Saturday, June 16, 2018

கோசார செவ்வாய், புதன்








ஜனன ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –
          கோசார சூரியன் - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது ஜாதகரின் தந்தையின் சகோதரர்கள் 6 பேருக்குத் தடைகள் ஏற்படும். ஜாதகருக்கு சிறித் இரத்த சம்பந்தமான கௌளாறுகள் ஏற்படும்.
         கோசார சந்திரன் - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது ஜாதகரின் தாய்க்கு சிறிது பிடிவாதகுணம் ஏற்படும். அத்துடன் மனவருத்தங்களும், மன அமைதியின்மையும் ஏற்படும். ஜாதகரின் சகோதரர்களுக்கு பயண வாய்ப்புகள் ஏற்படும். பெண்ணானால் ஜாதகியின் கணவனுக்குப் பயண வாய்ப்புகள் ஏற்படும்.
         கோசார புதன் - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது ஜாதகருக்கு நண்பர்களுடனோ அல்லது சகோதரர்களுடனோ வழக்கு விவகாரங்கள் ஏற்படும். ஜாதகரின் நெருங்கிய நண்பர்களே பகைவர்கள் ஆவர். ஜாதகருக்கு தோல் சம்பந்தமான வியாதிகள், எலும்புக் கோளாறிகள் ஏற்படலாம். மேலும், மாமனார் மற்றும் தாய் மாமன் ஆகியோருடன் வாக்குவாதம், சண்டை, தர்க்கம் ஆகியவை ஏற்படும். ஜாதகியானால் அவரின் கணவர் அவரது தோழி மற்றும் நண்பனை சந்திக்கும் நிலை ஏற்படும்.
         கோசார குரு - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது ஜாதகர் தனக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொள்வார். அவசரமாக, வேகமாகச் செய்யும் குணம் மற்றும் பிடிவாதமான குணத்தால் நெருங்கியவர்களிடம் விரோதம் பண்ணிக் கொள்ளுவார். ஜாதகரின் சகோதரர்களில் ஒருவருக்கு சமூகத்தில் உயர்ந்த பதவி கிடைத்து மதிப்பு மரியாதையுடன் வாழ்வார். ஜாதகியானால், அந்த வாய்ப்பு அவள் கணவனுக்குக் கிடைக்கும். ஜாதகருக்கு இரத்த அழுத்தம் ஏற்படும்.
         கோசார சுக்கிரன் - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது ஜாதகரின் சகோதரருக்கு பொருளாதார இலாபங்கள் அதிகரிக்கும், ஆனால், ஜாதகருக்கு மத்தியஸ்தம் செய்பவர்கள் அல்லது நடுவில் உள்ளவர்களால் பொருளாதார விஷயங்களில் தடைகள் ஏற்படும். ஜாதகியானால், அவளுக்குக் கணவனிடம் இருந்து பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். கணவனுக்கும் பொருளாதார இலாபம், உயர்வு இருக்கும்.
        கோசார சனி - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது அல்லது செவ்வாய் இருக்கும் இடத்திற்கு 1, 5, 9 ஆம் இடங்களில் நகரும்போது, தொழில், வேலைகளில் அவரின் உயர் அதிகாரிகளின் தொந்திரவு தாங்காமல், ஓய்வற்ற நிலை ஏற்படும். உயர்அதிகாரிகளுடன், முதலாளியுடன் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் ஏற்படும். ஜாதகியானால், அவள் கணவருக்கு மேற் சொன்ன நிலைகள் ஏற்படும்.
        கோசார இராகு - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது ஜாதகருக்கு இரத்த சம்பந்தமான பிரச்சனைகள், சில ஆபத்துகள் ஏற்படும். அவரின் சகோதரர் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவிப்பார். ஜாதகியானால், அவளின் கணவர் எதிரிகளால் தொல்லைகளை அனுபவிப்பார். அத்துடன் வாகனங்கள் தொடர்பான கஷ்டங்களை, சிக்கல்களை அனுபவிப்பார்.
         கோசார கேது - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது ஜாதகரின் சகோத்தரர் ஒருவர் கவலைகளும், கஷ்டங்களும் ஏற்பட்டி அல்லல் படுவார். ஜாதகருக்கு நரம்புத் தளர்ச்சியும், பொதுவாக உடல் பல மின்மையும் ஏற்படும். ஜாதகியானால், அவள் கணவருக்கு பணியிடத்தில் மோசமான, விவகாரமான நிலைகள் ஏற்பட்டு, மிகுந்த கஷ்டங்களை, தொல்லைகளை அனுபவிப்பார்.  
ஜனன ஜாதகத்தில் புதன் இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –
         கோசார சூரியன் - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகரின் தந்தைக்கு பூமி இலாபமும், வர்த்தகத் துறையில் வெற்றிகளும் கிடைப்தோடு, நெருங்கிய இனியவர்களுடன் சந்திப்பும் நிகழும். ஜாதகியாகி, புதன் வக்ரநிலையில் இருந்தால் அவளுக்கு ஆண் நண்பருடன் சேர்க்கை ஏற்படும்.
        கோசார சந்திரன் - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகருக்கு வாணிபத்தில் பண நஷ்டம் ஏற்படும். கோள் சொல்பவர்களால் கஷ்டங்களை அனுபவிப்பார். உச்ச புதன் ஆகில் உயர்ந்த சமூகத்தில் உள்ள பெண்ணின் நட்பு  ஏற்பட்டு ஜாதகர் கஷ்டப்படுவார். புதன் விருச்சிகத்தில் இடம் பெற்றால் கீழான நபர்களின் கூட்டால் ஜாதகர் இன்னலுறுவார். மேலும், வஞ்சகம், சூதுகளால் நில விஷயத்திலோ அல்லது மனை ஆகியவற்றில் பிரச்சனைகளை சந்திப்பார், ஜாதகியானல் அவர் யூட்ரின் பிரச்சனையால் பாதிப்பு அடைவார்.
        கோசார செவ்வாய் - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகர் எதிரிகளால் தொல்லைகள் ஏற்பட்டு துன்புறுவார். அமைதியின்மை, இரத்த உறவுகளுடன் வாக்குவாதம், சண்டை ஆகியவை ஏற்படும். மன அமைதியின்மை, இரத்த உறவுகளுடன் சண்டை சச்சரவு, வாக்குவாதம் ஆகியவையும் ஏற்படும். அவரின் இனிய நண்பர்களே எதிரியாவர். ஜாதகியானால், அவளின் கணவன் தனது நெருங்கிய நண்பர்களை சந்திப்பார். ஜாதகத்தில் புதனுடன் சூரியன் இருந்தால் இந்த பலன்களில் சிறிது மாறுபாடுகள் இருக்கும்.
        கோசார குரு - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகர் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்வார். ஜாதகரின் வீட்டில் உள்ள இளைஞர்களுக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும். கல்வி தொடர்பான நிலைகளில் கௌரவமும், புகழும் கூடும். அறிஞர்களின் மற்றும் அறிவார்ந்த ஆசிரியர்களின், குருவின் ஒத்துழைப்புகளும் கிடைக்கும். ஆன்மிகத் தலங்கள் ஆலயங்கள் ஆகியவற்றுக்கான புனித பயணங்கள் ஏற்படும்.  
         கோசார சுக்கிரன் - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகருக்கு புதையல் கிடைக்கும். இனிய சுற்றுலாப் பயணங்கள் செல்வார். பூமி, வீடு ஆகியவற்றில் முன்னேற்றம் இருக்கும்.  இது போன்ற அனுகூலமான, சந்தோஷ நிகழ்வுகளும் நிகழ்வதோடு ஜாதகரின் மனைவிக்கு பூமி இலாபம், சொத்துக்கள் சேர்க்கை ஆகியவை ஏற்படும். 
         கோசார சனி - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகருக்கு பூமி இலாபம் ஏற்படும். புதிய வணிக நிறுவனத்தை ஆரம்பிப்பார். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தினரால் அனுகூலமான நிலை உருவாக்கப்படும். தொழில் விஷயத்தில் சுலபமான, எளிதான வழிகளில் செல்ல முடியும்.   
         கோசார இராகு - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகருக்கு மனப்பிரமை மற்றும் மனோபயத்துடன் கூடிய கூடுதல் அறிவு உருவாகும்.  வீட்டில் உள்ள இளைஞர்களுக்கு சிறிதளவு உடல் ஆரோக்கியக் குறைவுகள் ஏற்படலாம். தோல் வியாதி ஏற்படும். சில காலத்துக்கு வீட்டை துக்க மேகங்கள் சூழும். ஜாதகருக்கு விலைமதிப்பு மிக்க கார் போன்ற வாகனங்கள் வாங்கும் நிலை ஏற்படும்.
         கோசார கேது - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகருக்கு எதையும் கிரகிக்கும் தன்மைகளில் சிறிது தடைகள் ஏற்படும். தன்னை உணருதல் மற்றும் சட்டபூர்வமான விஞ்ஞானம் போன்ற விஷயங்களில் புதிய அனுபவங்கள் ஏற்படும். ஜாதகரின் இளைய சகோதரி தனது உடலில் சிறிது ஆரோக்கியமற்ற நிலையை உணர்வார். இவரது நிலங்கள் வேலி போட்டு அடைக்கப்பட்டிருக்கும். இவர் எழுதிய புத்தகங்களும் வெளியிடாமல் தடைபட்டிருக்கும்.


Tuesday, June 5, 2018

திருமணம்




திருமணம்



ஜாதகம் – 2
         7 ஆம் பாவம் 7 ஆம் வீடான கும்பத்தில் வர்கோத்தமமான கேது அமர்ந்துள்ளார். கேதுவை, 7 ஆம் அதிபதி சனி, சுபரான குரு, சுக, பாக்கியாதிபதியும், யோக காரகருமான செவ்வாய் ஆகியோரால் பார்க்கப்படுகிறார். 7 ஆம் அதிபதி சனி, 7 ஆம் பாவமான தனது வீட்டையே பார்ப்பது ஒரு ஸ்திரமான நிலையாகும். குரு, மற்றும் செவ்வாய் தற்காலிக சுபர்கள் ஆதலால், அவர்களின் பார்வை 7 ஆம் இடத்தை பலப்படுத்துகிறது. கேது, செவ்வாயின் பலனையோ அல்லது இடம் கொடுத்தவரான சனியின் பலனையோ தரவல்லது. எனவே, 7 ஆம் இடத்தைப் பொருத்தவரை எந்தவித பாதிப்பும் இல்லை.
         7 ஆம் அதிபதி 7 ஆம் அதிபதி  சனி, சுப இராசியான ரிஷபத்தில், தசம கேந்திரத்தில் சுபகர்த்தாரி யோகத்தில், ஒரு புறம் சந்திரனும், மறுபுறம் குரு, சுக்கிரன் என, நடுவில் அமர்ந்துள்ளது. எனவே, 7 ஆம் அதிபதியின் நிலையும் சிறப்பு.
         களத்திரகாரகன் நட்பு இராசியில் சுக்கிரன், குருவுடன் இணைந்து உள்ளார். அவர் சனி மற்றும் சூரியன் இருவருக்கிடையே பாபகர்த்தாரியில் இருந்தாலும், குருவின் இணைவு சமன் செய்து விடுகிறது. மேலும், சூரியனும் சனியும், முறையே இலக்னம் மற்றும் 7 ஆம் அதிபதிகளாகி பாவத்துக்கும், காரகருக்கும் நல்ல பலனையே அளிக்கிறார்கள்.
        7 ஆம் அதிபதி சுப இராசியில் இடம் பெற்று நன்நிலையில் இருப்பதால் ஜாதகருக்கு அழகிய மனைவி அமைவாள். 7 ஆம் இடமும் நன்னிலையில் இருப்பதால், மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை அமையும். 7 இல் கேது நன்மை செய்தாலும், மனைவியின் நுண்வுணர்வு காரணமாக இருவருக்கும் இடையே சில நேரங்களில், சிற்சில எண்ண பேதங்களை உருவாக்கத்தான் செய்யும்.
       

சந்
சனி
குரு,
சுக்


குரு
சுக்
லக்
செவ்,
சந்,சனி
கேது
ஜாதகம் - 2
இராசி
03-8-1942-
காலை 7-23 -13°வ 00’,77° கி 35’
சூரி
புத
கேது


   நவாம்சம்


லக்,
செவ்
ராகு

இராகு




சூரி,புத





கேது தசா இருப்பு – 2 வ – 0 – 7 மா.
       இவருக்குத் திருமணம் 1972 ஆம் வருடம் சந்திர திசை, சந்திர புத்தியில் நடந்தது. 1). 7 ஆம் அதிபதிக்கு இடம் கொடுத்த இராசி, நவாம்சாதிபதி – சுக்கிரன், புதன்.  2). சுக்கிரன் 3). சந்திரன். 4). 2 ஆம் அதிபதி இடம்பெற்ற இராசி அதிபதி = சந்திரன் 5). கர்மாதிபதி = சுக்கிரன். பாக்கியாதிபதி = செவ்வாய் 7) 7 ஆம் அதிபதி, 7 இல் உள்ள கிரகம் மற்றும் 7 ஆம் வீட்டைப் பார்வை செய்யும் கிரகங்கள் = சனி, கேது, செவ்வாய், குரு ஆகிய தசா காலங்கள் திருமணத்தைத் தரவல்லன. புதன் தசை நடக்காது. செவ்வாய். சனி காலங்கள் மிகவும் தாமதமாகும். சனி 7 ஆம் அதிபதி ஆவதால் திருமணத்தைத் தாமதப்படுத்தமாட்டார். எனவே, ஜாதகருக்கு சந்திர தசை சுயபுத்தி திருமணத்திற்கு சாதகமானது.
ஜாதகம் – 3
        7 ஆம் வீடு – அதன் அதிபதி சுக்கிரன் மற்றும் பாக்கியாதிபதி சூரியனால் பார்வை பெறுகிறது. 7 இல் எந்த ஒரு கிரமும் இல்லை.
        7 ஆம் அதிபதி7 ஆம் அதிபதி சுக்கிரன் இலக்னத்தில் பாக்கியாதிபதி சூரியனுடன் உள்ளார். சூரியன் அசுபரானாலும், ஆட்சி வீடான தசம கேந்திராதிபதியாகி தற்காலிக சுபராகிவிடுகிறார்.
        களத்திரகாரகன் – இயற்கை சுபரான சுக்கிரன் பூர்வ புண்யாதிபதி மட்டுமன்றி, களத்திர பாவாதிபதியும் ஆகிறார்.
         சந்திர இராசியில் இருந்து பார்க்கும் போது – 7 ஆம் இடம் மேஷம், 10 ஆம் இடத்து அதிபதி சந்திரனாலும், 9 ஆம் மற்றும் 12 ஆம் அதிபதி புதன், யோக காரகன் உச்ச சனி மற்றும் 7 ஆம் அதிபதி செவ்வாயால் பார்க்கப்படுகிறது. களத்திராதிபதி செவ்வாயின் பார்வை நல்லது என்றாலும் விரய பாவத்துக்கும் அதிபதியாகி சில பாதிப்ப தந்தாலும், 9 ஆம் அதிபதி மற்றும் உச்ச சனி ஆகியோரின் கூட்டுப் பார்வை சக்தி மிக்கதாகி பாதிப்பினை சரி செய்துவிடுகிறது.
         ஆய்வுக் கருத்து இந்த ஜாதகர் காமவுணர்வும், அர்பணிப்பு உணர்வும் உடைய பெண்ணை மனைவியாகப் பெற்றார். இது 7 ஆம் அதிபதியும், காரகனுமான சுக்கிரன், தனது பாவத்தைப் பார்வையிடுவதால் உறுதியாகிறது அல்லவா ?
        இந்த ஜாதகருக்கு மே - 1977 இல் திருமணம் நடந்தது. கீழ்கண்ட                                       கிரகங்கள் திருமணத்துக்கு சாதக நிலைகளை தரக் கூடியவை ஆகும். 1). இராசி மற்றும் நவாம்சத்திலும் 7 ஆம் அதிபதிக்கு இடம் கொடுத்தவர்கள் = செவ், சூரியன். 2). சுக்கிரன் 3) சந்திரன் 4) 2 ஆம் அதிபதிக்கு இடம் கொடுத்தவன் = புதன் 5). கர்மாதிபதி = சூரியன். 6). பாக்கியாதிபதி – சந்திரன். 7) 7 ஆம் அதிபதி சுக்கிரன், 7 இல் கிரகம் இல்லை, 7 ஆம் இடத்தைப் பார்க்கும் கிரகங்கள் = சூரியன்.




குரு



சந்


புத

ஜாதகம் -3
இராசி
03-4-12-1953-
காலை 5-17 –
13° 00’,77° கி 35’
கேது
இராகு


   நவாம்சம்
லக்
இராகு

சனி
சுக்,
கேது

லக்,சுக்
சூரி
சனி,சந்
புத
செவ்
சூரி,


குரு
செவ்
       
குரு தசா இருப்பு – 14 வ – 1 மா – 20 நாட்கள்
 
        மேலே கண்டவற்றில், புதன் திசை சரியான காலமாக இருந்தாலும் அது மிகவும் தாமதமாக 33 வது வயதில் வருகிறது. இந்த ஜாதகத்தில் திருமண தாமதத்திற்கான காரணிகள் ஏதுமில்லை. எனவே, புதனுடன் தொடர்புடைய கிரகங்களான, சந்திரன், சனியை அடுத்ததாக எடுத்துக் கொண்டாலும், சந்திர திசை தாமதமாகவும், சனி திசை இளமையிலும் வந்துவிடுகின்றன. எனவே, 7 ஆம் வீட்டு அதிபதி மற்றும் களத்திரகாரகன், 7 ஆம் இடத்தை பார்வை செய்பவனான சுக்கிர புத்தியில் பழம் பழுக்கலாம். ஆம், ஜாதகருக்கு சனிதிசை, சுக்கிர புத்தியில் திருமணம் ஆனது.


கிரகங்களுக்கான காரகத்துவங்கள் – சுருக்கமாக







         கிரகங்களுக்கான காரகத்துவங்கள் – சுருக்கமாக



சூரியன் – தந்தை, அரசாங்கம், மகன், ஒளிமிகுந்த, அரசியல்வாதி, அரசன்,
சந்திரன் – தாய், தண்ணீர், தோழி, அசைவு, வெள்ளை, பெண், வஞ்சகம், மோசம்,            பால், கலை, பெண்ணின் மாமியார்,
செவ்வாய் – சகோதரன், எதிரி, அம்பு, கூர்மையான ஆயுதம், தீ, ஆண், சிகப்பு,               படைவீரர், பிடிவாத குணம்.
புதன் – சகோதரி, சகோதரன், பெண், நண்பன், தாய் மாமன், விஷ்ணு, கல்வி,                புத்திசாலித்தனம், நிலம் சொத்து, பச்சை.
குரு – ஆசிரியர், குரு, கௌரவம், மதிப்பு மிக்க, வாழ்க்கை , ஜீவன், இரக்கம்,                அந்தஸ்தை அளிப்பவர், மதபோதகர்.
சுக்கிரன்- பெண் கிரகம், மனைவி, சகோதரி, பொருளாதாரம், வசிப்பிடம், அழகான           உருவம், இனிய குரல்,
சனி – தொழில், புரஃபஷன், மூத்த சகோதரன், கருப்பு,
சனி + இராகு – இறந்தவர்களுக்குச் செய்யும் இறுதிச் சடங்குகள்.
சனி – கேது – பட்டாபிஷேகம். பதவியேற்பு, கடமையாற்றும் போது விலகுதல்               பிரிதல்.
இராகு – வாய், முகமதியர், கோபுரம், முட்டை வடிவம், தனித்த அல்லது பாழான            பகுதி, அகன்ற பாதை, வட்டம், வட்ட வடிவம், தந்தை வழி பாட்டனார்,              படுக்கை, தலை, இருட்டு, மனத்தோற்றம், விஸ்தாரமான,                           காலபுருஷனின் வாய்.
கேது – ஜெனரேட்டிவ் ஆர்கன், மயிர், கிருத்துவர், சந்து, நூல், நரம்பு தளர்ச்சி, வக்கீல், தடைகள், வேர், வால், விடுதலை, கயிறு, ஜலதாரை, சாக்கடை, அழிந்த, பாழான, இடிந்த, வயதான, சிறிய, குளியலறை, செயின், நீதிமன்றம், வெப் அல்லது நெட்டில் சிக்குதல்.
         உதாரணம் – ஒரு ஜாதகத்தில் புதன் + கேது இணைவு ஜாதகர் இளமையில் காதலித்து இருப்பார் என்பதைக் குறிகாட்டுகிறது. அடுத்து ஜாதகரின் நண்பன் பிரச்சனையில் இருக்கிறான் என்பதையும் குறிகாட்டும். ஜாதகர் பூமி விஷயமான வழக்கு விவகாரங்களில் சிக்கி இருப்பதையும் குறிகாட்டுகிறது.
ஜனன ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –
         கோசார செவ்வாய், ஜனன சூரியனைக் கடக்கும் போது மனதில்        கோசார சந்திரன், ஜனன சூரியனைக் கடக்கும்போது ஜாதகரின் தந்தைக்கு ஏற்படும் பொருளாதார இலாபத்தையும், அவருக்குப் பயணம் ஏற்படும் என்பதையும் குறிகாட்டுகிறது.
படபடப்பு, பிடிவாதம், கோபத்தால் ஏற்படும் கஷ்டங்கள், தொழிலில் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள்  ஆகியவை ஏற்படும். பெண் ஜாதகமானால் கடக்கும் போது அவள் கணவன் கர்வம் மிக்கவனாக நடந்து கொள்வான். ஆண் ஜாதகம் எனில் ஜனன சூரியனை கோசார செவ்வாய் கடக்கும் போது ஜாதகரின் மகனுக்கு கூர்மையான ஆயுதங்களால் காயம் ஏற்படும்.
         கோசார புதன் - ஜனன சூரியனைக் கடக்கும் போது நண்பனின் உதவி தந்தைக்குக் கிடைக்கும். அத்துடன் பூமி வகையிஅல் முன்னேற்றங்கள் இருக்கும்.
         கோசார குரு - ஜனன சூரியனைக் கடக்கும் போது மத குருமார்களை சந்திக்கும் வாய்ப்பு தந்தைக்கு ஏற்படும்.  மேலும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் மதிப்பு மிக்க மனிதர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
         கோசார சுக்கிரன் - ஜனன சூரியனைக் கடக்கும் போது தந்தைக்கு பொருளாதார வகையில் இலாபங்கள் கிடைக்கும். மேலும், நுண்ணிய, அழகிய  உருவமுடைய அழகுப் பொருட்களும் கிடைப்பதோடு, ஒரு பெண்ணின் சந்திப்பும் ஏற்படும்.
        கோசார சனி - ஜனன சூரியனைக் கடக்கும் போது ஜாதகரின் தந்தைக்கு மனவருத்தம், சஞ்சலம், அமைதியின்மை ஏற்படும். தொழில் இடத்தில் ஆபத்துக்கள் ஏற்படும். தந்தை மற்றும் மகனுக்கிடையே வழக்கு விவகாரங்கள் ஏற்படும் முன்னறிவிக்கிறது. மேலும், ஜாதகரின் தந்தைக்கு தொழில் இடத்தில் புதிதாக வந்தவர் மூலமாக ஏற்படும், ஆபத்துக்களை குறிகாட்டுகிறேன்.
           கோசார இராகு - ஜனன சூரியனைக் கடக்கும் போது ஜாதகரின் தந்தைக்கு                      சோம்பேறித்தனத்தைக் கொடுக்கிறது. மேலும், தந்தைக்கு கண் ஒளி மங்குவதோடு, தீயசெய்திகள் அவரின் காதில் விழும்.
         கோசார கேது - ஜனன சூரியனைக் கடக்கும் போது ஜாதகர் ஆன்மிக விஷயங்களைப் படிப்பதோடு, புனிதமான பெரிய மனிதர்களை சந்திப்பதைக் குறிகாட்டுவதோடு, ஜாதகரின் தந்தை தெய்வீகத் தன்மை கொண்ட சிந்தனைகளை மேற்கொள்வதோடு துறவு பூணவும் நினைப்பார்.
ஜனன ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –
         கோசார சூரியன் - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகரின் தந்தை தேவையற்ற பழியைச் சுமப்பதோடு, பயணங்களையும் எதிர்பார்க்கலாம்.
         கோசார செவ்வாய் - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகரின் தாய்க்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படும். சகோதரனுக்கு பயண வாய்ப்புகள் வரும். ஜாதகருக்கு மனக்கவலைகள் ஏற்படும். ஜாதகர் விரைவான மற்றும் அடிக்கடி மாறுகின்ற, சலனப்புத்தி உடையவராக இருப்பார்.
         கோசார புதன் - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகர் குற்றம் சாட்டப்படுவார். அவருக்குப் பெண்களால், தோழிகளால்  மன அமைதியின்மை, வருத்தம் ஆகியவை ஏற்படும். சிறு பயணங்களும், கலைத்துறை மூலமான இலாபங்களும் ஏற்படும்.
         கோசார குரு - ஜனன சந்திரனைக் கடக்கும் போது இருப்பிட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. மறைமுக எதிரிகளின் மூலமாக குற்றம் சாட்டப்படுவார். தெய்வீக தனமையுடைய சிந்தனைகள் ஜாதகரின் தாய்க்கு ஏற்படும். சளி, இருமல் காரணமாக ஆரோக்கியக் குறைவும் ஏற்படும்.
         கோசார சுக்கிரன் - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகரின் மனைவிக்கோ, மகளுக்கோ ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். குடும்பத்தில் பெண்களுக்கு இடையே சண்டை சச்சரவுகள், வழக்கு விவகாரங்கள் ஆகியவை ஏற்பட்டு அதன் காரணமாக மனமைதியும் குறையும். ஜாதகருக்கு தேவையற்ற செலவீனங்களும், பண இழப்புகளும் ஏற்படும்.
         கோசார சனி - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகருக்கு தொழில், பணி மாற்றங்கள் ஏற்படும். மனதைப் புண்படுத்துகிற நிகழ்வுகளும் ஏற்படும்.
          கோசார இராகு - ஜனன சந்திரனைக் கடக்கும் போது தாய்க்கு ஆபத்துகள் ஏற்படும். ஜாதகருக்கு மன பிரமை மற்றும் பயம் ஏற்படுத்தும் அளவுக்கான நிகழ்வுகள் ஏற்படும்.
          கோசார கேது - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகருக்கு தெய்வீக சிந்தனைகள் ஏற்படும். புனித நீராடல்கள் ஏற்படும். ஜாதகரின் தாய்க்கு உடலில் உபாதைகள், அசௌகரியங்கள் ஆகியவை ஏற்படும்.

Tuesday, May 29, 2018

ஒரே திசை கிரகம் தரும் பலன்கள்.


ஒரே திசை கிரகம் தரும் பலன்கள்.





ஜாதகம் – 20
சந்,சனி



கேது
செவ்,சூரி
புதன்
குரு (வ)

உ. ஜா. 20
சுக்





இராகு




         இந்த ஜாதகத்தில் (20) கடக சுக்கிரன் அழிவற்ற அன்னையையும், விருச்சிகம், மீனம் மற்றும் கடகம் ஆகியவை வடதிசையையும், இராகு, சந்திரன், சனி மற்றும் சுக்கிரன் ஆகியோர் இந்த இராசிகளிலும் இருக்கின்றனர். ஜீவன் காரகன் கடகத்தில் உள்ளார். அவர் வக்ர குருவின் 7 ஆம் பார்வையாக சுக்கிரன் மகரத்தில் இருந்து பெறுகிறார். சுக்கிரன் + சந்திரன் +சனி + இராகு ஆகிய கிரக இணைவுகள் அழிவற்ற அன்னையை அல்லது இந்து கதைகளில் வரும் இறைவி தேவியைக் குறிக்கிறது. தெய்வீக கிரகம் வக்ர குருவின் பார்வை மனைவிக்கான காரகன் சுக்கிரன் மீது விழுகிறது. அதனால் இந்த ஜாதகரின் திருமணம் புனிதமான இடத்தில் அதாவது கோவிலில் நடந்தது என்பதைக் குறிகாட்டுகிறது. சமஸ்கிருதத்தில் “விவாகோ மங்களம் திவ்யம் தேவ சன்னிதி ந சந்தேகம்” – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஜாதகரின் புனித திருமணச் சடங்குகள் சந்தேகமின்றி கடவுள் சன்னிதியில் நடத்தப்பட்டது என்பதே அதற்கான அர்த்தமாகும்.
         இந்த உதாரணங்களின் மூலமாக நாடி ஜோதிடத்தில் ஜாதக ஆராய்ச்சிக்கு இராசிகளின் திசைகள், ஒரு கிரகத்துக்கு 5 ஆம் பாவம் ஆகியவையும் கிரகங்களின் பலமும் முக்கியமாகக் கருதப்படுகின்றன.
ஜாதகம் – 21
சூரி


புத
சுக்



உ. ஜா. 21
கேது

இராகு


சனி, சந்
குரு
செவ்



இந்த ஜாதகத்தில் (21) திசைப்படி வரிசையாக உள்ள கிரக நிலைகள்.


கிழக்கு
புத,சனி
சந்திரன்


வடக்கு
சூரி,குரு
கேது

தெற்கு
சுக்கிரன்
இராகு

செவ்வாய்
மேற்கு



ஜாதகம் – 22
சந்,சனி



கேது
செவ்,சூரி
புதன்
குரு (வ)

உ. ஜா. 22
சுக்





இராகு




ஜாதகம் 21 ஐ போல் 22 ஐ யும் கிரகங்களை திசைப்படி வரிசையாக எழுதுவோம்.

கிழக்கு



வடக்கு
சனி,சந்
சுக்,
இராகு


தெற்கு
கேது



சூரி,புத
செவ்வாய்.
குரு
மேற்கு


         இவ்வாறாக, கிரகங்களை இராசிகளின் திசைப்படி வரிசைப்படுத்தி ஒவ்வொரு திசையிலுள்ள கிரகங்களின் படி பலன் எடுக்க வேண்டும் என “சப்தரிஷி பிரம்ம நாடி” யில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலும் அதே விதிகளே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
        இந்த முறைப்படி, இந்த ஜாதகத்தில் (22) ஜாதகரின் மனைவி காக்காய் வலிப்பு நோய் உடையவள். வடக்கு திசையிலுள்ள கிரகங்கள் சுக்கிரன் + சந்திரன் + சனி + இராகு. இந்த இணைவுகளில் சுக்கிரன் பாதிப்படைந்துள்ளதால் ஜாதகரின் தங்கையும் மகிழ்ச்சியாக வாழவில்லை, மனைவிக்கும் வலிப்பு நோய் உள்ளது என்பதே பலனாகும். சந்திரன் சளியையும், சனி வாய்வு மற்றும் சளி போன்ற நோய்களையும், சுக்கிரன் மனைவி மற்றும் தங்கையையும் குறிகாட்டுகின்றன.
        இவ்விதமாக நாம் ஒரேதிசை கிரகங்களையும், 5 ஆம் வீட்டில் உள்ள கிரகங்களையும் வைத்து பலன் உரைக்கவேண்டும். 5 ஆம் வீடு என்று சொல்லும்போது, ஒரு குறிப்பிட்ட கிரகத்திலிருந்து அதன் 5 ஆம் வீடு எனக் கொள்ளவேண்டும். இதுவரை ஜாதகங்களை கிரக பரிவர்த்தனை, வக்கிரநிலை, திசைப்படி கிரகங்கள் இடம்பெற்ற நிலை ஆகியவற்றின்படி ஆய்வு செய்தோம். இவை கோசார நிலையின்படி பலன் காண்பதற்கு முன் செய்யவேண்டிய நியதி ஆகும். முதலில் நாம் முன்னர் சொன்னபடி ஜாதகத்தின் அடிப்படை நிலைகளை புரிந்த கொண்ட பின்னரே ஜாதகத்தில் கோசார நிலையை வைத்துப் பலன் பார்க்க வேண்டும்.
         ஒரு பிறப்பு ஜாதகத்தில் எந்தவிதத்தில் அவ்வப்போது இடைவெளி விட்டு கோசார கிரக அடிப்படையில் பலன் காணும் முறைகள் - 
        முதலில் நாம் கிரகங்களின் காரகத்துவங்களை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஜனன ஜாதகத்துக்கும், கோசார நிலையிலும் கிரகங்களுக்கான காரகங்கள் சிறிது மாறுபடும். உதாரணமாக, ஒரு குழந்தைக்கு 6 அல்லது 7 வயதாகும் போது அது திருட்டு, திட்டுதல் என பல தவறுகளை, குற்றங்களை செய்தாலும் அது புரியாமல், அறியாமல் செய்த குற்றங்கள் ஆதலால் அதற்கு தண்டனை அளிக்க முடியாது. அதுவே 18 வயதில் அவனுக்கு அதன் பாதக நிலைகள் தெரியும் ஆதலால் அவன் நியாயத்துக்கும், தருமத்துக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
        அதேபோல் ஒரு பெண் குழந்தையாய், அழகாய் பார்க்கும் போதே கொஞ்ச வேண்டும் என்று இருக்கும் போது அதைக் கொஞ்சினால் எவரும் அதை தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அதுவே, வளர்ந்து பெரியவளான பின் அவ்வாறு அத்தகைய சுதந்திரத்தை எடுத்துக் கொள்ள முடியாதல்லவா ? அதைப் போன்றே கிரகங்களும் கோசாரத்திற்கு வரும்போது மாறுபட்ட குணாதிசயங்களை ஜனன ஜாதக இராசிகளில் வெளிக்காட்டுகிறது.
         கோசாரத்தில் இந்த மாறுபாடுகள் முதல்முறை வரும்போது அதன் தாக்கங்கள் சாதாரணமானதாகவும், 2 வது முறை ஜாதகரின் இளமைக் காலத்தில் நகரும் போது அதன் தாக்கம் அதிகபட்சமானதாகவும், அதுவே மூன்றாவது முறையாக ஜாதகரின் முதுமைக் காலத்தில் கோசார கிரக தாக்கம் நடுத்தரமாகவும் இருக்கும். வருஷ கிரகங்களான குரு, சனி ஆகியவற்றின் கோசாரம் இந்த மூன்று வித வயதுகளில் முதலாவது குழந்தைப் பருவத்திலும், 2 வது இளமையிலும், 3 வது முதுமையிலும் ஆக பலன் மாறுபட்டுக் கொடுப்பதே இதற்குக் காரணமாகும்.
        இதை மனித குணத்தோடு ஒப்பிடும் போது ஒரு தம்பதிகளை எடுத்துக் கொண்டால் திருமணத்துக்கு முன் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறியாதவர்கள், எனவே பேசும் போது கூட எச்சரிக்கையுடன், பார்த்துப் பேச வேண்டும். திருமணத்துக்குப் பின் அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகி எந்தவித தயக்கமும் இன்றி கண்ணே! மணியே! எனக் கொஞ்சத் தடையில்லை அல்லவா? அவர்களே முதுமை அடையும் காலத்தில் பொது இடத்தில் அதிக நெருக்கத்தைக் காட்டமுடியாத சூழ்நிலை எழும். ஒழுக்கத்தையும் பேணவேண்டும் அல்லவா ? இதுபோல் கோசார கிரகங்களும் வயதுக்கு தக்க தாக்கத்தை மாறுதலாகத் தரும். கோசார கிரகங்களின் தாக்கத்தால் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் இன்பமாகவோ, துன்பமாகவோ அமையும் என்பது நிச்சியம்.
        இந்து திருமணங்களில், குடும்பத்தினர், திருமணத்தை நடத்தி வைக்கும் ஆச்சாரியார், உறவுகள், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவரும் சுற்றி நிற்க மாவிலை, தோரணங்கள், மலர்களாலும் சிறப்பாக, அழகாக அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் மணமகனும், மணமகளும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நடுவில் நின்றிருப்பர். தீர்மானிக்கப்பட்ட முகூர்த்த நேரத்தில் ஆச்சாரியார் (குரு) ஒரு வெள்ளைத் திரையை (கேது) மணமகன் (செவ்வாய்) மணமகள் (சுக்கிரன்) இருவருக்கும் நடுவில் பிடிப்பார். பின்னர் வேத மந்திரங்கள் முடிந்த பின்னர் திரையை விலக்குவார். மங்கல நாண் கட்டி மாலை மாற்றி தம்பதிகளாவர். இதைப் போலவே கிருத்துவர்கள் பங்குத்தந்தை முன் (குரு) விரலில் மோதிரம் (கேது) மாற்றிக் கொண்டும், உறுதி மொழி மேற்கொண்டும் கணவன் மனைவியாவர்.
       முகமதியர்கள் மௌல்வி (குரு) முன் அவர்கள் குல வழக்கப்படி புனித குரான்படியும் தம்பதிகளாக இணைவர்.  எனவே, திருமணத்தைப் பொறுத்தவரை குருவின் பார்வை, சேர்க்கை ஆகியவை எவ்வளவு முக்கியம் என்பதை அறிகிறோம். இதுவே, மனித வாழ்க்கை நிகழ்வுகளில் கிரக காரகத்துவங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை உணர்த்துகிறது.