Sunday, January 18, 2015

மருத்துவ ஜோதிடமும்,மனித வாழ்வும் !





மருத்துவ ஜோதிடமும்,மனித வாழ்வும் !

      ஜோதிடத்தால், நிச்சியமாக  நமது  அன்றாட   வாழ்க்கையில்  ஏற்படும் உடல்  உபாதைகளை எடுத்துக் கூறுவதோடு,அதற்கான நமது  ஜாதகத்தில்  உள்ள, சம்பந்தப் பட்ட மோசமான கிரகங்களின் அசுபத்தன்மைகளை குறைக்க பரிகாரபூஜைகள் செய்து  தங்கள்  நோய்களை தீர்த்துக் கொள்ளவும்  முடியும் என்றால் மிகையாகாது.  ஒருவ ரின் உடலை எவ்வித பரிசோதனைக்கும், உட்படுத்தாமல், அவருக்கு  ஏற்படப்பொகும் நோயைக் கிரக நிலைகள்  மூலம்  ஜாதகருக்கு நோய் எப்போது ஏற்படும், எந்த உறுப் பில் ஏற்படும், நோயின் தன்மை என்ன,  என்பதையெல்லாம்,  அது ஏற்படுத்துவதற்கு முன்பே அறிந்து கூறமுடியும். ஆனால், மருத்துவம் எனும் விஞ்ஞானத்தில் நோயாளி யை பரிசோதனை செய்யாமல்  மருத்துவரால்  எதையும்  சொல்ல முடியாது.எனவே மருத்துவ விஞ்ஞானத்தைவிட,ஜோதிட விஞ்ஞானமே மேலானது.இவை  இரண்டுமே இணைந்து செயல்பட்டால் மனிதகுலத்தின் உடலாரோக்கியம்  மேம்படு மல்லவா ?

      அதனால்,  தெய்வீக அர்பணத்துடன், கடமை யுணர்வுடன் இவர்கள் இணைந்து, மனித ஆரோக்கியத்தை பாதுகாக்க   முற்படவேண்டும். அப்போது தான், கிரகங்களின்  கதிர்வீச்சால்  மனிதனுக்கு   ஏற்படும்   நோய்  பாதிப்புக்களிலிருந்து அவன் விடுபட முடியும்.

      மனிதனின் ஆரோக்கியத் தன்மையை,ஜோதிடத்தின் மூலமாக ஆராயத் தேவை யான காரணிகளாவன :-

 1.  இலக்னம் மற்றும் இலக்னாதிபதி.
2.  சூரியன்,சந்திரன் மற்றும் புதன்.
3.  ஆறாம் பாவம் மற்றும் அதன் அதிபதி.
4.  இலக்னம் மற்றும் ஆறாம் பாவத்திற்கான காரகர்.
5.  கன்னிராசி,எட்டாம் பாவம்,பன்னிரெண்டாம் பாவம் மற்றும் அதன் அதிபதி
    கள்.
6.  நடப்பு தசா,புத்தி மற்றும் கோசாரநிலைகள்.

முக்கியமாக  ஒவ்வொரு  இராசியும், கிரகமும் மற்றும் பாவங்களும் ஒரு ஜாதகரின் ஆரோக்கியம்  பற்றிய பலனறிய சோதிக்கப்பட வேண்டும்.ஏனெனில், இவை அனைத் துமே, மனித உடலின்,ஏதாவதுவொரு பாகத்தை ஆளுகின்றன.

      உதாரணமாக,சந்திரன்,ஆண்களுக்கு இடதுகண்ணையும்,மார்பகத்தையும், வயிறு, கருப்பை, கருமுட்டைகள், சிறுநீரகம் மற்றும் மனதையும்,உணர்வுகளையும் ஆளுகின் றன.ஐந்தாம் பாவத்தை எடுத்துக்கொண்டால், வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளையும், மேஷராசி தலையையும் ஆள்கிறது. இதனால் ஏதாவது ஒரு ராசி/கிரகம்/பாவம்/ மோச மாக பாதிக்கப்பட்டால்,இதிலுள்ள பலகாரணிகள் நல்ஆரோக்கியத்தையும்,பலத்தையும் உடைத்தாயிருந்தாலும், ஜாதகருக்கு  ஏதாவது  ஒரு காரகத்தின் காரணமாக, உடலின் ஏதாவது ஒரு பாகத்தில்,நோய் ஏற்படுவது உறுதியாம்.

      பொதுவாக, ஜாதகரின்  இலக்னம், அவரின் உடலமைப்பை ஆள்கிறது. ஆனால், நாம் இலக்னம்தான், ஜாதகரின் முழு உடலையும் ஆள்கிறதென்று எடுத்துக்கொள்வது தவறான முடிவாகும். சந்திரன் மனதையும், இலக்னம்  உடலையும், சூரியன் ஆன்மா வையும் ஆளுவதோடு மட்டுமல்லாமல், இலக்னாதிபதி,  அதன் காரகன் சூரியன் ஆகி யோர் , மனிதனுக்கு  அன்றாடம்  ஏற்படும்  உடல் உபாதைகள் மற்றும் அதனாலான கஷ்டங்களையும் அளிக்கின்றன.  எனவேதான், இலக்னம்,மனித உடலின் அனைத்துப் பகுதிகளையும் தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும்,மூளையை தன்னகத்தே கொண் டுள்ளது.

      ஆகையால், இலக்னம், இலக்னதிபதி அதன் காரகர்கள்,பலமிக்கவர்களாக, பாதிப் படையாமல்  இருந்தால்  ஜாதகர்  உடலமைப்பில்,அன்றன்றைக்கு ஏற்படும் உபாதை   களினால் எவ்விதக்  கஷ்டங்களையும் தாங்கிக்கொள்ளும் நல்ல உடல் ஆரோக்கியத் துடன் திகழ்வார்  என்பது உறுதியாகிறது.ஜாதகருக்கு அன்றாடம் ஏற்படும் பருவகால நோய்களான ஜலதோஷம்,சளி,இருமல்,வைரஸ் காய்ச்சல்,தோல்நோய்போன்றவற்றை தாங்கிக் கொள்ளும்  சக்தி  மற்றும்  எதிர்கொள்ளும்  எதிர்ப்பு  சக்தியும்   இருக்கும்.   

      பொதுவாக  ஜாதகத்தில் பலம் மிக்க,  பாதிக்கப்படாத சூரியன் இருக்க, ஜாதகர் நல்ல பலமிக்க  இருதயத்தை  உடையவராக  இருப்பார்.அதன் காரணமாக அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியம் இருக்கும்.ஆனால்,இயற்கை அசுபர்களான செவ்வாய்,சனி, இராகு  மற்றும்  கேது  ஆகியோர்  இலக்னத்திலோ  அல்லது  இலக்னதிபதியகவோ மற்றும் ஆறு,எட்டு,பன்னிரெண்டில் சூரியன் இருந்து,அப்பாவகங்கள்,பாதிக்கப்பட்டலோ ஜாதகர். தொடர்ந்து  ஆரோக்கியத்துடன் இருக்கமாட்டார்.  இதன் காரணமாக அவருக்கு நோய் எதிர்ப்பு  சக்தியின்றி , நிவாரணமும்   மெதுவாகவே    ஏற்படுகிறது.  

      பொதுவாகவே சந்திரனும், புதனும் இயற்கை அசுபர்களின் சிறிதளவு தாக்கத்தைக்கூட தாங்கமுடியா தவர்கள். எனவே,  கடக, கன்னி இராசிகளைக் இலக்னமாகக் கொண்டவர்கள் மிகவும் பலவீனமானவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.எனவே, இவர்கள்,தங்கள் உணவு விஷ யத்தில் கட்டுபாட்டுடனும்,  தங்கள் உடலைப் பேணிக்காப்பதில் அக்கறை  எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால்,   இயற்கை சுபர்களான குரு, சூரியன், புதன் மற்றும் சுக்கி ரன் ஆகியோரின் தாக்கம் அதிகரிக்க அவர்கள் நிச்சியமாக  ஆரோக்கியமாக வாழ்வர். மனநிலையை சந்திரனும்,நரம்புமண்டலத்தை புதனும்,இதயத்தை சூரியனும் ஆள்கின் றனர். இவர்களிடையேயான சுமுகவுறவு,  இலக்னம்  பலமிழந்த நிலையிலும், ஜாதக ருக்கு நல்ஆரோக்கியத்தை அளிகின்றன.இதன் காரணமாக,ஜாதகர் ஒருஒழுங்குமுறை யுடன் கூடிய வாழ்க்கையும்,அதிகமாக உண்பதையும்,குடிப்பதையும் தவிர்ப்பவராகவும் இருப்பார். மனிதனுக்கு   அவனது ஜாதகத்தில் அனுகூலமான கிரகநிலைகள் அமைந் தால் அவன் சீரான வாழ்க்கைவாழ்வான். 

      அடுத்து 6 ம் பாவம், அதன்  அதிபதி, அதன் காரக்கிரகம் சனி  ஆகியோரே,ஜாத கரின், பொதுவான  உடல்நலத்தைச் சிதைப்பவர்கள் ஆவர்.6 ம் பாவம் நேர்மறையான மற்றும்  எதிர்மறையான காரகத்துவங்களைக் கொண்டது.அவை,கடன்-நோய்-எதிரிகள்- தாய்வழிச் சொந்தம். ஜீரண  உறுப்புகள்  ஆகும்.   மேற்சொன்ன மூவரும் பலமுடன் இருந்தால்,  நேர்மறையான  காரகங்கள்  பெருகும். அதாவது,ஜீரண உறுப்புகள் நல்ல முறையில் இயங்க,உடல் நிலை சீராக,ஆரோக்கியமாக இருக்கும். பலமிழந்து காணப் பட்டால் எதிர்மறை காரகங்கள் தடைபடுகின்றன. ஜாதகர்  கடன்,நோய் மற்றும் எதிரி கள் பற்றி எந்தக் கவலையும்படாமல்,தெனாவெட்டாக இருப்பார்.

      ஆனால், இலக்னபாவம், அதன்அதிபதி,சூரியன்,சந்திரன்,புதன் ஆகியோர் ஆறாம் பாவதோடு,அதன் அதிபதியோடு,காரகர் சனியோடு தொடர்புகொண்டு ,,அல்லது அப்படி யே மாறி,அசுப தாக்கங்களும் ஏற்பட்டால், தொடர்பு எப்படிப்பட்ட நிலையிலும் ஏற்பட் டாலும் மிகச்சிக்கலான உடல் நிலையே காணப்படும். இதில்,  நோயின்அளவு மற்றும் தன்மையானது, சம்பந்தப்பட்ட  கிரகங்களின்   தொடர்பின் தன்மையைப் பொருத்தும் அமையும். உதாரணமாக,  சிம்மலக்னமாகி இலக்னாதிபதிசூரியன் மற்றும் சனி,ஆறாம் அதிபதி  இவர்களுக்கிடையேயான தொடர்பு (இவர்கள் இருவருமே அந்த பாவங்களுக் கான காரகர்கள் ஆவர்.) ஜாதகருக்கு ஆரோக்கிய பாதிப்புக்குக் காரணமாகலாம்.இராகு, கேது இவர்களால், மேலும்  பாதிக்கப்பட்டால்,  கண் கோளாறு ,இதயபாதிப்பு அல்லது எலும்பில்  பாதிப்பு   ஆகியவை   ஏற்படலாம். ஜாதகருக்கு நோய்  எதிர்ப்பு சக்தியும் குறையும்.

      ஆனால்,சிம்மலக்ன ஜாதகருக்கு,  இருதயநோய் கண்டிப்பாக வருமா ?வராதா ? என்பதை அறிய விரும்பினால்,சந்திரனையும்,கடகராசியையும்,நான்காம் பாவத்தையும் மற்றும்  அதன் அதிபதி ஆகியோரின் நிலைகளையும் கண்டிப்பாகக் கருத்திற்கொள்ள வதோடு , இரத்தகாரகன் செவ்வாயின் நிலையையும் அறியவேண்டும்.மேலும் ,இவை, ஆறாம் இடம், பாவகாரகன், அதிபதி  ஆகியோர்   பாதிக்கப்பட்டிருந்தால், ஜாதகருக்கு கண்டிப்பாக இதயத்தில் ஏதாவதொரு நோய் ஏற்படுவது உறுதியாகும்.

     ஒரு ஜாதகருக்கு எந்த உறுப்பில்,என்னவிதமான நோய் வந்து இன்னலடைவார். என்பதை அறிய, எந்தராசி, காலபுருஷனுக்கு  எந்த  பாவம்,   உடலின் எப்பகுதியைக் குறிக்கிறது  எனத்  தெரிந்துகொள்ள   வேண்டியது   அவசியமாகின்றது.அந்த இராசி, பாவம், அதன் அதிபதி (ஜாதகத்தில்) ஆகியோர் பாதி்க்கப்பட்டு,பலமுமிழந்தால் மற்றும் ஆறாம் பாவம்,  அதன்  அதிபதி, காரகர் சனி ஆகியோரின் அனுகூலமற்ற தொடர்பும் ஏற்பட்டால் ,சம்பந்தப்பட்ட கிரகதசா, புத்தி  காலங்களில், குறிப்பிட்ட அந்த பாகத்தில் நோய்ஏற்பட்டு அவதிக்கு ஆளாவார்.இந்தத் தொடர்பில்,செவ்வாய்,சனி, மற்றும் இராகு வும் கைகோர்த்தால்,இன்னநோய் என்று எளிதில் இனங்காணமுடியாது.அத்துடன் அது மிகவும்  மோசமான  நோயாகவும்  இருக்கலாம். செவ்வாய், சனி  தொடர்பு   எனில் எளிதில் தீராதநோயைத்தரும். சனி நோயிலிருந்து தாமதமான விடுதலையைத் தரும். இன்னநோய் எனக்கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இராகு நோயை மறைத்து விடும்.

     எட்டு  மற்றும்  பன்னிரண்டாம்  பாவம்,அவற்றின் அதிபதிகள்,பாதிப்படைந்தால், குறிப்பிட்ட  பாகத்திற்கு  நோய்தந்து,  கெடுதலையும், கஷ்டங்களையும்  ஜாதகருக்கு அள்ளித்தரும்.  எட்டாம்  பாவம்  மரணத்தைக் குறிக்கிறது.அதுவே மிகஉயர்ந்த உடற் கஷ்டமல்லவா? அதையேதான் எட்டாம் பாவாதிபதியும் தருகிறார்.

     12 ம் பாவம், ஆஸ்பத்திரியைக் குறிக்கும்.அது பாதிப்படைந்தால் ஜாதகர் ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்படுவார். இலக்னத்தோடு,அதிபதியோடு,இவர்கள் தொடர்புகொண் டு பாதிப்படையும்போது  உடல்  மற்றும் மனபாதிப்பு ஏற்படுகிறது.‍‌துர்ஸ்தானங்களான ஆறு, எட்டு, பன்னிரெண்டாம்  பாவங்களுக்கு சனியே காரகர் ஆவார்.எனவே,சனிதான் ஒரு ஜாதகத்தில்  உடல்  மற்றும்  உள்ளத்தால் ஏற்படும் கஷ்டங்களுக்குக் காரணமா கிறான்.அதுவும்,சனி ஆறு,எட்டு,பன்னிரெண்டாம் பாவங்களின் பாவாதிபதியாகும்போது சனியின் தொடர்பு,எந்த பாவத்துடன்,அதிபதியுடன் ஏற்படுகிறதோ அந்த தொடர்புடைய உடற்பாகத்தில் பிரச்சினையை உருவாக்கும்.

     உச்சகிரகம் மிகவும் சக்திவாய்ந்ததென  நாம் அறிவோம்.ஆனால், நீசகிரகமானது மிகவும் ஆபத்தைவிளைவிக்கக் கூடியதாகும். சூரியன்,  எதிர்ப்பு சக்தியையும், வீரியத் தையும் ஆள்கிறான். துர்ஸ்தானங்களைத்   தவிர   மற்ற    பாவங்களுக்கு மட்டுமே இவற்றைத் தருகிறான். அவன்  பலம் பொருந்தியவனாக  இருக்க ஜாதகருக்கு உடல் பலத்தை அளித்து, நோய் வந்தால் விரைவில் குணமடையச் செய்கிறான்.நோய் தீவிர மாக இருந்தாலும்,ஜாதகருக்கு மனோ பயம்போக்குவதுடன்,தைரியத்தை அளிக்கிறான்.

     சனியோ, துர்ஸ்தானங்களில்  இடம்பெறாமலிருந்து,பலம்மிக்கவனாக இருந்தால் கருணைமிக்கவனாகிறான்.அதன் காரணமாக.துர்ஸ்தானங்களில் இருந்து பாதிப்படைந் தால் மட்டுமே,நோயின் தன்மையைக் கூட்டி விடுகிறான்.உச்சசனி இரக்கம் மிக்கவன். கருணையை மிகவும் குறைத்துக் கொள்பவன் வக்கிர சனியாவான்.

     இலக்னம்  மற்றும்  6 ம்  பாவத்திற்குரியகாரகர்களான,சூரியனும்,சனியும் 3 – 11 லிலோ அல்லது 5 – 9 லிலோ,இருக்க,இது மிக்க நன்மைதரும் நிலைகளாகும்.ஆனால், இவை  இணைவு  கொண்டாலோ அல்லது பரஸ்பரபார்வை செய்தாலோ,கெடுதலைச் செய்கின்றன.

     அனுகூலமற்ற சந்திரன்  ஆஸ்மா, நுரையீரல் பாதிப்பு,வயிற்றுப் போக்கு,புண்கள், கட்டிகள்,ஜன்னி போன்றவற்றிற்குக் காரணமாகின்றான்.

     இவ்விதமான நோய்கள்,அந்தந்த கிரகதசா–புத்திகளில் மட்டுமே பாதிப்பைத்தரும். எனவே,  அந்த  புத்திவரும்  போது, அந்த கிரகம் பாதிக்கப்பட்டிருந்தால்,அந்தப் பகுதி நோய்க்கான சிகிச்சைகளை முன்னேற்பாடாகக் கையாண்டு குணம்பெறலாம்.நோயின், பரிணாமத்தை புத்தி அதிபதியின் நிலையைப்பொருத்து அறியலாம்.

     அதேபோல் கோசாரத்தில் செவ்வாய்,சனி,மற்றும் இராகுவின் நிலை உன்னிப்பாக அறியப்படவேண்டும்.  ஏனெனில், அவற்றின் கோசாரநிலைகள் பல்வேறு உடல் பகுதி யில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.இங்கு,கோசாரநிலைகள் இலக்னத்திலிருந்தே பார்க்கப் படவேண்டும்.வழக்கம்போல் சந்திரனிலிருந்து பார்க்கக்கூடாது.சனியின் கோசாரநிலை ஜாதகருக்கு இன்னல்களைத் தருகிறது.செவ்வாய்,காயங்களையும்,தொற்றுநோய் களை யும் தருகிறது. இலக்னம், ஆறாமிடம்,எட்டு,பன்னிரெண்டாமிடம் இவற்றில் செவ்வாய் வரும் நிலையை உதாசீனப் படுத்திவிடக்கூடாது. செவ்வாய், சனி,இராகுவின் கோசார நகர்வு,நடப்பு புத்தி அதிபதியின் மீது வரும்போது, மிகஅதிகமான நோயின் தாக்கத்தை அளிக்கிறது.அந்த நோய் மிகவும் வலிமிக்கதாக அமைந்துவிடுகிறது.

     இயற்கை அசுப கிரக தாக்கத்தால் ஏற்படும் உடல் அளவிலான அல்லது மனதள விலான நோயின் அளவு மிகவும் அதிகமாகவும்,இயற்கை சுபரின் தாக்கம் குறைவாக வும் இருக்கும்.

     நட்சத்திராதிபதி பலம்மிக்கவராக இருப்பின்,நோயின் தாக்கம் குறைவாகவும், பல மற்று,பாதிப்புடையதாயின் தாக்கம் அதிகமாகவும் இருக்கும்.பூரண உடல் நலமுடைய ஒரு ஜாதகரின்,ஜாதக நிலையைப் பார்ப்போமா ?

     இந்த ஜாதகர் பூரண உடல் நலத்துடன் உள்ளார் . ஏனெனில்,இலக்னாதிபதி புதன்  11 ல்,5,12 குடைய சுக்கிரன் 3 ம் அதிபதி   சூரியனோடும்   இணைந்துள்ளார். சுக்கிரன் மற்றும் சூரியன், புதனின் நண்பர்கள். புதன்  மீது  எந்தவிதமான  அசுப தாக்கங்களும் இல்லை. 6,11 க்குரிய  செவ்வாயும், 8,9 க்குரிய  சனியும்  இணைவு.அவர்களின் அசுப தாக்கம் குறைவானது. ஏனெனில், செவ்வாய்  இலக்னத்தின் மையப்புள்ளி யிலிருந்து விலகியுள்ளார்.சனியும் பாகைநிலையில் பின்னால் உள்ளார். காரகன்  சூரியன் உச்சம் பெற்று எவ்விதஅசுப தாக்கமின்றி உள்ளார். சந்திரன்  பலமாக  உள்ளார்.சனியின் 3 ம் பார்வை அவருக்கு நல்ல பார்வையாகவே உள்ளது.




புதன் சூரி
சுக்

லக்///செவ் சனி


கேது 



செவ் சுக்

சந்

 
   இராசி
குரு இராகு

குரு
நவாம்சம்


  கேது

சந்
















லக்///

சனி
சூரி,புத
இராகு

பிறந்த தேதி 02 05 1944 ,நேரம்- காலை 08 -- 34   
                   
தசாயிருப்பு : கேது 2 வரு 02 மா 11 நாள்.

சந்திரனுக்கு  இடங்கோடுத்த   சூரியன்  உச்சம்  பெற்றுள்ளார். சந்திரன்,சூரியன்,புதன் ஆகியோரின்  நிலை  இணக்கமாக உள்ளது. 6 ம் பாவதிபதி செவ்வாய் இலக்னத்தில், 6 ம் பாவகாரகன் மற்றும் 8 மிடத்து  அதிபதியான  சனியும்  இலக்னத்தில்  உள்ளார். ஜாதகருக்கு எப்போதாவது சிறுசிறு உடல்  உபாதைகளை  மட்டும் இவர்கள் தருவார் கள்.

     செவ்வாய்தசா ஜாதகருக்கு எவ்வித கஷ்டங்களும் தரவில்லை .இராகு தசாவில், அவர் ஓரளவு துயரங்களைச் சந்த்தித்தார். ஏனெனில் இராகு 2 ல் ,7 – 10 க்கு உடைய குருவுடன் இணைந்துள்ளார். 2 – 7 ம் மாரக ஸ்தானங்கள்.   மேலும், 8 – 9 க் குடைய                மற்றும்  6 பாவகாரகர் சனியின் நட்சத்திரத்தில் இராகு உள்ளார்.  சனியின் மூலமாக, இராகு தன் செயல்களைச் செயல் படுத்துவார்.இதன் காரணமாக  ஜாதகர் உடல் வலி, சளி,மற்றும் பல்வலி போன்ற உபாதைகளால் தொல்லைகளை அனுபவித்தார்.

     ஆனாலும் பொதுவாக,நல் ஆரோக்கியமத்துக்கான கிரக நிலைகள் பலமிக்கதாக உள்ளதால் , ஜாதகர்  தனது   இறுதிக்   காலம்வரை,  ஆரோக்கியமான  உடலுடன் நன்றாகவே வாழ்ந்தாரெனலாம்.
                                    

















               

          

Wednesday, December 24, 2014

தசாவரிசை கேது தசாமுதல் ஆரம்பிப்பது ஏன் ?

ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ




தசாவரிசை கேது தசாமுதல் ஆரம்பிப்பது ஏன் ?

   விம்சோத்ரி தசாமுறையில் விரியும் கிரக வரிசை ;கேது – 7 வருடம்சுக்கிரன் – 20, சூரியன் – 6,சந்திரன் -- 10, செவ்வாய் – 7, இராகு – 18, குரு – 16, சனி – 19, புதன் – 17 வருடங்கள் என்பதை நாம் அறிவோம்.

    இவை ஏன்இந்த முறையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன ? – என்ற சிந்தனை மற்றும் கேள்வி பல ஆண்டுகளாய்ப் பலர் மனதில் உள்ளனஇந்த தசாவரிசையில் செயல்படுவதில்பல புதிதான பொருத்தங்கள் உள்ளனஇந்த தசாமுறையானது மனித வாழ்க்கைக்கு மிகுந்த சீரான முறையாக மற்றும் நுண்ணிய முறையாகப் பார்க்கப்படவேண்டும்.

    கேது – கடவுளுக்கு அருகே நம்மை அழைத்துச்செல்லும் கிரகமாகும்எனவே கேது தசாவில் ஆரம்பமாவது சரிதானே ? அதாவது எங்கே ? – ஆன்மா உடலில் வேர்விட்டிராத காலத்தில் அதை நாம் கண்காணித்துக் கொண்டிருக்கிற மிகச் சிறிய குழந்தைப் பருவம் அதுகேது தசாக் காலத்தில்தான் நாம் நமக்குத் தேவையானது எது ? தேவையற்றது எது ? – என்பதை உணர்கிறோம்சிறு குழந்தையாக,நமக்குத் தேவைசிறிது சுவாசமும்சிறுதளவு உணவும் ஆகும்அதுவும் திடவுணவாக அன்றிதிரவ உணவே போதுமானதாகும்இக்குழந்தைப் பருவம் 0 – 1 வருடமாகும்.

    சுக்கிரதசா ;- இச் சிறு குழந்தை போஷிக்கப்பட வேண்டிய காலமாகும்எனவேபோஷிப்பாளரான சுக்கிரன் குழந்தையைக் கவனித்துக் கொள்கிறாள்குழந்தைக்குத் தேவையான கொழுப்புச் சத்தைக் குழந்தைக்குத் தருபவள் அவளேநாம் இந்த பூமியில் ஒருவருக்கொருவர் மனதளவில் புரிந்து கொண்டும்அனுசரணையாக வாழ்வதற்காக ஏற்பட்ட நீண்டதொரு தசாக்காலம் சுக்கிரனின் 

தசாக்காலமாகும்இந்த உடலுக்குத்தேவையானது நல்ல கவனிப்பும்உபசரிப்புமாகும்நமதுமனம் மற்றும் உடலைப்பற்றி நாம் அறியும் சக்தியை உருவாக்கித்தருவது இந்த தசாக் காலமேயாகும்சுக்கிர தசாக்காலமே நமது வாழ்க்கையின் முக்கியக் காலங்களில் ஒன்றாகும்இக் காலமானது 1 முதல் 3வயதினைக் குறிப்பதாகும்.

    சூரிய தசா ;- பிறரின்  உதவியின்றி நாம் நமது சுய அடையாளத்தை வெளிப்படுத்திஅவனுடைய பிரகாசமான ஒளியைப் பெற்றுஒளிரத் தயாராகும் உன்னதக் காலமாகும்ஆரோக்கியமான சுயஅறிவை,இந்த சுயநலம் அனுமதிப்பதோடுஒரு ஆரோக்கியமான சுய கர்வத்தால்நமது எல்லையைப் பிறர் தாண்டிச் செல்லாவண்ணம் பார்த்துக் கொள்ளும் அளவற்ற சக்தியை அவன் நமக்கு அளித்திருப்பதாக உணர்கிறோம்அதேபோல் நாமும் மற்றவர்களின் எல்லையைத் தாண்டி ஓட முற்படுவதில்லைஇந்த வயதானது 4 முதல் 12 வரையாலானதாகும்.

    சந்திர தசா ;- இக்காலத்தில் நாம் பெரும் சுய அனுபவங்கள் அனைத்தையும் அர்த்தமுள்ள வழியில்,பிறரோடு பகிர்ந்துகொண்டு வாழும் இனிய வாழ்க்கைக்குத் தேவையான தசாக் காலமாகும்நாம் நம்மை மற்றவர் கண்களின் பிரதிபலிப்பாகக் கொண்டுஅவர்களின் அனுபவங்கள்இச்சமூகத்தில் நமக்கே மீண்டும் பிரதிபலிப்பதாகக் கருதிஅதன் மூலமாகப் புதியனவற்றைக் கற்றுக் கொள்ள முற்படவேண்டும்.ஏனெனில் நாம் மட்டுமே ஓளிர வேண்டும்முன்னேற வேண்டும் என்ற எண்ணம்  நமக்கு ஏற்பட்டுவிடக் கூடாதுஇந்த சந்திர தசையில் நாம் கவர்ச்சி மிக்க இளைஞனாகஉணர்வுபூர்வமாக வலம்வருகிறோம்இக்காலம் 13 முதல் 19 வயதுவரையாகும்.

     செவ்வாய் தசா;- இந்த தசையில்இவ்வுலகில் எப்போது நாம் மற்றவர்களோடு போட்டிபோடக் கற்றுக் கொள்வதோடுஅவர்களை எதிரிகளாக்கிக் கொள்வதைவிடநண்பர்களாக்கிக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்பல முடிவுகள் நிறைந்த இவ்வுலகில்செவ்வாயின் கூடிவாழும் குணம் மற்றும் கடினமான சக்தியின் மூலமாகவும்தைரியத்தின் மூலமாகவும்ஒழுக்கமான செயல்களாலும் நமது கொள்கைகளைச் சோதிக்கவேண்டும்இந்த வயதானது 20 முதல் 27 ஆண்டு வரையாகும்.

இராகு தசா ;- இராகு தசாக்காலத்தில் நமது உலக வாழ்க்கையும்அதில் நாம் நிலைந்திருத்தலையும் காட்டுகிறதுநமக்குள் இருந்துகுதூகலிக்கும் இளமையோடுஇந்த உலக மாயையில் சிக்கித் தவிக்கிறோம்திருமணம்குழந்தைகள்தொழில் மற்றும் அதன் மூலமாக ஞானத்தைஆன்மாவில் மறைத்துவைக்கும் கலையையும் இராகு தசாவில் கற்றுத் தெளிகிறோம்.

     குரு தசா ;- பேராசை குணங்களால் நம்மை ஓடவைத்த இராகு தசாவைத் தாண்டிகுரு தசை வரும் போதுநாம் நம் முன்னோர்களின் பாண்டித்யங்கள் அனைத்தையும்  திரும்பப் பெறமுடியும்.இக்காலத்தில்தான் நமது மனபாரங்கள் அனைத்தும் குறைந்ததாக உணர்கிறோம் அல்லது மீண்டும் நம் மனம் நமது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக உணர்கிறோம்குருநமக்கு உள்ளொளிமனமுதிர்ச்சி மற்றும் வாழ்வியல் பாடங்களை அளிக்க வருகிறார்அவர் குருவாதலால்நம் பாண்டித்தியங்களைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளமுடியும்இதற்குச் சம்மான மனித வாழ்வு 40 முதல் 55 வயது வரையானதாகும்.

     சனி தசா ;- நமக்குள்ள எல்லைகளை நாம் சனி திசையில்தான் உணர்ந்து கொள்கிறோம்குரு தசாவில் குதூகலமாகஉற்சாகமாக உலவிய நாம்சனியால் மீண்டும் பூமிக்குக் கொண்டுவரப்பட்டு,உண்மையின் முன் நிறுத்தப்படுகிறோம்உண்மை நிலை என்பதுகுருவின் ‘ எல்லாம் நன்மைக்கே என்ற நிலையல்ல’ இது சனியின் குளிர்ச்சியுடன் கூடிய கடுமையான உண்மை நிலையாகும்அவன்,நமது உடலின் தற்காலிக குணங்கொண்டஇயற்கையான வாழ்க்கை மற்றும் இறப்பு ஆகியவற்றைக் கூறுகிறான்தனிமையில்நமது கர்மவினைகளை மேற்கொள்ளநமக்கு நேரத்தை அளிக்கிறான் சனி.இக்காலம் 55 வயது முதல் 65 வயதுவரையானதாகும்.

     புதன் தசா ;- இந்த தசையில் நாம் மீண்டும் குழந்தைகளாக மாறிவிடுக்கிறோம்விளையாட்டுத் தனம், நியாயமற்ற தன்மை என்பது அறிவு வளர்ச்சி, ஆணித்தரமான சிந்தனை, ஆகியவற்றினாலன்றி அறியாமையால் வருவதல்ல. சனி கொடுத்த உண்மையான பழுவை இறக்கி, நம் மனம் சுத்தமாகவும்,திறந்த நிலையிலும், எதையும் பகுத்துணர ஞானயோகம் பெறுகிறது. இதன் வயது 65 வயதுக்கு மேல் உள்ள காலமாகும்.
      இவ்வாறு தசா மாற்றங்கள் ஏற்படும் போதுதசாசந்தியில் ஓவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றனஎனவேஇதன் காரணமாக தசா மாற்றத்தின் போது ஒரே இரவில் ஒருவரின் நிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றனஇந்தப் பூர்ண மாற்றங்களுக்கு முன் நாம் நம்மைத் தயார்ப்படுத்தி கொள்ளும் நேரமாகதசாவின் கடைசிப் புத்தி கொடுக்கப்பட்டுள்ளது.அந்த புத்தியின் சக்தியானது அடுத்த தசாவில் ஏற்படும் நிகழ்வுகளைத் தாங்கும் சக்தியாக அமைந்துவிடுகிறது.

   கேது தசாவின் கடைசிப்புத்திபுதன் புத்தியாகும்புதன் ஒரு கட்டுமான நிபுணனாவார்அவர் உணர்ச்சி பூர்வமான உலகவாழ்க்கையில் மாற்றங்களை விரும்புபவர்அவர் வேறு உலகக் கேதுவுடன்,இவ்வுலக சுக்கிரனுக்குப் பாலமாக இணைக்க உதவுகிறார்இவ்வாறாக புதன் புத்திசுக்கிரன் புத்திக்குள் நுழைய ஒருவரின் மனதைத் தயார்ப்படுத்துகிறது.

    சுக்கிர தசாவின் கடைசி புத்தி கேது புத்தியாகும்கேது புத்தி ஒருவர் மனதைக் குழப்பிக் கஷ்டப்படவைத்துசூரியதசாவை வரவேற்கத் தயார்ப்படுத்துகிறது. 20 வருட சுக்கிர தசாவிற்குப் பிறகு,அதன் கடைசிப் பதினான்கு மாதக் கேது புத்தி நமக்குத் தேவையில்லாதவற்றை நம்மிடமிருந்து ஒதுக்கிவிடுகிறது.

    சூரியதசாவின் கடைசிப் புத்தி சுக்கிர புத்தியாகும்சுக்கிர புத்திசந்திர தசா மாற்றத்துக்கு நம் மனதைத் தயார்படுத்துகிறதுசந்திரன் எங்கிருக்கிறானோ அங்கே நாம் உலகத் தொடர்பையும்,சந்தோஷத்தையும் நம் குடும்பம் மற்றும் மக்கள் மூலமாக அடைய முற்படுகிறோம்சூரியதசாவில் ஆன்மாவைத் தொடரும் ஆவலுடையவர்களாக நாம் இருப்போம்.

சந்திர தசாவின் கடைசிப் புத்தி சூரிய புத்தியாகும்சூரியபுத்தியானது அடுத்து வரப்போகிற,செவ்வாய் தசாவிற்கு நம் மனதைத் தயார்ப்படுத்தி அழைத்துச் செல்லுகிறதுஏனெனில் சூரியனைப் போன்றே சந்திரனும் சுதந்திரமானவர்செவ்வாய் தசாக்காலத்தில் நாம் நமது உலக சக்தி மற்றும் தைரியத்தை நாடுவோம்அதற்கு சூரியன் நமது மனதில் நெருப்பின் மாற்றத்தைக் கொண்டு வருகிறார்.

    செவ்வாய் தசாவின் கடைசிப் புத்தி சந்திர புத்திசந்திர புத்தி இராகுதசாவை நெருங்கும் மனநிலையை உருவாக்க உதவுகிறதுஇராகுவால் மனதைக் (சந்திரனைகிரகணிக்க முடியும்இராகு என்பது உள்மனம்இவ்வாறாக சந்திரன் இங்கு உதவுகிறார்.

    இராகு தசாவின் கடைசிப் புத்தி செவ்வாய் புத்தியாகும்செவ்வாய் புத்தி தனது ஒழுக்கம் மற்றும் தைரியத்தால்மிகவும் நல்ல உள்ளமும்கருணையுள்ளமும் கொண்ட குருவின் தசையை அடைய நம்மைத் தாயர்ப்படுத்துகிறதுஇராகு தசாவின் கடைசிப் புத்தியிலிருந்துகடவுளின் தளபதியான செவ்வாய் தைரியத்தாலும்மனவுறுதியாலும்,தெளிவான வழியில்நல்வழியமைத்துகுரு தசாவை அடையச் செய்கிறார்இங்கு குரு நமக்கு உயர்ந்த பாடங்களுக்கான வகுப்பறை அமைத்துப் பாடம் நடத்துகிறார்.

    குரு தசாவின் கடைசி புத்தி இராகு புத்தியாகும்இராகு புத்தி தனது அழுத்தத்திலிருந்தும்உலக நடவடிக்கைகளிலிருந்தும் நம்மை விடுவித்துசனியின் அனுபவபூர்வமான மற்றும் உண்மையான மனநிலைக்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள உதவுகிறதுசனியின் கற்பனையில்லாத உண்மை நிலைக்குக் குருவின் எல்லாம் நன்மைக்கே என்ற நம்பிக்கை எண்ணம் வழிவிட வேண்டும்.உலகத்தோடு நமது தொடர்பைபந்தத்தைக் குறிக்கும் இராகு உள்மனவழியாக சனியின் அழுத்தத்தை நமக்குக் கொண்டு வருகிறது.

    சனியின் கடைசி புத்தி குரு புத்தியாகும்குரு தனது எப்போதுமே நல்லதே நடக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் மூலமாகநமது மனதைபுதன் திசைக்குத் தயார்ப்படுத்த உதவுகிறதுஇந்தப் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைபுதன் தசாவிற்குப் புதிய பாதை அமைத்துத் தருகிறதுஇந்தப் புதியபாதை மூலமாக புதன்நமது திறமைகளையும்பரிசோதனை மற்றும் விளையாட்டுக்களிலும்முன்னேற்றத்தை அளிக்கிறதுஉலகை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதைக் கற்பதே புதனின் நாடகம் ஆகும்.

    புதன் தசையின் கடைசி புத்தி சனி புத்தியாகும்புதனின் ஒளிவீச்சு மற்றும் சக்திகொண்டுசனி,கேது தசாவை நெருங்க தயார்படுத்துகிறதுபுதன் தசாவின் 17 வருடங்களில்புதிதாக உருவாக்கப்பட்டும்,கண்டுபிடிக்கப்பட்டும் உள்ள அனைத்தையும் கேதுவின் மீது பிரதிபலிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.அதற்கு சனிநம் மனதை ஒருநிலைப்படுத்தக் கற்றுத்தருகிறது.

    எனவேநண்பர்களேகேது தசாமுதல் ஏன் வரிசைப் படுத்தப்பட்டது ? என்பதற்கும்ஒரு தசாவின் கடைசிப் புத்தியானது எங்ஙனம்அடுத்துவரும் தசாவிற்குத் தோரணவாயிலாகிறது என்பதையும் விரிவாக அறிந்தகொண்டது பயனுள்ளதாக அமைந்ததல்லவா ? வாழ்க வளமுடன்.

வல்லமை தாராயோ பராசக்தி இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே.