Friday, May 11, 2018

நாடியில் ஜாதக ஆய்வு



நாடியில் ஜாதக ஆய்வு



ஜாதகம் - 2

        ஜாதகத்தில்  செவ்வாய் உச்சம் அதற்கு 12 ஆம் வீட்டில் பகைவன் இராகு 2 இல்  மரண அடி மகாதேவர்களாக செவ்வாயின் இரண்டு எதிரிகள் சனியும்  புதனும் உள்ளனர்.  எனவே, ஜாதகருக்கு உதவமுடியாத வகையில் செவ்வாயின் கரங்கள் முழுவதுமாக கட்டப்படுள்ளன.


சூரி
சந், சுக்

கேது
புத, சனி
உ. ஜா. 2

செவ்

இராகு
குரு



         இதன் காரணமாக ஜாதகரின் சகோதரர் மிகப் பெரிய ஆபத்தில்,உயிருக்குப் போராடும் நிலைக்குத்தள்ளப்பட்டார்.  இது ஒரு ஜாதகியானால் அவளின் மற்றுமொரு சகோதரரும், கணவரும் இணைந்து இந்த மாதிரியான துயர நிலையில் இருந்து மீண்டு நல்வாழ்க்கை வாழவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது..
         ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் நீசமான போதும் அனுகூலமான, நல்ல நிலையில் கிரகங்கள் இருக்கும் போது நல்ல பலன்களையே அளிக்கின்றன.

ஜாதகம் - 3

         உதாரணமாக ஜாதகம் 3 இல் ஜீவன காரகன் குருநீசம். ஆனால், அவர் ஆத்ம காரகன் சூரியனுடன் இணைந்தள்ளார். எனவே, ஜாதகரின் வாழ்க்கை பிரபஞ்சத்தின் உயர்ந்த ஆத்மாவோடு இணைந்துவிட்டது. அதன் காரணமாக குரு நீசபங்கமாகிறார்.  சூரியனும், சனியும் பரிவர்த்தனை பெற்றுள்ளனர். இது சனி, சூரியன் மகரத்தில் இணைந்து உள்ளதற்கு சமம் ஆகும். (தொழிலும் + வாழ்க்கையும்). இதன் காரணமாக ஜாதகர் வேலையில் தன்னுடன் பணியாற்றும் நண்பரின் உதவியை, முழு ஒத்துழைப்பை பெறுவார். நண்பனால் தன் பணியிடத்தில் இராஜ மரியாதை, ஒத்துழைப்பைப் பெற்று உயர்கிறார். இதற்கு முழுமுதற் காரணமே சனியுடன் பரிவர்தனை பெற்ற சூரியனால் நீசபங்கமான குரு என்பதே உண்மை.       

இராகு





உ. ஜா. 3

குரு,
சூரி
சனி



கேது
சந்

ஜாதகம் - 4
          உதாரண ஜாதகம் - 4  - மகரத்தில் சந்திரன், புதனுடன் இணைந்த குருவும், கும்பத்தில் சுக்கிரன், சூரியன், செவ்வாய் ஆகியோர் உள்ளனர். இந்த 6 கிரகங்களையும் பாகைப்படி வரிசைப்படுத்தும் போது குரு + சந் + புதன் + சுக் + சூரி + செவ் எனவும் அதற்குப் பிறகு இராகுவையும் + சனி + கேது என வரிசைப்படுத்த வேண்டும். இதில் சனி வக்கிரம் பெற்று இராஜகிரகமான சூரியனின் வீட்டில் அமர்ந்து இராகு கேதுக்களுக்கு இடையே மாட்டிக் கொண்டார். ஜீவன் காரகன் குரு வெளியில் உள்ளார்.  இதன் காரணமாக ஜாதகர் தனது வாழ்க்கைக்கான சம்பாத்தியத்தை வெளிநாடு சென்றே ஈட்டுவார் எனத் தீர்மானம் ஆகிறது. இராகு – கேதுவுக்கு இடையே உள்ளது ஒரு நாடு என்றும் அதன் மற்றுமொரு பகுதி வெகு தூரமுள்ள வெறுவொரு நாடு எனவும் தீர்மானிக்க வேண்டும்.  வாழ்க்கையின் முதல் பகுதியில் ஜாதகர் வெளிநாடு சென்று சம்பாதிப்பார்.
         சிம்மத்திலுள்ள வக்ர சனி கும்பத்தில் உள்ள சூரியனுடன் பரிவரத்தனை பெற்றுள்ளார். சூரியன் கௌரவம் மிக்க மனிதரைக் குறிகாட்டும். ஜாதகர் தனது சொந்த ஊருக்குத் திரும்பும் போது பெற்றோர்களின் உதவியும், மிகவும் கௌரவம் மிக்க நபரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சனி சகோதரர்களையும் குறிக்கும். ஆதலால், அவரும் தூரதேசத்தில் உள்ளார் எனச் சொல்ல்லாம். சனி, சூரியன் கும்பத்தில் பரிவர்த்தனை ஏற்பட்டு, 12 ஆம் இடமான மகரத்தையும் பார்க்கிறது. நீச குரு ஜாதகரைக் குறிக்கும். அவருக்குக் கிடைக்கும் நண்பனின் ஒத்துழைப்பு, உதவிகளைக் குறிப்பது சனியாகும். இதனால் குருவின் மோசமான விழைவுகள் குறைந்தது. அதுபோல் மகரத்தில் உள்ள குரு கும்பத்திலுள்ள சனியைப் பார்ப்பதால் ஜாதகர் சமூகத்தில் மிகப் பெரிய கௌரவத்தை அடைவார்.
        எந்த ஒரு ஜாதகத்திலும் குருவும், சனியும் அருகருகே உள்ள இரு இராசிகளில் இருக்க ஜாதகர் கௌரவம் மிக்க தொழிலில்  இளமையிலேயே இறங்கிவிடுவார்..



இராகு


செவ், சூரி
சுக்
உ. ஜா. 4

புத,சந்
குரு
சனி(வ)


கேது


         இந்த ஜாதகத்தில் பரிவர்த்தனை காரணமாக சூரியன் சிம்மத்தில், குழந்தையைக் குறிக்கும் சூரியன் இராகு கேதுவுக்கு இடையே இருக்கிறார். இதன் காரணமாக குழந்தைப் பிறப்பு ஏற்படுவதில் சிக்கல்கள் இருக்கும். பிறந்தாலும் உயிரோடு இருப்பது சந்தேகமே. ஜாதகருக்குப் பிறந்த மகனும் சில காலமே உயிரோடு இருந்தான்.
         சுக்கிரன், செவ்வாய், சூரியனுக்கு அடுத்து உள்ளான். இவர்கள் முறையே நெருப்புக்கும், புத்தி கூர்மைக்கும் உரியவர்கள் ஆவர். இரு கிரகங்களுமே நெருப்பை மூலகமாகக் கொண்டவர்கள். சுக்கிரன் மகள், தாயரைக் குறிகாட்டும். அவர்கள் சூரியன், செவ்வாயுடன் கூடும் போது அவர்கள் அடிக்கடி உடல் ஆரோக்கியம் கெடுவதையும் அதனால் ஏறபடும் கஷ்டங்களையும் குறிக்கிறது. சுக்கிரன் முதல் நட்சத்திர பாதத்தில் அமைந்த்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் அதிக கஷ்டங்கள் இருக்காது.
        இந்த ஜாதகத்தில் கோசார செவ்வாய் கடக இராசிக்கு வரும் போது அவர் , சந்திரன், குரு, புதன் ஆகியோரை பார்வை செய்வார். பரிவர்த்தனையில் உள்ள சனியையும் பார்ப்பார். சனி, செவ்வாய் பகைவர்கள்.  சனி கர்மகாரகன். எனவே ஜாதகர் தொழிலில் வழக்கு விவகாரங்கள், பகைவர்கள் தொல்லை, கீழே விழுவதனால் ஏற்படும் காயங்கள் என பல வழிகளிலும் தொல்லைகளை அனுபவித்தார்.
        கோசார சனி மகரத்தைத் தொடும் போது, அதிலுள்ள குரு, சந்திரன், புதன் ஆகியோரில் முதலில் குருவைக் கடக்கும் போது ஜாதகருக்கு சமூகத்தில் கௌரவம் மிக்க பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பும், உதவிகளும் கிடைக்கும். பிறகு சந்திரனைக் கடக்கும் போது பிறரை வஞ்சிக்கும் கலையை கற்கிறார். இறுதியாக புதனை கடக்கும் போது ஜாதகரை தொழிலில் ஆர்வத்தைக் கொடுக்கிறது.
        சுருக்கமாகக் கூறினால் கோசார சனி மகரத்தைக் கடக்கும் போது ஜாதகர் கௌரவமான மனிதர்களின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன், நிச்சியம் இல்லாத, நம்பிக்கையில்லாத, சந்தேக மனதுடன் வர்த்தகம் சம்பந்தமான பயணங்களை மேற்கொண்டார்.
        கோசார சனி கும்பத்தை கடக்கும் போது முதலில் செல்வத்துக்குக் குறிகாட்டியான சுக்கிரனைத் தொடுகிறார். இதன் காரணமாக அவரின் 43 முதல் 45 வயதுகளில் பிறரின் பணங்கள் இவர் கைக்கு வந்து சேர்கிறது.

Thursday, May 10, 2018

நாடியில் பலன் உரைக்கும் பொது விதிகள்.





நாடியில் பலன் உரைக்கும் பொது விதிகள்.



         பொதுவாக கிரகங்கள் தங்கள் நட்பு, ஆட்சி, உச்ச வீடுகளில் இருக்கும் போது பலம் மிக்கவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
1.   ஆனால், அவை நட்பு, ஆட்சி, உச்ச வீட்டில் இருக்க அதற்குப் பின்போ அல்லது அடுத்தோ பகை கிரகங்கள் இருக்க அந்த கிரகம் தனது முழு சுப பலனை வழங்க இயலாது.
2.   பகை கிரகங்கள் பின்பும், அடுத்தும் இருக்கும் போது இந்த நட்பு, ஆட்சி, உச்ச கிரகம் நடுநிலை அல்லது சமநிலையில் செயல்பட்டு அதன் காரணமாக அவற்றால் நல்ல அல்லது தீய பலன்களை செய்ய முடியாமல் போகிறது. 
3.   ஒரு சுப கிரகத்தின் இரு புறமும் பகை கிரகங்கள் இடம் பெற, சுபக் கிரகம் தரும் சுபலன்கள் தடைப்படுகின்றன.
4.   வக்கிர கிரகம் இருக்கும் இராசிக்கு  அடுத்த இராசியில் அதன்  பகை கிரகம் இருக்க முதல் இராசியில் உள்ள கிரகம் (வ) பாதிப்பு அடைந்து அசுப பலனே தருகிறது.
5.   ஒரு வீட்டினால் ஏற்படப் போகிற நிகழ்வுகள் முதலில் எதிர் பாவம் மூலமாகவும், அதன்பின் அந்த பாவத்திற்கு முன் பின் இராசிகள் மூலமாகவும் நமக்கத் தெரியவருகிறது.  அதே போல் முதலில் 7 ஆம் பார்வை சக்தி மிக்கதாகவும் பிறகு 2 மற்றும் 12 ஆம் பார்வையும் பலம் பெற்றதாகவும் கருதப்படுகிறது.
6.   ஒரு கிரகம் உச்சமாகி, தனது உச்ச ஸ்தானத்தில் இருந்தாலும் அதற்கு 7, 2, 12, 5 ஆகிய பாவங்களில் கிரகங்கள் இல்லையெனில் அந்த கிரகம் தனது முழுப் பலனை தராது குறைவான பலனையே தரவல்லது.
7.   கிரகம் உச்சம், ஆட்சி, நட்பு அல்லது எந்த நிலையில் இராசியில் இருந்தாலும் அதற்கு 2, 5, 7, 12 ஆகிய இடங்களில் ஒன்றில் ஒரு கிரகமேனும் இருக்க அந்த கிரகங்கள் பலன்களைத் தரும்.
8.   இரு குறிப்பிட்ட இராசியில் இருக்கும் கிரகத்துக்கு 2, 5, 7, 12 கிரகங்கள் இல்லை எனினும் அது மற்றுமொரு கிரகத்துடன் பரிவர்த்தனை பெற்றால் அது செய்யும் மாயங்கள் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
9.   இரு கிரகங்களில் அஸ்தமனம் ஆன கிரகம் கூட பரிவர்த்தனை பெற வியக்கத்தக்க பலன்களை அள்ளி வழங்கும்.
10.   அஸ்தமனமான கிரகத்தொடு உள்ள கிரகம் நட்பு கிரகமானால் அஸ்தமனமான கிரகத்தின்  பாதிப்பு வெளித்தெரியாது.
11.  ஒரு கிரகம் உச்சமாகி வக்கிரமும் ஆனால் அதன் உச்ச நிலை நீங்கிவிடுகிறது. மேலும், உச்சமாகி, வக்கிரமான கிரகம் தனக்கு 12 இல் ஒரு பகை கிரகத்தைக் கொண்டிருந்தால் பயம் தரக்கூடிய உச்ச, வக்ல கிரகமாய் இருக்கும். அதே போல் உச்ச, வக்கிர கிரகம் தனக்குப் 2, 7, 12 இல் பகைக் கிரகத்தைப் பெற்று இருந்தால் உச்ச கிரகம் தனது உச்ச தன்மையில் முழுமை பெற்று இராது..
12.  12 பாவங்களில் எந்த ஒரு பாவத்தில் இருக்கும் கிரகத்துக்குப் 12 இல் அதன் பகை கிரகம் இருந்தால் இந்த இரு கிரகங்களுமே சுமாரான பலனையே தரும். ஆனால், இந்த 12 இல் இருக்கிற பகை கிரகம் வக்கிர கிரகம் ஆகி இருந்தால் அடுத்து உள்ள கிரகம் சுப பலன்களையே அளிக்கும்.
13.  இரு கிரகங்களில் அதிக பாகையில் நிற்கும்  கிரகம் பகை கிரகமாகி, வக்கிரமும் ஆனால், குறைந்த பாகை கொண்ட கிரகம் மிகச் சுமாரான பலன்களையே அளிக்கும்.
14.  பரிவர்த்தனை பெற்ற இரு கிரகங்களில் ஒன்று நீச கிரகமானால் பரிவர்த்தனை யோகத்தால் நீசம் பங்கமாகிறது.  அல்லது நீச கிரகத்துடன் நட்பு கிரகமோ, சுப கிரகமோ அமர்ந்தாலும் அல்லது அதற்கு 7 மற்றும் 5 ஆம் வீடுகளில்  கிரகம் இருக்கவும் அல்லது பார்வை செய்யவும் அந்த கிரகத்தின் நீசம் பங்கமாகும் என தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிட்ட விதிகளுக்கான விளக்கங்களைக் கீழே காணலாம். –

ஜாதகம் - 1

புத, சுக்
செவ்
சூரி,
இராகு



உ. ஜா. 1
குரு



சந்
சனி, கேது

  
       இந்த ஜாதகத்தில் (1) சூரியன் உச்சம் பெற்று இராகுவால் கிரகணமாகி உள்ளதால் தன் சக்திகளை இழந்து தேவையான பலனை தர முடியாதவர் ஆகிறார். (இதை சரிபார்க்க ஜாதகரின் கைரேகையைப் பார்த்தால் சூரிய மேட்டில் பாம்பு போன்று வளைந்த ரேகை தெரியும்)
       சூரியனுக்கு எதிர் பாவமான 7 ஆம் பாவத்தில் அவரின் பகைவன் அமர்ந்துள்ளதால் மேலும் வலுவிழந்தவர் ஆகிறார்.  சூரியன், இராகு இணைவால் ஜாதகரின் தந்தைக்கு கஷ்டங்களும் ஆபத்துக்களும் நிகழ்வதோடு, 5 ஆம் இடமும் இந்த இணைவால் கெடுவதால் புத்திர பாக்கியத்திலும் பிரச்சனை எழுகிறது. சுக்இரனும் சந்தேகத்துக்கு இடம்மின்றி உச்ச நிலையில் உள்ளார். கிரக பாகை வரிசைப்படி கீழ்க்கண்ட நிலைகளில் செவ்வாய், சுக்கிரன், புதன் ( நீசம் ) உள்ளனர். செவ்வாயும் புதனும் அதிக பகை உள்ள கிரகங்களாகி, சுக்கிரன் நடுவில் இடம் பெற்றுள்ளார். இதனால் சுக்கிரனின் உச்ச பலம் பாதியாகக் குறைகிறது. இதன் காரணமாக சகோதரர்களுக்குள் (செவ்வாய்) செல்வம், சொத்துக்கள் காரரணமாக (சுக்கிரன்) அடிக்கடி சண்டைகள் வெடித்து, குடும்பத்தில் வழக்குகளும், மனக் குழப்பங்களும் ஏற்படுகிறது. இரண்டு போராடும் கிரகங்களுக்கு இடையே (செவ்வாய், புதன் ) மாட்டிக்கொண்ட மனைவி, சகோதரிகளைக் குறிகாட்டும் சுக்கிரன் அவர்கள் முன்னேற்றத்தில் அதிக தடைகளைத் தருகிறார்.
         தொழிலைக் குறிக்கும் சனி உச்சம் ஆனால் அவர் பதவி ஏற்பு மற்றும் விடுதலையைக் குறிக்கும் சனிக்கும் பகைவனான கேதுவுடன் இணைந்து, எதிரி சூரியனால் பார்க்கப்படுவது சனியின் பலன் தரும் சக்தியை மிகவும் குறைத்துவிடுகிறது. சந்திரனும் நீசமாகி சனிக்கு இரண்டில் உள்ளதால் ஜாதகருக்கு மிக அருமையான வேலை கிடைத்த போதும், நீழ்த்தரமான, குறுகிய மனம் கொண்டவர்களால் ( நீச சந்திரன் ) அடிக்கடி தொல்லைகளுக்கு ஆளாகி, கெட்ட பெயர் எடுத்து, மனம் நொந்து  அதன் காரணமாக இரண்டு வேலைகளை விட்டுவிட்டார். இவருக்குத் தொழிலில் தொடர்ந்து தொல்லைகளும், அடிக்கடி மன அமைதி இன்மையையும் குறிகாட்டுகிறது.

         உச்ச குருவுக்கு 2, 12, அல்லது 7 இல் கிரகங்கள் இல்லாத காரணத்தால் 

ஜாதகருக்கு சமூக அந்தஸ்து, உடல் ஆரோக்கியம், ஒளிமயமான வாழ்க்கை 

ஆகியவற்றை தந்து அருள்பாலிக்கும் நிலையில் அவரும் இல்லை. குருவுக்கு 5 இல் நீச 

சந்திரன் ( கேதுவுக்கு மிக அருகே துலாத்தில் ) உள்ளார், இதன் காரணமாக குரு 

ஜாதகருக்கு எந்தவித நன்மையையும் தர முடியாத பலம் இழந்த நிலையில் உள்ளார். 

Wednesday, May 9, 2018

நாடியில் இரண்டாம் பாவ பலன்கள்


நாடியில் இரண்டாம் பாவ பலன்கள்


போஜன சுகம்



53.     இலக்னாதிபதியும், சுக்கிரனும் தனபாவத்தில்  இருந்து, 2 ஆம் அதிபதி கேந்திர / கோணத்தில், குரு மற்றும் சந்திரனோடு இருக்க ஜாதகர் வாய்க்கு ருசியான வக்கணையான இராஜ போஜனத்தை உண்டு மகிழ்வார்.
     பலம் மிக்க தன பாவாதிபதி அல்லது ஒரு உச்ச கிரகம் 2 இல் இடம் பெற அல்லது சுபரோடு கூடிய 2 ஆம் வீடு அமைய ஜாதகருக்கு இதே நற்பலன்கள் ஏற்படும் எனலாம். அதே, பலம் மிக்க அசுப கிரகங்கள் 2 ஆம் வீட்டோடு தொடர்புற ஜாதகர் எவ்வளவு பெரிய செல்வந்தராய் இருந்தாலும் நேரத்துக்கு சுவையான ஏன் சுமாரான உணவும் கிடைக்காது.
54.   சந்திரன், சுக்கிரன், குரு ஆகியோர் 2 ஆம் பாவத்தில் இருக்க ஜாதகருக்கு எப்போதும் இராஜ உணவு கிடைக்கும்.
55.    இலக்னத்தில், இலக்னாதிபதி, தனாதிபதி மற்றும் விரயாதிபதி ஆகியோர் இணைந்திருக்கவும் சந்திரன் 9 ஆம் இடத்திலும், குரு  2 ஆம் இடத்தைப் பார்க்கவும் ஜாதகர் பேரரசருக்குப் பரிமாறப்படக் கூடிய உயர்தர உணவுகளை உண்டு மகிழ்வார்.
 56.   கன்னி இலக்னமாகி சுக்கிரன் 4 ஆம் இடத்திலும், புதன் 5 ஆம் இடத்திலும், குரு இலாப பாவத்திலுமாக அமர்ந்திருக்க ஜாதகர் பேரரசருக்குப் பரிமாறப்படக் கூடிய உயர்தர உணவுகளை உண்டு மகிழ்வார்.
57.     சந்திரனும், புதனும் கேந்திரத்தில் அமர்ந்து, 2 ஆம் அதிபதி இலக்னத்தில் இருக்க மேற்சொன்ன பலன்களே ஏற்படும்.
58.      சுக்கிரன் 10 ஆம் இடத்திலும், 11 ஆம் இடத்தில் குருவும் அமர ஜாதகர் பால், குளிர் பானம் போன்ற உயர்தர பானங்களைக் அருந்தும் பாக்கியம் உடையவராக இருப்பர்.
பேச்சில் தடங்கல், ஊமை.
59.      2 ஆம் அதிபதி 6, 8, 12 இல் சுக்கிரன் அல்லது புதன் இருக்க தடைப்படும் பேச்சுக்கான பலனை உறுதிப்படுத்துங்கள். (காலபுருஷ தத்துவத்தில் 2 ஆம் இராசிக்கு  அதிபதி சுக்கிரன் ஆவார்).
60.     6 ஆம் அதிபதி, சுக்கிரன் மற்றும் தூமன் இணைந்து 6 ஆம் இடத்தில் அல்லது 8 ஆம் இடத்தில் இருக்கவும், 8 ஆம் அதிபதியும், 2 ஆம் அதிபதியும் பலம் இழந்து காணப்பட ஜாதகர் ஊமையாக இருப்பார்.
61.    பலம் இழந்த குரு 2 இல் இருக்க ஜாதகர் திக்கி திக்கி பேசும் திக்குவாய் காரராக இருப்பார். வளர் சந்திரன் 2 இல் இருந்தால் திக்குவாய் சரியாகும். தேய்பிறை சந்திரன் 2 இல் புதனுடன் இருக்க இந்த திக்குவாய் பிரச்சனை தீராது. இராகுவுடன் இணைந்து தேய்பிறைச் சந்திரன் இருக்கும் ஜாதகர்  ஊமையாக இருப்பார்.
62.     2 ஆம் அதிபதி 12 இல் இருக்க, அவருடன் குளிகன் இணைந்து இலக்னத்தில் யமகண்டன் நிற்கவும், தூமன் 2 ஆம் இடத்தைப் பார்க்கவும் ஜாதகருக்கு தீர்க்க முடியாத பேச்சுப் பிரச்சனை இருக்கும் அல்லது நிரந்தர ஊமையாய் இருப்பார்.
63.   2 ஆம் அதிபதி, தூமன் அல்லது எமகண்டனுடன் இணைந்து குருவால் பார்க்கப்பட பேச்சு குறைபாடு இருக்கும்.
64.     இலக்னத்தில் இருந்து முதல் நான்கு வீடுகளின் அதிபதிகள் பலம் இழந்து காணப்பட்டால் ஜாதகர் உண்மையே பேசமாட்டார். கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேசுவார். பிறரை ஏமாற்றிப் பிழைப்பதிலேயே குறியாய் இருப்பார்.
65.     4, 5 மற்றும் 8 ஆம் அதிபதிகள் இணைந்து 12 இல் இருக்க அல்லது பலம் இழந்து காணப்பட மேற்சொன்ன பலன்களே நடக்கும்.
66.     2 மற்றும் 4 ஆம் அதிபதிகள் வீழ்ச்சி அடைய இவர்களில் ஒருவரை 8 ஆம் அதிபதி பார்க்க மேற்சொன்ன பலன்களே நடக்கும்.
67.    சனி இரண்டிலும் இராகு 5 அல்லது 11 இல் இருக்க ஜாதகரின் பேச்சு அர்த்தமற்றதாகவும், சீரற்றதாகவும் இருக்கும். கொன்னிக் கொன்னி பேசுவார். பொய்யே பேசுவார்.
கண் பாதிப்பு,
 இணைவுகள்
68.        8 ஆம் அதிபதி 2 இல், 4 இல் அசுபக்கிரகங்கள் குருவின் பார்வை பெறாத நிலையில் இருக்க ஜாதகர் பிறவிக் குருடர் ஆவார்.
          குருவின் தாக்கம் கண்ணில்லாதவருக்கு மாற்று மருந்து எனினும், சுக்கிரன் அல்லது சந்திரன் அல்லது சூரியன் ஆகியோர் பலம் பொருந்தியவர்களாக இருக்க கண் பார்வை இன்மை இருக்காது.
69.       12 ஆம் அதிபதி 2 இல் இருந்து, இராகு 4 இல் இருக்க கண்களில் இரணம் காரணமாக கண்கள் பாதிப்பு ஏற்படும். இராகு திசையிலோ அல்லது 4, 2, 12 ஆம் அதிபதிகளின் திசைகளிலோ கண்ணில் ரணம் ஏற்படக் கூடிய பயம் ஏற்படும்.
70.        2 ஆம் வீட்டை சூரியன் பார்க்கவும், 3 ஆம் அதிபதி 6 இல் இருக்கவும் ஜாதகருக்கு இரு கண்களிலும் பிரச்சனை எழலாம்.
71.        8 ஆம் அதிபதி 6 இல் இருந்து சனி பார்க்க அல்லது 2 ஆம் அதிபதி பலம் இழந்து இலக்னாதிபதிக்கும், விரயாதிபதிக்கும் நடுவில் உள்ளதால் கண்பார்வைக் கோளாறுகள் ஏற்படும்.
72.   2 ஆம் அதிபதி, சூரியனோடு இணைந்து ருண பாவத்தில் இருக்க இளமையிலேயே பார்வை பாதிப்புகள் ஏற்படும்.
73.      2 ஆம் வீடு மற்றும் சுக்கிரன் இருவரும் சனியால் கெட இளமையிலேயே பார்வை பாதிப்புகள் ஏற்படும்.
74.    கடக இலக்ன ஜாதகருக்கு சனி, செவ்வாய், சூரியன் ஆகியோர் 2 ஆம் பாவமான சிம்மத்தில் இருக்க கண் பார்வைக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
75.    சுக்கிரனும், குருவும் 6 இல் இருக்க அவர்களுடன் 6 மற்றும் 10 ஆம் அதிபதியும் இணைந்திருந்தால் விபத்தில் கண்களை இழப்பார்.
76.       2 இல் குளிகன், செவ்வாய் மற்றும் 2 ஆம் அதிபதி ஆகியோர் இருந்து, குருவின் பார்வை இல்லையெனில் ஜாதகர் இளமையிலேயே கண் பார்வை அற்றவர் ஆவார். பலம் மிக்க 2 ஆம் அதிபதி மற்றும் குருவின் பார்வை இருக்க இந்த பாதிப்பு இருக்காது.
77.    தங்கள் பகை வீடுகளில் 2 ஆம் அதிபதி, சுக்கிரன், சந்திரன் இருக்க மாலைக்கண் நோய் ஏற்படும். சந்திரனுக்கு பகைவர் இல்லை ஆதாலால் அவளுக்கு பாதகமான வீடுகளை எடுத்துக் கொள்ளலாம்.
78.        இலக்னாதிபதி, 2 ஆம், 7 ஆம் அதிபதிகள், சந்திரன் ஆகியோர் 6 அல்லது  8 ஆம் பாவத்தில் இருக்க   கண்பார்வையைத் திரும்பப் பெற இயலாது.
79.        2 ஆம் இடத்தில் பலம் இழந்த சுக்கிரனும், சூரியனும் இணைந்து குருவின் பார்வையின்றி இருக்க ஜாதகரை மின்னல் தாக்கி கண்ணை இழக்க நேரிடும்.
80.       இலக்னாதிபதி, சனி, சுக்கிரன் ஆகியோர் 2 ஆம் வீட்டில் இருக்க கண்ணில் பாதிப்புகள் அதிகம் இருக்கும்.
81.        2 ஆம் வீடு, 3, 12, 6 ஆம் வீடுகளில் முறையே சனி, சூரியன், சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியோர் நிற்க எல்லா விதமான பார்வைக் கோளாறுகளும், பாதிப்புகளும் ஜாதகருக்கு ஏற்படும்.
82.        2 ஆம் அதிபதி 6 இல் சுக்கிரனுடன் இணைந்து இருக்கவும், 2 ஆம் வீட்டில் ஒரு கிரகமும் இல்லாவிடில் ஜாதகருக்கு சிறிதளவு பார்வை பாதிப்புகள் இருக்கும்.
83.       இலக்னாதிபதி இலக்னத்திலோ அல்லது 2 ஆம் இடத்திலோ சூரியன் மற்றும் 6 ஆம் அதிபதியோடு இணைந்து இருக்க ஜாதகரின் கண்களின் வண்ணம் வித்தியாசமானதாக இருக்கும்.
84.          2 ஆம் அதிபதி 8 இல் நிற்க, சந்திரனும் சனியும் இணைந்திருக்க, 2 இல் சூரியன் இருக்கவும் ஜாதகரின் கண்களின் வண்ணம் வித்தியாசமானதாக இருக்கும்.
85.        2 ஆம் அதிபதி 12 இல் இருந்து, 2 ஆம் வீடு சனியால் பார்க்கப்பட்டால் கண் பாதிப்புகள் இருக்கும்.
86.     சுக்கிரனுக்கு திரிகோணத்தில் சந்திரன் இருக்க அனைத்துக் கண் பாதிப்புகளும் சரியாகிவிடும்.
தொண்டை, குரல்வளை, பல் பிரச்சனைகள்
87.      இராகு 6 அல்லது 8 ஆம் இடத்தில் 2 ஆம் அதிபதியோடு இருந்து 8 ஆம் அதிபதி மற்றும் செவ்வாயால் பாதிக்கப்பட தொண்டை அல்லது குரல் வளையில் பாதிப்பு ஏற்படும்.
88.      இலக்னத்துக்கு இரண்டாம் இடத்தில் சந்திரனில் இருந்து 2 மற்றும் 3 ஆம் அதிபதிகள் இணைந்து இருக்க தொண்டை அல்லது குரல் வளையில் பாதிப்பு ஏற்படும்.
89.       4 ஆம் பாவத்தில் இராகு ஒரு சுபரோடு இணைந்து இருக்க ஜாதகருக்கு வெளியில் தெரிகிற அளவுக்கு நீண்ட பற்கள் இருக்கும்.
90.        இதே நிலை ஏற்பட, 2 ஆம் அதிபதி 6 ஆம் வீட்டிலும், சூரியன் 8 இல் இருக்க   வேண்டும்.
91.        2 ஆம் வீட்டில் அசுபர், 2, 8 மற்றும் 9 ஆம் அதிபதிகள் இணைந்து இருக்க ஜாதகருக்கு வெளியில் தெரிகிற அளவுக்கு நீண்ட பற்கள் இருக்கும்.
92.    4 ஆம் வீட்டில் இராகு இருந்து, 4 ஆம் அதிபதி சந்திரனோடு இணைந்து 6 அல்லது 8 அல்லது 12 ஆம் வீட்டில் இருக்க பற்கள் சொத்தை ஆகும்.
93.      மிதுன இலக்னத்தில் ஜனித்தவர்களுக்கு சுக்கிரன் நீசமாகி, 6 ஆம் வீட்டில் சந்திரன், செவ்வாய், கேது இருக்க பற்களில் பாதிப்புகள் இருக்கும்.
94.      6 ஆம் வீட்டில் குருவும், 2 இல் இராகுவும், சுக்கிரன் 2 ஆம் அதிபதியோடு இணைந்து 8 ஆம் வீட்டிலும் இருந்தால் ஜாதகருக்கு உடைந்த பற்கள் இருக்கும்.
95.       2 ஆம் அதிபதி , பலம் இழந்த சூரியன், செவ்வாய், குரு, புதன் ஆகியோர் 8 ஆம் வீட்டில் இடம் பெற ஜாதகருக்கு சீக்கிரமே பற்கள் விழுந்துவிடும்.


Monday, May 7, 2018

நாடியில் செல்வ நிலை




நாடியில் செல்வ நிலை 





1.   ஜனன ஜாதகத்தில் கீழ்கண்ட கிரக நிலைகள் காணப்பட்டால் ஜாதகர் நிகரற்ற செல்வ நிலை அடைவார்.
அ. சூரியன் நல்ல பாவத்தில் உச்சம் பெற்று குரு பார்க்க.
அ.1 இலக்னாதிபதியும், கர்மாதிபதியும் இணைந்து, தன அல்லது இலாப     பாவத்தில் நிற்கவும்.
ஆ. இலாபாதிபதியும், குருவும் இலக்னத்தில் இருந்து களத்திர பாவத்தில்    சந்திரன் இருக்கவும்.
ஆ.1. சுக்கிரன் முழு சக்தியுடன் களத்திர பாவாதிபதியைப் பார்க்கவும்.
இ.  பூர்வ புண்யாதிபதியும், பாக்கியாதிபதியும் இணைந்து சுக பாவத்தில்    இருந்து, பாதிக்கப்படாத சூரியன் பார்க்கவும்.
இ. 1. பாதிப்பு அடையாத களத்திர பாவாதிபதியும், பாக்கியாதிபதியும் இணைந்து 7 இல் இருந்து 11 ஆம் பாவாதிபதி பார்க்கவும்.
ஈ.    பாக்கியாதிபதியும், சுக ஸ்தானாதிபதியும், சந்திரனோடு இணைந்து    பாக்கிய பாவத்தில் இருந்து குருவின் பார்வை பெறவும்.
ஈ. 1. சூரியனும், புதனும் இணைந்து பாக்யத்தில் இருந்து குருவின் பார்வை       பெறவும்.    
    உ.   குரு 9 ஆம் இடத்திலும், 4 ஆம் அதிபதி இலக்னத்திலும், 10 மற்றும் 11     ஆம்       பாவாதிபதிகள் இணைந்து இருக்கவும்.
     ஊ.   செவ்வாயும் குருவும் 4 இல் இருக்கவும், இடம் கொடுத்தவன்       தனபாவத்தில் இருக்கவும்.
    எ.    குரு, சுக்கிரனுடன் இலக்னாதிபதியும் இணைந்திருக்கவும்.
     ஏ.     இலக்னாதிபதி, 4 ஆம் அதிபதி, சந்திரன் ஆகியோரின் இணைவும்.
     ஐ.    தர்மாதிபதியும், கர்மாதிபதியும் இணைந்து பூர்வ புண்ய ஸ்தானத்தில்      இருக்கவும்.
     ஒ.    சுகாதிபதியும், சுக்கிரனும் இணைந்து தனபாவத்தில் இருக்கவும்.
     ஓ.    சுகாதிபதியும், தனகாரகனும் இணைந்து இருக்கவும்.
     ஔ.  செவ்வாய், சுக்கிரன், சந்திரன் ஆகியோர் இணைந்து சுக பாவததில் இருக்கவும்.
     ஔ. 1. இலக்னத்தில் குருவும், சந்திரனும், புதனும் களத்திர பாவத்தில்    இருக்கவும்.                                     
11.  மகர இலக்ன ஜாதகருக்கு, ஒளிக்கிரகங்களான சூரிய, சந்திரர்கள் சுக்கிரனுடன் இணைந்து சிம்மத்தில் இருக்க இளமையில் அதிக சொத்துக்கள் இருந்து, அவரது காமவெறியால் பல பெண்களைத் தொடர்புற்று அதன் காரணமாக அனைத்து செல்வங்களையும் இழப்பார்.
          8 ஆம் இடத்தில் சந்திரன், சுக்கிரனின் இணைவு ஜாதகருக்கு காம இன்பங்களைப் பெறும் உணர்வுகளைத் தூண்டும். அதன் காரணமாகத் தன் மனைவி இல்லாத பிற பெண்களிடம் ரகசியமான உறவுகளை வைத்திருப்பார். சூரியனும் இணைந்தால் மேலும் ஜாதகரின் கேடு கெட்ட குணங்களை அதிகரிக்கும். இம் மூன்று கிரகங்களும் சேர்ந்து, தனபாவமும், இரகசியங்களுக்கு உரிய இராசியுமான கும்ப இராசியைப் பார்க்கும் போது, ஜாதருக்கு அவரின் இரகசிய உறவுகளால் செல்வ இழப்பைத் தருகிறது.
12    கர்ம காரகன், கர்மாதிபதியுடன் இணைந்து பூர்வ புண்யத்தில் அல்லது தர்ம பாவத்தில் இருக்க ஜாதகர் பெரிய இல்லங்களை உடையவராய் இருப்பார். இலக்னதிபதி 4 இல் இருந்து சுக்கிரன் அல்லது குரு நல்ல நிலையில் இருந்தால் இதே பலனே ஏற்படும்.
13.    பாக்கியாதிபதி, கர்மாதிபதி, தனாதிபதி ஆகியோர் இணைந்து சுக பாவத்தில் இருந்து, சுகாதிபதியும் பலம் மிக்கவராக இருந்து 12 ஆம் இடமும் காலியாக இருக்க ஜாதகர் செல்வப் பிரபுவாக விளங்குவார்.
14.     குரு 3 ஆம் பாவத்திலும், சுக்கிரனும், 4 ஆம் அதிபதியும் பரஸ்பர பார்வை புரிந்து கொள்ளும் நிலை ஜாதகருக்கு  செல்வ நிலையை உயர்த்தும். ஆனால் அவர் பழைய வீட்டில் வசிப்பார்.
         2 ஆம் அதிபதி குரு 3 இல் இருந்து, 4 ஆம் அதிபதி சனி புராதன/ பழமையான வீட்டைக் குறிகாட்டுவதால் இந்த நிலை விருச்சிக இலக்னத்துக்கு சரியாக வரும்.
15.     குருவும், சந்திரனும் இணைந்து தனபாவத்தில் இருக்க 9 ஆம் அதிபதி பார்க்க  ஜாதகருக்கு அரசு மரியாதைகள் கிடைத்து, செல்வமும் சேரும்.
16.        இராகு, குரு, சுக்கிரன் மற்றும் சந்திரனுக்கு இடம் கொடுத்த கிரகங்கள் இலக்னம் அல்லது சந்திர கேந்திரங்களில் இருந்து 7 ஆம் அதிபதியும், 11 ஆம் அதிபதியும் இணைந்து திரிகோணத்தில் இருக்க ஜாதகர் உயர்கல்வி கற்றவராகவும், செல்வந்தராகவும், நிறைய வேலைக்காரர்கள் உடையவராகவும், இவரைப் பின்பற்றி நடக்கும் கூட்டத்தையும் கொண்டவராகத் திகழ்வார். இந்த நான்கு கிரகங்களுக்கு இடம் கொடுத்த கிரகங்களின் நிலையைப் பொருத்து யோக பலன்கள் மாறுபடும்.
17.         1. குரு மற்றும் இலக்னாதிபதி இலக்னத்தில் இருக்க அல்லது
            2. புதனுக்கு 11 இல் குருவும், சுக்கிரனும் இருக்க, அல்லது
            3. சூரியன் தனபாவத்திலும், 12 ஆம் அதிபதி 5 ஆம் இடத்திலும் இருக்கவும் ஜாதகர் அவரின் தந்தையை விடவும் உயர்கல்வி கற்ற மேதையாகவும், பெரிய பணக்காரராகவும் விளங்குவார்.
18.         1. 5 ஆம் அதிபதி ஒரு கேந்திராதிபதியுடன் இணைந்து தனபாவத்தில்         இருக்கவும். அல்லது
              2. குரு 9 ஆம் வீட்டில் இருந்து இராகு ஒரு கேந்திரத்தில் இருக்கவும் அல்லது
              3. ஒளிக் கிரகங்கள் பாக்கிய பாவத்தில் இருக்கவும் ஜாதகர் வசதி மிக்கவராக இருப்பார்.
19.         தர்ம கர்மாதிபதிகளுடன் சுக்கிரன் இணைந்து 10 இல் இருக்க அல்லது    11 ஆம் அதிபதி இலக்னாதிபதியுடன் இணைந்து தனபாவத்தில் இருக்கவும் ஜாதகருக்கு செல்வங்கள் வந்து குவிவதோடு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெறுவார்.
20.    சந்திர கேந்திரத்தில் தனபாவாதிபதி, பாக்கியாதிபதி, இலாபாதிபதி இணைந்து இருக்க குரு பார்க்க ஜாதகர் அளவற்ற சொத்துக்களை அடைவார். இந்த மூன்று கிரகங்களில் ஒன்று சந்திர கேந்திரத்தில் இருந்தாலும் ஜாதகர் பெரிய சொத்துக்களை உடையவராவார்.
        இலக்னத்துக்கு தனபாவாதிபதி, பாக்கியாதிபதி, இலாபாதிபதி இணைந்து சந்திர கேந்திரத்தில் இருந்து குருவும் பார்க்க ஜாதகர் அளவிட முடியாத சொத்துக்களை உடையவராய் இருப்பார். உதாரணமாக – துலா லக்னம் 2 ஆம் அதிபதி செவ்வாய், பாக்கியாதிபதி புதன், இலாபாதிபதி சூரியன் ஆகியோர் சந்திரனுக்குக் கேந்திரத்தில் இருத்து குருவின் பார்வை பெற்றால் இந்த பலன்கள் அமையும்.
21.     2 இல் குரு இருந்து அவருக்கு இடம் கொடுத்தவர் 9 இல் இருக்க ஜாதகர் அளவிட முடியாத சொத்துக்களை உடையவராய் இருப்பார். உச்சம், ஆட்சி அடையாத தனித்த குரு மட்டும் இரண்டில் இருந்தால் சொத்து சேர்க்கையில் பாதிப்பு ஏற்படும்.
22.   தனபாவாதிபதியும், சந்திரனும் இணைந்து பஞ்சம பாவத்தில் இருந்தால்   மேற் சொன்ன பலன்களே நிகழும்.
23.   கீழ்கண்ட இணைவுகள் ஜாதகர் அதிக சொத்துக்களுடன் திகழ்ந்தாலும், விசன முள்ளவராகவும், உற்சாகம் அற்றவராகவும் ஆக்கிவிடும்.
      அ). பஞ்சமாதிபதி ஆட்சி வீட்டில் இருந்து இலாபாதிபதி பாக்கிய பாவத்தில்                 இருந்தாலும்  அல்லது
      ஆ) தனாதிபதியும், சுகாதிபதியும் பாக்கியத்தில் இருக்க, கர்மாதிபதி தன                     பாவத்தில் இருக்கவும்   அல்லது
      இ)  இலக்னாதிபதி கர்ம பாவத்திலும், தனாதிபதி உச்சம் பெற்றோ,                         அல்லது     பாக்கியத்தில் இருந்தாலோ – அல்லது
      ஈ).   பஞ்சமாதிபதியும், ரோகாதிபதியும் பாக்கியத்தில் இருந்து,                             பாக்கியாதிபதி தனபாவத்தில் இருக்கவும் இந்த நிலை ஏற்படும்.
24.     இலக்னாதிபதியும், செவ்வாயும் தனாதிபதி மற்றும் கர்மாதிபதியுடன் இணைந்து தர்ம பாவத்தில் இருக்க ஜாதகருக்கு அளவிட முடியாத சொத்துக்கள் சேரும்.
25.      ரிஷப இலக்ன ஜாதகருக்கு மகரத்தில் சனி இருந்து புதன் உச்சம் அடைய மேற்சொன்ன பலனை ஏற்படும்.
          9 இல் சனி, புதன் 5 இல் இருந்தால் மேற் சொன்ன பலனுடன், 5, 9 ஆம் பாவங்கள் புத்திர பாக்கியத்திற்கு தொடர்புள்ள பாவங்கள் ஆதலால் ஜாதகருக்கு இரட்டைக் குழந்தைகளைத் தரும். அதுபோல் புதனும், சனியும் இரட்டைப் பிறவிகளைக் குறிக்கும்.
26.  குரு 4 ஆம் இடத்திலும், சுக்கிரன் 5 ஆம் இடத்திலும் செவ்வாய் 7 ஆம் இடத்திலும் இருக்க அல்லது இலக்னத்தை சந்திரன் பார்க்க ஜாதகருக்கு மதிப்பு மரியாதை, கௌரவம் உயர்வதோடு சொத்துக்களும் சேரும்.
கல்வி, வாகனங்கள்.
27. பாக்கியாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து குருவால் பார்க்கப்பட்டால் ஜாதகருக்கு பல நவீனமான, ஆடம்பரமான வாகனங்கள் அமையும்.
28.   இலாபாதிபதியுடன் இணைந்த வளர்பிறை சந்திரன் தனபாவத்தில் அமர ஜாதகருக்கு பல நவீனமான, ஆடம்பரமான வாகனங்கள் அமையும்.
29.   இலக்னாதிபதி திரிகோணம் ஏறி, தைரிய, சுக பாவாதிபதிகள் கர்ம பாவத்தில் இணைந்து இருக்க ஜாதகருக்கு சொத்துக்கள் சேரும். தொழில் வெற்றியும்  ஏற்படும்.
30.   பாக்கியாதிபதி இலாபத்திலும், இலாபாதிபதி தனபாவத்திலும் இருந்து இவர்களில் எவரேனும் ஒருவர் இலக்னத்தைப் பார்க்க ஜாதகருக்கு மேற் சொன்ன பலன்களே ஏற்படும்.
31.   குருவும், சந்திரனும் இணைந்து 7 ஆம் இடத்திலும், செவ்வாய் விரய பாவத்திலும் இருந்து சூரியனால் பார்க்கப்பட ஜாதகர் அளவற்ற சொத்துக்களுடன், அதிகம் கற்றவராகவும் விளங்குவார்.
32.    5 இல் குருவும், 7 இல் புதனும், 11 இல் சந்திரனும் அமர ஜாதகர் அதிக சொத்துக்களுடன், அளவற்ற கல்வியை கற்றவராகவும் விளங்குவார்.
33.   சனி துலாத்திலோ அல்லது ரிஷபத்திலோ இருந்து, சுக்கிரனால் பார்க்கப்பட ஜாதகர் பெரிய செல்வந்தராகவும், உயர் பதவிகளை அடைபவராகவும் திகழ்வார்.
34.    குருவும், புதனும் இலக்னத்தில் இருந்து, அவர்களில் ஒருவர் உச்சம் பெற்று, பஞ்சமாதிபதி 5 ஆம் இடத்திலோ அல்லது 9 ஆம் இடத்திலோ இருக்க மேற் சொன்ன பலன்களே ஏற்படும்.
35. பாக்கியாதிபதி தைரிய பாவம் ஏறி குருவால் பார்க்கப்பட அல்லது பாக்கியாதிபதியுடன் சுக்கிரன் இணைந்து இலாபத்தில் இருக்கவும், ஜாதகர் அதிக சொத்துக்களுடன், அளவற்ற கல்வியை கற்றவராகவும் விளங்குவார்.
36.  குரு இலக்னத்திலும், புதனும், தனபாவதிபதியும் இணைந்து கேந்திர பாவத்தில் இருக்கவும் ஜாதகர் அதிக சொத்துக்களுடன், அளவற்ற கல்வியை கற்றவராகவும் விளங்குவார்.
37.    ஒருவர் தன்னிகரில்லாத தனத்துடன் விளங்குவது எப்போது ? –
       அ). இலக்னாதிபதி, 3 ஆம் அதிபதி, குரு ஆகிய மூவரும் உச்சம் பெற                     அல்லது
       ஆ). இலக்னாதிபதியும், கர்மாதிபதியும் இணைந்து திரிகோணத்தில் இருந்து           சனியால் பார்க்கப்பட அல்லது
       இ). இலக்னாதிபதி உச்சம் பெற்று, அவருக்கு இடம் கொடுத்தவர்                    திரிகோணம் ஏறவும் அளவற்ற செல்வந்தராக இருப்பார்.
38.   2, 3, 11 ஆம் அதிபதிகள் இணைந்து 9 இல் இருந்து 5 ஆம் அதிபதியால் பார்க்கப்பட இந்த யோகம் ஜாதகருக்கு அவரின் தந்தையைவிட இணையற்ற செல்வத்தையும், சந்தோஷத்தையும், வாகனங்களையும், புகழையும் வாரி வழங்கும்.
39. 2, 9 ஆம் அதிபதிகள் இணைந்து கேத்திரத்தில் இருந்து இலக்னாதிபதியால் பார்க்கப்பட ஜாதகருக்கு ஆரம்ப காலத்தில் சொத்துக்கள் இல்லை என்றாலும் பிற்காலத்தில் செல்வம் சேரும்.
40.  இலக்னம், தன, இலாப பாவதிபதிகள் எவ்விதத்திலேனும் கேந்திர / திரிகோணங்களில் இடம் பெற ஜாதகர் செல்வ நிலைகளை சந்தோஷமாக அனுபவிப்பார்.
41.     இலாபாதிபதி தனபாவத்திலும், தனபாவாதிபதி, பாக்கிய பாவாதிபதியுடன் இணைந்து பாக்கியத்திலும் இருக்க ஜாதகருக்கு தந்தைவழி சொத்துகள் சேர்வதோடு, சுயமுயற்சியாலும், அதிர்ஷ்டத்தாலும் கிடைக்கக் கூடிய சொத்துக்களும் சேரும்.
42.     செவ்வாய் 9 இல் இருந்து சுக்கிரனால் பார்க்கப்பட்டால் ஜாதகருக்கு சொத்து விவகாரங்களில் வழக்கு ஏற்பட்டு இறுதியில் வெற்றியைத் தழுவுவார்.
43.     2 மற்றும் 3 ஆம் அதிபதிகள் இணைந்து 9 இல் இருந்து குருவால் பார்க்கப்பட அளவற்ற செல்வம் பெருகும். குருவின் பார்வை இல்லாமல் 6 ஆம் அதிபதியின் பார்வை பெற தந்தைவழி சொத்துக்களை அடைய உடன் பிறப்புக்களுக்குள் வழக்கு விவகாரங்களை சந்திக்க நேரும்.
44.     2 மற்றும் 4 ஆம் அதிபதிகள் இலக்ன பாவத்தில் இருந்து, 4 ஆம் அதிபதி பாக்கிய பாவத்தில் இருந்தால் ஜாதகர் மண்ணில் உதித்த நாள் முதல் செல்வச் செழிப்போடு வாழ்வார்.
45.    2 மற்றும் 4 ஆம் அதிபதிகள் திரிக்கோண பாவத்தில் இணைந்து இருக்க ஜாதகர் ஒழுக்கமான வழிகளில் சம்பாதித்து செல்வம் சேர்ப்பார்.
ஏழ்மை நிலை
46.       2 மற்றும் 6 ஆம் அதிபதிகள் தங்கள் நீச பாவத்தில் அமர்ந்து, அவர்களில் ஒருவரோ அல்லது இருவரோ அசுபரால் பார்க்கப்பட ஜாதகருக்கு மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை அமைவதோடு, திருப்தியற்ற குடும்ப முன்னேற்றமும், ஏழ்மையால் மிகுந்த இன்னல்களையும் அனுபவிப்பார்.
           மேஷ இலக்னத்திற்கு சுக்கிரனும், புதனும் 2 மற்றும் 6 ஆம் வீட்டுக்கு உரியவர்கள் ஆகிறார்கள், அவர்கள் இருவரும் ஒருசேர நீசம் ஆக முடியாது எனவே, இந்த இரு இலக்னங்களுக்கு இந்த யோகம் சாத்தியம் இல்லை.
47.        ஒளிக் கிரகங்கள் 2 இல் இருந்து அவர்களுக்கு இடம் கொடுத்தவன் 6 ஆம் வீட்டிலும், குரு 12 ஆம் வீட்டிலும் இடம் பெற்றால் ஜாதகர் அனைத்தையும் இழந்து, மீழமுடியாத துயரத்தில் ஆள நேரிடும்.
48.        6 ஆம் அதிபதி உச்சம் பெற்று, 2 ஆம் அதிபதி பலம் இழந்த நிலையில் விரய பாவத்தில் அமர்ந்து அசுப தாக்கமும் பெற ஜாதகர் தொழில், வேலைகளில் மிகவும் கஷ்டமான நிலைக்கு தள்ளப்படுவார்.
        பொதுவாக 6 ஆம் பாவம் ஜாதகர் ஒருவருக்கு கீழ் வேலை செய்வதை குறிகாட்டுகிறது. 2 ஆம் அதிபதி 12 இல் இருந்தால் 6 ஆம் வீட்டைப் பார்ப்பார். 6 ஆம் அதிபதி உச்சம் பெறும் இந்த யோகத்தில் பாதக நிலையே ஏற்படும். இந்த யோகத்தில் அவர் சுதந்திரமாக உச்சமானால் சாதக நிலை ஏற்படும்.  பலம் இழந்த 6 ஆம் அதிபதியின் மீதான 2 ஆம் அதிபதியின் தாக்கம் கஷ்டங்களைக் குறைக்கும். மேஷ இலக்னத்திற்கு இந்த யோகம் வராது.
49.     இலக்னாதிபதி மற்றும் விரயாதிபதி, இராகுவுடன் இணைந்து விரய பாவத்தில் சுபர் தொடர்பு இன்றி இருந்தால் ஜாதகருக்கு சொத்துக்கள் சேராது. இந்த யோகம் பிறப்பு முதலே பல தனயோகங்களை பலம் இழக்கச் செய்துவிடுகிறது.
50.      2 ஆம் அதிபதியும் சந்திரனும் இணைந்து செவ்வாய் திரிகோணத்தில் அமர்ந்து, இலக்னாதிபதி பலமிழந்து 8 ஆம் அதிபதியுடன் இணைய ஜாதகருக்கு தன உடலை மறைத்து உடுக்க ஒரு பிட் துணியும் இருக்காது.
51. இலக்னத்தில் இருந்து 2 ஆம் அதிபதியும், சந்திரா இலக்னத்தில் இருந்து 2, 6, 12 ஆம் அதிபதிகள் ஆகிய 4 கிரகங்கள் இலக்னத்துக்கு 6 ஆம் இடத்தில் இடம்பெற  ஜாதகருக்கு முற்றுப் பெறாத கஷ்டங்களும், கவலைகளும் இருப்பதோடு, அவரை இழிவான ஏழ்மை நிலைக்குத் தள்ளிவிடும்.
52.     மறைவு ஸ்தானங்களான 6, 8, 12 இல் அனைத்து சுப கிரகங்களும் இருக்கவும் அசுப கிரகங்கள் கேந்திர / கோணங்கள் மற்றும் தன பாவத்தில் இடம் பெற ஜாதகரின் ஏழ்மை நிலைக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்காது. எனினும் யோக காரர்களான அசுபர்கள் 3, 10. 11 இல் இடம்பெற இந்த ஏழ்மை நிலையின் தாக்கம் குறைந்து ஓரளவு சொத்துக்கள் சேரும்.