள். கோர்ட், வழக்கு போன்ற தண்டச் செலவுகளால் கைப்பணம் கரையும். பணமுடையும் ஏற்படும். தாள முடியாத மனக் கஷ்டங்களும், அதன் காரணமாக உடல் ஆரோக்கியம் கெடுதல் ஆகியவை ஏற்படும். காரியங்கள் எதுவும் நினைத்தபடி கை கூடாது. உடல் உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற இலாபமோ, பலனோ எதுவும் இராது. அக்னி விபத்து, அரச கோபம், சரீரக் கஷ்டம் ஆகியவை ஏற்படும். உடல் பலஹீனமும், சோர்வும் ஏற்படும்.   தேவையற்ற செலவுகள் ஏற்படும். கடன் வாங்கியவர்களிடம் இருத்து வரவேண்டிய பாக்கிகள், நிலுவையாவதால், பொருளாதாரச் சிக்கல்கள் எழும். தந்தை மூலமான விரயங்கள் தவிர்க்க முடியாத்தாகும். மனைவி மூலமான வருமானங்கள் தக்க சமயத்தில் கை கொடுக்கும். மனதளவிலும், உடலளவிலும் இன்னல்கள் எழும். சிலர் தங்கள் பழைய வீட்டை மாற்றி அமைத்து புதுப்பித்துக் கொள்ளக் கூடும். இளைஞர்களும், யுவதிகளும் தங்கள் காதல் விவகாரங்களால் பெற்றோர்களுக்கு மனவருத்தத்தை அளிப்பர்.
       குரு தனது 5 ஆம் பார்வையால் விரயபாவத்தைப் பார்ப்பதால், செலவுகள் அனைத்தும் சுப செலவுகளாக மாறும். வீட்டில் நடக்கும் சுபகாரியங்களால் செலவுகள் கூடினாலும், சந்தோஷம் நிலவும். வீடு கட்டுதல் போன்ற செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் என சம்பாத்தியம் காரணமாக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு செல்லவேண்டிய சூழல் உருவாகும். அதன் காரணமாக குடும்பத்தைப் பிரிய நேரும்.  உடன் பிறப்புகளுக்கு தொழில் மேன்மை ஏற்படுவதோடு, சிலருக்கு நல்ல வேலை வாய்ப்பும் ஏற்படும்.

      குரு தனது 7 ஆம் பார்வையால் தனபாவத்தை பார்வையிடுகிறார். அதன் காரணமாக குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்வுகள் அதிகம் ஏற்பட்டு சந்தோஷமான தருணங்களாக அமையும். காப்பீட்டுத் திட்டம் மூலமாகவோ, பங்கு சந்தை மூலமாகவோ ஆதாயங்கள் பெருகும். ஏதேனும் ஒரு வகையில் பிறரின் பணம் கையிருப்பு இருந்து கொண்டே இருக்கும். அரசாங்கம் மூலமாக வரவேண்டிய நிலுவைத் தொகைகள் உடனடியாகக் கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் தங்கள் உடன் இருப்பவர்களிடம் அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி உறவு பலப்படும். தாம்பத்தியத்தில் மகிழ்ச்சி நிலவும்.

       குரு தனது 9 ஆம் பார்வையால் சுக பாவத்தை பார்வை செய்வதால் நோய்கள் தீர்ந்து ஆரோக்கியம் பெருகும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமான செலவுகள் அதிகரிக்கும். வீடு மராமத்துச் செலவுகள், வாகனம் சரிசெய்யும் செலவுகள் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். சிலருக்கு வீடு கட்டும் ஆசை நிறைவேறும். மாணவர்கள் ஆராய்ச்சிக் கல்விக்காக வெளியூருக்குச் சென்று தங்கிப் படிக்க வேண்டிய சூழல் உருவாகும். மனையாளுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும். வழக்குகள் வெற்றி அடைந்து முடிவுக்கு வரும். தாயின் ஆரோக்கியம் பெருகி, தந்தைக்கு மனமகிழ்ச்சி ஏற்படுத்தும்.

Wednesday, July 25, 2018

குருப் பெயர்ச்சி -2018







குரு பெயர்ச்சி பலன்கள்பரிகாரங்கள் -2018
                   நிகழும் சுப ஶ்ரீ விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் நாள், வியாழக் கிழமை, 04 – 10 – 2018 அன்று நாழிகை 40 – 00 இரவு மணி 10 – 05 க்கு ரிஷப இலக்னத்தில், துலா இராசியில் விசாகம் – 3 ஆம் பாதத்தில் இருந்து விசாகம் – 4 ஆம் பாதம் விருச்சிக இராசிக்கு, தேய்பிறை ஏகாதசி திதியில், சித்த யோகத்தில், பத்திரை கரணத்தில்  குரு பகவான்  பெயர்ச்சி ஆகிறார்.


லக்///


சுக்,
கேது
செவ்

சூரி,சனி
குரு




இராசி
இரவு 10-05 – குரு - விருச்சிகம்
சந்
ராகு



நவாம்சம்
கேது செவ்,


லக்///
சனி
சுக்
குரு

சூரி,புத
சந்

ராகு
புத




கிரகங்களின் பாத சார விவரங்கள்
கிரகங்கள்
பாகை - கலை
நட்சத்திர பாதம்
இராசி
நவாம்சம்
சூரியன்
17 - 17
அஸ்தம் - 3
கன்னி
மிதுனம்
சந்திரன்
17 - 26
ஆயில்யம்-1
கடகம்
தனுசு
செவ்வாய்
13 - 20
திருவோணம்-1
மகரம்
மேஷம்
புதன்
27 - 24
சித்திரை-2
கன்னி
கன்னி
குரு
28 - 29
விசாகம்-3
துலாம்
மிதுனம்
சுக்
26 - 04
சுவாதி-4
துலாம்
மீனம்
சனி
09 - 04
மூலம்-3
தனுசு
மிதுனம்
இராகு
08 - 07
பூசம் - 2
கடகம்
கன்னி
கேது
08 - 07
உத்திராடம் - 4
மகரம்
மீனம்
இலக்னம்
25-03
மிருகசிரீடம்-1
ரிஷபம்
சிம்மம்

                            குருவைப் பற்றி ...................
குரு ஸ்தோத்திரம்.
                        தேவானா ம்ச ரிஷினாம்ச
                        குரும் காஞ்சன ஸந்நிபம்
                        புத்தி பூதம் த்ரி லோகேசம்
                        தம் நமாமி பிரகஸ்பதிம்.
குரு காயத்ரி
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.
ஓம் பரவரஸாய வித்மஹே
குரு வ்யக்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.
ஓம் குரு தேவாய வித்மஹே
பரம குருப்யோ தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.
ஓம் குரு தேவாய வித்மஹே
பரப்ரம்மாய  தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.
ஓம் ஆங்கிராய வித்மஹே
சுரசார்யாய  தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.
                   குரு காயத்ரி, ஸ்தோத்திரம் ஆகியவற்றை அனுதினமும் பாராயணம் செய்பவர்களுக்கு உடல் நலமும், மன நலமும் சிறப்படையும். நினைத்த காரியங்கள் கைகூடி, பல நன்மைகளும் ஏற்படும்.
                  இன்று பலரும்  நவக்கிரகங்களில் ஒருவராகிய சுபராகிய குருவை ( வியாழன்பிரகஸ்பதி ) வழிபடுவதாக நினைத்து தென்முகக் கடவுளான தட்சிணா மூர்த்தியை வணங்கி, விளக்கு வைத்தல் பொன்ற பரிகாரங்களை செய்ய ஆரம்பிக்கின்றனர். இது தவறு. ஏனெனில் தட்சிணாமூர்த்தி சிவனின் அம்சம். குருவோ தேவர்களுக்கு குரு ஆவார். குரு – ‘ கு என்றால் இருள், ‘ ருஎன்றால் நீக்குபவர் என்று பொருள். ஜாதக தோஷங்களை நீக்க வல்லவர். குரு பார்க்கக் கோடி நன்மை என்பது வழக்கு. குரு, ஞானம், செல்வம், ஒழுக்கம், பெருமை ஆகியவற்றைத் தரவல்லவர்.
                  குரு, சப்த ரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ மகரிஷியின் புத்திரர். இவரின் மனைவி தாரா வனப்பு மிக்க அழகியாவார். குருவுக்கு தனுசு, மீனம் ஆட்சி வீடாகும். உச்ச வீடு கடகம். நீச வீடு மகரம், ரிஷபம், துலாம், மிதுனம், பகை வீடும், மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகியவை தோழமை வீடுகளாகும். அதிதேவதைஇந்திரன், பிரத்யதி தேவதைபிரம்மன் ஆவர். இவர் உத்திராயண காலத்தில் வலிமை மிக்கவர் ஆவார். இவருக்கு உரிய நட்சத்திரங்கள் புனர் பூசம், விசாகம், பூரட்டாதி ஆகும்.

                  குருவுக்கு ஆகாத இல்லங்களான 1, 3, 4, 6, 8, 10, 12 ஆகிய இல்லங்களில் இடம் பெற்றவர்களுக்குத் தீய பலன்கள் ஏற்படுமாதலால், தீமைகள் விடுபட குருவுக்கு விசேஷமான கோவில்களில் பிரார்த்தனை அனுஷ்டிப்பது  தீமைகளைக் குறைக்கும். அதுபோல் நன்மை தரும் இடங்களான 2, 5 ,7, 9, 11 ஆகிய இடங்களில் குரு இடம்பெற அவர்கள் செய்யும் ஆலய வழிபாடுகள் நன்மையைக் கூட்டும் அல்லவா ?

      

குரு வழிபாட்டுக்கான சிறப்புத் தலங்கள்
                   தஞ்சாவூர் மாவட்டம் திருவாரூர் சாலையில் நீடாமங்கலம்கும்பகோணம் செல்லும் வழியில் ( இரும்பூளை ) எனும் ஆலங்குடி குருவின் தலமான அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர்ழுவார் குழலி திருக்கோவிலில், குருவாரத்தன்றோ, குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி வரும் நாட்களில் மஞ்சள் வஸ்திரம், முல்லைப் பூமாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி, கடலை மற்றும் சர்க்கரை கலந்து, நிவேதனம் செய்து அனைவருக்கும் அளித்தல் சிறப்பு.
                  குருவே, சூரியனை வழிபட்ட ஸ்தலமான சூரியனார் கோவில் ( கும்பகோணம்ஆடுதுறை ) உள்ள அனைத்து கிரகங்களையும் ஆராதிப்பது அல்லல்களைக் குறைக்கு மன்றோ ?
                 திருவாரூர் தியாகேஸ்வரர் கோவில், திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலில் உள்ள குரு, மதுரை அருகே உள்ள குருவித்துறை. பட்ட மங்கலம்  ஆகிய கோவில்களில் உள்ள குருவை வழிபாடு செய்ய நலமே வாழலாம்.
                 எளிய வழிபாடாக உள்ளூர் கோவில்களிலுள்ள நவக்கிரகங்களில் தேவகுருவை அவருக்கு உரிய வஸ்திரம், மலர் சாற்றி மனதார வேண்டி பிரார்த்தனை செய்ய வந்த வினைகள் வந்த வழியே செல்லும்.
         
        
2018 – மூர்த்தி நிர்ணயப்படி குருப்பெயர்ச்சி பலன்கள்.

           ஒரு கிரகமானது, ஒரு இராசியினின்று மற்றோரு இராசிக்குப் பெயர்ச்சியாகும் போது, ஜன்ம இராசிக்கு எத்தனையாவது இராசியில் சந்திரன் வருகிறதோ , அந்தக் கணக்கின் படி சுவர்ணம்  (தங்கம்)  ரஜதம் (வெள்ளி),  தாமிரம்  (செம்பு) மற்றும் உலோகம் ( இரும்பு) என்ற மூர்த்திகளாக மாறி பலன் தருகிறார்கள்

   கிரகப் பெயர்ச்சியன்று -

             ஜென்ம இராசிக்கு 1,6,11 இல் சந்திரன் இருக்க அது சுவர்ண மூர்த்தி என்றும், 2, 5, 9 இல் இருக்க ரஜத மூர்த்தி என்றும், 3, 7, 10 இல் தாமிர மூர்த்தி என்றும், 4,8,12 இல் இருக்க உலோக மூர்த்தி என்றும் ஆகி பலன் தருவர்.

இராசி
சுப/அசுபத்
தன்மை
குரு இருக்கும்
பாவம்/பொது
விதி
அளவு
1
சிறப்பு விதி
மூர்த்தி
நிர்ணயம்
அளவு


2
மொத்த
அளவு
1 + 2
பலன்
அளவு
பலன்
மேஷம்
 4 இல் சந்
8
உலோக
மூர்த்தி
0.0625
0.0625
1/16
தீமை
ரிஷபம்
 3  இல் சந்
7
0.500
தாமிர
மூர்த்தி
0.125
0.625
3/4
மிக்க நன்மை
மிதுனம்
 2  இல் சந்
6
ரஜத
மூர்த்தி
0.250
0.250
¼
சுமார்
கடகம்
 1  இல் சந்
5
0.500
சுவர்ண
மூர்த்தி
0.500
1
1
மிக்க
நன்மை
சிம்மம்
 12 இல் சந்
4
உலோக
மூர்த்தி
0.0650
0.0650
1/16
தீமை
கன்னி
11 இல் சந்  
3
சுவர்ண
மூர்த்தி
0.500
0.500
1/2

நன்மை
துலாம்
 10 இல் சந் 
2
0.500
தாமிர
மூர்த்தி
0.125
0.625
3/4
மிக்க
நன்மை
விருச்சிகம்
9 இல்சந் 
1
ஜத
மூர்த்தி
0.250
0.250
1/4

சுமார்
தனுசு
8 இல் சந் 
    12
 
உலோக
மூர்த்தி
0.0650
0.0650
1/16
 தீமை
மகரம்
7 இல் சந்
11
0.500
தாமிர
மூர்த்தி
0.125
0.625
3/4
மிக்க
நன்மை
கும்பம்
 6 இல் சந்
10
சுவர்ண
மூர்த்தி
0.500
0.500
1/2
நன்மை
மீனம்
 5 இல் சந்
9
0.500
ரஜத
மூர்த்தி
0.250
0.750
3/4
மிக்க
நன்மை




        குரு இம்முறை பொது விதிப்படி துலாம் (2), மகரம் (11), மீனம் (9), ரிம் (7), கடகம் (5) ஆகிய ஐந்து இராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அளிக்கிறார்.

          ஆனால். சிறப்பு விதியான, மூர்த்தி நிர்ணயப்படி நன்மை தரும் சில இராசிகளுக்கு நன்மைகள் சிறிது குறைவதும், தீமைதரும் சில இராசிகள் நன்மை அடைவதும் அல்லது தீமைகள் சிறிது குறைவதுமாக மாறும் விதத்தைக் காணலாம்.

        சிறப்பு விதியின்படி : பொதுவிதிப்படி நன்மை தரும் இடங்களின் மூர்த்தி நிர்ணயப்படி, நன்மைகள் சிறிது குறைவதைக் காணலாம்.

                   துலாம் -    2 - தாமிர மூர்த்தியாவதால், அவர் அளிக்கும் நன்மை சிறிது          குறைகிறது. 85%
                  மகரம் -  11  - தாமிர மூர்த்தியாவதால்  நன்மை சிறிது குறைகிறது. 85%

          மீனம் - 9 - ரஜத மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. 85%

          ரிம் – 7 - தாமிர மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை சிறிது குறைகிறது. 80%

                   கடகம் – 5 - சுவர்ண மூர்த்தியாவதால்  முழு நன்மை அளிக்கிறார். 95%


      சிறப்பு விதியின்படி : பொதுவிதிப்படி தீமை தரும் இடங்கள், மூர்த்தி நிர்ணயப்படி தீமைகள் சிறிது குறைவதையும் சில இராசிகள் நன்மையளிப்பதாக மாறுவதையும் காணலாம். குரு இம்முறை   சிம்மம், கன்னி, விருச்சிகம்,  தனுசு, கும்பம், மேஷம்  மற்றும் மிதுனம் ஆகிய இராசிகளில் 4, 3, 1, 12, 10, 8, மற்றும் 6 ஆகிய இடங்களில் முறையே அசுபம் தருகிறார். ஆனால் மூர்த்தி நிர்ணயப்படி பலம்பெற்று சில இராசிகளுக்கு நன்மையாக மாறுவதைக் காணலாம்.

       சிம்மத்திற்கு  உலோக மூர்த்தியாகி சுப பலன் பெரும்பாலும் குறையும். (4) 50%

       கன்னிக்கு -  சுவர்ண மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் ஏற்படும். (3) 80%

       விருச்சிகத்திற்கு   ரஜத மூர்த்தியாக  சுமாரான பலன்கள் ஏற்படும்.  (1) 70%

       தனுசுக்கு -  உலோக மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் பெரும்பாலும் குறையும்.(12) 60%
       கும்பத்துக்கு -  சுவர்ண மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் ஏற்படும். (10) 80%

       மேஷத்துக்கு -  உலோக மூர்த்தியாக இருப்பதால் சுப பலன்  குறையும். (8) 50%

       மிதுனத்துக்கு   ரஜத மூர்த்தியாக இருப்பதால், சுப பலன் குறையும்  (6).70%


      மூர்த்தி நிர்ணயப்படி பலன்களை ஆராயும் போது, கடகம், கன்னி மற்றும் கும்ப  இராசிக்காரர்களுக்கு சுவர்ண மூர்த்தியாக இருப்பதால்  நற்பலன்கள் ஏற்படுவதைக் காணலாம். மேற்படி இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி சுவர்ண மூர்த்தியாக முதல் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு சொர்ண ஆபரணங்கள், அணிகலன்கள் சேர்க்கை உண்டாகி  நன்மை அளிக்கும்.     

       மிதுனம், விருச்சிகம், மீனம் ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.

       ரிஷபம், துலாம், மகரம் ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு செம்பாலான  பாத்திரங்கள்  சேர்க்கை உண்டாகி ஓரளவு நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.


       மேஷம், சிம்மம், தனுசு ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி உலோக மூர்த்தியாக நான்காம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு இரும்பினாலான விவசாய, பொறியியல் உபகரண சேர்க்கை உண்டாகி குறைந்த அளவு நன்மை அளிக்கும். இரும்பினாலான்ன உபகரணங்கள், பொருட்களை உழவாரப் பணிக்கு, ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.