Saturday, June 18, 2016

யோகிகளின் ஜாதகங்களில் கிரகங்களின் தாக்கங்கள்.




யோகிகளின் ஜாதகங்களில் கிரகங்களின் தாக்கங்கள்.

       இந்தியாவின் பாரம்பரிய பக்தி மார்க்க வழிமுறைகளையும்அதன் மதிப்பையும் மேலைநாட்டு மக்கள் மத்தியில் கொண்டு சென்றவங்கம் தந்த சிங்கம் நரேந்திரராக இருந்த சுவாமி விவேகானந்தா மற்றும் முகுந்த லால் கோஷாக இருந்த சுவாமி யோகானந்தா ஆகியோர் ஆகும். 1893 ஆண்டு செப்டம்பர் திங்கள்சிகாகோவில் பேசிய விவேகானந்தர் பார்வையாளர்களின் ஆன்மாவை உலுக்கும் படியாகவும்பேச்சைக் கேட்டவர்கள் வாய்களில் வார்த்தைகள் வராவண்ணமும் அற்புதமாக இந்துமத தத்துவங்களை எடுத்து உரைத்தார்.
       இது நடந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு 1920 அக்டோபர் திங்கள் போஸ்டன் காங்கிரஸின் மதச் சொற்பொழிவுப் பேரவையில் தனது கன்னிப் பேச்சைத் துவக்கிய யோகானந்தா, 1925 வரை அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களில் தனது மதப் பிரச்சார சொற்பொழிவுகளை நிகழ்த்திலாஸ் ஏஞ்சல்ஸில்கடவுளை உணரும் விஞ்ஞான முறையிலான கிரியா யோகாவுக்கான தலைமையகத்தை நிறுவினார்.
       உலக துன்பங்களில் இருந்து விடுபட்டு எப்போதும் மக்கள் சந்தோஷத்தை அனுபவிக்கும் வண்ணம்இந்து மதத்தின் நற்போதனைகளை,பக்தி மார்க்கத்தை உலகெங்கும் பரப்புவதற்காக கடவுளால் படைக்கப்பட்ட இவ்விரு புண்ணிய ஆத்மாக்கள்எங்ஙனம் தங்களுக்கு கடவுளால் அளிக்கப்பட்ட கடமைகளை முடிக்க கிரகங்களால் ஊக்குவிக்கப்பட்டனர் என்பதை அவர்களின் ஜாதகங்களின் மூலமாக அலசுவோமா?
       சுவாமி விவேகானந்தர் 12 – 01 – 1863 அன்று காலை 6 – 33 க்கு கொல்கட்டாவில்  பிறந்தார்.  
     

செவ்
கேது


சுக்
புத
சனி
செவ்
சந்


இராசி

இராகு

நவாம்சம்

புத
சுக்


கேது
சூரி
லக்//
இராகு
குரு
சனி
சந்
சூரி
குரு
லக்//


தசா இருப்பு – சந்திர தசா -04  04 மா 29 நாட்கள்.
       தர்ம வீடும்நெருப்புத் தத்துவ இராசியும்காலபுருஷனுக்கு தெய்வீக வீடும்இராசி மண்டலத்தில் இருந்துமதிப்பும்கௌரவும் கொடுக்கக் கூடிய பாக்கிய பாவத்துக்கு அதிபதியானவர்கோத்தமம் ஆன சூரியன் இணைந்துள்ள,தனுசு இராசியை இலக்னமாகக் கொண்டு சுவாமி விவேகானந்தர் பிறந்தார்.  தர்ம திரிகோணத்தின் அதிபதிகளான குருஅவரின் பார்வை பெறும் செவ்வாய், 9 ஆம் அதிபதி சூரியன் ஆகியோரின் தாக்கத்தால் அனைவரையும் கவரக்கூடிய அவரது உடல் அமைப்பு மற்றும் பக்திஞானம் மிக்க தன்மை ஆகியவை அமையப்பெற்றார்.
      அதேபோல் சந்திரா இலக்னத்தைப் பொருத்தவரைதிரிகொணாதிபதிகள் - 5 ஆம் அதிபதி சனியும்புதனும் பரிவர்த்தனை ஆகி, 9 ஆம் அதிபதி சுக்கிரனும்இல் இணைந்துள்ளார்இதன் காரணமாகவும் அவரால் பக்திமார்க்கத்தில் மிளிர முடிந்ததுபாவத்தைப் பொருத்தவரை குரு கர்ம பாவத்தில் அமர்ந்துசக்தி தரும் செவ்வாயால் பாரக்கப்படுவதால் சிதறாத தெய்வீக மனதோடு பக்தி மார்க்கத்தை இடைவிடாத தனது பிரசங்கங்கள் மூலமாக உலகெங்கும் பரப்பும் வல்லமை பெற்றார் எனலாம். 1893 மே மாதத்தில் நடந்த குரு தசா குரு புக்தியில் அவர் தனது ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டது நமக்கு ஆச்சர்யத்தை அளிக்கவில்லைசந்திரா இலக்னத்துக்கு வாக்கு ஸ்தானத்தில் குரு இருக்கவும்இலக்னத்துக்கு வாக்கு ஸ்தானத்தில் புதன் அமர்ந்துஅதன் அதிபதி சனியுடன் பரிவர்த்தனை பெறுவது அவரை ஓர் ஈடுஇணையற்ற கம்பீரமான குரல் வளமுடைய ஆன்மிக சொற்பொழிவாளர் ஆக்கியதுகுரு புக்தியில் சிகாகோ மற்றும் அமெரிக்காவின் பல்வேறு இடங்கள்இலண்டன் என  இந்திய வேதாந்த தத்துவங்களையும்பக்தி மார்க்கத்தைப் பற்றிய சித்தாந்தங்களையும் சொற்பொழிவாற்றி 1987 இல் தாய்நாட்டுக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கதாகும்மீண்டும் ஜூன்1899 முதல் டிசம்பர் 1900 வரை அதே குரு தசா கேதுசுக்கிர புக்திகளில் ஐரோப்பாஅமெரிக்கா ஆகிய நாடுகளில் தனது தெய்வீக பரப்புரைகளை அம் மக்கள் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொண்டார் என்றால் அது மிகையாகாது. 12 ஆம் அதிபதி செவ்வாயின் நட்சத்திரத்தில் கேது இருப்பதும்பாக்கியாதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் சுக்கிரன் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
       சுவாமி விவேகானந்தர் தனது ஆன்மிக குருவும் வழிகாட்டியுமான ஶ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் ஜாதகத்தோடு எங்ஙனம் குரு – சிஷ்ய பரம்பரையாக ஒத்துவருகிறது என்பதை ஆராய்வோம்குருவின் இலக்னம் கும்பமாகி, 5 ஆம் இடமான மிதுனத்தில் குரு அமர்ந்துசிஷ்யரின் ஜாதகத்தில் அதற்குத் திரிகோண ஸ்தானமான துலாத்தில் குரு அமர்ந்துள்ளதுகுருசிஷ்ய இணைவுக்கான காரணமாயிற்றுமேலும்மறைபொருள் தத்துவங்களுக்கு உரிய காரகரான இராகுவானவர் இருவர் ஜாதகத்திலும் விருச்சிகத்தில் இருந்தது அவர்களின் தெய்வீக தொடர்புடைய இணைவுக்குக் காரணமானது.
       தனது மதிப்பு மிக்க குருவை சந்திக்க விவேகானந்தருக்கு 1881 ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த இராகு தசாசனி புக்தி உந்துதல் அளித்ததுஆனால்,தொடர்ந்து குருவுக்கு சேவை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதுஏனெனில்,  1886 ஆம் ஆண்டு சிஷ்யரின் இராகு தசாசுக்கிர புக்தியில் அவரது குரு தனது தெய்வீகப் பணிகளை ஆற்றிட சென்று விட்டார் என்பதேயாம்இவரும் இந்தியாவின் பக்திமிக்க பாரம்பரியத்தை மேலும் அறிந்து கொள்ள சந்திர புக்தியில் இந்தியா முழுக்க தனது ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டார்.ஞானகாரகன் குரு இலக்னத்துக்கு 3 ஆம் இடத்தைப் பார்க்கவும்அதன் அதிபதியான கர்மகாரகன்தத்துவங்களுக்கும் காரகனான சனி தசம கேந்திரத்தில் அமர்ந்ததால் அவரால் தனது ஆன்மிக தத்துவங்களை ஞான யோகாபக்தி யோகாகர்ம யோகா மற்றும் இராஜ யோகா என நான்கு பகுதிகளாக வெளிக் கொணர முடிந்ததுநல்லவர்களை இறைவன் நீண்ட காலம் வாழ விடுவதில்லைகுரு மகாதிசைசுக்கிர புக்தியில், 7 ஆம் அதிபதி புதனுடன் இணைந்து சுக்கிரன் 2 ஆம் இடத்தில் அமர்ந்ததாலும்சந்திர இலக்னத்துக்கு 7ஆம் அதிபதி குரு 2 இல் மாரகராக மாறியதன் காரணமாகவும்,  இத்தகைய பெருமைகள் பல பெற்ற சுவாமி விவேகானந்தரின் ஆயுள் 39 வது வயதிலேயே முடிவடைந்தது.
       இனி சுவாமி பரமஹம்ச யோகானந்தரின் ஜாதகத்தைப் பார்ப்போம்.இவர்    05 – 01 – 1893 அன்று காலை 08 – 38 க்கு உத்திரப் பிரதேசத்திலுள்ள கோரக்பூரில் பிறந்தார்.




குரு,
செவ்
இராகு




புத
சந்
லக்//


இராசி

குரு
சுக்

நவாம்சம்
சனி
இராகு


சந்
லக்//
கேது

சூரி
புத
சுக்
கேது
சனி


செவ்
சூரி

தசா இருப்பு – கேது – 5  – 2 மா – 28 நாட்கள்
       சுவாமி பரமஹம்ச யோகானந்தர் நெருப்பு இராசியான சிம்மத்தை இலக்னமாகக் கொண்டுஅதன் அதிபதியான சூரியன் மற்றொரு நெருப்பு இராசியும்திரிகோணமுமான தனுசுவில் இருப்பதுஇவர் உலக மக்களிடையே யோகா மற்றும் தெய்வீகச் செய்திகளைக் கொண்டு செல்லப் பிறந்தவர் என்பதை உறுதி செய்கிறதுதர்ம திரிகோணங்களின் அதிபதிகளான சூரியன்,குருசெவ்வாய் ஒன்றுக்கொன்று கேந்திரத்தில் இருப்பது இவரை மிகவும் சிரத்தையுடனும்அர்ப்பணிப்பு உணர்வுடனும் பக்தி மார்க்கத்தில் செல்லத் தூண்டுதலாக இருந்தது . 10 ஆம் அதிபதியான சுக்கிரன் 4 ஆம் இடத்தில் அமர்ந்துகுருவால் பார்க்கப்படுவதால் தெய்வீகத் தன்மையுடன் கூடிய பக்தி மார்க்கத்தை மக்கள் கற்பதற்கான பெரிய மையங்களை அமைக்கும் சீரிய பணிகளில் ஈடுபடவைத்ததுமக்களைக் கவர்ந்திழுக்கும் சொற்பொழிவுத்திறன் 2ஆம் இடத்தைப் பார்க்கும் குரு மற்றும் செவ்வாயின் அருளாலும், 2 ஆம் அதிபதி புதன் 5 இல் இருப்பதாலும் சிறப்பாக அமைந்தது.
       சுவாமி விவேகானந்தர் 1893 இல் சிகாகோவில் சொற்பொழிவாற்றச் சென்றபோதுஅதே வருடமே யோகானந்தா பிறந்தார் என்பதும்அவரைப் போலவே இவரும் 1920 இல் அமெரிக்காவிலுள்ள போஸ்டனில் சொற்பொழிவாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கதுஎன்னே ஒற்றுமை ? சூரிய தசைகுரு புக்தியில் அவருக்கு இந்த ஆன்மிகப் பயணங்கள் ஏற்பட்டதுசந்திர திசையில் பாக்கிய பாவத்திலுள்ள இராகு புக்தியில்தான் 1925 இல் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில்யோகா மற்றும் ஆன்மிகத் தலைமையகத்தை நிறுவினார். 1925 முதல் 1935 வரை உலகின் பல பாகங்களுக்குச் சென்றுதியானம் மற்றும் க்ரியா யோகம் தொடர்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1935 இல் செவ்வாய் திசையில் ஐரோப்பா மற்றும் இந்தியாவுக்கு வந்தார்.
       யோகானந்தா தனது ஆன்மிக குருவான சுவாமி யுக்தேஷ்வர் கிரி அவர்களை 1910 ஆம் ஆண்டு தனது சுக்கிர திசை , குரு புக்தியில் ஆசீர்வதிக்கப்பட்டு ஶ்ரீராம்பூர் என்ற இடத்தில் சந்திக்கும் பேறு பெற்றார்குரு –சிஷ்யர் இருவருக்கும் உண்டான பந்தத்தை இருவர் ஜாதகத்திலும் இடம் பெற்ற மேஷம் – துலாத்திலுள்ள நிழல் கிரகங்களின் அச்சும்சூரியன் திரிகோணமாக நெருப்பு இராசிகளில் அமர்ந்ததும் உணர்த்துகிறது. ‘முகுந்த் லால் கோஷாகஇருந்த இவரை இவரது குருவே யோகானந்தாவாக பெயர் சூட்டினார்.  1936 இல் சுவாமி யுக்தேஷ்வர் முக்தியடையும் முன் இந்தியாவின் மிக உயரிய ஆன்மிகப் பட்டமான ‘பரமஹம்ச’ எனும் பட்டத்தை வழங்கி மகிழ்ந்தார்.
       பாக்கிய பாவத்திலுள்ள இராகு மேல்நாட்டில் பல இடங்களில் விஞ்ஞான முறையினாலான தியானம் மற்றும் பக்தி மார்க்கத்துக்கான மையங்களை அமைக்கத் தூண்டுதலானதுபாக்கியாதிபதி செவ்வாய் தனது திசையில்,அட்டமாதிபதி குருவுடன் இணைந்துசனியின் பார்வை பெற்றதால் யோகி மீண்டும் இங்கிலாந்துஅமெரிக்கா என தனது பிரசாரத்தைத் துவக்கினார். 1946இல் தனது சுயசரிதையை எழுதியதின் மூலமாக தனது தெய்வீக அனுபவங்களை உலகறியச் செய்தார்.  1952 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் நாள்,மறைபொருளை உணர்த்துகிற இராகு – கேது தசா புக்திகளில்லாஸ் ஏஞ்சல்ஸில்மகாசமாதி அடைந்தார்.
        இவ்விரு புண்ணிய ஆத்மாக்களின் ஜாதகங்களில் கிரகங்கள் ஏற்படுத்திய தெய்வீகத் தன்மைகளை உணர்ந்தோம்நமது பாரதத்தின் தெய்வீகத் தன்மைகளை உலகறியச் செய்த தேவதூதர்களாகிய யோகிகளை எப்போதும் நம் நினைவிற்கொள்வோம்.
         

    

  

அம்மாவும்ஆட்சியும்………… ?



       அம்மா என்று அனைவராலும் அழைக்கப்படும், மக்கள் முதல்வர் அம்மாவின் ஜாதகத்தை சென்ற பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் அலசிய போது, அவருக்கு நடப்பு குரு திசை பலன்களைக் குறிப்பிட்டபோது, கீழ்கண்டபடி குறிப்பிட்டிருந்தேன்.

     அதிகாரத்தில் உள்ளவர்கள் தான் விரும்பியபடி, கனிகளைப் பறிப்பர். யாகங்கள், வேதத்தைப்பற்றிய அறிவு, கடவுள் பக்தி, சாத்திர அறிவு ஆகியவற்றைப் பெறுவார். நல்லவர், ஞானிகளின் நட்பு கிடைக்கும். மதிப்பு, மரியாதை உயரும். தலைமைப்பதவி தேடி வரும். கடந்த கால மற்றும் எதிர்காலம் பற்றிய அறிவு பெருகும். அரசாட்சி கைக்கு வந்து சேரும். அனைத்து வசதிகளும் பெருகும். மக்களால் போற்றி வணங்கப்படும் நிலை உருவாகும்.

             யாகங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற அனுகூலமான நிகழ்ச்சிகள் மூலமாக சந்தோஷம் பெருகும். மக்கள் பணிபுரிபவர்களுக்குத் தலைமைப்பதவி ஏற்கும் நிலை உருவாகும். தர்க்கங்களிலும், போட்டிகளிலும் வெற்றிகிட்டும். உயர்பதவிகள் வந்து சேரும். உயர்பதவிகளுக்கான தேர்தல்களில் வெற்றி பெற்று உயர்பதவியைப் பிடிக்கும் நிலை உருவாகும்.

          தற்போதைய சனி  –  புத்தியில் பொறாமை குணம்உடல் பலம் குறைவுஉள்ளூற மன சந்தோஷமின்மை ஆகியவை ஏற்படும்.அரசாட்சியைக் கைப்பிடித்தல்,  அரசாங்கத்தில் உயர் பதவியை அடைதல் ஆகியவை ஏற்படும்அதிக செலவுகள் ஏற்படும்ஆடைஆபரணங்கள்,செல்வநிலை உயருதல்வாகன வசதிகள் பெருகுதல் என எட்டாத உயரத்துக்குச் செல்லும் நிலையும் ஏற்படும்புகழ் மற்றும் உயர்நிலை ஏற்படும். அரசாள்பவரின் அனுகூலங்கள் கிடைக்கும். முன்னேற்றம், மதிப்பு, அதிர்ஷ்டம் யாவும் பெருகும். பல அரசர்களுக்கும் அரசராகத் திகழ்வார். சில இன்னல்களும் ஏற்படலாம்அதற்கு ருத்ர ஜபம் மற்றும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் ஆகிய பரிகாரங்கள் செய்வது நலம்
          இனி, அம்மாவின் எதிர்காலம் என்ன ? – என்பது பற்றி தாஜிக முறைப்படி அவரது  68 - 69  வயதுக்கான  ( 2016-17 ) வருட பலன் பற்றி பண்டைய முனிவர்களின் கூற்றுப்படி ஆராய்வோம்.

          இது ஜனன ஜாதகத்தில் உள்ள சூரியன் இருக்கும் இடத்திற்கு, அடுத்த வருடம் சூரியன் வரும் காலத்தைக் கொண்டு கணித்து பலன் காண்பது வருட ஜாதகமாகும். வடமொழியில் இதை வருஷ பல்” – என அழைப்பர்.

         24 பிப்ரவரியில் பிறந்த அம்மா அவர்களின் முடிந்த வயது 68 – நடப்பு வயது 69 க்கான வருட ஜாதகம் 25 – 2 – 2016 அன்று பகல் 02 – 57 – 10  மணிக்கு வரும் சூரியனின் நிலை கணக்கின்படி உருவான ஜாதகம் கீழே ;

சுக்
கேது
சூரி,முந்தா
கேது
68- 69 வயது
2016 – 17
25-2-2016 முதல்    24–2-2017 வரை.
இராசி
சந்,முந்தா


நவாம்சம்
புத
செவ்
புதன்
சுக்
குரு()
இராகு
சூரி
சனி
லக்//
லக்//
செவ்
சனி
சந்
இராகு
குரு()

       பண்டைய நூலான, “நீலகண்ட தெய்வஞர் எழுதிய தாஜிக நீலகண்டீயம் என்னும் நூலின்படி வருட பலன்களைக் காண்போம்.

       இந்த வருட ஜாதகத்தில்  “வருசேஷா அல்லது வருடாதிபதி தேவகுருவான குரு’  ஆவார்.  சுமாரான பலமுடைய வருடாதிபதி குருதரும் பலன்கள் ஆவன.

      பல்வேறு புத்தகங்களை  படித்து வெற்றி பெறுவார்கள்பணியிடத்தில் அதிகாரிகளின் ஒத்துழையாமை மற்றும் எதிர்ப்புகள் நிலவும்ஜீரண உறுப்புக்களில் எழும் உபாதைகளால் தொல்லைகள் ஏற்படலாம்.

       அரசு சம்பந்தமான விவகாரங்களில் மிகுந்த பிரயத்தனத்துக்குப் பிறகே வெற்றி கிடைக்கும்.

              அடுத்து இந்த வருடத்திற்கான முந்தா வின் நிலை. “முந்தா என்பது வருட ஜாதகத்தின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படுகிறது.

        ஒருவர் பிறந்த காலத்தில், ஜனன ஜாதகத்தில் இலக்னத்தில் இருக்கும் முந்தா ஒவ்வொரு வயதுக்கும் ஒரு இராசியாக முன்னேறும். ( இரண்டாவது வயதில் இரண்டாம் இராசிக்கட்டம் என ). இந்த 68 வது வயது ஜாதகத்தில் முந்தா வின் நிலையைப் பார்ப்போம்.

       இந்த வருட ஜாதகத்தில் முந்தா  வருட இராசிக் கட்டத்தில் இலக்னத்துக்கு 3ஆம் பாவத்தில் அமைகிறது.

இந்த வருட வருடாதிபதி (வருசேஷா) மற்றும் முந்தாவின் நிலைகள்.

வருசேஷா
குரு
முந்தா இருக்கும் இராசி
கும்பம்  – 20-43- 01
முந்தா இருக்கும் வீடு
3
முந்தேஷ் எனும் முந்தாதிபதி
சனி
முந்தாதிபதி இருக்கும் வீடு.
12

 மூன்றாம் பாவத்தில் உள்ள முந்தா தரும் பலன்கள் ;

தாஜிக நீலகண்டீயம் கூறும் பலன்.

       மூன்றாம் பாவத்தில் உள்ள  முந்தா வானது வாழ்க்கையில் மிக்க சந்தோஷ நிலையை தருகிறது செல்வ நிலை உயர்வையும்,துணிவுமிக்க செயல்பாடுகளால் மிக்க புகழையும் அளிக்கும்நல்ல நண்பர்களின் நட்பும் ஏற்படும்நற்குணம் மிக்க பெரியோர்கள் மற்றும் கடவுளை வணங்குவதிலும் ஈடுபாடு அதிகரிக்கும்ஆரோக்கியம் மிக்கவராகவும்கருணை உள்ளம் கொண்டு மக்கள் மத்தியில் புகழ் மிக்கவராகவும்மத்திய அரசின் ஆதரவு பெற்றவராகவும் இருப்பார்,என்கிறது.

ஹயான் பாஸ்கர் என்ற அறிஞரின் கூற்று என்ன ?

       “முந்தா” 3 இல் இருக்க வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்எதிரிகளை வென்று ஜெயம் கொள்வார்மதிப்புமரியாதை மேலும் உயரும்.ஆரோக்கியமும் சீராக இருக்கும்மத ஆர்வங்கள் கூடும்.அனைத்துவிதமான வசதி வாய்ப்புகளும் கூடும்என்று குறிப்பிடுகிறார்.
       3 ஆம் பாவத்தில் உள்ள முந்தா”   ஜாதகரை தனது புதிய திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலமாகவும்உயர் குறிக்கோள்களின் மூலமாகவும் உயரிய குறிக்கோள்களை சுலபமாக எய்துவார்ஜாதகரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் சமூகத்தில் நல்ல பெயரை ஏற்படுத்தும்.கௌரவமும் கூடும்சக்தி மிக்க பெண்மணியாக விளங்குவதால் செல்வம்சுகம் மற்றும் புகழ் மேலும் மேலும் அதிகரிக்கும்.எதிர்ப்பவர்கள் சிதறி ஓடுவர்வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும்மத்திய அரசின் அனுகூலமும்முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்அருகிலுள்ளவர்கள் மற்றும் தொண்டர்களின் ஒத்துழைப்புக்கள் நன்மை பயக்கும்கடவுள் பக்திமத ஆர்வம் ஆன்மீகவாதிகளின் மீதான நம்பிக்கை கூடும்தீர்த்த யாத்திரைகள் ஏற்படலாம்சந்தோஷ சூழ்நிலைகளுக்கு மனம் இட்டுச் செல்லும்.


முந்தா உள்ள இராசி தரும் பலன் 

       இந்த வருட ஜாதகத்தில் முந்தா  சனியின் ஆதிபத்தியம் பெற்ற கும்ப இராசியில்  இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் சில அனுகூலமற்ற பலன்களும் நடக்கும்.  தடைகள்உடல் உபாதைகள் ஏற்படும். பயணங்களில் தொல்லைகள்இடமாற்றங்கள் ஏற்படலாம்வழக்குகளில் இழுபறி நிலை தொடரும்.
       “தாஜிக நீலகண்டி யில் – “முந்தா மீதான குருவின் பார்வை  ஜாதகி அரசியலில் சக்தி மிக்க பதவிக்கு வருவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்து, முந்தேஷ்  முந்தாதிபதி சனிவிரய பாவம் அமர்ந்து தரும் பலன்கள்.

        பொருளாதார முன்னேற்றங்கள் இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும்.  எதிரிகளின் மூலமான தொல்லைகள் அதிகரிக்கும். மன உழைச்சல்உடல் உழைச்சல்கள் ஏற்படும்அரசாங்கம் மற்றும் அதிகாரிகளால் மனதில் படபடப்புடென்ஷன்கள் அதிகரிக்கும் உணர்ச்சி வசப்பட்ட மனநிலை, எரிச்சலூட்டும் தொடர்புகள், கால் தூசுக்குப் பெறாத எதிரிகளின் எதிர்ப்பு மற்றும் பயமுறுத்தல்கள், பணியில் அஜாக்கிரதை நிலை மற்றும் மன இறுக்கம் ஆகியவை ஏற்படும்.

சனியின்  இராசியில் உள்ள முந்தா தரும் பலன் 

        தடைகள் மற்றும் ஆசைகள் நிறைவேறாத நிலை, ஆரோக்கியக் குறைவு, இடமாற்றம் மற்றும் தேவையற்ற பயணங்கள் ஆகியவை ஏற்படும். வழக்குகளில் வெற்றியின்மை. முந்தா - சனியின் இராசியில் இருக்க அல்லது சனியால் பார்க்கப்பட அவமானங்கள் மற்றும் சொத்து இழப்பு ஏற்படும். குரு பார்க்க நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

       
         தற்போது - 69 வயது நடக்கும் போது, ( 24-2-2016 முதல் )  குரு மிகவும் சக்தி வாய்ந்த வருடாதிபதியாக வரும் போது மிக்க அனுகூலமான பலன்கள் ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.  நல்ல எண்ணங்கள் மனதில் உருவாகும்அதன் காரணமாக வெற்றி மேல் வெற்றி கிட்டும்குடும்ப சந்தோஷம்புகழ்செல்வம்சாதகமான விழாக்கள்மிகவும் மதிப்பு மிக்க உயர் பதவிகள் கிடைக்கும்புதிய திட்டங்களில் வெற்றி கிட்டும்.திட்டங்களை முடுக்கிவிட்டு முடித்து வைப்பதில் அதிகாரிகளின் ஆதரவுமுழுவதுமாகக் கிடைக்கும்,  சமூக அந்தஸ்து மேலும் உயரும் மக்களின் நம்பிக்கை மற்றும் அரசியல் சேவைகள் கண்டிப்பாக வெற்றிக் கனியைப் பறித்துத்தரும்அதிகாரம் மற்றும் பொறுப்பு மிக்க பதவி கிடைக்கும் பதவி உயர்வு தவிர்க்க முடியாதது வெற்றிகள் மற்றும் போட்டிகளால்பணவரவு, வழக்குகளில் வெற்றிமதிப்புமரியாதைபுகழ்,பலம் பணியிடத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்றல் என அனைத்தும் வெற்றிகரமாக முடியும் என எதிர்பார்க்கலாம்எதிரிகள் தானாகவே வந்து அடிபணிவர்மதிப்பு மரியாதைகௌரவம் அனைத்தும் கூடும்உடல் ஆரோக்கியம் சீராகும்மத ஆர்வம் கூடும்ஏற்கனவே குறிப்பிட்டபடி,புதிய திட்டங்களாலும்கொள்கைகளாலும் உயர்ந்த குறிக்கோள்கள் எட்டப்படும்.
       எனவே, தாஜிக வருடபலன் காணும் முறைப்படி சூழ்நிலை அம்மாவுக்கு கண்டிப்பாக சாதகமாகவே உள்ளது. இதுவே அம்மாவின் ஆட்சிக்கு அச்சாரம் - அறிதியிட்டுக் காட்டிடும் முத்தாரம்.

( இக் கட்டுரை ஏப்ரல் 2016 முதல் வாரத்தில் எழுதப்பட்டு, கடைசிவாரத்தில் குருவருள் ஜோதிடம் மே 2016 மாத இதழில் வெளியானது )